<p><strong>வெற்றிக்கனியைப் பறிக்க, அ.தி.மு.க., தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அலைமோதுகிறார்கள். ஆனால், அ.திமு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பி.ஜே.பி., பிரசாரக் களத்திலிருந்து ஒதுங்கி நிற்கிறது. அவர்கள் வராமல் இருப்பதே நல்லது என்ற தோரணையில் இருக்கிறார்கள் அ.தி.மு.க தலைவர்கள். என்னதான் நடக்கிறது? </strong></p><p>பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.</p><p><strong>“ஆரம்பத்தில் ‘காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்துவிடுவோம்’ என்று சொன்னீர்களே... ஐந்து வருட ஆட்சியில் ஊழலை ஒழித்துவீட்டீர்களா?”</strong></p><p>``மோடி ஆட்சியில் ஊழல் ஒழிந்திருக்கிறது. இன்றைக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் எல்லா திட்டங்களும் நிறைவேறுகின்றன. நான்கு லட்சம் போலி நிறுவனங்களை மோடி அரசு ஒழித்துக் கட்டியிருக்கிறது. வருமானவரி கட்டுபவர்கள் இரு மடங்காகியிருக்கிறார்கள்.”</p>.<p><strong>“முத்தலாக் மசோதாவுக்கு, அ.தி.மு.க மக்களவையில் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதே?”</strong></p><p>“மாநிலங்களவையில் அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது தவறு. வேலூர் தேர்தலில் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக அ.தி.மு.க இந்த முடிவு எடுத்துள்ளதாக நினைக்கிறேன். ஓட்டுக் காக முத்தலாக் மசோதாவை எதிர்ப்பது தவறு.’’</p>.<p><strong>“அதனால்தான், வேலூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பி.ஜே.பி பிரசாரம் செய்யவில்லை என்று அ.தி.மு.க தரப்பில் முணுமுணுக்கிறார்களா?”</strong></p><p>“முற்றிலும் தவறு. அ.தி.மு.க-வுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் நிர்வாகிகள் அங்கு மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். எங்கள் கட்சியில் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெறுகிறது. இதில் நானும் முக்கிய தலைவர்களும் பிஸியாக இருக்கிறோம்.’’</p>.<p><strong>“வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?”</strong></p><p>“நிச்சயமாக ஏ.சி.சண்முகம்தான் வெற்றி பெறுவார். தி.மு.க மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மோடிமீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால்தான் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளார். ஏ.சி.சண்முகமும் ‘என் வெற்றியை, மோடிக்குக் காணிக்கையாக்கு கிறேன்’ என்றே பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார்.”</p>
<p><strong>வெற்றிக்கனியைப் பறிக்க, அ.தி.மு.க., தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அலைமோதுகிறார்கள். ஆனால், அ.திமு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பி.ஜே.பி., பிரசாரக் களத்திலிருந்து ஒதுங்கி நிற்கிறது. அவர்கள் வராமல் இருப்பதே நல்லது என்ற தோரணையில் இருக்கிறார்கள் அ.தி.மு.க தலைவர்கள். என்னதான் நடக்கிறது? </strong></p><p>பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.</p><p><strong>“ஆரம்பத்தில் ‘காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்துவிடுவோம்’ என்று சொன்னீர்களே... ஐந்து வருட ஆட்சியில் ஊழலை ஒழித்துவீட்டீர்களா?”</strong></p><p>``மோடி ஆட்சியில் ஊழல் ஒழிந்திருக்கிறது. இன்றைக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் எல்லா திட்டங்களும் நிறைவேறுகின்றன. நான்கு லட்சம் போலி நிறுவனங்களை மோடி அரசு ஒழித்துக் கட்டியிருக்கிறது. வருமானவரி கட்டுபவர்கள் இரு மடங்காகியிருக்கிறார்கள்.”</p>.<p><strong>“முத்தலாக் மசோதாவுக்கு, அ.தி.மு.க மக்களவையில் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதே?”</strong></p><p>“மாநிலங்களவையில் அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது தவறு. வேலூர் தேர்தலில் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக அ.தி.மு.க இந்த முடிவு எடுத்துள்ளதாக நினைக்கிறேன். ஓட்டுக் காக முத்தலாக் மசோதாவை எதிர்ப்பது தவறு.’’</p>.<p><strong>“அதனால்தான், வேலூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பி.ஜே.பி பிரசாரம் செய்யவில்லை என்று அ.தி.மு.க தரப்பில் முணுமுணுக்கிறார்களா?”</strong></p><p>“முற்றிலும் தவறு. அ.தி.மு.க-வுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் நிர்வாகிகள் அங்கு மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். எங்கள் கட்சியில் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெறுகிறது. இதில் நானும் முக்கிய தலைவர்களும் பிஸியாக இருக்கிறோம்.’’</p>.<p><strong>“வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?”</strong></p><p>“நிச்சயமாக ஏ.சி.சண்முகம்தான் வெற்றி பெறுவார். தி.மு.க மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மோடிமீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால்தான் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளார். ஏ.சி.சண்முகமும் ‘என் வெற்றியை, மோடிக்குக் காணிக்கையாக்கு கிறேன்’ என்றே பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார்.”</p>