<p><strong>ப</strong>ங்கு முதலீடு என்றுவரும்போது, சில விஷயங்களைக் கவனிப்பது அவசியம். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு விஷயங்களைக் கவனித்தால், பங்கு முதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும். </p><p><strong>1. </strong> <strong>புரமோட்டர் பங்கு மூலதனம் குறைந்துவரும் நிறுவனம்</strong></p><p>நிறுவனரின் (புரமோட்டர்) பங்கு மூலதனம் குறைந்துவரும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யக்கூடாது. புரமோட்டருக்கே நிறுவனத்தின்மீது ‘பிடிப்பு’ குறையும்போது, அவர் நடத்தும் நிறுவனம் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பு குறைவு. </p><p><strong>2. </strong> <strong>பங்குகளை அடமானம் வைக்கும் நிறுவனம்</strong></p><p>தனக்குச் சொந்தமான பங்குகளை அதிக அளவில் அடமானம் வைத்திருக்கும் நிறுவனப் பங்கிலும் முதலீடு செய்யக்கூடாது. அடமானம் வைத்த நிறுவனத்தால் பங்குகளை மீட்கமுடியாத போது, விற்கவேண்டிய நிலை ஏற்பட்டு பங்கின் விலை குறையும். </p><p><strong>3. கடன்கள் அதிகரித்துவரும் நிறுவனம்</strong></p><p>நிறுவனத்தின் கடன்கள் அதிகரித்தால், வட்டிக்குச் செல்லும் தொகையும் அதிகரிக்கும். இதனால் நிறுவனத்தின் லாபம் குறைந்து, பங்கின் விலையும் குறையும். </p><p><strong>4. </strong> <strong>செயல்பாட்டு லாபம், விற்பனை மற்றும் நிகர லாபம் குறைவது</strong></p><p>ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம், விற்பனை மற்றும் நிகர லாபம் தொடர்ந்து குறைந்தால், அந்த பங்கின் விலையும் குறையும். அது மாதிரியான பங்குகளை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக விற்று வெளியேறுவது நல்லது.</p>
<p><strong>ப</strong>ங்கு முதலீடு என்றுவரும்போது, சில விஷயங்களைக் கவனிப்பது அவசியம். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு விஷயங்களைக் கவனித்தால், பங்கு முதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும். </p><p><strong>1. </strong> <strong>புரமோட்டர் பங்கு மூலதனம் குறைந்துவரும் நிறுவனம்</strong></p><p>நிறுவனரின் (புரமோட்டர்) பங்கு மூலதனம் குறைந்துவரும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யக்கூடாது. புரமோட்டருக்கே நிறுவனத்தின்மீது ‘பிடிப்பு’ குறையும்போது, அவர் நடத்தும் நிறுவனம் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பு குறைவு. </p><p><strong>2. </strong> <strong>பங்குகளை அடமானம் வைக்கும் நிறுவனம்</strong></p><p>தனக்குச் சொந்தமான பங்குகளை அதிக அளவில் அடமானம் வைத்திருக்கும் நிறுவனப் பங்கிலும் முதலீடு செய்யக்கூடாது. அடமானம் வைத்த நிறுவனத்தால் பங்குகளை மீட்கமுடியாத போது, விற்கவேண்டிய நிலை ஏற்பட்டு பங்கின் விலை குறையும். </p><p><strong>3. கடன்கள் அதிகரித்துவரும் நிறுவனம்</strong></p><p>நிறுவனத்தின் கடன்கள் அதிகரித்தால், வட்டிக்குச் செல்லும் தொகையும் அதிகரிக்கும். இதனால் நிறுவனத்தின் லாபம் குறைந்து, பங்கின் விலையும் குறையும். </p><p><strong>4. </strong> <strong>செயல்பாட்டு லாபம், விற்பனை மற்றும் நிகர லாபம் குறைவது</strong></p><p>ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம், விற்பனை மற்றும் நிகர லாபம் தொடர்ந்து குறைந்தால், அந்த பங்கின் விலையும் குறையும். அது மாதிரியான பங்குகளை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக விற்று வெளியேறுவது நல்லது.</p>