தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 25,000 அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்றனர். கடந்த 2020-ல் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 60-ஆக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஓய்வுபெறுபவர்களின் வயது உயர்த்தப்பட்டதால் புதிதாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தடைப்பட்டது. அரசின் இந்த முடிவு அப்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

அப்படி வயது நீட்டிப்பால் 2020-ல் ஓய்வுபெறவேண்டியவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டுடன் அவர்களுக்கு 60 வயதாகிவிட்டதால் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் என 25,000 பேர் நேற்று ஒரே நாளில் ஓய்வுபெற்றார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஏற்கெனவே தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் 1,50,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகச் சொல்லப்படும் நிலையில், தற்போது கூடுதலாக 25,000 காலிப் பணியிடங்கள் உருவாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த ஆட்சியில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு பணப் பலன்கள் வழங்க நிதி இல்லாததால்தான் வயது நீட்டிப்பு அளித்து எடப்பாடி பழனிசாமி தப்பித்துக்கொண்டார் என்றும் அரசு ஊழியர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்