அரசு அலுவலகங்களில் காகிதங்களின் பயன்பாடுகள் அதிகளவு உள்ளன. இதனிடையே, அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைத்து கணினி மூலம் கடிதம், ஆவணங்கள் பெறும், இ-கவர்னன்ஸ் திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், `தமிழ்நாடு காவல்துறையில் இ-கவர்னன்ஸ் திட்டம் கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து காவல்துறையின் அலுவலக பயன்பாட்டிற்காக கோப்புகளை கணினி மூலம் அனுப்ப, இ-ஆபீஸ் எனும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மென்பொருளில் சிறப்பாக செயல்படும் போலீஸாருக்கு, காவல்துறை இயக்குநர் சான்றிதழ் வழங்கி கௌரவித்து வருகிறார்.
இதில் கடந்த பிப்ரவரி மாதம், தமிழ்நாடு அளவில் அதிக கோப்புகளை பதிவேற்றம் செய்து, கோப்புகளை முடிவுக்குக் கொண்டு வந்ததில் கோவை மாவட்ட காவல்துறை முதலிடம் பிடித்துள்ளது.
இதையடுத்து, மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் உத்தரவுப்படி, கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி வழிகாட்டுதலில் கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம், காவல் அலுவலக அமைச்சுப் பணியாளர்களை அழைத்து பரிசுப் பொருள்கள் வழங்கி பாராட்டினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் இருந்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமாருக்கும் இ-மெயிலில் பாராட்டு சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.