Published:Updated:

ராமேஸ்வரம்: 25 ஆண்டுகளைக் கடந்த தூர்தர்ஷன் டி.வி டவர் இன்றுடன் பயணத்தை முடித்துக்கொண்டது..!

ராமேஸ்வரம் டி.வி டவர்
News
ராமேஸ்வரம் டி.வி டவர் ( உ.பாண்டி )

ராமேஸ்வரத்தின் அடையாளங்களில் ஒன்றான, 25 ஆண்டுகளைக் கடந்த தூர்தர்ஷன் டி.வி டவர், டிசம்பர் 31-ல் தனது பணியை நிறுத்திக்கொள்வதாக அறிவித்திருக்கிறது.

Published:Updated:

ராமேஸ்வரம்: 25 ஆண்டுகளைக் கடந்த தூர்தர்ஷன் டி.வி டவர் இன்றுடன் பயணத்தை முடித்துக்கொண்டது..!

ராமேஸ்வரத்தின் அடையாளங்களில் ஒன்றான, 25 ஆண்டுகளைக் கடந்த தூர்தர்ஷன் டி.வி டவர், டிசம்பர் 31-ல் தனது பணியை நிறுத்திக்கொள்வதாக அறிவித்திருக்கிறது.

ராமேஸ்வரம் டி.வி டவர்
News
ராமேஸ்வரம் டி.வி டவர் ( உ.பாண்டி )
டி.வி டவரில் இயங்கும் டெக்னிக்கல் அலுவலகம்
டி.வி டவரில் இயங்கும் டெக்னிக்கல் அலுவலகம்
உ.பாண்டி

இந்தியாவிலிருந்து இலங்கையின் ஒலிபரப்பு தொடர்புகளுக்காக கட்டப்பட்ட இந்த டி.வி டவர் சுமார் 1,060 அடி உயரம்கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய டவர்.

டி.வி டவர்
டி.வி டவர்
உ.பாண்டி

ரூபாய் ஐந்தரை கோடி நிதியில், கடந்த 1990-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் கட்டப்பட்டது. 1,060 அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த உயர் கோபுரத்தில் 285 மீட்டர் உயரத்துக்கு கான்கிரீட் கற்களால் கட்டப்பட்டு, அதன் உச்சிப் பகுதியில் 45 மீட்டர் உயரத்தில் இரும்புக்கம்பிகளால் டவர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த தூர்தர்ஷன் டவரில் சுமார் ரூ.6 கோடி செலவில் டிரோன் மூலம் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன.

கோயில் அருகில் கம்பீரமாகக் காட்சி அளிக்கும் டவர்
கோயில் அருகில் கம்பீரமாகக் காட்சி அளிக்கும் டவர்
உ.பாண்டி

1995-ம் ஆண்டு முதல் ராமேஸ்வரத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை, டெல்லியிலுள்ள தூர்தர்ஷன் நிலையத்திலிருந்து ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பெற்று ராமேஸ்வரத்திலுள்ள தொலைக்காட்சி நிலையம் மூலம் ஒளிபரப்பப்பட்டுவந்தது.

உயர் கோபுரம்
உயர் கோபுரம்
உ.பாண்டி

இந்தத் தொலைக்காட்சி நிலையத்தில் அகில இந்திய வானொலி சேவைகளும் செயல்பட்டுவருகின்றன. தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை, இலங்கை யாழ்ப்பாணம் மன்னார் உள்ளிட்ட பல பகுதிகள் வரை கிடைத்தது. மேலும் ராமேஸ்வரம் தீவுப் பகுதி மீனவர்களுக்கு இந்தத் தொலைக்காட்சி நிலைய உயர் கோபுரம் மீன்பிடித்து கரை திரும்பும்போது ஒரு கலங்கரை விளக்கம் போன்று பயனுள்ளதாக இருந்துவந்தது

உயர் கோபுரம்
உயர் கோபுரம்
உ.பாண்டி

தற்போது வளர்ந்துவரும் தொலைத் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியால் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நிகழ்ச்சியை மக்கள் பார்ப்பது குறைந்துவிட்டது. இதனால் இந்தியாவிலுள்ள 412 தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையங்களை மூடுவதற்கு மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

உயர் கோபுரம்
உயர் கோபுரம்
உ.பாண்டி

இதன் மூலம் சுமார் 30 ஆயிரம் ஊழியர்கள் பணி இழந்துள்ளனர். தூர்தர்ஷன் நிலையங்களில் தரைவழி ஒளிபரப்பு நிறுத்தப்பட்ட நிலையில், பிரசார் பாரதி நிறுவனம் தற்போது நடைமுறையில் உள்ள அனலாக் டிரான்ஸ்மீட்டர் தொழில்நுட்பத்தை டிஜிட்டல் தொழில்நுட்பமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகக் கூறப்படுகிறது. இதனால் தூர்தர்ஷனின் அனைத்து ஒளிபரப்புகளும் டி.டி.ஹெச் சேவை மூலம் தொடர்ந்து கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் பொதிகை சேனல்களை இனிமேல் இதில் பார்க்கலாம்.

ராமேஸ்வரம் டி.வி டவர்
ராமேஸ்வரம் டி.வி டவர்
உ.பாண்டி

ராமேஸ்வரம் தூர்தர்ஷன் டி.வி டவர் இரண்டரை ஏக்கர் இடத்தில் அமைந்துள்ள இந்தியாவின் இரண்டாவது பெரிய டவர். உலக அளவில் 32-வது ரேங்கில் இருந்தது. திருநெல்வேலி, தென்கரைக்கோட்டை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, கொடைக்கானல் ஆகிய தூர்தர்ஷன் நிலையங்கள் அக்டோபர் 31 அன்று தங்களது சேவையை நிறுத்திக்கொண்டன.

இராமேஸ்வரம் டிவி டவர்
இராமேஸ்வரம் டிவி டவர்
உ.பாண்டி

இதன் மூலம் சுமார் 30 ஆயிரம் ஊழியர்கள் பணி இழந்துள்ளனர். 25 ஆண்டுகள் பயணித்த ராமேஸ்வரம் டி.வி டவர் தனது தரைவழி ஒளிபரப்பை இன்றுடன் முடித்துக்கொண்டாலும், வேறொரு பரிணாமத்தில் பயணித்துக்கொண்டேதான் இருக்கிறது.