தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதால், வரும் ஞாயிற்றுக்கிழமை 23-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா மற்றும்ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவருவதால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், `அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். ஏற்கெனவே தடைசெய்யப்பட்ட செயல்பாடுகளுக்குத் தடைகள் தொடரும்.

முழு ஊரடங்கு நாளில் பயணிகளின் நலன் கருதி சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் ஆட்டோக்கள் செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும். வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
