பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மகன் திருமணம் கோவை அவிநாசி சாலையிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விவசாயி அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ், எம்.எல்.ஏ காந்தி, குஷ்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது நிர்வாகிகளுக்கு உணவு பரிமாறி நிர்வாகிகளை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் தமிழிசை.
இது குறித்து ஜி.கே.நாகராஜ் கூறுகையில், ``அண்ணாமலை, காந்தி, நான் மணமக்களை வாழ்த்திவிட்டுக் கீழே இறங்கினோம். முக்கிய நிர்வாகிகளுக்கு சாப்பிடத் தனியாக இடம் ஒதுக்கியிருந்தனர். அங்கு தமிழிசையும் இருந்தார். அவரையும் சாப்பிட அழைத்தோம்.

அவர், `வேண்டாம்’ என்று கூறிவிட்டு, `கட்சியின் உண்மையான உழைப்பாளி, உங்களுக்குப் பரிமாறுவதில் பெருமை’ என்று எங்கள் மூன்று பேருக்கும் அன்போடு பரிமாறினார். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
புதுச்சேரி, தெலங்கானா என்று இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராக இருப்பவர், உணவு பரிமாறுவது சாதாரண விஷயமல்ல. வேறு யாரும் இதைச் செய்ய மாட்டார்கள். மற்ற கட்சிகளில் ஆளுநரின் அருகிலேயே யாரும் செல்ல முடியாது. தமிழகத்தில் தாமரை மலரும் என்று தன்னம்பிக்கையுடன் அடிக்கடி கூறியவர்.

தற்போது, தமிழ்நாட்டில் நாங்கள் நான்கு இடங்களில் வென்றதற்கு அவரும் ஒரு காரணம். கடுமையான உழைப்புதான் அவரை இந்த இடத்துக்குக் கொண்டுவந்துள்ளது” என்றார்.