<p><span style="color: #ff0000"><strong>தீ</strong></span>பாவளிக்கு நாம் விடும் ராக்கெட், சில அடிகள் அதிக உயரம் பறந்தாலே நமக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். விண்ணைத் தாண்டி விட்டதாக மகிழ்ந்து குதூகலிப்போம். நிஜமாகவே ராக்கெட் விண்ணில் பறந்து, அதில் நாமும் பயணம் செய்தால்..? அதை அனுபவித்து உணர்ந்தவர் ராகேஷ் ஷர்மா. இந்தியாவில் இருந்து விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர். ராகேஷ் ஷர்மா இப்போது தன்னுடைய ஓய்வுகால வாழ்க்கையில், ஊட்டி அருகே குன்னூரில் வசிக்கிறார். விண்வெளியில் பறந்து மகத்தான சாதனை புரிந்தவர், நம் அருகிலேயே இருக்கும்போது விடலாமா?</p>.<p>''1965-ம் ஆண்டில் நான் குன்னூருக்கு வந்திருக்கிறேன். அப்போதே இந்த ஊரின் மீது எனக்குக் காதல். பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையை இங்கேதான் கழிப்பது என அன்றே முடிவு எடுத்துவிட்டேன். கடவுள் நான் விரும்பியதைக் கொடுத்திருக்கிறார். ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. குன்னூர் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறது.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''உங்கள் குடும்பம் பற்றி?''</strong></span></p>.<p>''என் மனைவி இங்கே என்னுடன்தான் இருக்கிறார். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் திருமணம் முடிந்து மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். மகள் மாஸ்டர்ஸ் படிக்க அமெரிக்கா சென்றிருக்கிறார்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை எங்கே படித்தீர்கள்?''</strong></span></p>.<p>''எங்கள் சொந்த ஊர் பட்டியாலா. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பாகிஸ்தான் பிரிவினையின்போது எங்கள் குடும்பம் ஹைதராபாத்துக்கு வந்துவிட்டது. என் தந்தைக்கு அந்த ஊர் பிடித்துவிட்டது. என் பள்ளி வாழ்க்கை ஹைதராபாத்தில் கழிந்தது. பின், நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில் தேர்வானேன். புனேயில் மூன்று ஆண்டு கோர்ஸ் முடித்ததும், 1970-ம் ஆண்டு இந்தியன் ஏர் ஃபோர்ஸில் பணிக்குச் சேர்ந்தேன். அங்கே 20 ஆண்டு காலம் பணியில் இருந்தேன். அதன் பின்னர் HAL-ல் டெஸ்ட் பைலட் ஆகப் பணிபுரிந்தேன். அங்கிருந்து ஓய்வு பெற்றேன். அதன் பின்பும் என்னால் வேலைசெய்ய முடியும் எனத் தோன்றியது. ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். நீர்மூழ்கி கப்பல், விமானம் போன்ற பாதுகாப்பு தளவாடங்களைத் தயாரிக்கும் கம்பெனிகளுக்குத் தேவையான மென்பொருள்களை உருவாக்கும் நிறுவனம் அது. அவர்களின் எக்ஸிகியூட்டிவ் அட்வைசர் நான். இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு, 60-வது வயதில் நிரந்தரமாக ஓய்வு பெற்றுவிட்டேன். அங்கு இருந்து நேராக நான் வந்த இடம் குன்னூர்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''உங்கள் விண்வெளி பயணம் பற்றி பேசுவோம். நீங்கள் எப்படித் தேர்வானீர்கள்? நிறையப் பேர் போட்டியில் இருந்தார்களா?''</strong></span></p>.<p>''ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து செய்த கூட்டு முயற்சியில்தான் நான் விண்வெளிக்குச் சென்றேன். உண்மையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அப்போது அந்த முயற்சிக்குத் தயாராக இல்லை. அவர்கள் சேட்டிலைட் புராஜெக்ட்டில் கவனம் செலுத்த நினைத்தார்கள். அதனால், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, அவர்கள் கூட்டு புராஜெக்ட்டை இந்தியன் ஏர் ஃபோர்ஸிடம் தந்தார். நாங்களும் அதற்குத் தயாராக இருந்தோம். நானும் ஏர் ஃபோர்ஸில் ஒரு பைலட் என்பதால், என் பெயர் தானாக பட்டியலில் வந்துவிட்டது. ரஷ்யா தங்களுக்கு டெஸ்ட் பைலட்தான் வேண்டும் என்றது. எனவே, போட்டி இன்னும் சுருங்கியது. நான்தான் அப்போது இளமையான டெஸ்ட் பைலட். ஃபிட்டாகவும் இருந்தேன். எனவே, எளிதில் தேர்வாகிவிட்டேன்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''விண்வெளிக்குச் செல்வதற்கு முன்பாக என்னென்ன மாதிரியான பயிற்சிகளைத் தந்தார்கள்?''</strong></span></p>.<p>''கிட்டத்தட்ட 18 மாதங்கள் பயிற்சி எடுத்தோம். விண்கலனை எப்படி இயக்குவது என முதலில் சொல்லித்தந்தார்கள். விமானங்கள் வான்வெளிக்கு உள்ளாகத்தான் பறக்கும். ஆனால், விண்கலங்கள் வெற்றிடத்தில் பறக்கும். எனவே, இயற்பியல் கோட்பாடுகள் எல்லாமே அங்கே மாறும். அதைப் பற்றி படித்தோம். அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டோம். இன்னும் பல சோதனைகளை மேற்கொண்டோம். வெவ்வேறுவிதமான கருவிகளைப் பழக்கினோம். மனரீதியாகவும் எங்களைப் பலப்படுத்திக்கொண்டோம்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''அந்த வாய்ப்பு வருவதற்கு முன்பாக விண்வெளி பயணம் குறித்து யோசித்திருக்கிறீர்களா?''</strong></span></p>.<p>''உண்மையைச் சொன்னால், இல்லை. ஏர் ஃபோர்ஸுக்காக ஃபைட்டர் பைலட் ஆவது மட்டும்தான் என் கனவு. விண்வெளிப் பயணம் பற்றி நான் சிந்தித்ததே இல்லை. நான் மாணவனாக இருந்தபோதுதான் உலகம் விண்வெளிப் பயணம் பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தது. இந்தியாவில் அதற்கான எந்தத் திட்டமும் அப்போது இல்லை. எனவே, நான் அதைப் பற்றி சிந்திக்க வாய்ப்பே இல்லை. நான் அதிர்ஷ்டசாலி. அதனால்தான் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என நினைக்கிறேன்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''ஸீரோ கிராவிட்டி... அந்தப் பகுதிக்குள் நுழைந்ததும் எப்படி இருந்தது?''</strong></span></p>.<p>''புதிய அனுபவம்தான். நாம் எப்போதும் பறந்துகொண்டே இருப்போம். எல்லாமே மிக எளிதாக இருக்கும். சுவரில் காலைவைத்து லேசாகத் தள்ளினால் மேலே பறப்போம். எல்லாம் சந்தோஷமான விஷயங்கள்தான். ஆனால், ஸீரோ கிராவிட்டியில் வேலை செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நாமும் பறப்போம்; எல்லாக் கருவிகளும் பறந்தபடியே இருக்கும். அதில் சரியாகக் கவனித்து வேலைசெய்வது சிக்கலான வேலையாக இருந்தது. பூமியில் அரை மணி நேரத்தில் செய்யக்கூடிய வேலைக்கு அங்கே ஒன்றரை மணி நேரம் ஆனது. எல்லாவற்றையும் கவனமாகச் செய்தாக வேண்டும். கருவிகளை எலாஸ்டிக் ஸ்ட்ராப்பால் கட்டிவைக்க வேண்டும். இன்னும் நிறைய செக்பாயின்ட்ஸ் உண்டு. வேலை செய்யாத நேரங்களில் ஸீரோ கிராவிட்டி சந்தோஷமான விஷயம்தான்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''அங்கு இருந்து பூமியைப் பார்த்தீர்களா... எப்படி இருந்தது?''</strong></span></p>.<p>''பார்த்தோம். பூமியில் இருந்து பல ஆயிரம் கி.மீ தூரம் தள்ளிச் சென்றால்தான், பூமி பந்துபோலத் தெரியும். நாங்கள் பூமியைவிட்டு 500 கி.மீ தூரத்தில் பறந்துகொண்டிருந்தோம். 100 கி.மீ தூரத்திலே ஸீரோ கிராவிட்டி ஏரியா தொடங்கிவிடும். 500 கி.மீ தொலைவில் எல்லாமே தெளிவாகத் தெரியும். மலைத்தொடர்கள், கடற்கரை, பாலைவனம் என எல்லாமே தெளிவாகத் தெரிந்தன.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''அங்கு இருந்து பார்க்கும்போது பூமி என்ன நிறத்தில் தெரிந்தது?''</strong></span></p>.<p>''அது பார்க்கும் இடத்தைப் பொறுத்தது. காடுகள் பச்சை நிறத்திலும், பாலைவனம் தங்க நிறத்திலும் தெரிந்தன. மலைச் சிகரங்கள் பனியால் மூடப்பட்டு வெள்ளை நிறத்தில் இருந்தன. இன்னும் பல நிறங்கள். ஆனால், பூமி மிக அழகாகத் தெரிந்தது.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''நம் அறிவியலாளர்கள் பூமியில் காற்று மாசு அடைவதைப் பற்றி அதிகம் கவலை கொள்கிறார்கள். உண்மையில், பூமியில் காற்று மாசு அடைந்திருப்பது தெரிந்ததா?''</strong></span></p>.<p>''ஆமாம். பொதுவாக விண்வெளியில் இருந்து பார்த்தால், பூமி நீலமாகத் தெரிய வேண்டும். ஆனால், இப்போது சாம்பல் நிறத்தில் தெரிகிறது. மனித நடமாட்டம் இருக்கிற இடங்களில் எல்லாம் சாம்பல் நிறமாகத்தான் தெரிந்தது. நாம் நிச்சயம் பூமியைச் சேதப்படுத்தி இருக்கிறோம். நம் வளங்களை அழித்திருக்கிறோம். அது உண்மைதான்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''பயணம் முடிந்து திரும்பியதும் உங்கள் மனம் மற்றும் உடல்நிலை எப்படி இருந்தது என்பது நினைவில் இருக்கிறதா?''</strong></span></p>.<p>''உடல் ரீதியாக எல்லாமே வலுவாக இருந்தன. ஒரு வாரம் முழுக்க படுக்கையில் இருந்துவிட்டு, எதற்காகவும் நம் கைகளைக்கூடத் தூக்காமல் இருந்தால் என்ன ஆகும்? எழுந்திருக்கும்போது நம் உடலையே நம்மால் தூக்க முடியாது இல்லையா? அப்படித்தான் எனக்கும் இருந்தது. என் தசைகள் இறுக்கமாக இருந்தன. பிறகு சில நாட்களில் சரியாகிவிட்டது. மன ரீதியாக, எனக்கு எந்த மாறுதலும் இல்லை. கவிஞர்கள் யாராவது சென்றால், அவர்கள் மனம் குதூகலித்து இருக்கலாம். எனக்குக் கவிதை எழுத வராது. அதனால், பெரிய வித்தியாசம் இல்லை. ஒரு பைலட்டாக எனக்கு இன்னொரு பயணம், அவ்வளவே. ஒருவேளை நாளை சுற்றுலாப் பயணிகள் சென்றால், அவர்களுக்கு வேறு அனுபவம் கிடைக்கலாம். ஆனால், நாங்கள் வேலை செய்யச் சென்றோம். ஒவ்வொரு விநாடியும் எங்களுக்கு வேலை இருந்தது.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''விண்வெளியில் உங்கள் உணவு என்ன?''</strong></span></p>.<p>''சாதாரண உணவுதான். எல்லாம் பிளாஸ்டிக் கன்டெயினரில் பேக் செய்யப்பட்டு இருக்கும். ஏனெனில், எதுவும் சிந்தக் கூடாது. சிந்தினால், அது நம்மைச் சுற்றியே பறந்துகொண்டிருக்கும். எனவே, அந்த கன்டெயினரை அப்படியே ஓவனில் சூடுபடுத்தி அப்படியே சாப்பிட வேண்டும். நாம் வழக்கமாக உண்ணும் அதே உணவு வகைகள்தான்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''உங்களுடன் பயணித்த ரஷ்ய நண்பர்கள் எப்படி? சுவாரஸ்யமாக ஏதும் நடந்ததா?''</strong></span></p>.<p>''ரொம்பவே அன்பானவர்கள். நல்ல ஒத்துழைப்புத் தந்தார்கள். ஒரு தடவை தண்ணீர் சிந்திவிட்டது. நீர்ம அலைவியக்க ஆற்றலால் (Surface tension) அது ஒரு பந்துபோல ஆகிவிட்டது. அது உடைந்துவிட்டால், இன்னும் பல கோளங்களாக உடையும். எனவே, நாங்கள் அனைவரும் அதைச் சுற்றி நின்றுகொண்டு அதை உறிஞ்ச வேண்டி இருந்தது. அந்தக் காட்சியை நினைக்கவே சிரிப்பாக இருந்தது.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''ஆன்மிகத்தில் உங்களுக்கு நாட்டம் உண்டா? விண்வெளி பயணம் உங்களை இந்த விஷயத்தில் ஏதும் மாற்றியதா?''</strong></span></p>.<p>''அதற்கும் இந்தப் பயணத்துக்கும் தொடர்பு இருப்பதாக நான் கருதவில்லை. அது, அவரவர் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் வெற்றி தோல்விகளை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். சிலர், தாங்கள் எல்லா வெற்றிகளையும் கண்டுவிட்டோம் என மமதைகொள்ளலாம். சிலர், அதை அதிர்ஷ்டம் என நினைக்கலாம். என்னைப் பொறுத்தவரை எனக்கு ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகம். ஆனால், அதற்கும் நான் விண்வெளிக்கு சென்றதற்கும் தொடர்பு இல்லை.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''விண்வெளி வீரராக நினைக்கும் இளைஞர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?''</strong></span></p>.<p>''நான் விண்வெளி வீரராக ஆவேன் என நினைத்ததே இல்லை. ஆனால், நடந்திருக்கிறது. அதை நான் என் கனவாக, லட்சியமாக வைத்திருந்தால், இன்னும் எளிதாகத்தானே இருக்கும்? எனவே, அவர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே இருக்கும். நிறையப் பேர் விண்வெளிக்குச் செல்லலாம். அது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடலாம். நிலாவுக்கே செல்லலாம். இன்னும் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அங்கெல்லாம் செல்லலாம். இந்த தலைமுறை அதிர்ஷ்டம் செய்திருக்கிறது. நிறையப் பேருக்கு வாய்ப்புகள் கிடைக்கப்போகின்றன. எனவே, விருப்பம் இருப்பவர்கள் ஆர்வத்துடன் தங்களைத் தயார்செய்து கொள்ளுங்கள். எனது வாழ்த்துகள்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அதன் ஆராய்ச்சிகளுக்குச் செய்யும் செலவு மிக அதிகம். அது தேவைதானா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''</strong></span></p>.<p>''நிச்சயமாகத் தேவை. இந்தியாதான் இதற்காக உலகிலேயே குறைவாகச் செலவு செய்யும் நாடு என்பது உங்களுக்குத் தெரியுமா? எந்தத் துறையாக இருந்தாலும் அதைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால், மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கினால், அது நிச்சயம் தேவையான ஒரு விஷயமாகத்தான் இருக்க முடியும். அதையே அழிவுக்காகப் பயன்படுத்தினால், அல்லது தனிநபர் நலனுக்குப் பயன்படுத்தினால்தான் தவறு. நம் நாட்டைப் பொறுத்தவரை அப்படி இல்லையே! 20 ஆண்டுகளுக்கு முன்பு யாரிடமும் செல்போன் இல்லை. இப்போது எல்லோரிடமும் இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையை அது எளிமை ஆக்கியிருக்கிறது. எல்லோரும் தொலைக்காட்சி பார்க்கிறார்கள். உலகைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள். 'டெலி எஜுகேஷன்’ இப்போது கிராமங்கள் வரை சென்றிருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் சேட்டிலைட்தானே அடிப்படை? அப்படி இருக்க, அது தொடர்பான ஆராய்ச்சி எப்படி வீண் செலவாக இருக்க முடியும்? இன்னும் ஏராளமான நன்மைகள் இதனால் நடந்திருக்கின்றன.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்றதில் நிறைய விவாதங்கள், குழப்பங்கள். அது உண்மை இல்லை எனப் பலர் சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''</strong></span></p>.<p>''உண்மைதான். ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்றார். இங்கே இருக்கும் தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி-க்காக அடித்துக் கொள்கிறார்களே. அதுபோல அப்போது அமெரிக்க தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி பசியில் இருந்தார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிய குழப்பம் அது.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''வேறு எதாவது கிரகத்தில் மனிதர்கள் வாழ வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறீர்களா?''</strong></span></p>.<p>''மனிதர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், உயிரினங்கள் வாழ வாய்ப்புகள் அதிகம். ஆயிரக்கணக்கான கிரகங்கள் உள்ளன. அதில் நாம் மட்டுமே வாழ்கிறோம் என நினைப்பதே மோசமான விஷயம் என நினைக்கிறேன்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''உங்கள் வாழ்க்கையில் இன்ஸ்பிரேஷன் என யாரைச் சொல்வீர்கள்?''</strong></span></p>.<p>''என் கஸின் ஒருவர் இருந்தார். அவரும் ஃபைட்டர் பைலட். எனது முதல் ஹீரோ அவர்தான். அவரைப் பார்த்துதான் நானும் பைலட் ஆக வேண்டும் என விரும்பினேன். அதன் பின்னர் நிறையப் பேர் இருந்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போல பலர் என்னை ஈர்த்திருக்கிறார்கள்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''படங்கள் பார்ப்பீர்களா? இந்திய சினிமாவில் விண்வெளி பற்றிய கதைகள் எதுவுமே வருவது இல்லை என நினைத்திருக்கிறீர்களா?''</strong></span></p>.<p>''கொஞ்ச காலம் ஆகும். எவ்வளவு நாள்தான் இதே காதல் கதைகளை மக்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள்? நிச்சயம் மாறும். இந்தியா பெரிய அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகள் படைக்கவில்லை. இன்னும் இந்தியா தனியாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பவில்லை. நான் சென்றதே ரஷ்ய அரசோடு இணைந்துதான். அது நடக்கும்போது மக்களும் அதில் ஆர்வம் காட்டுவார்கள். பின், சினிமாவும் அதைப் பின்பற்றும். விரைவில் இது நடக்கும்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''டைம் மெஷின் படம் ஒன்று சமீபத்தில் தமிழில் வந்தது. உண்மையில், டைம் ட்ராவல் சாத்தியமா?''</strong></span></p>.<p>''எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனால், அறிவியலாளர்கள் சொல்வதைப்போல, ஒளியின் வேகத்தில் நம்மால் பயணம் செய்ய முடியும் என்றால், டைம் டிராவல் சாத்தியம்தான். தியரிட்டிக்கலாக அதை நிரூபித்திருக்கிறார்கள். செய்து காட்ட வேண்டும். ஆனால் ஒன்று... கடந்த காலத்தில் நம் புனைவுக் கதையில் உலவிய பல விஷயங்கள் இப்போது உண்மையாகி இருக்கின்றன. அதுபோல, எதிர்காலத்தில் டைம் ட்ராவல் சாத்தியம் ஆகலாம்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''தமிழக மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் மெசேஜ் என்ன?''</strong></span></p>.<p>''நான் ஏழு ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்கிறேன். பொதுவாக எனக்கு தென் இந்தியா மிகவும் பிடிக்கும். அதற்குக் காரணம், கலாசாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பாரம்பர்யத்தைப் பாதுகாப்பார்கள். நான் இந்திய கலாசாரம், பாரம்பர்யத்தை விரும்புவன். அதனால், தென் இந்தியா பிடிக்கும். ஆனால், சமீப காலமாக அரசியல் விளையாட்டுகளைக் கண்டு மனம் நொந்துபோயிருக்கிறேன். ஊழல் மலிந்துவிட்டது. எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எப்படி இது போன்ற அநியாயங்களும், அதே சமயம் தொன்மங்களும் ஒன்றாக இருக்க முடிகிறது? எனது வேண்டுகோள் ஒன்றுதான். உங்கள் கவனம் உங்கள் குழந்தைகள் மீது இருக்கட்டும். அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருங்கள். நீங்கள் செய்வதைத்தான் அவர்களும் செய்வார்கள். ஆகவே, நீங்கள் சரியானதை மட்டுமே செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழகம் அதன் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்தியாவைக் காப்பாற்ற முடியும். தென் இந்தியாவில் இருப்பவர்களுக்கு இந்தியாவைக் காப்பாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, நீங்கள் சரியாக இருங்கள். அதுதான் என் ஒரே ஆசை!''</p>
<p><span style="color: #ff0000"><strong>தீ</strong></span>பாவளிக்கு நாம் விடும் ராக்கெட், சில அடிகள் அதிக உயரம் பறந்தாலே நமக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். விண்ணைத் தாண்டி விட்டதாக மகிழ்ந்து குதூகலிப்போம். நிஜமாகவே ராக்கெட் விண்ணில் பறந்து, அதில் நாமும் பயணம் செய்தால்..? அதை அனுபவித்து உணர்ந்தவர் ராகேஷ் ஷர்மா. இந்தியாவில் இருந்து விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர். ராகேஷ் ஷர்மா இப்போது தன்னுடைய ஓய்வுகால வாழ்க்கையில், ஊட்டி அருகே குன்னூரில் வசிக்கிறார். விண்வெளியில் பறந்து மகத்தான சாதனை புரிந்தவர், நம் அருகிலேயே இருக்கும்போது விடலாமா?</p>.<p>''1965-ம் ஆண்டில் நான் குன்னூருக்கு வந்திருக்கிறேன். அப்போதே இந்த ஊரின் மீது எனக்குக் காதல். பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையை இங்கேதான் கழிப்பது என அன்றே முடிவு எடுத்துவிட்டேன். கடவுள் நான் விரும்பியதைக் கொடுத்திருக்கிறார். ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. குன்னூர் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறது.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''உங்கள் குடும்பம் பற்றி?''</strong></span></p>.<p>''என் மனைவி இங்கே என்னுடன்தான் இருக்கிறார். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் திருமணம் முடிந்து மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். மகள் மாஸ்டர்ஸ் படிக்க அமெரிக்கா சென்றிருக்கிறார்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை எங்கே படித்தீர்கள்?''</strong></span></p>.<p>''எங்கள் சொந்த ஊர் பட்டியாலா. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பாகிஸ்தான் பிரிவினையின்போது எங்கள் குடும்பம் ஹைதராபாத்துக்கு வந்துவிட்டது. என் தந்தைக்கு அந்த ஊர் பிடித்துவிட்டது. என் பள்ளி வாழ்க்கை ஹைதராபாத்தில் கழிந்தது. பின், நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில் தேர்வானேன். புனேயில் மூன்று ஆண்டு கோர்ஸ் முடித்ததும், 1970-ம் ஆண்டு இந்தியன் ஏர் ஃபோர்ஸில் பணிக்குச் சேர்ந்தேன். அங்கே 20 ஆண்டு காலம் பணியில் இருந்தேன். அதன் பின்னர் HAL-ல் டெஸ்ட் பைலட் ஆகப் பணிபுரிந்தேன். அங்கிருந்து ஓய்வு பெற்றேன். அதன் பின்பும் என்னால் வேலைசெய்ய முடியும் எனத் தோன்றியது. ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். நீர்மூழ்கி கப்பல், விமானம் போன்ற பாதுகாப்பு தளவாடங்களைத் தயாரிக்கும் கம்பெனிகளுக்குத் தேவையான மென்பொருள்களை உருவாக்கும் நிறுவனம் அது. அவர்களின் எக்ஸிகியூட்டிவ் அட்வைசர் நான். இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு, 60-வது வயதில் நிரந்தரமாக ஓய்வு பெற்றுவிட்டேன். அங்கு இருந்து நேராக நான் வந்த இடம் குன்னூர்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''உங்கள் விண்வெளி பயணம் பற்றி பேசுவோம். நீங்கள் எப்படித் தேர்வானீர்கள்? நிறையப் பேர் போட்டியில் இருந்தார்களா?''</strong></span></p>.<p>''ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து செய்த கூட்டு முயற்சியில்தான் நான் விண்வெளிக்குச் சென்றேன். உண்மையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அப்போது அந்த முயற்சிக்குத் தயாராக இல்லை. அவர்கள் சேட்டிலைட் புராஜெக்ட்டில் கவனம் செலுத்த நினைத்தார்கள். அதனால், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, அவர்கள் கூட்டு புராஜெக்ட்டை இந்தியன் ஏர் ஃபோர்ஸிடம் தந்தார். நாங்களும் அதற்குத் தயாராக இருந்தோம். நானும் ஏர் ஃபோர்ஸில் ஒரு பைலட் என்பதால், என் பெயர் தானாக பட்டியலில் வந்துவிட்டது. ரஷ்யா தங்களுக்கு டெஸ்ட் பைலட்தான் வேண்டும் என்றது. எனவே, போட்டி இன்னும் சுருங்கியது. நான்தான் அப்போது இளமையான டெஸ்ட் பைலட். ஃபிட்டாகவும் இருந்தேன். எனவே, எளிதில் தேர்வாகிவிட்டேன்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''விண்வெளிக்குச் செல்வதற்கு முன்பாக என்னென்ன மாதிரியான பயிற்சிகளைத் தந்தார்கள்?''</strong></span></p>.<p>''கிட்டத்தட்ட 18 மாதங்கள் பயிற்சி எடுத்தோம். விண்கலனை எப்படி இயக்குவது என முதலில் சொல்லித்தந்தார்கள். விமானங்கள் வான்வெளிக்கு உள்ளாகத்தான் பறக்கும். ஆனால், விண்கலங்கள் வெற்றிடத்தில் பறக்கும். எனவே, இயற்பியல் கோட்பாடுகள் எல்லாமே அங்கே மாறும். அதைப் பற்றி படித்தோம். அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டோம். இன்னும் பல சோதனைகளை மேற்கொண்டோம். வெவ்வேறுவிதமான கருவிகளைப் பழக்கினோம். மனரீதியாகவும் எங்களைப் பலப்படுத்திக்கொண்டோம்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''அந்த வாய்ப்பு வருவதற்கு முன்பாக விண்வெளி பயணம் குறித்து யோசித்திருக்கிறீர்களா?''</strong></span></p>.<p>''உண்மையைச் சொன்னால், இல்லை. ஏர் ஃபோர்ஸுக்காக ஃபைட்டர் பைலட் ஆவது மட்டும்தான் என் கனவு. விண்வெளிப் பயணம் பற்றி நான் சிந்தித்ததே இல்லை. நான் மாணவனாக இருந்தபோதுதான் உலகம் விண்வெளிப் பயணம் பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தது. இந்தியாவில் அதற்கான எந்தத் திட்டமும் அப்போது இல்லை. எனவே, நான் அதைப் பற்றி சிந்திக்க வாய்ப்பே இல்லை. நான் அதிர்ஷ்டசாலி. அதனால்தான் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என நினைக்கிறேன்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''ஸீரோ கிராவிட்டி... அந்தப் பகுதிக்குள் நுழைந்ததும் எப்படி இருந்தது?''</strong></span></p>.<p>''புதிய அனுபவம்தான். நாம் எப்போதும் பறந்துகொண்டே இருப்போம். எல்லாமே மிக எளிதாக இருக்கும். சுவரில் காலைவைத்து லேசாகத் தள்ளினால் மேலே பறப்போம். எல்லாம் சந்தோஷமான விஷயங்கள்தான். ஆனால், ஸீரோ கிராவிட்டியில் வேலை செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நாமும் பறப்போம்; எல்லாக் கருவிகளும் பறந்தபடியே இருக்கும். அதில் சரியாகக் கவனித்து வேலைசெய்வது சிக்கலான வேலையாக இருந்தது. பூமியில் அரை மணி நேரத்தில் செய்யக்கூடிய வேலைக்கு அங்கே ஒன்றரை மணி நேரம் ஆனது. எல்லாவற்றையும் கவனமாகச் செய்தாக வேண்டும். கருவிகளை எலாஸ்டிக் ஸ்ட்ராப்பால் கட்டிவைக்க வேண்டும். இன்னும் நிறைய செக்பாயின்ட்ஸ் உண்டு. வேலை செய்யாத நேரங்களில் ஸீரோ கிராவிட்டி சந்தோஷமான விஷயம்தான்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''அங்கு இருந்து பூமியைப் பார்த்தீர்களா... எப்படி இருந்தது?''</strong></span></p>.<p>''பார்த்தோம். பூமியில் இருந்து பல ஆயிரம் கி.மீ தூரம் தள்ளிச் சென்றால்தான், பூமி பந்துபோலத் தெரியும். நாங்கள் பூமியைவிட்டு 500 கி.மீ தூரத்தில் பறந்துகொண்டிருந்தோம். 100 கி.மீ தூரத்திலே ஸீரோ கிராவிட்டி ஏரியா தொடங்கிவிடும். 500 கி.மீ தொலைவில் எல்லாமே தெளிவாகத் தெரியும். மலைத்தொடர்கள், கடற்கரை, பாலைவனம் என எல்லாமே தெளிவாகத் தெரிந்தன.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''அங்கு இருந்து பார்க்கும்போது பூமி என்ன நிறத்தில் தெரிந்தது?''</strong></span></p>.<p>''அது பார்க்கும் இடத்தைப் பொறுத்தது. காடுகள் பச்சை நிறத்திலும், பாலைவனம் தங்க நிறத்திலும் தெரிந்தன. மலைச் சிகரங்கள் பனியால் மூடப்பட்டு வெள்ளை நிறத்தில் இருந்தன. இன்னும் பல நிறங்கள். ஆனால், பூமி மிக அழகாகத் தெரிந்தது.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''நம் அறிவியலாளர்கள் பூமியில் காற்று மாசு அடைவதைப் பற்றி அதிகம் கவலை கொள்கிறார்கள். உண்மையில், பூமியில் காற்று மாசு அடைந்திருப்பது தெரிந்ததா?''</strong></span></p>.<p>''ஆமாம். பொதுவாக விண்வெளியில் இருந்து பார்த்தால், பூமி நீலமாகத் தெரிய வேண்டும். ஆனால், இப்போது சாம்பல் நிறத்தில் தெரிகிறது. மனித நடமாட்டம் இருக்கிற இடங்களில் எல்லாம் சாம்பல் நிறமாகத்தான் தெரிந்தது. நாம் நிச்சயம் பூமியைச் சேதப்படுத்தி இருக்கிறோம். நம் வளங்களை அழித்திருக்கிறோம். அது உண்மைதான்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''பயணம் முடிந்து திரும்பியதும் உங்கள் மனம் மற்றும் உடல்நிலை எப்படி இருந்தது என்பது நினைவில் இருக்கிறதா?''</strong></span></p>.<p>''உடல் ரீதியாக எல்லாமே வலுவாக இருந்தன. ஒரு வாரம் முழுக்க படுக்கையில் இருந்துவிட்டு, எதற்காகவும் நம் கைகளைக்கூடத் தூக்காமல் இருந்தால் என்ன ஆகும்? எழுந்திருக்கும்போது நம் உடலையே நம்மால் தூக்க முடியாது இல்லையா? அப்படித்தான் எனக்கும் இருந்தது. என் தசைகள் இறுக்கமாக இருந்தன. பிறகு சில நாட்களில் சரியாகிவிட்டது. மன ரீதியாக, எனக்கு எந்த மாறுதலும் இல்லை. கவிஞர்கள் யாராவது சென்றால், அவர்கள் மனம் குதூகலித்து இருக்கலாம். எனக்குக் கவிதை எழுத வராது. அதனால், பெரிய வித்தியாசம் இல்லை. ஒரு பைலட்டாக எனக்கு இன்னொரு பயணம், அவ்வளவே. ஒருவேளை நாளை சுற்றுலாப் பயணிகள் சென்றால், அவர்களுக்கு வேறு அனுபவம் கிடைக்கலாம். ஆனால், நாங்கள் வேலை செய்யச் சென்றோம். ஒவ்வொரு விநாடியும் எங்களுக்கு வேலை இருந்தது.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''விண்வெளியில் உங்கள் உணவு என்ன?''</strong></span></p>.<p>''சாதாரண உணவுதான். எல்லாம் பிளாஸ்டிக் கன்டெயினரில் பேக் செய்யப்பட்டு இருக்கும். ஏனெனில், எதுவும் சிந்தக் கூடாது. சிந்தினால், அது நம்மைச் சுற்றியே பறந்துகொண்டிருக்கும். எனவே, அந்த கன்டெயினரை அப்படியே ஓவனில் சூடுபடுத்தி அப்படியே சாப்பிட வேண்டும். நாம் வழக்கமாக உண்ணும் அதே உணவு வகைகள்தான்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''உங்களுடன் பயணித்த ரஷ்ய நண்பர்கள் எப்படி? சுவாரஸ்யமாக ஏதும் நடந்ததா?''</strong></span></p>.<p>''ரொம்பவே அன்பானவர்கள். நல்ல ஒத்துழைப்புத் தந்தார்கள். ஒரு தடவை தண்ணீர் சிந்திவிட்டது. நீர்ம அலைவியக்க ஆற்றலால் (Surface tension) அது ஒரு பந்துபோல ஆகிவிட்டது. அது உடைந்துவிட்டால், இன்னும் பல கோளங்களாக உடையும். எனவே, நாங்கள் அனைவரும் அதைச் சுற்றி நின்றுகொண்டு அதை உறிஞ்ச வேண்டி இருந்தது. அந்தக் காட்சியை நினைக்கவே சிரிப்பாக இருந்தது.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''ஆன்மிகத்தில் உங்களுக்கு நாட்டம் உண்டா? விண்வெளி பயணம் உங்களை இந்த விஷயத்தில் ஏதும் மாற்றியதா?''</strong></span></p>.<p>''அதற்கும் இந்தப் பயணத்துக்கும் தொடர்பு இருப்பதாக நான் கருதவில்லை. அது, அவரவர் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் வெற்றி தோல்விகளை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். சிலர், தாங்கள் எல்லா வெற்றிகளையும் கண்டுவிட்டோம் என மமதைகொள்ளலாம். சிலர், அதை அதிர்ஷ்டம் என நினைக்கலாம். என்னைப் பொறுத்தவரை எனக்கு ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகம். ஆனால், அதற்கும் நான் விண்வெளிக்கு சென்றதற்கும் தொடர்பு இல்லை.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''விண்வெளி வீரராக நினைக்கும் இளைஞர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?''</strong></span></p>.<p>''நான் விண்வெளி வீரராக ஆவேன் என நினைத்ததே இல்லை. ஆனால், நடந்திருக்கிறது. அதை நான் என் கனவாக, லட்சியமாக வைத்திருந்தால், இன்னும் எளிதாகத்தானே இருக்கும்? எனவே, அவர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே இருக்கும். நிறையப் பேர் விண்வெளிக்குச் செல்லலாம். அது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடலாம். நிலாவுக்கே செல்லலாம். இன்னும் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அங்கெல்லாம் செல்லலாம். இந்த தலைமுறை அதிர்ஷ்டம் செய்திருக்கிறது. நிறையப் பேருக்கு வாய்ப்புகள் கிடைக்கப்போகின்றன. எனவே, விருப்பம் இருப்பவர்கள் ஆர்வத்துடன் தங்களைத் தயார்செய்து கொள்ளுங்கள். எனது வாழ்த்துகள்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அதன் ஆராய்ச்சிகளுக்குச் செய்யும் செலவு மிக அதிகம். அது தேவைதானா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''</strong></span></p>.<p>''நிச்சயமாகத் தேவை. இந்தியாதான் இதற்காக உலகிலேயே குறைவாகச் செலவு செய்யும் நாடு என்பது உங்களுக்குத் தெரியுமா? எந்தத் துறையாக இருந்தாலும் அதைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால், மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கினால், அது நிச்சயம் தேவையான ஒரு விஷயமாகத்தான் இருக்க முடியும். அதையே அழிவுக்காகப் பயன்படுத்தினால், அல்லது தனிநபர் நலனுக்குப் பயன்படுத்தினால்தான் தவறு. நம் நாட்டைப் பொறுத்தவரை அப்படி இல்லையே! 20 ஆண்டுகளுக்கு முன்பு யாரிடமும் செல்போன் இல்லை. இப்போது எல்லோரிடமும் இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையை அது எளிமை ஆக்கியிருக்கிறது. எல்லோரும் தொலைக்காட்சி பார்க்கிறார்கள். உலகைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள். 'டெலி எஜுகேஷன்’ இப்போது கிராமங்கள் வரை சென்றிருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் சேட்டிலைட்தானே அடிப்படை? அப்படி இருக்க, அது தொடர்பான ஆராய்ச்சி எப்படி வீண் செலவாக இருக்க முடியும்? இன்னும் ஏராளமான நன்மைகள் இதனால் நடந்திருக்கின்றன.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்றதில் நிறைய விவாதங்கள், குழப்பங்கள். அது உண்மை இல்லை எனப் பலர் சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''</strong></span></p>.<p>''உண்மைதான். ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்றார். இங்கே இருக்கும் தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி-க்காக அடித்துக் கொள்கிறார்களே. அதுபோல அப்போது அமெரிக்க தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி பசியில் இருந்தார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிய குழப்பம் அது.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''வேறு எதாவது கிரகத்தில் மனிதர்கள் வாழ வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறீர்களா?''</strong></span></p>.<p>''மனிதர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், உயிரினங்கள் வாழ வாய்ப்புகள் அதிகம். ஆயிரக்கணக்கான கிரகங்கள் உள்ளன. அதில் நாம் மட்டுமே வாழ்கிறோம் என நினைப்பதே மோசமான விஷயம் என நினைக்கிறேன்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''உங்கள் வாழ்க்கையில் இன்ஸ்பிரேஷன் என யாரைச் சொல்வீர்கள்?''</strong></span></p>.<p>''என் கஸின் ஒருவர் இருந்தார். அவரும் ஃபைட்டர் பைலட். எனது முதல் ஹீரோ அவர்தான். அவரைப் பார்த்துதான் நானும் பைலட் ஆக வேண்டும் என விரும்பினேன். அதன் பின்னர் நிறையப் பேர் இருந்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போல பலர் என்னை ஈர்த்திருக்கிறார்கள்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''படங்கள் பார்ப்பீர்களா? இந்திய சினிமாவில் விண்வெளி பற்றிய கதைகள் எதுவுமே வருவது இல்லை என நினைத்திருக்கிறீர்களா?''</strong></span></p>.<p>''கொஞ்ச காலம் ஆகும். எவ்வளவு நாள்தான் இதே காதல் கதைகளை மக்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள்? நிச்சயம் மாறும். இந்தியா பெரிய அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகள் படைக்கவில்லை. இன்னும் இந்தியா தனியாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பவில்லை. நான் சென்றதே ரஷ்ய அரசோடு இணைந்துதான். அது நடக்கும்போது மக்களும் அதில் ஆர்வம் காட்டுவார்கள். பின், சினிமாவும் அதைப் பின்பற்றும். விரைவில் இது நடக்கும்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''டைம் மெஷின் படம் ஒன்று சமீபத்தில் தமிழில் வந்தது. உண்மையில், டைம் ட்ராவல் சாத்தியமா?''</strong></span></p>.<p>''எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனால், அறிவியலாளர்கள் சொல்வதைப்போல, ஒளியின் வேகத்தில் நம்மால் பயணம் செய்ய முடியும் என்றால், டைம் டிராவல் சாத்தியம்தான். தியரிட்டிக்கலாக அதை நிரூபித்திருக்கிறார்கள். செய்து காட்ட வேண்டும். ஆனால் ஒன்று... கடந்த காலத்தில் நம் புனைவுக் கதையில் உலவிய பல விஷயங்கள் இப்போது உண்மையாகி இருக்கின்றன. அதுபோல, எதிர்காலத்தில் டைம் ட்ராவல் சாத்தியம் ஆகலாம்.''</p>.<p><span style="color: #ff0000"><strong>''தமிழக மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் மெசேஜ் என்ன?''</strong></span></p>.<p>''நான் ஏழு ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்கிறேன். பொதுவாக எனக்கு தென் இந்தியா மிகவும் பிடிக்கும். அதற்குக் காரணம், கலாசாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பாரம்பர்யத்தைப் பாதுகாப்பார்கள். நான் இந்திய கலாசாரம், பாரம்பர்யத்தை விரும்புவன். அதனால், தென் இந்தியா பிடிக்கும். ஆனால், சமீப காலமாக அரசியல் விளையாட்டுகளைக் கண்டு மனம் நொந்துபோயிருக்கிறேன். ஊழல் மலிந்துவிட்டது. எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எப்படி இது போன்ற அநியாயங்களும், அதே சமயம் தொன்மங்களும் ஒன்றாக இருக்க முடிகிறது? எனது வேண்டுகோள் ஒன்றுதான். உங்கள் கவனம் உங்கள் குழந்தைகள் மீது இருக்கட்டும். அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருங்கள். நீங்கள் செய்வதைத்தான் அவர்களும் செய்வார்கள். ஆகவே, நீங்கள் சரியானதை மட்டுமே செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழகம் அதன் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்தியாவைக் காப்பாற்ற முடியும். தென் இந்தியாவில் இருப்பவர்களுக்கு இந்தியாவைக் காப்பாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, நீங்கள் சரியாக இருங்கள். அதுதான் என் ஒரே ஆசை!''</p>