<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீஅலர்மேல் மங்கை தாயார், திருச்சானூர், திருப்பதி</strong></span><br /> <br /> மானே மடமயி லேயிசை பாடிடு மாங்குயிலே<br /> தேனே நவமணி யேமிடி நோய்தவிர் தெள்ளமுதே<br /> வானே முதலெங்கு மாயவளேயிவ் வறுமையினி<br /> நானே பொறுக்கிலன் வந்தாள் செந்தாமரை நாயகியே</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீவிநாயகர்</strong></span></p>.<p>முன்னவனே யானை முகத்தவனே முக்திநலம்<br /> சொன்னவனே தூயமெய்ச் சுகத்தவனே மன்னவனே<br /> சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே<br /> தற்பரனே நின்தாள் சரண்</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீமகாலட்சுமி</strong></span></p>.<p>மாயனாம் மலருக்கு மணமே போற்றி<br /> மறைமொழி வழங்கும் மாண்பே போற்றி<br /> நேயமுற்றவனை நீங்காய் போற்றி<br /> நிலங்கொள் நீர்மை நிறைவே போற்றி</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீகாளிகாம்பாள், சென்னை</strong></span></p>.<p>அங்குசபாச மேந்தி அபயமே வரதம் தாங்கும்<br /> பங்கய கரத்தள் பீதாம்பரமணியிடையாள் பொற்பூண்<br /> பைங்கள நிரம்பப் பூண்டாள் பதினாறு கலையெழுத்துள்<br /> பொங்கிய ஓரெழுத்தாள் புவனேசி பாதம் போற்றி</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீமூகாம்பிகை, கொல்லூர்</strong></span></p>.<p>மங்கை நாயகியே போற்றி<br /> மாமறைப் பொருளே போற்றி<br /> சிங்க வாகனத்தின் மேவுந்<br /> தேவியே போற்றி போற்றி</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீசுப்ரமண்யஸ்வாமி, திருச்செந்தூர்</strong></span></p>.<p>சண்முகக் கடவுள் போற்றி சரவணத் துதித்தாய் போற்றி<br /> கண்மணி முருகா போற்றி கார்த்திகை பாலா போற்றி<br /> தண்மலர் கடப்ப மாலைதாங்கிய தோளா போற்றி<br /> விண்மதி வதன வள்ளிவேலவா போற்றி போற்றி</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீராமர் பட்டாபிஷேகம்</strong></span></p>.<p>அந்திகாலம் உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்<br /> சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்<br /> சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்<br /> எந்தைராம ராமராம ராமவென்னும் நாமமே</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீமாரியம்மன், சமயபுரம்</strong></span></p>.<p>மூவர்க்கும் முற்பொருளாய் முத்தொழிற்கும் வித்தாகி<br /> நாவிற்கும் மனதிற்கும் நாடரிய பேரறிவாய்<br /> தேவர்க்கும் முனிவர்க்கும் சித்தர்க்கும் நாகர்க்கும்<br /> யாவர்க்கும் தாயாகும் எழில் பரையை வணங்குவாம்</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீகிருஷ்ணர், உடுப்பி</strong></span></p>.<p>பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்<br /> விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்<br /> திருவடியும் கையும் கனிவாயும் செய்ய<br /> கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீசரஸ்வதி</strong></span></p>.<p>விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்<br /> கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீஅலர்மேல் மங்கை தாயார், திருச்சானூர், திருப்பதி</strong></span><br /> <br /> மானே மடமயி லேயிசை பாடிடு மாங்குயிலே<br /> தேனே நவமணி யேமிடி நோய்தவிர் தெள்ளமுதே<br /> வானே முதலெங்கு மாயவளேயிவ் வறுமையினி<br /> நானே பொறுக்கிலன் வந்தாள் செந்தாமரை நாயகியே</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீவிநாயகர்</strong></span></p>.<p>முன்னவனே யானை முகத்தவனே முக்திநலம்<br /> சொன்னவனே தூயமெய்ச் சுகத்தவனே மன்னவனே<br /> சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே<br /> தற்பரனே நின்தாள் சரண்</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீமகாலட்சுமி</strong></span></p>.<p>மாயனாம் மலருக்கு மணமே போற்றி<br /> மறைமொழி வழங்கும் மாண்பே போற்றி<br /> நேயமுற்றவனை நீங்காய் போற்றி<br /> நிலங்கொள் நீர்மை நிறைவே போற்றி</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீகாளிகாம்பாள், சென்னை</strong></span></p>.<p>அங்குசபாச மேந்தி அபயமே வரதம் தாங்கும்<br /> பங்கய கரத்தள் பீதாம்பரமணியிடையாள் பொற்பூண்<br /> பைங்கள நிரம்பப் பூண்டாள் பதினாறு கலையெழுத்துள்<br /> பொங்கிய ஓரெழுத்தாள் புவனேசி பாதம் போற்றி</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீமூகாம்பிகை, கொல்லூர்</strong></span></p>.<p>மங்கை நாயகியே போற்றி<br /> மாமறைப் பொருளே போற்றி<br /> சிங்க வாகனத்தின் மேவுந்<br /> தேவியே போற்றி போற்றி</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீசுப்ரமண்யஸ்வாமி, திருச்செந்தூர்</strong></span></p>.<p>சண்முகக் கடவுள் போற்றி சரவணத் துதித்தாய் போற்றி<br /> கண்மணி முருகா போற்றி கார்த்திகை பாலா போற்றி<br /> தண்மலர் கடப்ப மாலைதாங்கிய தோளா போற்றி<br /> விண்மதி வதன வள்ளிவேலவா போற்றி போற்றி</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீராமர் பட்டாபிஷேகம்</strong></span></p>.<p>அந்திகாலம் உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்<br /> சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்<br /> சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்<br /> எந்தைராம ராமராம ராமவென்னும் நாமமே</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீமாரியம்மன், சமயபுரம்</strong></span></p>.<p>மூவர்க்கும் முற்பொருளாய் முத்தொழிற்கும் வித்தாகி<br /> நாவிற்கும் மனதிற்கும் நாடரிய பேரறிவாய்<br /> தேவர்க்கும் முனிவர்க்கும் சித்தர்க்கும் நாகர்க்கும்<br /> யாவர்க்கும் தாயாகும் எழில் பரையை வணங்குவாம்</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீகிருஷ்ணர், உடுப்பி</strong></span></p>.<p>பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்<br /> விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்<br /> திருவடியும் கையும் கனிவாயும் செய்ய<br /> கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீசரஸ்வதி</strong></span></p>.<p>விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்<br /> கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே</p>