<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ப</strong></span>டைப்பாற்றல் உள்ளவர்கள் சாதிக்கப் பல்வேறு வழிகள் உள்ளன என்று நிரூபித்திருக்கிறார், கென்யாவைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் கோர்டன் பெம்பிரிட்ஜ் (Gordon Pembridge). சிற்பக் கலையில், தனது வித்தியாசமான சிந்தனையால், மரக்கிண்ணங்களில் இவர் வரைந்த ஓவியங்கள் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.<br /> <br /> மரத்தில் செதுக்கிய சிற்பங்கள்தான் என்றாலும் பச்சைப் பசேலென மரங்கள், பறக்கும் பறவைகள், துள்ளி ஓடும் மான்கள் என நிஜமான ஆப்பிரிக்கக் காட்டையே நேரில் பார்ப்பதுபோல், `வாவ்' சொல்ல வைக்கிறது கோர்டனின் கைவண்ணம். இவர் கென்யா நாட்டில் பிறந்திருந்தாலும், 10 வயது வரைதான் அங்கு இருந்தார். பிறகு, படிப்பதற்காக நியூசிலாந்துக்கு வந்துவிட்டார்.</p>.<p>தன் ஓவியங்களுக்காகப் பிரத்யேகமாக மரக் கிண்ணங்களை உருவாக்கி, கூர்மையான கருவிகளைக்கொண்டு ஆப்பிரிக்கக் காடு, விலங்குகள் எனப் பல்வேறு உருவங்களைப் பொறுமையுடனும் கலைநயத்துடனும் செதுக்கி, அதற்கேற்ற வண்ணங்களைத் தீட்டி அழகுபடுத்துகிறார். `இந்தக் கலையைக் கண்ணால் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கத் தோன்றுமே தவிர, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது' என்கிறார்கள் பார்வையாளர்கள்.<br /> <br /> இயற்கை சார்ந்த ஓவியங்களைத் தீட்டுவதில் ஆர்வமுடையவர் கோர்டன். பிறகு, மர வேலைப்பாடு களிலும் ஈடுபட்டார். சிறு சிறு மரத்துண்டுகளைச் சிற்பமாக்கக் கற்றுக்கொண்டார். சரி, ஆப்பிரிக்கக் காடுகளைச் செதுக்க அனுபவம் எப்படிக் கிடைத்தது? ``10 வயது வரை ஆப்பிரிக்காவில் வளர்ந்த அனுபவமே எனக்குப் போதுமானது’’ என்கிறார் பெருமையுடன்.</p>.<p>கிராஃபிக் டிசைன், ஓவியம், போட்டோகிராபி, டிஜிட்டல் இமேஜிங் எனப் பல்வேறு துறைகளில் சகலகலா வல்லவராகத் திகழும் கோர்டன், மரத்தில் காடுகளையும், காட்டுக்குள் விலங்குகளையும் பறவைகளையும் உருவாக்கி, மக்களை வியக்கவைப்பதையே பெருமையாக நினைக்கிறார்.<br /> </p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ப</strong></span>டைப்பாற்றல் உள்ளவர்கள் சாதிக்கப் பல்வேறு வழிகள் உள்ளன என்று நிரூபித்திருக்கிறார், கென்யாவைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் கோர்டன் பெம்பிரிட்ஜ் (Gordon Pembridge). சிற்பக் கலையில், தனது வித்தியாசமான சிந்தனையால், மரக்கிண்ணங்களில் இவர் வரைந்த ஓவியங்கள் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.<br /> <br /> மரத்தில் செதுக்கிய சிற்பங்கள்தான் என்றாலும் பச்சைப் பசேலென மரங்கள், பறக்கும் பறவைகள், துள்ளி ஓடும் மான்கள் என நிஜமான ஆப்பிரிக்கக் காட்டையே நேரில் பார்ப்பதுபோல், `வாவ்' சொல்ல வைக்கிறது கோர்டனின் கைவண்ணம். இவர் கென்யா நாட்டில் பிறந்திருந்தாலும், 10 வயது வரைதான் அங்கு இருந்தார். பிறகு, படிப்பதற்காக நியூசிலாந்துக்கு வந்துவிட்டார்.</p>.<p>தன் ஓவியங்களுக்காகப் பிரத்யேகமாக மரக் கிண்ணங்களை உருவாக்கி, கூர்மையான கருவிகளைக்கொண்டு ஆப்பிரிக்கக் காடு, விலங்குகள் எனப் பல்வேறு உருவங்களைப் பொறுமையுடனும் கலைநயத்துடனும் செதுக்கி, அதற்கேற்ற வண்ணங்களைத் தீட்டி அழகுபடுத்துகிறார். `இந்தக் கலையைக் கண்ணால் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கத் தோன்றுமே தவிர, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது' என்கிறார்கள் பார்வையாளர்கள்.<br /> <br /> இயற்கை சார்ந்த ஓவியங்களைத் தீட்டுவதில் ஆர்வமுடையவர் கோர்டன். பிறகு, மர வேலைப்பாடு களிலும் ஈடுபட்டார். சிறு சிறு மரத்துண்டுகளைச் சிற்பமாக்கக் கற்றுக்கொண்டார். சரி, ஆப்பிரிக்கக் காடுகளைச் செதுக்க அனுபவம் எப்படிக் கிடைத்தது? ``10 வயது வரை ஆப்பிரிக்காவில் வளர்ந்த அனுபவமே எனக்குப் போதுமானது’’ என்கிறார் பெருமையுடன்.</p>.<p>கிராஃபிக் டிசைன், ஓவியம், போட்டோகிராபி, டிஜிட்டல் இமேஜிங் எனப் பல்வேறு துறைகளில் சகலகலா வல்லவராகத் திகழும் கோர்டன், மரத்தில் காடுகளையும், காட்டுக்குள் விலங்குகளையும் பறவைகளையும் உருவாக்கி, மக்களை வியக்கவைப்பதையே பெருமையாக நினைக்கிறார்.<br /> </p>