<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வ</strong></span>ணக்கம். <br /> <br /> இந்த ஆண்டும் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உங்கள் பேராதரவுடன் `விகடன் தீபாவளி மலர்’ மலர்ந்திருக்கிறது. பக்கத்துக்குப் பக்கம் புதுமை, புரட்டப் புரட்ட சுவாரஸ்யம், அரிய தகவல்கள்... என புதுமை படைப்பது விகடன் தீபாவளி மலரின் தனித்தன்மை. <br /> <br /> பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள், கவிதைகள், நேர்காணல்கள், ஆன்மிகம், சுற்றுலா, சினிமா, பாரம்பர்யம், பண்டிகைக் கால சிறப்புப் பலகாரங்கள்... எனப் பல சிறப்பம்சங்களுடன், வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விருந்து படைக்க வருகிறது இந்த தீபாவளி மலர். <br /> <br /> ஓவியர் சிவாஸின் அரிய ஓவியங்கள் தொடங்கி முருகக் கடவுளின் மயில் வாகனம், பூம்புகாரின் காவல் தெய்வம், தாண்டிக்குடி முருகன் கோயிலின் சிறப்பு, முக்கியமான மூன்று விநாயகர்களின் திருத்தலங்கள் எனப் பரவசப்படவும் பாதுகாக்கவும் ஆன்மிகப் பக்கங்கள்; எழுத்தாளர்கள் வண்ணதாசன், எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துலிங்கம், தமிழ்நதி, சாம்ராஜ் ஆகியோரின் தேர்ந்த சிறுகதைகள்; யுகபாரதி, மகுடேசுவரன், மனுஷ்யபுத்திரன் இசை, சுகிர்தராணி, தேன்மொழிதாஸ் ஆகியோரின் முத்தான கவிதைகள்; பண்டைத் தமிழர்கள் உணவாகப் பயன்படுத்திய காய்கறிகள் குறித்த முகில் எழுதிய விரிவான கட்டுரை; தோழர் ஆர்.நல்லகண்ணு, எழுத்தாளர்கள், ஜோ டி குரூஸ், யூமா வாசுகி போன்ற ஆளுமைகளின் நேர்காணல்கள், பிரபல புகைப்படக்கலைஞர் கார்த்திக் னிவாசனின் பேட்டி; நடிகர் விஜய் சேதுபதியின் குடும்பம் குறித்த அவரின் நெகிழ்ச்சிப் பகிர்வு; `நூற்றாண்டு கண்ட துருவ நட்சத்திரம்’ எம்.ஜி.ஆர் குறித்த ஆர்.முத்துக்குமாரின் அலசல் கட்டுரை; கூர்க், அதிரப்பள்ளி என அந்தந்த இடங்களுக்கே நம்மை அழைத்துச் செல்லும் பயணக் கட்டுரைகள்; நம் பாரம்பர்யத்தின் ஓர் அடையாளமாகத் திகழும் நாச்சியார்கோவில் குத்துவிளக்கின் பெருமை உணர்த்தும் கட்டுரை; அண்டை மாநில பிரபல ஸ்பெஷல் ரெசிப்பிகளின் செய்முறைகள், திரைத்துறை பிரபலங்கள் குறித்த பதிவுகள்... என ஏராளமான அம்சங்கள் மலர்ந்திருக்கின்றன. </p>.<p>விகடன் வாசகர்களுக்கு உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!<br /> <br /> <strong>அன்புடன்,<br /> <br /> ஆசிரியர்</strong></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வ</strong></span>ணக்கம். <br /> <br /> இந்த ஆண்டும் தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உங்கள் பேராதரவுடன் `விகடன் தீபாவளி மலர்’ மலர்ந்திருக்கிறது. பக்கத்துக்குப் பக்கம் புதுமை, புரட்டப் புரட்ட சுவாரஸ்யம், அரிய தகவல்கள்... என புதுமை படைப்பது விகடன் தீபாவளி மலரின் தனித்தன்மை. <br /> <br /> பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள், கவிதைகள், நேர்காணல்கள், ஆன்மிகம், சுற்றுலா, சினிமா, பாரம்பர்யம், பண்டிகைக் கால சிறப்புப் பலகாரங்கள்... எனப் பல சிறப்பம்சங்களுடன், வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விருந்து படைக்க வருகிறது இந்த தீபாவளி மலர். <br /> <br /> ஓவியர் சிவாஸின் அரிய ஓவியங்கள் தொடங்கி முருகக் கடவுளின் மயில் வாகனம், பூம்புகாரின் காவல் தெய்வம், தாண்டிக்குடி முருகன் கோயிலின் சிறப்பு, முக்கியமான மூன்று விநாயகர்களின் திருத்தலங்கள் எனப் பரவசப்படவும் பாதுகாக்கவும் ஆன்மிகப் பக்கங்கள்; எழுத்தாளர்கள் வண்ணதாசன், எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துலிங்கம், தமிழ்நதி, சாம்ராஜ் ஆகியோரின் தேர்ந்த சிறுகதைகள்; யுகபாரதி, மகுடேசுவரன், மனுஷ்யபுத்திரன் இசை, சுகிர்தராணி, தேன்மொழிதாஸ் ஆகியோரின் முத்தான கவிதைகள்; பண்டைத் தமிழர்கள் உணவாகப் பயன்படுத்திய காய்கறிகள் குறித்த முகில் எழுதிய விரிவான கட்டுரை; தோழர் ஆர்.நல்லகண்ணு, எழுத்தாளர்கள், ஜோ டி குரூஸ், யூமா வாசுகி போன்ற ஆளுமைகளின் நேர்காணல்கள், பிரபல புகைப்படக்கலைஞர் கார்த்திக் னிவாசனின் பேட்டி; நடிகர் விஜய் சேதுபதியின் குடும்பம் குறித்த அவரின் நெகிழ்ச்சிப் பகிர்வு; `நூற்றாண்டு கண்ட துருவ நட்சத்திரம்’ எம்.ஜி.ஆர் குறித்த ஆர்.முத்துக்குமாரின் அலசல் கட்டுரை; கூர்க், அதிரப்பள்ளி என அந்தந்த இடங்களுக்கே நம்மை அழைத்துச் செல்லும் பயணக் கட்டுரைகள்; நம் பாரம்பர்யத்தின் ஓர் அடையாளமாகத் திகழும் நாச்சியார்கோவில் குத்துவிளக்கின் பெருமை உணர்த்தும் கட்டுரை; அண்டை மாநில பிரபல ஸ்பெஷல் ரெசிப்பிகளின் செய்முறைகள், திரைத்துறை பிரபலங்கள் குறித்த பதிவுகள்... என ஏராளமான அம்சங்கள் மலர்ந்திருக்கின்றன. </p>.<p>விகடன் வாசகர்களுக்கு உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!<br /> <br /> <strong>அன்புடன்,<br /> <br /> ஆசிரியர்</strong></p>