<p style="text-align: center;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>-ஒரு வேட்டைப் பயணம் </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>நா</strong></span>ங்கள், ஒரு குழுவாகச் சென்று மரங்களை வெட்டினோம். எல்லோரும் மரங்களை நடச் சொல்கிறார்கள். நீங்கள் மரங்களை வெட்டினீர்களா என ஆச்சர்யப்படாதீர்கள்.</p>.<p>கருவேல மரங்கள் நம் மண்ணுக்குத் தீமை விளைவிக்கக்கூடியவை என்று படித்தோம். இது குறித்து ஆசிரியர்களிடமும் பேசினோம். பிறகு, பெரியவர்களின் உதவியுடன் செயலில் இறங்கினோம். <br /> <br /> </p>.<p> கருவேல மரங்களால் ஏற்படும் தீமைகளில் சிலவற்றைத் தெரிந்துகொள்வோமா?</p>.<p> கருவேல மரம், மிக அதிக அளவில் நீரை உறிஞ்சுகிறது. அதனால், இந்த மரத்தைச் சுற்றியுள்ள தாவரங்களுக்குப் போதுமான நீர் கிடைக்காமல், மருத்துவ குணம் மிக்க அரிய வகைத் தாவரங்களும் அழிந்துவிடுகின்றன.<br /> <br /> </p>.<p> கருவேல மரங்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதியில், நிலத்தடி நீர் குறைந்துவிடும்.</p>.<p> கருவேல மரத்தின் முட்கள், நச்சுத்தன்மை வாய்ந்தவை. அவை குத்தினால், நீண்ட நேரத்துக்கு கடுமையான வலி இருக்கும்.<br /> <br /> </p>.<p> மரங்களிலேயே அதிக வெப்பத்தை வெளியிடுவது கருவேல மரமே. இதனால், உலக வெப்பமயமாதலுக்கு இதுவும் காரணமாகி விடுகிறது.</p>.<p> இதன் விதைகள், காற்றில் வேகமாகப் பரவும் தன்மைகொண்டவை. அதனால், ஒரு கருவேல மரம் இருக்கும் சுற்றுப் பகுதியில், விரைவிலேயே நிறையக் கருவேல மரங்கள் உண்டாகிவிடும்.<br /> <br /> பக்கத்து மாநிலமான கேரளாவில், கருவேல மரங்களை முற்றிலும் அழிக்கும் பிரசாரத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். எனவே, நாமும் கருவேல மரங்களின் வளர்ச்சியைத் தடுப்போம். நம் மண்ணைப் பாதுகாப்போம்!</p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>- ஜெ.விமல் ஜோஸ்வா, எஸ்.சத்தியப்ரியா.</strong></span></p>
<p style="text-align: center;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>-ஒரு வேட்டைப் பயணம் </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>நா</strong></span>ங்கள், ஒரு குழுவாகச் சென்று மரங்களை வெட்டினோம். எல்லோரும் மரங்களை நடச் சொல்கிறார்கள். நீங்கள் மரங்களை வெட்டினீர்களா என ஆச்சர்யப்படாதீர்கள்.</p>.<p>கருவேல மரங்கள் நம் மண்ணுக்குத் தீமை விளைவிக்கக்கூடியவை என்று படித்தோம். இது குறித்து ஆசிரியர்களிடமும் பேசினோம். பிறகு, பெரியவர்களின் உதவியுடன் செயலில் இறங்கினோம். <br /> <br /> </p>.<p> கருவேல மரங்களால் ஏற்படும் தீமைகளில் சிலவற்றைத் தெரிந்துகொள்வோமா?</p>.<p> கருவேல மரம், மிக அதிக அளவில் நீரை உறிஞ்சுகிறது. அதனால், இந்த மரத்தைச் சுற்றியுள்ள தாவரங்களுக்குப் போதுமான நீர் கிடைக்காமல், மருத்துவ குணம் மிக்க அரிய வகைத் தாவரங்களும் அழிந்துவிடுகின்றன.<br /> <br /> </p>.<p> கருவேல மரங்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதியில், நிலத்தடி நீர் குறைந்துவிடும்.</p>.<p> கருவேல மரத்தின் முட்கள், நச்சுத்தன்மை வாய்ந்தவை. அவை குத்தினால், நீண்ட நேரத்துக்கு கடுமையான வலி இருக்கும்.<br /> <br /> </p>.<p> மரங்களிலேயே அதிக வெப்பத்தை வெளியிடுவது கருவேல மரமே. இதனால், உலக வெப்பமயமாதலுக்கு இதுவும் காரணமாகி விடுகிறது.</p>.<p> இதன் விதைகள், காற்றில் வேகமாகப் பரவும் தன்மைகொண்டவை. அதனால், ஒரு கருவேல மரம் இருக்கும் சுற்றுப் பகுதியில், விரைவிலேயே நிறையக் கருவேல மரங்கள் உண்டாகிவிடும்.<br /> <br /> பக்கத்து மாநிலமான கேரளாவில், கருவேல மரங்களை முற்றிலும் அழிக்கும் பிரசாரத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். எனவே, நாமும் கருவேல மரங்களின் வளர்ச்சியைத் தடுப்போம். நம் மண்ணைப் பாதுகாப்போம்!</p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>- ஜெ.விமல் ஜோஸ்வா, எஸ்.சத்தியப்ரியா.</strong></span></p>