<table align="left" border="0" cellpadding="1" cellspacing="1" width="100"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>''ஒரு காலத்தில், அதாவது 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நாம் இப்போது நின்றிருக்கும் இந்த இடம் கடல் சூழ்ந்த பகுதியாக இருந்தது'' என்றார் சுப்ரமணியன்.</p>.<p>பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ளது சாத்தனூர் தேசியப் பூங்கா. இங்கே இருக்கும் கல்மரம் இந்தியப் புவியியல் ஆராய்ச்சித் துறையினரால் பராமரிக்கப்பட்டுவருகிறது. இங்கே நண்பர்களுடன் சென்றேன்.</p>.<p>எங்களை வரவேற்ற காவலர் சுப்ரமணியன், ''12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைக் கிரிடேஷஸ் காலம் என்பார்கள். சுனாமி வந்தபோது எப்படிச் சில இடங்களில் கடல் உள்வாங்கிக் காணப்பட்டதோ... அப்படித்தான் இங்கே இருந்த கடலும் உள்ளே 100 கி.மீ. தூரம் சென்றுவிட்டது'' என்றார்.</p>.<p>அப்போது மண்ணுக்குள் புதைந்த ஆமை, பல வகை மீன்கள் மற்றும் மரங்கள் ஆறுகளினால் அடித்து வரப்பட்ட மணல், களிமண் இவற்றால் மூடப்பட்டுக் காலப்போக்கில் கல்லுருவாக மாறிவிட்டன. இதையே கல்மரம் என்கிறார்கள்.</p>.<p>''இங்கே இருக்கிற கல்லுருவாகிய பெரிய அடிமரம் ஏறத்தாழ 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய திருச்சிராப்பள்ளி பாறையினப் பகுதியில் காணப்பட்ட மரங்கள்'' என்றார் சுப்ரமணியன்.</p>.<p>''இது என்ன மரம் அங்கிள்?'' என்று கேட்டான் பிரசன்னா.</p>.<p>''பூ பூக்காத நிலத்தாவர இனமான, 'கோனிஃபர்ஸ்’ வகை மரம்தான் இது. இதன் அடிமர நீளம் மட்டும் 18 மீட்டர்.''</p>.<p>''இதே மாதிரி கல்மரங்கள் வேற எங்காவது இருக்கிறதா அங்கிள்?'' என்று கேட்டாள் ஐஸ்வர்யா.</p>.<p style="text-align: left">''இந்தச் சுற்று வட்டாரப் பகுதிகளில் வரகூர், ஆனைப்பாடி, அலுந்தள்ளிப்பூர், சாரதாமங்கலம் போன்ற ஊர்களின் நீர் ஓடைப் பகுதிகளில் கல்லுருவாகிய மரங்கள் உள்ளன. புவியியல் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன் என்பவரால் 1940-ஆம் ஆண்டு இந்தக் கல்மரங்கள் பற்றிய முதல் விவரம் தெரிவிக்கப்பட்டது'' என்றார் சுப்ரமணியன்.</p>.<p>சற்றுத் தொலைவில் இரண்டு கல்மரங்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. இவை, விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை என்ற ஊரில் இருந்து கொண்டுவரப்பட்டவை'' என்றார்.</p>.<p>''மரம் கல்லானது மாதிரி வேறு ஏதாவது கல்லாகி இருக்கிறதா?'' என்று கேட்டான் ஞானதீப்.</p>.<p>''ஓ! இதைப் பாருங்கள். நத்தை, ஆமை வடிவில் கல் போல் இருக்கிறனவே... உண்மையில் இவையும் ஒரு காலத்தில் உயிரினமாக இருந்தவைதான். இப்போது கல்லாக மாறிவிட்டன'' என்றார் சுப்ரமணியன்.</p>.<p>''இதை வீட்டுக்கு எடுத்துப் போகலாமா அங்கிள்?'' என்று கேட்டாள் பூஜா.</p>.<p>''நல்லா இருக்கே கதை. இது அரசாங்கத்துக்கு சொந்தமானது. உன்னை மாதிரி மற்றவர்களும் பார்க்க வேண்டாமா? வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் </p>.<p>வந்து பார்வையிடுவார்கள்'' என்றார்.</p>.<p>''சும்மா கேட்டேன் அங்கிள். நீங்க சொன்னதை எல்லாம் கேட்கும்போது, நாம் பல கோடி வருடங்களுக்குப் பின்னால் போன மாதிரியும், கடலுக்கு அடியில் இருக்கிற மாதிரியும் தோணுது'' என்றாள் பூஜா.</p>.<p>'இயற்கை அன்னையே உன்னுள் இருக்கும் இன்னும் பல அதிசயங்களை சீக்கிரமே நாங்களும் ஆராய்ந்து கண்டுபிடிக்கக் காத்திருக்கிறோம். அதனால் அவற்றைப் பத்திரமாக வைத்திரு’ என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து கிளம்பினோம்.</p>
<table align="left" border="0" cellpadding="1" cellspacing="1" width="100"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>''ஒரு காலத்தில், அதாவது 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நாம் இப்போது நின்றிருக்கும் இந்த இடம் கடல் சூழ்ந்த பகுதியாக இருந்தது'' என்றார் சுப்ரமணியன்.</p>.<p>பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ளது சாத்தனூர் தேசியப் பூங்கா. இங்கே இருக்கும் கல்மரம் இந்தியப் புவியியல் ஆராய்ச்சித் துறையினரால் பராமரிக்கப்பட்டுவருகிறது. இங்கே நண்பர்களுடன் சென்றேன்.</p>.<p>எங்களை வரவேற்ற காவலர் சுப்ரமணியன், ''12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைக் கிரிடேஷஸ் காலம் என்பார்கள். சுனாமி வந்தபோது எப்படிச் சில இடங்களில் கடல் உள்வாங்கிக் காணப்பட்டதோ... அப்படித்தான் இங்கே இருந்த கடலும் உள்ளே 100 கி.மீ. தூரம் சென்றுவிட்டது'' என்றார்.</p>.<p>அப்போது மண்ணுக்குள் புதைந்த ஆமை, பல வகை மீன்கள் மற்றும் மரங்கள் ஆறுகளினால் அடித்து வரப்பட்ட மணல், களிமண் இவற்றால் மூடப்பட்டுக் காலப்போக்கில் கல்லுருவாக மாறிவிட்டன. இதையே கல்மரம் என்கிறார்கள்.</p>.<p>''இங்கே இருக்கிற கல்லுருவாகிய பெரிய அடிமரம் ஏறத்தாழ 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய திருச்சிராப்பள்ளி பாறையினப் பகுதியில் காணப்பட்ட மரங்கள்'' என்றார் சுப்ரமணியன்.</p>.<p>''இது என்ன மரம் அங்கிள்?'' என்று கேட்டான் பிரசன்னா.</p>.<p>''பூ பூக்காத நிலத்தாவர இனமான, 'கோனிஃபர்ஸ்’ வகை மரம்தான் இது. இதன் அடிமர நீளம் மட்டும் 18 மீட்டர்.''</p>.<p>''இதே மாதிரி கல்மரங்கள் வேற எங்காவது இருக்கிறதா அங்கிள்?'' என்று கேட்டாள் ஐஸ்வர்யா.</p>.<p style="text-align: left">''இந்தச் சுற்று வட்டாரப் பகுதிகளில் வரகூர், ஆனைப்பாடி, அலுந்தள்ளிப்பூர், சாரதாமங்கலம் போன்ற ஊர்களின் நீர் ஓடைப் பகுதிகளில் கல்லுருவாகிய மரங்கள் உள்ளன. புவியியல் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன் என்பவரால் 1940-ஆம் ஆண்டு இந்தக் கல்மரங்கள் பற்றிய முதல் விவரம் தெரிவிக்கப்பட்டது'' என்றார் சுப்ரமணியன்.</p>.<p>சற்றுத் தொலைவில் இரண்டு கல்மரங்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. இவை, விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை என்ற ஊரில் இருந்து கொண்டுவரப்பட்டவை'' என்றார்.</p>.<p>''மரம் கல்லானது மாதிரி வேறு ஏதாவது கல்லாகி இருக்கிறதா?'' என்று கேட்டான் ஞானதீப்.</p>.<p>''ஓ! இதைப் பாருங்கள். நத்தை, ஆமை வடிவில் கல் போல் இருக்கிறனவே... உண்மையில் இவையும் ஒரு காலத்தில் உயிரினமாக இருந்தவைதான். இப்போது கல்லாக மாறிவிட்டன'' என்றார் சுப்ரமணியன்.</p>.<p>''இதை வீட்டுக்கு எடுத்துப் போகலாமா அங்கிள்?'' என்று கேட்டாள் பூஜா.</p>.<p>''நல்லா இருக்கே கதை. இது அரசாங்கத்துக்கு சொந்தமானது. உன்னை மாதிரி மற்றவர்களும் பார்க்க வேண்டாமா? வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் </p>.<p>வந்து பார்வையிடுவார்கள்'' என்றார்.</p>.<p>''சும்மா கேட்டேன் அங்கிள். நீங்க சொன்னதை எல்லாம் கேட்கும்போது, நாம் பல கோடி வருடங்களுக்குப் பின்னால் போன மாதிரியும், கடலுக்கு அடியில் இருக்கிற மாதிரியும் தோணுது'' என்றாள் பூஜா.</p>.<p>'இயற்கை அன்னையே உன்னுள் இருக்கும் இன்னும் பல அதிசயங்களை சீக்கிரமே நாங்களும் ஆராய்ந்து கண்டுபிடிக்கக் காத்திருக்கிறோம். அதனால் அவற்றைப் பத்திரமாக வைத்திரு’ என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து கிளம்பினோம்.</p>