<p style="text-align: center"><span style="color: #800000"><span style="font-size: small"><strong>நாம் தோற்பாவைகள்!</strong></span></span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>'L</strong>IFE’!</p>.<p>அமெரிக்காவிலிருந்து வரும் ஓர் ஆங்கில ஏடு. பக்கத்துக்குப் பக்கம் கிளி கொஞ்சும். வண்ணப் படங்கள், கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.</p>.<p>ஏடு மேல் ஏறி நிற்கும் எல்லா எழுத்துகளுக்கும் கால் வழுக்கும்; காகிதத்தின் வழுவழுப்பு அப்படி!</p>.<p>நாற்பதாண்டுகள் முன் நான் படித்த கட்டுரையன்று, பாசி படர்ந்த படித்துறைபோல் - என் நினைவில் படர்ந்து நிற்கிறது.</p>.<p>'LIFE’- ல் வெளிவந்ததுதான்; கட்டுரையின் தலைப்பு:</p>.<p>'NINE REASONS TO BELIEVE IN GOD!’</p>.<p>- அதாவது,</p>.<p>கடவுளை நம்புவதற்கான காரணங்கள் ஒன்பது!</p>.<p>கட்டுரை ஆசிரியர் கூறப் புகுவது யாதெனில் -</p>.<p>கோள்களாகட்டும்; நாள்களாகட்டும்; ஆள்களாகட்டும்;</p>.<p>இப் படிமிசை இயங்கும் எல்லாவற்றிற்கும், அவற்றை இயக்குகின்ற ஓர் - INVISIBLE HAND - இருக்கிறது என்பதுதான்!</p>.<p>பகுத்தறிவாளர் எனப்படுவோர் - அந்தக் கையை, இயற்கை என்கின்றனர்; 'அது இயற்கையாயின், அவ் இயற்கையையும் இயக்கும் கை இறைக்கை!’ என்று...</p>.<p>காரண காரியங்களோடு நிறுவுகிறார் கட்டுரையாசிரியர்.</p>.<p>கண்ணுக்குத் தெரியாத கையின் கையில் கயிறு; அந்தக் கயிறு வழி கூத்தாடும் -</p>.<p>தோற்பாவைகள்தாம் -</p>.<p>தொல்புவியும்; மாந்தரும்; மற்றவையும்!</p>.<p>இவ் அரிய உண்மையைத்தான் அறிந்திருக்கிறார்; அறிந்ததை அகிலத்திற்கு அறிவித்திருக்கிறார் அருட்பாவில் -</p>.<p>வடலூர் வள்ளல்;</p>.<p>'ஆட்டு வித்தால் ஆரொருவர் ஆடாதாரே!’ என்று.</p>.<p><strong>அ</strong>ருமைச் சகோதரனே!</p>.<p>ஆறு கைகளில் நீயும் ஒரு கையாய் அமர்ந்து ஆடுகிறாய் சீட்டு.</p>.<p>கலைத்துப் போட்ட பதின்மூன்று சீட்டு களையும், கையில் வைத்து நீ அடுக்கு கையிலேயே -</p>.<p>ஆட அவசியமின்றி ஆகிவிடுகிறது RUMMY! </p>.<p>அடுத்தவர் கைகளெல்லாம் 'FULL’ ஆக நிற்க, நீ அள்ளுகிறாய் காசை!</p>.<p>அதற்கென்ன காரணம்? ஆடியது நீயல்ல; ஆண்டவன்!</p>.<p><strong>இ</strong>துதான் - வள்ளலார் முதல், திருமுருக வாரியார் வரை சொல்லிவைத்த விழுமிய கருத்தாயினும் -</p>.<p>'தகுதியுடையார் ஏன் தகவுடையாராய் ஆகவில்லை?’ என்று நான் சிலரைப் பற்றிச் சிந்திக்க நேர்கையில் -</p>.<p>என் வினா விடையற்று நிற்கிறது. 'இது தான் தெய்வசங்கல்பம்’ என்று ஏற்றுக் கொள்வேனாயின் -</p>.<p>உழைப்பிற்கும் வேர்வைக்கும், உலகுமிசை மரியாதை இல்லை என்றாகிவிடும். அது உண்மையுமல்ல.</p>.<p>எல்லா உழைப்புகளும் ஏன் மரியாதை பெறவில்லை என்பதுதான் -</p>.<p>விடையறியா என் வினா!</p>.<p><strong>தி</strong>ருவரங்கத்திலும்; திருச்சி தேவர் ஹாலிலும் -</p>.<p>நான் ஏராளமான நாடகங்கள் நடத்திக்கொண்டிருந்த நாள்கள்.</p>.<p>ஆரம்பத்தில் நான் சமூக நாடகங்கள்தான் எழுதி அரங்கேற்றினேன்.</p>.<p>திருச்சி - 'கெயிட்டி’ டாக்கீஸில் ஒரு படம் வந்தது.</p>.<p>படத்தின் பெயர் 'மருத நாட்டு இளவரசி’; எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி நடித்த படம். </p>.<p>சரித்திரக் கதை.</p>.<p>அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுக் குப் பின்னணி பாடியவர் -</p>.<p>அந்தக் காலத்தில் பெரும் புகழ் பெற்று விளங்கிய திரு. எம்.எம்.மாரியப்பா அவர் கள்.</p>.<p>'வாராய்! நீ வாராய்!’ எனும், காருள்ள வரையும்; கடல் நீருள்ள வரையும் - இறவாது துலங்கவல்லதும் - அண்ணன் திரு. மருதகாசி அவர்கள் எழுதியதுமான அந்தப் பாட்டைப் பாடிய -</p>.<p>திரு. திருச்சி லோகனாதன் அவர்களின் தாய் மாமன்தான் திரு.மாரியப்பா அவர்கள்.</p>.<p>எப்பொழுதாவது - நான் உடன் பேசிக்கொண்டிருக்கையில், திரு. சிவாஜி அவர்களுக்கு நல்ல MOOD வந்தால் -</p>.<p>என் தொடையில் தாளம் தட்டிப் பாடுவார் ஒரு பாட்டை.</p>.<p><span style="color: #ff0000"><em>'இந்த உலகினில்<br /> இருக்கும் மாந்தருள் -<br /> எழிலுடையோன்<br /> எங்கள் தமிழன்!’</em></span> - என்பதுதான் அந்தப் பாட்டு.</p>.<p>கோவை திரு. அய்யாமுத்துக் கவுண்டர் அவர்கள் எழுதியது. இந்தப் பாட்டுதான் சிவாஜிக்கு மிக மிக இஷ்டமான பாட்டு. இதைப் பாடியவர் திரு. எம்.எம். மாரியப்பா அவர்கள்.</p>.<p>மாரியப்பா அவர்களும் நானும் - மிக நெருங்கிய நண்பர்கள். ஆகவே - அவர் தயவில் தினமும் கெயிட்டி டாக்கீஸில், அவர் பாட்டு இடம் பெற்ற படமான -</p>.<p>'மருத நாட்டு இளவரசி’யைப் பார்ப்பேன். குறைந்தது பத்து தடவையாவது பார்த்திருப்பேன்.</p>.<p>எனக்குத் திகட்டவில்லை. தமிழ் எப்படித் திகட்டும்?</p>.<p>உரையாடல்கள் ஒவ்வொன்றும், உறையிலிருந்து உருவி எடுத்த வாளின் கூர்மையோடும்; சிற்றன்ன வாசலில் செதுக்கிவைக்கப்பெற்ற சிற்பங்களின் சீர்மையோடும்; கொற்கை முத்துக்களைக் கோவையாய் ஒரு நூற்சரட்டில் கோத்துவைத்தாற்போன்ற நீர்மையோடும்; எல்லாவற்றிற்கும் மேலாக எடுத்துவைத்த வாதங்களில் நெறி பிறழா நேர்மை யோடும் -</p>.<p>விளங்கி, என்னை வியப்பில் விழுத்தின. தமிழின் தகவுகள் யாவையும் அந்தத் திரைப்படம் எனக்குக் கற்பிக்க -</p>.<p>நான் - சமூக நாடகங்களை விடுத்து, கற்கண்டுத் தமிழுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் சரித்திர நாடகங்களை எழுதலானேன்.</p>.<p>'மருதநாட்டு இளவரசி’யின் மறக்கவொணா உரையாடல்கள் மூலம் -</p>.<p>என் மனத்தை மணித் தமிழை நோக்கி மடைமாற்றம் செய்த பெரியவர்; அரியவர்; என் வணக்கத்திற்கு உரியவர் -</p>.<p>திரு.கலைஞர் அவர்கள்தான். HE SIMPLY ELECTRIFIED ME OUT OF HIS MOST MEMORABLE DIALOGUES!</p>.<p><strong>அ</strong>ம்பிகாபதி அமராவதி கதையை - 'கவிஞனின் காதலி’ என்ற பெயரில் நாடகமாக எழுதியிருந்தேன்.</p>.<p>ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கனாதஸ்வாமி கோயிலில், வெள்ளைக்காரன் காலத்தில் EXECUTIVE OFFICER - ஆக இருந்த திரு. ராஜகோபால் நாயுடு அவர்களின் புதல்வன் - </p>.<p>திரு.சௌந்தரராஜன்தான், நாடகத்தில் அம்பிகாபதி. அவன் என்னுடைய சீடன் எனலாம்.</p>.<p>நாடகம், திருச்சி வட்டாரத்தில் மிகப் பெரிய வெற்றியை எட்டியிருந்தது.</p>.<p>அதை - சென்னையில் நடந்த சௌந்தரராஜனின் தந்தை திரு.ராஜகோபால் நாயுடு ஆசைப்பட்டார். அது, அவருடைய பையன் சினிமாவில் புக - ஒரு VISITING CARD ஆக இருக்குமே என்று.</p>.<p>நாடக வாத்தியார் நான் என்பதால், நாயுடு அவர்கள் என்னை சென்னைக்கு அழைத்திருந்தார். ஆனால், என்னால் அப்போது ஸ்ரீரங்கத்தைவிட்டு வர இயலவில்லை.</p>.<p>நாடகம் - தியாகராய நகர், கிருஷ்ணகான சபாவில் நடைபெற்றது. அப்போது கிருஷ்ணகான சபா - இப்போது நல்லி கடை இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் - பனகல் பார்க் அருகே ஒரு கீற்றுக் கொட்டகையாக இருந்தது.</p>.<p>அங்குதான் என்னுடைய 'கவிஞனின் காதலி’ நாடகத்தை நடத்தினார்கள். சௌந்தரராஜன், அம்பிகாபதி; புலியூர் சரோஜா, அமராவதி!</p>.<p>திரு. எம்.ஜி.ஆர். தலைமை வகிக்க ஒப்புக்கொண்டிருந்தார்கள்.</p>.<p>ஆனால் - நாடகத்தன்று மாலை -</p>.<p>திரு. எம்.ஜி.ஆர். அவர்களுடைய மனைவியார் திருமதி சதானந்தவதி அவர்களுக்கு உடல் நிலை சற்று கவலைக்கிடமாகிவிட்டது. அந்த அம்மையார், ஓரிரு வருடங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார்கள்.</p>.<p>மனைவி உடல்நிலை மோசமாக இருக்கும் தகவல் 'மாடப்புறா’ ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆருக்குத் தெரிய வந்ததும் -</p>.<p>ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டுப் புறப்படலானார். இந்த நிலையில் நாடகத்திற்கு எப்படி அவரால் வர முடியும்?</p>.<p>இருப்பினும் - நாடகம் நடத்துவோர் தன்னால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகக்கூடும் என்று -</p>.<p>ஸ்டூடியோவிலிருந்து வீட்டுக்குப் போகும் வழியில், பத்து நிமிஷம் இருந்து நாடகம் பார்த்துவிட்டுப் போவதாக அறிவித்துவிட்டு, நாடகத்திற்கு வந்தார்.</p>.<p>சௌந்தரராஜனை இன்னொரு சிவாஜி என்றே நான் சொல்லுவேன். அப்படி ஓர் உருவம்; தீர்க்கமான நாசி; தமிழ் உச்சரிப்பு; தகத்தகாயமான நடிப்பு!</p>.<p>பத்து நிமிஷம் மட்டுமே இருப்பதாகச் சொன்ன எம்.ஜி.ஆர் - முழு நாடகமும் இருந்து பார்த்துவிட்டு மேடையில் பேசும்போது -</p>.<p>'இந்த நாடகத்தின் வசனங்கள், பாரதிதாசன் கவிதைபோல் இருந்தது. எழுதியவர் யாரென்று கேட்டேன்... ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார் - பெயர் வாலி என்று சொன்னார்கள்... அவரை இங்கிருந்தே அழைக்கிறேன்... சென்னை வந்தால் அவர் என்னைச் சந்திக்க வர வேண்டும். அவரை வரவேற்க ஆவலாக இருக்கிறேன்!’ என்று குறிப்பிட்டார்.</p>.<p>மிகப் பெரிய நடிகனாகத் திரையில் கொடிகட்டிப் பறப்பான் என்று நான் எண்ணிய திரு.சௌந்தரராஜன் பல படங்களில் நடித்திருந்தாலும் - எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை!</p>.<p>ஆனால் - எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருமுறை மந்திரியாக இருந்தார்.</p>.<p>எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஸ்ரீரங்கத்தில் இருந்த நான் - எம்.ஜி.ஆரின் பிரதான கவிஞனாகவும், நெருங்கிய நண்பனாகவும் மாறிப்போனேன்.</p>.<p>இதற்குக் காரணம் - AN INVISIBLE HAND!</p>.<p><strong>'தி</strong>ருச்சி வாசு’ என்றும் சொல்லலாம்; 'பொன்மலை வாசு’ என்றும் சொல்லலாம், என் நெஞ்சுக்கு இனிய நெருக்கமான சினேகிதன் திரு.வாசுவை.</p>.<p>என் நாடகங்களில் - திருச்சி சௌந்தரராஜன் வில்லன்; பொன்மலை வாசு, கதாநாயகன்!</p>.<p>பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் பணிபுரிந்துகொண்டிருந்த வாசு -</p>.<p>என் வாழ்க்கைப் பயணத்தில் உடன்வந்த உயிர்த் தோழன்.</p>.<p>பரம்பரையாய், வசதியான குடும்பத்தைச் சார்ந்தவனாயினும் - நாடகத்தின் பால் உள்ள மாளாக் காதலால் - இஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டவன்.</p>.<p>என்னுடைய நடிகர்களிலேயே - கவிதை நடையிலான என் உரையாடல்களை -</p>.<p>வாசுபோல் பிறிதொருவர் பேசி நானறியேன். தமிழ் உச்சரிப்பும், உணர்ச்சிப் பெருக்கான நடிப்பும், - நாடகம் பார்ப்போரையும் என்னையும் பிரமிக்கவைத்ததுண்டு.</p>.<p>வாசு - சினிமாவில் பெரிய இடத்திற்கு வர வேண்டும்; வருவதற்கான தகுதிகள் நூறு விழுக்காடு உள்ளவன் - என்று நான், என் தமிழ் மேல் ஆணையாகச் சொல்லுகிறேன் - மனப்பூர்வமாக அவாவினேன்.</p>.<p>நாகேஷும், நானும் சேர்ந்திருந்த CLUB HOUSE - ல் வாசுவையும் உடன் வைத்துக்கொண்டேன். வாசு, நாகேஷின் நெருங்கிய நண்பரில் ஒருவனானான்.</p>.<p>அது தவிர - மெல்லிசை மன்னர் திரு.விஸ்வநாத அண்ணனிடமும் வாசுவை அறிமுகப்படுத்திவைத்தேன். விஸ்வநாத அண்ணனும், வாசுவை</p>.<p>நெடுநாள் நண்பனாகப் பாவித்துப் பழகினார்.</p>.<p>'நாளை நமதே’ படத்தில்கூட, வாசு, ஒரு நல்ல வேடத்தில் தோன்றியும் -</p>.<p>பெரிதாக வரவில்லையே என்பது இன்றளவும் என்னை வருத்திக்கொண்டிருக்கும் விஷயம். தகுதியுடைய வாசு, ஏன் தகவுடைய வாசுவாக ஆகவில்லை? நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தையும் நாவில் அடுக்கிவைத்திருக்கும் வாசுவிடம் கேட்க வேண்டும் -</p>.<p>'கன்னலடு பாகு மலர்க் கள்ளை’ வெறுக்கவைக்கும் தமிழின் ஆளுமையை, அவனது வசன உச்சரிப்பில்!</p>.<p>வாசு, சினிமாவில் - அதுவும் நிறைய S.VE.சேகர் நாடகங்களில் நடித்தும் - ஏன் பெரிய இடத்தை எட்டவில்லை?</p>.<p>நான் கஷ்டப்பட்ட காலங்களில் உதவிய வண்மை குணம் மிக்கவன் வாசு. வயிற்றுப் பசியை நான் அவன் வீட்டில் - ஆற்றிக்கொண்டிருக்கிறேன் அனேக நாள்கள்.</p>.<p>பழைய மாம்பலம் - கோதண்டராமர் கோயில் தெருவில் வாசு இருந்தபோது-</p>.<p>மாதக்கணக்காக முகம் சுளிக்காமல், அன்றலர்ந்த கமலம்போல் -</p>.<p>எனக்குச் சோறு போட்ட - என் தாயனைய உத்தம ஸ்திரீ -</p>.<p>திரு.வாசுவின் வாழ்க்கைத் துணைவியார்!</p>.<p><strong>வா</strong>சுவை ஏன் உயர்த்திவிடவில்லை. எல்லாவற்றையும் இயக்கும் அந்த INVISIBLE HAND? காரண காரியங்களைக் கடவுளே அறிவான்!</p>.<p><strong>- சுழலும்...</strong></p>
<p style="text-align: center"><span style="color: #800000"><span style="font-size: small"><strong>நாம் தோற்பாவைகள்!</strong></span></span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>'L</strong>IFE’!</p>.<p>அமெரிக்காவிலிருந்து வரும் ஓர் ஆங்கில ஏடு. பக்கத்துக்குப் பக்கம் கிளி கொஞ்சும். வண்ணப் படங்கள், கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்.</p>.<p>ஏடு மேல் ஏறி நிற்கும் எல்லா எழுத்துகளுக்கும் கால் வழுக்கும்; காகிதத்தின் வழுவழுப்பு அப்படி!</p>.<p>நாற்பதாண்டுகள் முன் நான் படித்த கட்டுரையன்று, பாசி படர்ந்த படித்துறைபோல் - என் நினைவில் படர்ந்து நிற்கிறது.</p>.<p>'LIFE’- ல் வெளிவந்ததுதான்; கட்டுரையின் தலைப்பு:</p>.<p>'NINE REASONS TO BELIEVE IN GOD!’</p>.<p>- அதாவது,</p>.<p>கடவுளை நம்புவதற்கான காரணங்கள் ஒன்பது!</p>.<p>கட்டுரை ஆசிரியர் கூறப் புகுவது யாதெனில் -</p>.<p>கோள்களாகட்டும்; நாள்களாகட்டும்; ஆள்களாகட்டும்;</p>.<p>இப் படிமிசை இயங்கும் எல்லாவற்றிற்கும், அவற்றை இயக்குகின்ற ஓர் - INVISIBLE HAND - இருக்கிறது என்பதுதான்!</p>.<p>பகுத்தறிவாளர் எனப்படுவோர் - அந்தக் கையை, இயற்கை என்கின்றனர்; 'அது இயற்கையாயின், அவ் இயற்கையையும் இயக்கும் கை இறைக்கை!’ என்று...</p>.<p>காரண காரியங்களோடு நிறுவுகிறார் கட்டுரையாசிரியர்.</p>.<p>கண்ணுக்குத் தெரியாத கையின் கையில் கயிறு; அந்தக் கயிறு வழி கூத்தாடும் -</p>.<p>தோற்பாவைகள்தாம் -</p>.<p>தொல்புவியும்; மாந்தரும்; மற்றவையும்!</p>.<p>இவ் அரிய உண்மையைத்தான் அறிந்திருக்கிறார்; அறிந்ததை அகிலத்திற்கு அறிவித்திருக்கிறார் அருட்பாவில் -</p>.<p>வடலூர் வள்ளல்;</p>.<p>'ஆட்டு வித்தால் ஆரொருவர் ஆடாதாரே!’ என்று.</p>.<p><strong>அ</strong>ருமைச் சகோதரனே!</p>.<p>ஆறு கைகளில் நீயும் ஒரு கையாய் அமர்ந்து ஆடுகிறாய் சீட்டு.</p>.<p>கலைத்துப் போட்ட பதின்மூன்று சீட்டு களையும், கையில் வைத்து நீ அடுக்கு கையிலேயே -</p>.<p>ஆட அவசியமின்றி ஆகிவிடுகிறது RUMMY! </p>.<p>அடுத்தவர் கைகளெல்லாம் 'FULL’ ஆக நிற்க, நீ அள்ளுகிறாய் காசை!</p>.<p>அதற்கென்ன காரணம்? ஆடியது நீயல்ல; ஆண்டவன்!</p>.<p><strong>இ</strong>துதான் - வள்ளலார் முதல், திருமுருக வாரியார் வரை சொல்லிவைத்த விழுமிய கருத்தாயினும் -</p>.<p>'தகுதியுடையார் ஏன் தகவுடையாராய் ஆகவில்லை?’ என்று நான் சிலரைப் பற்றிச் சிந்திக்க நேர்கையில் -</p>.<p>என் வினா விடையற்று நிற்கிறது. 'இது தான் தெய்வசங்கல்பம்’ என்று ஏற்றுக் கொள்வேனாயின் -</p>.<p>உழைப்பிற்கும் வேர்வைக்கும், உலகுமிசை மரியாதை இல்லை என்றாகிவிடும். அது உண்மையுமல்ல.</p>.<p>எல்லா உழைப்புகளும் ஏன் மரியாதை பெறவில்லை என்பதுதான் -</p>.<p>விடையறியா என் வினா!</p>.<p><strong>தி</strong>ருவரங்கத்திலும்; திருச்சி தேவர் ஹாலிலும் -</p>.<p>நான் ஏராளமான நாடகங்கள் நடத்திக்கொண்டிருந்த நாள்கள்.</p>.<p>ஆரம்பத்தில் நான் சமூக நாடகங்கள்தான் எழுதி அரங்கேற்றினேன்.</p>.<p>திருச்சி - 'கெயிட்டி’ டாக்கீஸில் ஒரு படம் வந்தது.</p>.<p>படத்தின் பெயர் 'மருத நாட்டு இளவரசி’; எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி நடித்த படம். </p>.<p>சரித்திரக் கதை.</p>.<p>அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுக் குப் பின்னணி பாடியவர் -</p>.<p>அந்தக் காலத்தில் பெரும் புகழ் பெற்று விளங்கிய திரு. எம்.எம்.மாரியப்பா அவர் கள்.</p>.<p>'வாராய்! நீ வாராய்!’ எனும், காருள்ள வரையும்; கடல் நீருள்ள வரையும் - இறவாது துலங்கவல்லதும் - அண்ணன் திரு. மருதகாசி அவர்கள் எழுதியதுமான அந்தப் பாட்டைப் பாடிய -</p>.<p>திரு. திருச்சி லோகனாதன் அவர்களின் தாய் மாமன்தான் திரு.மாரியப்பா அவர்கள்.</p>.<p>எப்பொழுதாவது - நான் உடன் பேசிக்கொண்டிருக்கையில், திரு. சிவாஜி அவர்களுக்கு நல்ல MOOD வந்தால் -</p>.<p>என் தொடையில் தாளம் தட்டிப் பாடுவார் ஒரு பாட்டை.</p>.<p><span style="color: #ff0000"><em>'இந்த உலகினில்<br /> இருக்கும் மாந்தருள் -<br /> எழிலுடையோன்<br /> எங்கள் தமிழன்!’</em></span> - என்பதுதான் அந்தப் பாட்டு.</p>.<p>கோவை திரு. அய்யாமுத்துக் கவுண்டர் அவர்கள் எழுதியது. இந்தப் பாட்டுதான் சிவாஜிக்கு மிக மிக இஷ்டமான பாட்டு. இதைப் பாடியவர் திரு. எம்.எம். மாரியப்பா அவர்கள்.</p>.<p>மாரியப்பா அவர்களும் நானும் - மிக நெருங்கிய நண்பர்கள். ஆகவே - அவர் தயவில் தினமும் கெயிட்டி டாக்கீஸில், அவர் பாட்டு இடம் பெற்ற படமான -</p>.<p>'மருத நாட்டு இளவரசி’யைப் பார்ப்பேன். குறைந்தது பத்து தடவையாவது பார்த்திருப்பேன்.</p>.<p>எனக்குத் திகட்டவில்லை. தமிழ் எப்படித் திகட்டும்?</p>.<p>உரையாடல்கள் ஒவ்வொன்றும், உறையிலிருந்து உருவி எடுத்த வாளின் கூர்மையோடும்; சிற்றன்ன வாசலில் செதுக்கிவைக்கப்பெற்ற சிற்பங்களின் சீர்மையோடும்; கொற்கை முத்துக்களைக் கோவையாய் ஒரு நூற்சரட்டில் கோத்துவைத்தாற்போன்ற நீர்மையோடும்; எல்லாவற்றிற்கும் மேலாக எடுத்துவைத்த வாதங்களில் நெறி பிறழா நேர்மை யோடும் -</p>.<p>விளங்கி, என்னை வியப்பில் விழுத்தின. தமிழின் தகவுகள் யாவையும் அந்தத் திரைப்படம் எனக்குக் கற்பிக்க -</p>.<p>நான் - சமூக நாடகங்களை விடுத்து, கற்கண்டுத் தமிழுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் சரித்திர நாடகங்களை எழுதலானேன்.</p>.<p>'மருதநாட்டு இளவரசி’யின் மறக்கவொணா உரையாடல்கள் மூலம் -</p>.<p>என் மனத்தை மணித் தமிழை நோக்கி மடைமாற்றம் செய்த பெரியவர்; அரியவர்; என் வணக்கத்திற்கு உரியவர் -</p>.<p>திரு.கலைஞர் அவர்கள்தான். HE SIMPLY ELECTRIFIED ME OUT OF HIS MOST MEMORABLE DIALOGUES!</p>.<p><strong>அ</strong>ம்பிகாபதி அமராவதி கதையை - 'கவிஞனின் காதலி’ என்ற பெயரில் நாடகமாக எழுதியிருந்தேன்.</p>.<p>ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கனாதஸ்வாமி கோயிலில், வெள்ளைக்காரன் காலத்தில் EXECUTIVE OFFICER - ஆக இருந்த திரு. ராஜகோபால் நாயுடு அவர்களின் புதல்வன் - </p>.<p>திரு.சௌந்தரராஜன்தான், நாடகத்தில் அம்பிகாபதி. அவன் என்னுடைய சீடன் எனலாம்.</p>.<p>நாடகம், திருச்சி வட்டாரத்தில் மிகப் பெரிய வெற்றியை எட்டியிருந்தது.</p>.<p>அதை - சென்னையில் நடந்த சௌந்தரராஜனின் தந்தை திரு.ராஜகோபால் நாயுடு ஆசைப்பட்டார். அது, அவருடைய பையன் சினிமாவில் புக - ஒரு VISITING CARD ஆக இருக்குமே என்று.</p>.<p>நாடக வாத்தியார் நான் என்பதால், நாயுடு அவர்கள் என்னை சென்னைக்கு அழைத்திருந்தார். ஆனால், என்னால் அப்போது ஸ்ரீரங்கத்தைவிட்டு வர இயலவில்லை.</p>.<p>நாடகம் - தியாகராய நகர், கிருஷ்ணகான சபாவில் நடைபெற்றது. அப்போது கிருஷ்ணகான சபா - இப்போது நல்லி கடை இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் - பனகல் பார்க் அருகே ஒரு கீற்றுக் கொட்டகையாக இருந்தது.</p>.<p>அங்குதான் என்னுடைய 'கவிஞனின் காதலி’ நாடகத்தை நடத்தினார்கள். சௌந்தரராஜன், அம்பிகாபதி; புலியூர் சரோஜா, அமராவதி!</p>.<p>திரு. எம்.ஜி.ஆர். தலைமை வகிக்க ஒப்புக்கொண்டிருந்தார்கள்.</p>.<p>ஆனால் - நாடகத்தன்று மாலை -</p>.<p>திரு. எம்.ஜி.ஆர். அவர்களுடைய மனைவியார் திருமதி சதானந்தவதி அவர்களுக்கு உடல் நிலை சற்று கவலைக்கிடமாகிவிட்டது. அந்த அம்மையார், ஓரிரு வருடங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார்கள்.</p>.<p>மனைவி உடல்நிலை மோசமாக இருக்கும் தகவல் 'மாடப்புறா’ ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆருக்குத் தெரிய வந்ததும் -</p>.<p>ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டுப் புறப்படலானார். இந்த நிலையில் நாடகத்திற்கு எப்படி அவரால் வர முடியும்?</p>.<p>இருப்பினும் - நாடகம் நடத்துவோர் தன்னால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகக்கூடும் என்று -</p>.<p>ஸ்டூடியோவிலிருந்து வீட்டுக்குப் போகும் வழியில், பத்து நிமிஷம் இருந்து நாடகம் பார்த்துவிட்டுப் போவதாக அறிவித்துவிட்டு, நாடகத்திற்கு வந்தார்.</p>.<p>சௌந்தரராஜனை இன்னொரு சிவாஜி என்றே நான் சொல்லுவேன். அப்படி ஓர் உருவம்; தீர்க்கமான நாசி; தமிழ் உச்சரிப்பு; தகத்தகாயமான நடிப்பு!</p>.<p>பத்து நிமிஷம் மட்டுமே இருப்பதாகச் சொன்ன எம்.ஜி.ஆர் - முழு நாடகமும் இருந்து பார்த்துவிட்டு மேடையில் பேசும்போது -</p>.<p>'இந்த நாடகத்தின் வசனங்கள், பாரதிதாசன் கவிதைபோல் இருந்தது. எழுதியவர் யாரென்று கேட்டேன்... ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார் - பெயர் வாலி என்று சொன்னார்கள்... அவரை இங்கிருந்தே அழைக்கிறேன்... சென்னை வந்தால் அவர் என்னைச் சந்திக்க வர வேண்டும். அவரை வரவேற்க ஆவலாக இருக்கிறேன்!’ என்று குறிப்பிட்டார்.</p>.<p>மிகப் பெரிய நடிகனாகத் திரையில் கொடிகட்டிப் பறப்பான் என்று நான் எண்ணிய திரு.சௌந்தரராஜன் பல படங்களில் நடித்திருந்தாலும் - எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை!</p>.<p>ஆனால் - எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருமுறை மந்திரியாக இருந்தார்.</p>.<p>எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஸ்ரீரங்கத்தில் இருந்த நான் - எம்.ஜி.ஆரின் பிரதான கவிஞனாகவும், நெருங்கிய நண்பனாகவும் மாறிப்போனேன்.</p>.<p>இதற்குக் காரணம் - AN INVISIBLE HAND!</p>.<p><strong>'தி</strong>ருச்சி வாசு’ என்றும் சொல்லலாம்; 'பொன்மலை வாசு’ என்றும் சொல்லலாம், என் நெஞ்சுக்கு இனிய நெருக்கமான சினேகிதன் திரு.வாசுவை.</p>.<p>என் நாடகங்களில் - திருச்சி சௌந்தரராஜன் வில்லன்; பொன்மலை வாசு, கதாநாயகன்!</p>.<p>பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் பணிபுரிந்துகொண்டிருந்த வாசு -</p>.<p>என் வாழ்க்கைப் பயணத்தில் உடன்வந்த உயிர்த் தோழன்.</p>.<p>பரம்பரையாய், வசதியான குடும்பத்தைச் சார்ந்தவனாயினும் - நாடகத்தின் பால் உள்ள மாளாக் காதலால் - இஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டவன்.</p>.<p>என்னுடைய நடிகர்களிலேயே - கவிதை நடையிலான என் உரையாடல்களை -</p>.<p>வாசுபோல் பிறிதொருவர் பேசி நானறியேன். தமிழ் உச்சரிப்பும், உணர்ச்சிப் பெருக்கான நடிப்பும், - நாடகம் பார்ப்போரையும் என்னையும் பிரமிக்கவைத்ததுண்டு.</p>.<p>வாசு - சினிமாவில் பெரிய இடத்திற்கு வர வேண்டும்; வருவதற்கான தகுதிகள் நூறு விழுக்காடு உள்ளவன் - என்று நான், என் தமிழ் மேல் ஆணையாகச் சொல்லுகிறேன் - மனப்பூர்வமாக அவாவினேன்.</p>.<p>நாகேஷும், நானும் சேர்ந்திருந்த CLUB HOUSE - ல் வாசுவையும் உடன் வைத்துக்கொண்டேன். வாசு, நாகேஷின் நெருங்கிய நண்பரில் ஒருவனானான்.</p>.<p>அது தவிர - மெல்லிசை மன்னர் திரு.விஸ்வநாத அண்ணனிடமும் வாசுவை அறிமுகப்படுத்திவைத்தேன். விஸ்வநாத அண்ணனும், வாசுவை</p>.<p>நெடுநாள் நண்பனாகப் பாவித்துப் பழகினார்.</p>.<p>'நாளை நமதே’ படத்தில்கூட, வாசு, ஒரு நல்ல வேடத்தில் தோன்றியும் -</p>.<p>பெரிதாக வரவில்லையே என்பது இன்றளவும் என்னை வருத்திக்கொண்டிருக்கும் விஷயம். தகுதியுடைய வாசு, ஏன் தகவுடைய வாசுவாக ஆகவில்லை? நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தையும் நாவில் அடுக்கிவைத்திருக்கும் வாசுவிடம் கேட்க வேண்டும் -</p>.<p>'கன்னலடு பாகு மலர்க் கள்ளை’ வெறுக்கவைக்கும் தமிழின் ஆளுமையை, அவனது வசன உச்சரிப்பில்!</p>.<p>வாசு, சினிமாவில் - அதுவும் நிறைய S.VE.சேகர் நாடகங்களில் நடித்தும் - ஏன் பெரிய இடத்தை எட்டவில்லை?</p>.<p>நான் கஷ்டப்பட்ட காலங்களில் உதவிய வண்மை குணம் மிக்கவன் வாசு. வயிற்றுப் பசியை நான் அவன் வீட்டில் - ஆற்றிக்கொண்டிருக்கிறேன் அனேக நாள்கள்.</p>.<p>பழைய மாம்பலம் - கோதண்டராமர் கோயில் தெருவில் வாசு இருந்தபோது-</p>.<p>மாதக்கணக்காக முகம் சுளிக்காமல், அன்றலர்ந்த கமலம்போல் -</p>.<p>எனக்குச் சோறு போட்ட - என் தாயனைய உத்தம ஸ்திரீ -</p>.<p>திரு.வாசுவின் வாழ்க்கைத் துணைவியார்!</p>.<p><strong>வா</strong>சுவை ஏன் உயர்த்திவிடவில்லை. எல்லாவற்றையும் இயக்கும் அந்த INVISIBLE HAND? காரண காரியங்களைக் கடவுளே அறிவான்!</p>.<p><strong>- சுழலும்...</strong></p>