<p><span style="color: #ff0000"><strong>நா</strong></span>ணயம் விகடன் ட்விட்டர் கேள்வி-பதில் பகுதியில் இன்ஷூரன்ஸ் சம்பந்தமான சந்தேகங்களுக்கு</p>.<p> வீரேந்தர் குமார் (இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம்) அளித்த பதில்கள்...</p>.<p><span style="color: #ff0000"><strong> இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேனை எந்த மாதிரியான பிரச்னைகளுக்கு அணுகலாம்?</strong></span></p>.<p>‘‘இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேன்(பீமா லோக்பால்) என்பது ஒரு தீர்வாணையம் (Quasi Judicial Forum). இந்த நிறுவனம் இன்ஷூரன்ஸ் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் (IRDA) கீழ் செயல்படுகிறது. தற்போது இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேனுக்கு என்று இந்தியாவில் 17 இடத்தில் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள அலுவலகம் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து வரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை அலுவலகத்தின் முகவரி: Fatima Akhtar Court, 4th Floor, New No.453, Anna Salai, Teynampet, Chennai – 600 018. Location - Near S.I.E.T. Signal. Tel: + 91 44- 2433668/ 24335284 Fax: +91 44 -24333664 e-mail address: <a href="mailto:bimalokpal.chennai@gbic.co.in">bimalokpal.chennai@gbic.co.in</a> இணைய தளம்: <a href="http://www.gbic.co.in/">www.gbic.co.in</a> பாதிக்கப்பட்ட தனிநபர் பாலிசிதாரர் அல்லது அவருடைய வாரிசுதாரர், தனக்கு ஏற்பட்ட நஷ்டயீட்டை பெறுவதற்கு கீழ்க் கண்ட ஆறு வகைகளில் உள்ள பிரச்னைகளுக்கு ஓம்புட்ஸ்மேனால் தீர்வு காணப்படுகிறது.</p>.<p>வணிக ரீதியல்லாத பாலிசி சம்பந்தப்பட்ட புகார்கள் மட்டுமே கையாளப்படுகின்றன.</p>.<p>1. மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ நிராகரிக்கப்பட்ட நஷ்ட ஈட்டுத் தொகை.</p>.<p>2. பிரீமியம் சம்பந்தப்பட்ட புகார்கள்.</p>.<p>3. நஷ்ட ஈடு கோருவதில் உள்ள சட்ட நுணுக்கங்கள் சம்பந்தமாக.</p>.<p>4. நஷ்ட ஈடு பெறுவதில் ஏற்படும் தாமதம் தொடர்பான புகார்கள்.</p>.<p>5. பிரீமியம் தொகை செலுத்திய பின்னும் பாலிசி தொடர்பான காப்பீட்டுப் பத்திரம் வழங்கப்படாமல் இருப்பது தொடர்பாக உள்ள புகார்கள்.</p>.<p>6. ஐஆர்டிஏவால் ‘மிஸ் செல்லிங்’ என்று சொல்லப்படும் தவறான தகவல்களைச் சொல்லி விற்கப்படும் பாலிசிகள் தொடர்பாக வரும் புகார்களும் சமீபத்தில் கையாளப்படுகிறது.''</p>.<p><span style="color: #ff0000"><strong>நான் இரண்டு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்திருக்கிறேன். இரண்டுமே ஃப்ளோட்டர் பாலிசி. இரண்டும் வெவ்வேறு நிறுவனத்தில் எடுத்திருக்கிறேன். ஒன்று, என் தாய் மற்றும் தந்தையுடன் சேர்ந்து எடுத்திருக்கிறேன். இதற்கான கவரேஜ் ரூ. 5 லட்சம். இரண்டாவது பாலிசி, என் மனைவி மற்றும் இரண்டு வயது மகனோடு சேர்ந்து எடுத்திருக்கிறேன். இந்த பாலிசிக்கான கவரேஜ் தொகை ரூ.5 லட்சம். சமீபத்தில் எனக்குக் குடலிறக்கம் ஏற்பட்டு, ரூ.1 லட்சம் செலவாகிவிட்டது. நான் எப்படி க்ளெய்ம் செய்வது?</strong></span></p>.<p>‘‘நீங்கள் எடுத்துள்ள ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் முதலில் கான்ட்ரிபியூஷன் க்ளாஸ் சொல்லப்பட்டிருக்கிறதா என்பதைப் பாருங்கள். அப்படி கான்ட்ரிபியூஷன் க்ளாஸ் (Contribution clause - விகிதாச்சார முறை) சொல்லப்பட்டிருந்தால், இரண்டு பாலிசிகளிலும் சொல்லப்பட்ட விகிதாச்சார முறைப்படி க்ளெய்ம் தரப்படும். கான்ட்ரிபியூஷன் க்ளாஸ் சொல்லப்படவில்லை என்றால், ஏதாவது ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமே மொத்த சிகிச்சை தொகைக்கான டாக்குமென்ட்டுகளையும் சமர்பித்து க்ளெய்ம் பெறலாம். அப்படி எந்த நிறுவனமாவது க்ளெய்ம் தர மறுக்கிறது என்றால் தாராளமாக இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேனுக்கு புகார் தெரிவிக்கலாம்.’’</p>.<p><span style="color: #ff0000"><strong>நான் ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ஐந்து வருடங்களுக்குமுன் ஒரு பாலிசி எடுத்தேன். அந்த பாலிசிக்கான கவரேஜ் தொகை 1 லட்சம் ரூபாய். அதேபோல் அந்த பாலிசியில் பெட்டில் அட்மிட் ஆகாமல் இருந்தாலும் குறிப்பிட்ட தொகைக்கு க்ளெய்ம் தொகை கிடைக்கும். அண்மையில் பிரீமியம் கட்ட சென்றபோது, அந்த பாலிசி வேறு ஒரு பாலிசியாக மாற்றப்பட்டு, கவரேஜ் தொகையை அதிகரித்து பிரீமியத்தையும் இரு மடங்கு உயர்த்திவிட்டார்கள். என்னால் அந்த அதிக பிரீமியத்தைக் கட்ட முடியவில்லை. இன்ஷூரன்ஸ் நிறுவனம் இப்படிச் செய்வது சரியா?</strong></span></p>.<p>‘‘ஒரு பாலிசியை இன்ஷூரன்ஸ் நிறுவனம் மாற்றம் செய்யும் போது அந்த பாலிசி தொடர்பான மாற்றங்களை 3 மாதங்களுக்கு முன்னர் பாலிசிதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த மாற்றத்துக்கு ஐஆர்டிஏவிடமும் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மேற்கூறியது போல், உங்களுக்கு பாலிசி மாற்றம் தெரிவிக்கப்படவில்லை எனில் தாராளமாக இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேனுக்கு தெரிவிக்கலாம்.’’</p>.<p><span style="color: #ff0000"><strong>இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் பாலிசி போடும் வரை நன்றாகப் பேசுகிறார்கள். ஆனால், பாலிசி எடுத்தபின் எந்த விவரங்களையும் சொல்வதில்லை. இதற்கு என்ன தீர்வு? அவர்களைப் பற்றி இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேனிடம் புகார் தெரிவிக்கலாமா?</strong></span></p>.<p>‘‘இது சேவை தொடர்பான பிரச்னை. இந்த மாதிரியான புகார்களை சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமே தெரிவிக்க வேண்டும். ஓம்புட்ஸ்மேனுக்கு ஏஜென்ட் சேவைக் குறைபாடுகளை விசாரிக்க அதிகாரம் இல்லை.’’</p>.<p><span style="color: #ff0000"><strong>இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மீது அளிக்கப்படும் புகார்களுக்கு எத்தனை நாட்களில் தீர்வு காணப்படும்?</strong></span></p>.<p>‘‘ரெட்ரசல் ஆஃப் பப்ளிக் கிரீவன்சஸ் ரூல்ஸ் (Redressal of public Grievances rules) 1998-ன் படி புகார் பெறப்பட்டு 90 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். புகார் அளித்தவருக்கு ஓம்புட்ஸ்மேனின் தீர்ப்பு அனுப்பப்படும். அந்தத் தீர்ப்பு நகல் கிடைத்து, 30 நாட்களுக்குள், அந்தத் தீர்ப்பை ஏற்கும் ஒப்புதல் கடிதத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும். இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒப்புதல் கடிதம் பெற்று 15 நாட்களுக்குள், ஓம்புட்ஸ்மேன் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும்.’’</p>.<p><span style="color: #ff0000"><strong>இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்யும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன?</strong></span></p>.<p>‘‘1. பாலிசி தொடர்பான டாக்குமென்ட்டுகளைத் தெளிவாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். 2. க்ளெய்ம் செய்யும்போது, க்ளெய்முக்காகக் கூறப்பட்டுள்ள ஆவணங்களைச் சரியாக மற்றும் விரைவாகச் சமர்ப்பிக்க வேண்டும். சமர்பித்தபின் அத்தாட்சிக் கடிதத்தை கட்டாயமாகப் பெறவும். 3. எப்போதும் நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் மற்றும் அத்தாட்சிக் கடிதங்களின் நகல்களைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.’’</p>.<p><span style="color: #ff0000"><strong>செட்டில்மென்ட்டில் திருப்தியில்லை என்றால் யாரிடம் முறையிடுவது?</strong></span></p>.<p>‘‘முதலில் சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் குறைதீர்க்கும் பிரிவுக்குப் புகார் தெரிவியுங்கள். அதன்பின் ஜெனரல் இன்ஷூரன்ஸ் பாலிசி என்றால் நடுவர் மன்றங்களை (Arbitration) அணுகலாம்.’’ டிவிட்டர் கேள்வி-பகுதியை விரிவாகப் படிக்க: <a href="https://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=10474">https://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=10474</a></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>படம்: தி.ஹரிகரன்</strong></span></p>
<p><span style="color: #ff0000"><strong>நா</strong></span>ணயம் விகடன் ட்விட்டர் கேள்வி-பதில் பகுதியில் இன்ஷூரன்ஸ் சம்பந்தமான சந்தேகங்களுக்கு</p>.<p> வீரேந்தர் குமார் (இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம்) அளித்த பதில்கள்...</p>.<p><span style="color: #ff0000"><strong> இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேனை எந்த மாதிரியான பிரச்னைகளுக்கு அணுகலாம்?</strong></span></p>.<p>‘‘இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேன்(பீமா லோக்பால்) என்பது ஒரு தீர்வாணையம் (Quasi Judicial Forum). இந்த நிறுவனம் இன்ஷூரன்ஸ் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் (IRDA) கீழ் செயல்படுகிறது. தற்போது இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேனுக்கு என்று இந்தியாவில் 17 இடத்தில் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள அலுவலகம் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து வரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை அலுவலகத்தின் முகவரி: Fatima Akhtar Court, 4th Floor, New No.453, Anna Salai, Teynampet, Chennai – 600 018. Location - Near S.I.E.T. Signal. Tel: + 91 44- 2433668/ 24335284 Fax: +91 44 -24333664 e-mail address: <a href="mailto:bimalokpal.chennai@gbic.co.in">bimalokpal.chennai@gbic.co.in</a> இணைய தளம்: <a href="http://www.gbic.co.in/">www.gbic.co.in</a> பாதிக்கப்பட்ட தனிநபர் பாலிசிதாரர் அல்லது அவருடைய வாரிசுதாரர், தனக்கு ஏற்பட்ட நஷ்டயீட்டை பெறுவதற்கு கீழ்க் கண்ட ஆறு வகைகளில் உள்ள பிரச்னைகளுக்கு ஓம்புட்ஸ்மேனால் தீர்வு காணப்படுகிறது.</p>.<p>வணிக ரீதியல்லாத பாலிசி சம்பந்தப்பட்ட புகார்கள் மட்டுமே கையாளப்படுகின்றன.</p>.<p>1. மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ நிராகரிக்கப்பட்ட நஷ்ட ஈட்டுத் தொகை.</p>.<p>2. பிரீமியம் சம்பந்தப்பட்ட புகார்கள்.</p>.<p>3. நஷ்ட ஈடு கோருவதில் உள்ள சட்ட நுணுக்கங்கள் சம்பந்தமாக.</p>.<p>4. நஷ்ட ஈடு பெறுவதில் ஏற்படும் தாமதம் தொடர்பான புகார்கள்.</p>.<p>5. பிரீமியம் தொகை செலுத்திய பின்னும் பாலிசி தொடர்பான காப்பீட்டுப் பத்திரம் வழங்கப்படாமல் இருப்பது தொடர்பாக உள்ள புகார்கள்.</p>.<p>6. ஐஆர்டிஏவால் ‘மிஸ் செல்லிங்’ என்று சொல்லப்படும் தவறான தகவல்களைச் சொல்லி விற்கப்படும் பாலிசிகள் தொடர்பாக வரும் புகார்களும் சமீபத்தில் கையாளப்படுகிறது.''</p>.<p><span style="color: #ff0000"><strong>நான் இரண்டு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்திருக்கிறேன். இரண்டுமே ஃப்ளோட்டர் பாலிசி. இரண்டும் வெவ்வேறு நிறுவனத்தில் எடுத்திருக்கிறேன். ஒன்று, என் தாய் மற்றும் தந்தையுடன் சேர்ந்து எடுத்திருக்கிறேன். இதற்கான கவரேஜ் ரூ. 5 லட்சம். இரண்டாவது பாலிசி, என் மனைவி மற்றும் இரண்டு வயது மகனோடு சேர்ந்து எடுத்திருக்கிறேன். இந்த பாலிசிக்கான கவரேஜ் தொகை ரூ.5 லட்சம். சமீபத்தில் எனக்குக் குடலிறக்கம் ஏற்பட்டு, ரூ.1 லட்சம் செலவாகிவிட்டது. நான் எப்படி க்ளெய்ம் செய்வது?</strong></span></p>.<p>‘‘நீங்கள் எடுத்துள்ள ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் முதலில் கான்ட்ரிபியூஷன் க்ளாஸ் சொல்லப்பட்டிருக்கிறதா என்பதைப் பாருங்கள். அப்படி கான்ட்ரிபியூஷன் க்ளாஸ் (Contribution clause - விகிதாச்சார முறை) சொல்லப்பட்டிருந்தால், இரண்டு பாலிசிகளிலும் சொல்லப்பட்ட விகிதாச்சார முறைப்படி க்ளெய்ம் தரப்படும். கான்ட்ரிபியூஷன் க்ளாஸ் சொல்லப்படவில்லை என்றால், ஏதாவது ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமே மொத்த சிகிச்சை தொகைக்கான டாக்குமென்ட்டுகளையும் சமர்பித்து க்ளெய்ம் பெறலாம். அப்படி எந்த நிறுவனமாவது க்ளெய்ம் தர மறுக்கிறது என்றால் தாராளமாக இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேனுக்கு புகார் தெரிவிக்கலாம்.’’</p>.<p><span style="color: #ff0000"><strong>நான் ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ஐந்து வருடங்களுக்குமுன் ஒரு பாலிசி எடுத்தேன். அந்த பாலிசிக்கான கவரேஜ் தொகை 1 லட்சம் ரூபாய். அதேபோல் அந்த பாலிசியில் பெட்டில் அட்மிட் ஆகாமல் இருந்தாலும் குறிப்பிட்ட தொகைக்கு க்ளெய்ம் தொகை கிடைக்கும். அண்மையில் பிரீமியம் கட்ட சென்றபோது, அந்த பாலிசி வேறு ஒரு பாலிசியாக மாற்றப்பட்டு, கவரேஜ் தொகையை அதிகரித்து பிரீமியத்தையும் இரு மடங்கு உயர்த்திவிட்டார்கள். என்னால் அந்த அதிக பிரீமியத்தைக் கட்ட முடியவில்லை. இன்ஷூரன்ஸ் நிறுவனம் இப்படிச் செய்வது சரியா?</strong></span></p>.<p>‘‘ஒரு பாலிசியை இன்ஷூரன்ஸ் நிறுவனம் மாற்றம் செய்யும் போது அந்த பாலிசி தொடர்பான மாற்றங்களை 3 மாதங்களுக்கு முன்னர் பாலிசிதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த மாற்றத்துக்கு ஐஆர்டிஏவிடமும் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மேற்கூறியது போல், உங்களுக்கு பாலிசி மாற்றம் தெரிவிக்கப்படவில்லை எனில் தாராளமாக இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேனுக்கு தெரிவிக்கலாம்.’’</p>.<p><span style="color: #ff0000"><strong>இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் பாலிசி போடும் வரை நன்றாகப் பேசுகிறார்கள். ஆனால், பாலிசி எடுத்தபின் எந்த விவரங்களையும் சொல்வதில்லை. இதற்கு என்ன தீர்வு? அவர்களைப் பற்றி இன்ஷூரன்ஸ் ஓம்புட்ஸ்மேனிடம் புகார் தெரிவிக்கலாமா?</strong></span></p>.<p>‘‘இது சேவை தொடர்பான பிரச்னை. இந்த மாதிரியான புகார்களை சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமே தெரிவிக்க வேண்டும். ஓம்புட்ஸ்மேனுக்கு ஏஜென்ட் சேவைக் குறைபாடுகளை விசாரிக்க அதிகாரம் இல்லை.’’</p>.<p><span style="color: #ff0000"><strong>இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மீது அளிக்கப்படும் புகார்களுக்கு எத்தனை நாட்களில் தீர்வு காணப்படும்?</strong></span></p>.<p>‘‘ரெட்ரசல் ஆஃப் பப்ளிக் கிரீவன்சஸ் ரூல்ஸ் (Redressal of public Grievances rules) 1998-ன் படி புகார் பெறப்பட்டு 90 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். புகார் அளித்தவருக்கு ஓம்புட்ஸ்மேனின் தீர்ப்பு அனுப்பப்படும். அந்தத் தீர்ப்பு நகல் கிடைத்து, 30 நாட்களுக்குள், அந்தத் தீர்ப்பை ஏற்கும் ஒப்புதல் கடிதத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும். இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒப்புதல் கடிதம் பெற்று 15 நாட்களுக்குள், ஓம்புட்ஸ்மேன் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும்.’’</p>.<p><span style="color: #ff0000"><strong>இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்யும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன?</strong></span></p>.<p>‘‘1. பாலிசி தொடர்பான டாக்குமென்ட்டுகளைத் தெளிவாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். 2. க்ளெய்ம் செய்யும்போது, க்ளெய்முக்காகக் கூறப்பட்டுள்ள ஆவணங்களைச் சரியாக மற்றும் விரைவாகச் சமர்ப்பிக்க வேண்டும். சமர்பித்தபின் அத்தாட்சிக் கடிதத்தை கட்டாயமாகப் பெறவும். 3. எப்போதும் நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் மற்றும் அத்தாட்சிக் கடிதங்களின் நகல்களைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.’’</p>.<p><span style="color: #ff0000"><strong>செட்டில்மென்ட்டில் திருப்தியில்லை என்றால் யாரிடம் முறையிடுவது?</strong></span></p>.<p>‘‘முதலில் சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் குறைதீர்க்கும் பிரிவுக்குப் புகார் தெரிவியுங்கள். அதன்பின் ஜெனரல் இன்ஷூரன்ஸ் பாலிசி என்றால் நடுவர் மன்றங்களை (Arbitration) அணுகலாம்.’’ டிவிட்டர் கேள்வி-பகுதியை விரிவாகப் படிக்க: <a href="https://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=10474">https://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=10474</a></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>படம்: தி.ஹரிகரன்</strong></span></p>