<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வேடுவர் கோலத்தில் சிவபெருமான்</strong></span></p>.<p>கும்பேஸ்வரர் ஆலயத்தில், கிராதமூர்த்தி சந்நிதியில் சிவபெருமான் வேடுவ கோலத்தில் காட்சி தருகிறார். கும்பகோணத்தில் ஒதுங்கிய அமுத கும்பத்தை இறைவன் வேடுவராக வந்து பாணம் தொடுத்து உடைத்ததை நினைவூட்டும் வகையில் இந்த சந்நிதி அமைந்துள்ளது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஆறு திருக்கரங்களுடன் ஆறுமுகப் பெருமான்</strong></span><br /> <br /> இங்கே அமைந்திருக்கும் கார்த்திகேயரின் சந்நிதியில் ஆறுமுகப் பெருமான் ஆறு திருக்கரங்களுடன் மட்டுமே காட்சி தருகிறார். மற்ற சிவத் தலங்களை விட இந்தத் தலம் இரு மடங்கு அதிக மகிமை உள்ளது என்பதால், ஷண்முகக் கடவுள் ஆறு திருக்கரங்களுடன் இருப்பதாக ஐதீகம்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>சோமாஸ்கந்த அமைப்பில் ஆலயம்</strong></span><br /> <br /> கும்பேஸ்வரர் ஆலய கருவறைகளின் அமைப்பு சோமாஸ்கந்த வடிவத்தில் சுவாமி சந்நிதி, கார்த்திகேயர் சந்நிதி, அம்பாள் சந்நிதி என்ற அமைப்பில் உள்ளது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>கெண்டியுடன் மங்களாம்பிகை</strong></span><br /> <br /> கும்பேஸ்வரர் ஆலயத்தில் அன்னை மங்களாம்பிகை என்ற திருப்பெயர் கொண்டு, தன்னுடைய வலது மேற்கரத்தில் கெண்டி ஏந்தி காட்சி தருகிறாள். அமுத கும்பத்தை இறைவன் உடைத்து, மீண்டும் அதை கும்ப வடிவில் லிங்கமாகப் பிசைந்து அதனுள் தான் பிரவேசித்தபோது, அதற்கு நீர் வார்த்தவள் மங்களாம்பிகை. அதனால் மட்டுமல்ல, ஆதிகும்பேஸ்வரரின் அருள் கும்பத்தில் இருந்து அருளை நமக்கெல்லாம் அள்ளி அள்ளி வழங்குவதற்காகவும் அம்பிகை கெண்டி ஏந்தி காட்சி தருகிறாள்.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வேடுவர் கோலத்தில் சிவபெருமான்</strong></span></p>.<p>கும்பேஸ்வரர் ஆலயத்தில், கிராதமூர்த்தி சந்நிதியில் சிவபெருமான் வேடுவ கோலத்தில் காட்சி தருகிறார். கும்பகோணத்தில் ஒதுங்கிய அமுத கும்பத்தை இறைவன் வேடுவராக வந்து பாணம் தொடுத்து உடைத்ததை நினைவூட்டும் வகையில் இந்த சந்நிதி அமைந்துள்ளது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஆறு திருக்கரங்களுடன் ஆறுமுகப் பெருமான்</strong></span><br /> <br /> இங்கே அமைந்திருக்கும் கார்த்திகேயரின் சந்நிதியில் ஆறுமுகப் பெருமான் ஆறு திருக்கரங்களுடன் மட்டுமே காட்சி தருகிறார். மற்ற சிவத் தலங்களை விட இந்தத் தலம் இரு மடங்கு அதிக மகிமை உள்ளது என்பதால், ஷண்முகக் கடவுள் ஆறு திருக்கரங்களுடன் இருப்பதாக ஐதீகம்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>சோமாஸ்கந்த அமைப்பில் ஆலயம்</strong></span><br /> <br /> கும்பேஸ்வரர் ஆலய கருவறைகளின் அமைப்பு சோமாஸ்கந்த வடிவத்தில் சுவாமி சந்நிதி, கார்த்திகேயர் சந்நிதி, அம்பாள் சந்நிதி என்ற அமைப்பில் உள்ளது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>கெண்டியுடன் மங்களாம்பிகை</strong></span><br /> <br /> கும்பேஸ்வரர் ஆலயத்தில் அன்னை மங்களாம்பிகை என்ற திருப்பெயர் கொண்டு, தன்னுடைய வலது மேற்கரத்தில் கெண்டி ஏந்தி காட்சி தருகிறாள். அமுத கும்பத்தை இறைவன் உடைத்து, மீண்டும் அதை கும்ப வடிவில் லிங்கமாகப் பிசைந்து அதனுள் தான் பிரவேசித்தபோது, அதற்கு நீர் வார்த்தவள் மங்களாம்பிகை. அதனால் மட்டுமல்ல, ஆதிகும்பேஸ்வரரின் அருள் கும்பத்தில் இருந்து அருளை நமக்கெல்லாம் அள்ளி அள்ளி வழங்குவதற்காகவும் அம்பிகை கெண்டி ஏந்தி காட்சி தருகிறாள்.</p>