மதிப்புக்குரிய வாசகியரே!
உங்களுக்காகவே இந்தச் சிறப்புப் போட்டி! இங்கே கேட்கப்பட்டி ருக்கும் ஐந்து கேள்விகளுக்கும் நீங்கள் விடையளிக்கவேண்டும். நீங்கள், இந்த இதழை முழுமையாகப் படித்து மகிழ்வீர்கள் என்பது தெரியும். அப்படி கட்டுரைகள், துணுக்குகள் என ஒவ்வொன்றையும் ஆழ்ந்து படித்தீர்கள் எனில், இங்குள்ள கேள்விகளுக்கு மிக எளிதாக நீங்கள் விடையளிக்கலாம். ஆம், இவற்றுக்கான பதில்கள் இந்த இதழிலேயே இடம்பெற்றிருக்கின்றன.

1. மகாபெரியவரின் பூர்வாச்ரம தந்தையின் பெயர் என்ன?
2. ஆபரணங்களில் இருந்து தோன்றியது எந்த அம்பிகை?
3. `கண்டபேருண்டா’ பறவை எந்த அரச வம்சத்துச் சின்னமாகத் திகழ்ந்தது?
4. நடராஜரின் கரத்திலுள்ள உடுக்கை குறிப்பது எதை?
5. `கண்ணிநுண் சிறுத்தாம்பு...’ பாசுரத்தை 12,000 முறை ஓதி, நம்மாழ்வாரின் அருள் பெற்றது யார்?
விடைகளை இங்குள்ள கட்டத்தில் பூர்த்தி செய்வதுடன், இரண்டாவது கேள்விக்கு விடையாகக் கிடைக்கும் அம்பிகையின் மகிமை குறித்த சிறப்புத் தகவல் ஒன்றை ஓரிரு வரிகளில் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். (ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்தி செய்து அனுப்பலாம்). சரியான விடையுடன், அம்பிகையைக் குறித்துக் கச்சிதமாகத் தகவல் அனுப்பும் பத்து வாசகியருக்கு, சிறப்புப் புடவைப் பரிசு காத்திருக்கிறது.
விடைகள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி: 17.4.18. விடைகளைச் சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இ-மெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.
ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!
`புடவை பரிசுப்போட்டி' - சக்தி விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002
