<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வா</strong></span>னம் மழபொழிஞ்சா<br /> வயக்காடு வெளையுமுன்னு<br /> வாயப் பொளந்த சனம்<br /> வக்கத்துக் கெடக்குறோமே!<br /> <br /> ஏருழுது நட்ட நெலம்<br /> எதையாச்சும் கொடுக்குமுன்னு<br /> ஊரே நெனச்சிருக்க<br /> உருக்குலைஞ்சு துடிக்குறோமே!<br /> <br /> தானம் தருமமின்னு<br /> தலைநிமிந்த ஒருகூட்டம்<br /> கையேந்தும் கொடுமையில<br /> கண்ணீர வடிக்கிறோமே!<br /> <br /> அண்ணாந்த மரமெல்லாம்<br /> மல்லாந்து சரிஞ்சிருச்சு<br /> திண்ணவூடும் இடிஞ்சிவிழ<br /> தெருவோரம் படுக்குறோமே!</p>.<p>கோரப் புயல் நடுவே<br /> கூடிழந்த மக்களெல்லாம்<br /> போக ஒரு வழியில்லாம<br /> பொதுக் கெணறா நிக்கிறோமே!<br /> <br /> சூறக் காத்தடிச்சி<br /> சொந்தங்கள கொன்னுடுச்சி<br /> பாடைகட்ட காசில்லாம<br /> பக்கத்துல பொதைக்கிறோமே!<br /> <br /> அழிஞ்ச கணக்கெழுத<br /> அரசாங்கம் வாரதெப்போ?<br /> அறுந்துவிட்ட யோசனையில்<br /> அகதியா தவிக்கிறோமே!<br /> <br /> கொழந்த குட்டியெல்லாம்<br /> எதையெதையோ கேட்கையில<br /> எலிகாப்டர் எப்படி வரும்?<br /> எதிர்பார்த்து பொசுங்குறோமே!<br /> <br /> அடிச்ச புயலோஞ்சி<br /> ஆறேழு நாளும் ஆச்சி<br /> இதுவரைக்கும் முதல்வரய்யா<br /> வரலேன்னு கசங்குறோமே!<br /> <br /> குடிக்கத் தண்ணியில்ல<br /> கொடுக்க ஒரு நாதியில்ல<br /> எதுக்கு ஓட்டளிச்சோம்?<br /> ஏமாந்து விசும்புறோமே!<br /> <br /> தடிச்ச வார்த்தைகள<br /> உடைச்சு மந்திரிசொல்ல<br /> அடிக்க ஓங்கும் கைய<br /> அளவோட நிறுத்துறோமே!<br /> <br /> உதவி செய்ய நெனைக்காம<br /> ஓடிவந்தும் பாக்காம<br /> கதவுகள மூடிக்கிட்ட<br /> கவருமென்ட்ட வெறுக்குறோமே!<br /> <br /> காலம் செஞ்ச கழுத்தறுப்ப<br /> கவலையோட சகிச்சிக்கிட்டு<br /> நூலறுந்த பட்டம்போல<br /> நொந்து ரோட்ட மறிக்கிறோமே!<br /> <br /> பசி நெருப்பில் வயிறிருக்க<br /> பதறிப்போய் உசிரிருக்க<br /> நிவாரணப் பொருள் கொடுக்க<br /> தெய்வத்தையும் அழைக்கிறோமே!<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong> யுகபாரதி</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>வா</strong></span>னம் மழபொழிஞ்சா<br /> வயக்காடு வெளையுமுன்னு<br /> வாயப் பொளந்த சனம்<br /> வக்கத்துக் கெடக்குறோமே!<br /> <br /> ஏருழுது நட்ட நெலம்<br /> எதையாச்சும் கொடுக்குமுன்னு<br /> ஊரே நெனச்சிருக்க<br /> உருக்குலைஞ்சு துடிக்குறோமே!<br /> <br /> தானம் தருமமின்னு<br /> தலைநிமிந்த ஒருகூட்டம்<br /> கையேந்தும் கொடுமையில<br /> கண்ணீர வடிக்கிறோமே!<br /> <br /> அண்ணாந்த மரமெல்லாம்<br /> மல்லாந்து சரிஞ்சிருச்சு<br /> திண்ணவூடும் இடிஞ்சிவிழ<br /> தெருவோரம் படுக்குறோமே!</p>.<p>கோரப் புயல் நடுவே<br /> கூடிழந்த மக்களெல்லாம்<br /> போக ஒரு வழியில்லாம<br /> பொதுக் கெணறா நிக்கிறோமே!<br /> <br /> சூறக் காத்தடிச்சி<br /> சொந்தங்கள கொன்னுடுச்சி<br /> பாடைகட்ட காசில்லாம<br /> பக்கத்துல பொதைக்கிறோமே!<br /> <br /> அழிஞ்ச கணக்கெழுத<br /> அரசாங்கம் வாரதெப்போ?<br /> அறுந்துவிட்ட யோசனையில்<br /> அகதியா தவிக்கிறோமே!<br /> <br /> கொழந்த குட்டியெல்லாம்<br /> எதையெதையோ கேட்கையில<br /> எலிகாப்டர் எப்படி வரும்?<br /> எதிர்பார்த்து பொசுங்குறோமே!<br /> <br /> அடிச்ச புயலோஞ்சி<br /> ஆறேழு நாளும் ஆச்சி<br /> இதுவரைக்கும் முதல்வரய்யா<br /> வரலேன்னு கசங்குறோமே!<br /> <br /> குடிக்கத் தண்ணியில்ல<br /> கொடுக்க ஒரு நாதியில்ல<br /> எதுக்கு ஓட்டளிச்சோம்?<br /> ஏமாந்து விசும்புறோமே!<br /> <br /> தடிச்ச வார்த்தைகள<br /> உடைச்சு மந்திரிசொல்ல<br /> அடிக்க ஓங்கும் கைய<br /> அளவோட நிறுத்துறோமே!<br /> <br /> உதவி செய்ய நெனைக்காம<br /> ஓடிவந்தும் பாக்காம<br /> கதவுகள மூடிக்கிட்ட<br /> கவருமென்ட்ட வெறுக்குறோமே!<br /> <br /> காலம் செஞ்ச கழுத்தறுப்ப<br /> கவலையோட சகிச்சிக்கிட்டு<br /> நூலறுந்த பட்டம்போல<br /> நொந்து ரோட்ட மறிக்கிறோமே!<br /> <br /> பசி நெருப்பில் வயிறிருக்க<br /> பதறிப்போய் உசிரிருக்க<br /> நிவாரணப் பொருள் கொடுக்க<br /> தெய்வத்தையும் அழைக்கிறோமே!<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong> யுகபாரதி</strong></span></p>