<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>`இ</strong></span>யற்கைச் சூழலில், சில நிமிடங்கள் இருந்தால், மன அழுத்தம் குறையும்’ என்கிறது உளவியல். ``அடுக்குமாடிக் குடியிருப்புகள், சின்னஞ்சிறு வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டின் உள்பகுதியில் குறுகிய இடமாக இருந்தாலும், அதில் `இண்டோர் பிளான்ட்ஸ்’ (Indoor Plants) வைப்பதன் மூலம் உடலுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்’’ என்கிறார் இண்டோர் பிளான்ட் டிசைனர் ஸ்ரீனிவாசன். </p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>1. </strong></span>அறையின் உள்ளே சோற்றுக் கற்றாழை வளர்த்தால் அது, காற்றிலுள்ள நச்சுத் தன்மையை தன்னுள் உட்கிரகித்துக்கொண்டு காற்றைச் சுத்தப்படுத்திவிடும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>2.</strong></span> மற்ற செடிகளைப்போல் இல்லாமல், தன்னுள்ளே இருக்கும் ஆக்ஸிஜனை வெளியேற்றக்கூடியது ஸ்நேக் பிளான்ட். படுக்கை அறையில் இந்தச் செடியை வைப்பதால், இரவில் தூக்கத்தின்போது மூச்சுத்திணறல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>3. </strong></span>படர்ந்த இலைகளைக்கொண்ட செடிகள், நம்மைப் புத்துணர்வுடன் செயல்படவைக்கும். பணியிடங்களில் இவற்றை வளர்த்தால், மன அழுத்தமின்றி வேலைகளை வேகமாகச் செய்ய முடியும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>4.</strong></span> செடிகள் வளர்ப்பதால், நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் சார்ந்த பிரச்னை இருப்பவர்கள், தீவிரமான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இண்டோர் பிளான்ட்ஸைப் பராமரிப்பதன் மூலம் அவற்றிலிருந்து எளிதில் விடுபடலாம்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>5. </strong></span>சத்தத்தை உட்கிரகிக்கும் சக்தி சில செடிகளுக்கு உண்டு. ஒலி மாசு நிறைந்த இடங்களில் வசிப்பவர்கள் வீட்டின் மூலைகளில் அளவில் பெரிய செடிகளை வளர்ப்பதன் மூலம் இந்த மாற்றத்தை உணரலாம்.<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>ஜெ.நிவேதா </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>`இ</strong></span>யற்கைச் சூழலில், சில நிமிடங்கள் இருந்தால், மன அழுத்தம் குறையும்’ என்கிறது உளவியல். ``அடுக்குமாடிக் குடியிருப்புகள், சின்னஞ்சிறு வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டின் உள்பகுதியில் குறுகிய இடமாக இருந்தாலும், அதில் `இண்டோர் பிளான்ட்ஸ்’ (Indoor Plants) வைப்பதன் மூலம் உடலுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்’’ என்கிறார் இண்டோர் பிளான்ட் டிசைனர் ஸ்ரீனிவாசன். </p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>1. </strong></span>அறையின் உள்ளே சோற்றுக் கற்றாழை வளர்த்தால் அது, காற்றிலுள்ள நச்சுத் தன்மையை தன்னுள் உட்கிரகித்துக்கொண்டு காற்றைச் சுத்தப்படுத்திவிடும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>2.</strong></span> மற்ற செடிகளைப்போல் இல்லாமல், தன்னுள்ளே இருக்கும் ஆக்ஸிஜனை வெளியேற்றக்கூடியது ஸ்நேக் பிளான்ட். படுக்கை அறையில் இந்தச் செடியை வைப்பதால், இரவில் தூக்கத்தின்போது மூச்சுத்திணறல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>3. </strong></span>படர்ந்த இலைகளைக்கொண்ட செடிகள், நம்மைப் புத்துணர்வுடன் செயல்படவைக்கும். பணியிடங்களில் இவற்றை வளர்த்தால், மன அழுத்தமின்றி வேலைகளை வேகமாகச் செய்ய முடியும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>4.</strong></span> செடிகள் வளர்ப்பதால், நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் சார்ந்த பிரச்னை இருப்பவர்கள், தீவிரமான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இண்டோர் பிளான்ட்ஸைப் பராமரிப்பதன் மூலம் அவற்றிலிருந்து எளிதில் விடுபடலாம்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>5. </strong></span>சத்தத்தை உட்கிரகிக்கும் சக்தி சில செடிகளுக்கு உண்டு. ஒலி மாசு நிறைந்த இடங்களில் வசிப்பவர்கள் வீட்டின் மூலைகளில் அளவில் பெரிய செடிகளை வளர்ப்பதன் மூலம் இந்த மாற்றத்தை உணரலாம்.<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>ஜெ.நிவேதா </strong></span></p>