<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சி</strong></span>லருக்கு, அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் இருக்கும். அதனால் உடல் பருமன், செரிமானக் கோளாறு, ஊட்டச்சத்துக் குறைபாடு எனப் பல பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். இவர்கள், உணவின் அளவைக் குறைத்துக்கொள்வதற்கான ஆலோசனைகளைத் தருகிறார் டயட்டீஷியன் அஸ்மா பிரவீன். </p>.<p>ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் 100 முதல் 200 மி.லி தண்ணீர் அருந்த வேண்டும். இதனால், உடல் வறட்சி தடுக்கப்படும். பசி உணர்வு கட்டுப்படுத்தப்படும். எத்தகைய சூழல் பசி உணர்வைத் தூண்டுகிறது என்பதைக் கண்டறிந்து, அதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.</p>.<p>வெவ்வேறு நிறம்கொண்ட காய்கறிகள், பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு, மூன்று முதல் நான்கு நிறங்கள்கொண்ட காய்கறிகளைச் சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பசி உணர்வைக் குறைக்கும். காய்கறிகளைச் சமைக்காமல் சாப்பிட்டால், நார்ச்சத்து அதிகம் கிடைக்கும்.</p>.<p>உணவின் அளவைச் சிறிது சிறிதாகப் பிரித்து, ஐந்து முதல் ஆறு தடவை சாப்பிடலாம். அப்படிப் பிரித்துச் சாப்பிடும் உணவில், நட்ஸ், கடலைமிட்டாய் எனப் புரதம் நிறைந்த ஆரோக்கியமான ‘ஸ்நாக்ஸ்’ இடம்பெறுவது சிறப்பு.</p>.<p>தினமும் என்ன சாப்பிடுகிறோம் என்பதை எழுதிவையுங்கள். உணவின் அளவையும் சாப்பிடும் வேகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளுங்கள். உணவின் அளவைக் குறைக்க, சிறிய தட்டில் சாப்பிடலாம்.</p>.<p>சாப்பிடும்போது உணவின் மீது மட்டுமே கவனம் இருக்க வேண்டும். டி.வி., ஸ்மார்ட்போன், லேப்டாப் என எந்த டிஜிட்டல் திரையையும் பார்க்கக் கூடாது. சாப்பாட்டின் நடுவே வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டால், யோசிக்காமல் நிறுத்திவிடுங்கள். <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஜெ.நிவேதா <br /> </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சி</strong></span>லருக்கு, அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் இருக்கும். அதனால் உடல் பருமன், செரிமானக் கோளாறு, ஊட்டச்சத்துக் குறைபாடு எனப் பல பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். இவர்கள், உணவின் அளவைக் குறைத்துக்கொள்வதற்கான ஆலோசனைகளைத் தருகிறார் டயட்டீஷியன் அஸ்மா பிரவீன். </p>.<p>ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் 100 முதல் 200 மி.லி தண்ணீர் அருந்த வேண்டும். இதனால், உடல் வறட்சி தடுக்கப்படும். பசி உணர்வு கட்டுப்படுத்தப்படும். எத்தகைய சூழல் பசி உணர்வைத் தூண்டுகிறது என்பதைக் கண்டறிந்து, அதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.</p>.<p>வெவ்வேறு நிறம்கொண்ட காய்கறிகள், பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு, மூன்று முதல் நான்கு நிறங்கள்கொண்ட காய்கறிகளைச் சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பசி உணர்வைக் குறைக்கும். காய்கறிகளைச் சமைக்காமல் சாப்பிட்டால், நார்ச்சத்து அதிகம் கிடைக்கும்.</p>.<p>உணவின் அளவைச் சிறிது சிறிதாகப் பிரித்து, ஐந்து முதல் ஆறு தடவை சாப்பிடலாம். அப்படிப் பிரித்துச் சாப்பிடும் உணவில், நட்ஸ், கடலைமிட்டாய் எனப் புரதம் நிறைந்த ஆரோக்கியமான ‘ஸ்நாக்ஸ்’ இடம்பெறுவது சிறப்பு.</p>.<p>தினமும் என்ன சாப்பிடுகிறோம் என்பதை எழுதிவையுங்கள். உணவின் அளவையும் சாப்பிடும் வேகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளுங்கள். உணவின் அளவைக் குறைக்க, சிறிய தட்டில் சாப்பிடலாம்.</p>.<p>சாப்பிடும்போது உணவின் மீது மட்டுமே கவனம் இருக்க வேண்டும். டி.வி., ஸ்மார்ட்போன், லேப்டாப் என எந்த டிஜிட்டல் திரையையும் பார்க்கக் கூடாது. சாப்பாட்டின் நடுவே வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டால், யோசிக்காமல் நிறுத்திவிடுங்கள். <br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>ஜெ.நிவேதா <br /> </strong></span></p>