

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் மணி, தன்னுடைய ஊரான வடதொரசலூர் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''தாயின் பெருமையைப் பேசுவதற்கு நிகரானதுதான் பிறந்த ஊரைப் பற்றிப் பேசுவதும். கள்ளக்குறிச்சி தாலுகாவில் உள்ள கிராமங்களில் ஒன்றான வடதொரசலூர்தான் என் ஊர். ஊருக்கு வடக்கே பதினைந்தாவது கிலோ மீட்டரில் மணிமுத்தானை அணையையும் தெற்கே முப்பது கிலோ மீட்டரில் கோமுகி அணையையும் கொண்டதுதான் எங்கள் கிராமம். பெரும்பாலும் குடிசை வீடுகள் நிரம்பியது. ஆனால், இப்போது கல் வீடுகள் மட்டும் அல்லாது அரசாங்கத்தின் தொகுப்பு வீடுகளாலும் உருமாறி இருக்கிறது வடதொரசலூர்.
##~## |


அப்போது எல்லாம் எங்கள் ஊருக்குப் பேருந்து வசதிக் கிடையாது. அருகில் இருக்கும் பெரிய ஊரான தியாகதுருகத்துக்குப் போக வேண்டுமானால் நடந்தேதான் செல்ல வேண்டும். இரண்டு பக்கமும் அடர்த்தியான கம்பங்காடுகள். போதாதற்கு மின்சாரமும் இருக்காது என்பதால் இரவு நேரத்தில் அந்த வழியில் நடந்து வர முடியாது. சைக்கிள் வைத்திருப்பவர்கள் மட்டுமே வருவார்கள். அப்போது மிகவும் வசதியானவர்கள் மட்டுமே சைக்கிள் வைத்து இருப்பார்கள். பாண்டிச்சேரிக்கு வந்து சைக்கிள் வாங்குவதற்கு

2,500 ஆகும் என்பதால் மிகக் குறைவான சைக்கிள்களே எங்கள் ஊரில் இருக்கும். ஆனால், இப்போது கணக்கில் அடங்க முடியாத அளவுக்கு இரு சக்கர வாகனங்கள், ஏன் கார்களே கூட எங்கள் ஊரில் இருக்கின்றன.
அப்போது மின் விளக்குகள் இல்லாமல், வெறும் கம்பங்காடுகளாக இருந்த தியாகதுருகம் சாலை இப்போது விவசாயத்தை வீழ்த்திவிட்டு வீடுகளாக மாறி, மின் விளக்குகளால் ஒளிர்கின்றது. இப்போது எங்கள் ஊரில் பேருந்து, மின்சாரம், கல்வீடுகள் அனைத்தும் இருக்கின்றன. ஆனால், மண் வாசனையோடு சேர்ந்துவரும் மணிலா வாசனையையும், பனம்பழ வாசனை யையும், சோலை வனங்களாகக் காட்சி அளித்த கம்மங்காடுகளையும்தான் தேடிக் கொண்டு இருக்கிறோம்!''
- ஜெ.முருகன்
படங்கள்: எஸ்.தேவராஜன்