<p style="text-align: center"><span style="font-size: small"><span style="color: #ff6600"><strong>எல்லாம் நன்மைக்கே! </strong></span></span></p>.<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>நா</strong>கூர் அனீபாவின் நா கூர்; ஆம்! அவரது தமிழ் உச்சரிப்பு அவ்வளவு ஷார்ப்!</p>.<p>அவர் பாடிய ஓர் அற்புதமான பாட்டு; இன்னும் ஈரப் பசையோடு இருக்கிறது.</p>.<p>'இறைவனிடம் கையேந்துங்கள்; அவன்</p>.<p>இல்லையென்று சொல்லுவதில்லை!’</p>.<p>இரக்கும் கைகளுக்கு இல்லையென்னாது இடுபவன் இறைவன்தான்; ஆனால், எப்போது சோறூட்டினால் சேயின் குடல் செரிக்கக்கூடும் என்றுணர்ந்து ஊட்டுகின்ற- </p>.<p>ஓர் அனை அனைய அனை அவன்!</p>.<p><strong>நா</strong>கூரின் பாட்டுபோல், தாகூரின் பாட்டு ஒன்று கீதாஞ்சலியில்.</p>.<p>ஒரு பக்தன் கேட்கிறான் தாகூரை, 'அய்யா! கடவுள் கருணைக் கடல் என்கிறீரே! அவன் கருணை எனக்குக் கொஞ்சம்தானே கிட்டியது!’ என்று.</p>.<p>அதற்குத் தாகூர், 'அவன் கருணைக் கடல் என்பதில் அய்யமில்லை; ஆனால், அதனின்று மொண்டுவர நீ கொண்டுவரும் பாத்திரத்தைப் பொறுத்தது அது!’ என்று, பக்தனின் பக்குவமின்மையைச் சுட்டுகிறார்!</p>.<p><strong>ந</strong>டக்கும் என்று நினைத்தது, நடக்காது போகுமாயின், உன் நினைப்பை ஈசன் நிராகரிக்கிறான் - அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.</p>.<p> 'வாளால் அரிந்து சுடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொளும் நோயாளன்’ போல் இரு -</p>.<p> 'எல்லாம் நன்மைக்கே!’ என்று.</p>.<p><strong>பெ</strong>ரிய கம்பெனி; பெரிய படம்; அதற்கு இசையமைக்கும் வாய்ப்புகிட்டியது அந்த இளைஞருக்கு.</p>.<p>வாழ்க்கையில் வெளிச்சம் வந்துவிட்டது என்ற சந்தோஷத்தில் அற்புதமாக இசை அமைத்தார். விடிந்தால் பூஜை ரிகார்டிங்!</p>.<p>முதல் நாள் இரவு மாற்றப்பட்டார்; அஞ்சு ஆண்டுகளுக்குப் பின் அவர் வெற்றியைத் தொட்டபோது -</p>.<p>'எல்லாம் நன்மைக்கே’ என எண்ணிக்கொண்டார்!</p>.<p><strong>அ</strong>வர் வளரும் நடிகர்; ஒரு கார் விபத்தில் பயங்கரமாகச் சிக்கி, தஞ்சாவூர் ஆஸ்பிடலில் தொண்ணூறு தையல்களோடு கிடந்தார். ஏற்கெனவே அவர் முகத்தில், அம்மைத் தழும்புகள் உண்டு.</p>.<p>இவ்வளவு பின்னடைவுகளோடு அவர் தன் எதிர்காலம்பற்றி என்ன எண்ண இருக்கிறது? அவர் சொன்னார் 'எல்லாம் நன்மைக்கே’ என்று தன் கண்களால் என்னிடம்; வாயெல்லாம் ப்ளாஸ்திரிகள்!</p>.<p>சொன்னபடி திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார்!</p>.<p><strong>சா</strong>ர்மினார் சிகரெட்டே எனக்கு சாப்பாடாக இருந்த காலம். எழுத்தாளர் திரு.ம.ரா. அவர்களால், ஒரு படத்தில் பாட்டெழுதும் வாய்ப்பு வந்தது - பாலைவனத்தில் ஒரு பசுஞ்சுனையைக் கண்டாற் போல்!</p>.<p>அரைகுறை மனதோடு அதை ஒலிப்பதிவு செய்தார் அந்தப் படத்தின் இசையமைப்பாளர். அவர் மிக மிகப் பிரபலமானவர்.</p>.<p>என் காதுபட, அவர் தயாரிப்பாளரிடம் 'எவன் எவனோ பாட்டெழுதறதா? உங்களுக்கெல்லாம் படம் ஓடணும்கிற எண்ணமே இல்லையா?’ என்று இரைந்தார்.</p>.<p>எனக்கது என் முகத்தில் எச்சில் துப்பியதுபோல் அப்போது இருந்தாலும் -</p>.<p>'எல்லாம் நன்மைக்கே’ என்று இருந்தேன்.</p>.<p>ஓரிரு வருடங்களில் நான் ஓஹோ என வளர்ந்தேன். ஒரே வருடத்தில் ஒன்பது எம்.ஜி.ஆர். படங்கள்.</p>.<p>அதில் ஒன்றுக்கு அந்த இசைஅமைப்பாளரோடு பணி செய்ய நேர்ந்தபோது, மறுத்துவிட்டேன்.</p>.<p>எம்.ஜி.ஆர். சமாதானம் செய்துகூட நான் ஏற்கவில்லை.</p>.<p>கடைசியில் அந்த இசையமைப்பாளர் என் கைகளைப் பற்றிக்கொண்டு நடந்ததை மறக்க வேண்டினார்.</p>.<p>அதன் பின் அவரிடம் ஆயிரம் பாடல்கள் எழுதினேன்!</p>.<p><strong>ஒ</strong>ரு ராஜாவுக்கு ஒரு மந்திரி. அந்த மந்திரி எது நடந்தாலும் 'எல்லாம் நன்மைக்கே’ என்பான்.</p>.<p>வார இறுதியில் வழக்கம் போல் - மன்னன் மந்திரியோடு வேட்டையாடப் புறப்படுகையில், தரை விரிப்பில் மன்னனுக்குக் கால் தடுக்கி நகம் பெயர்ந்து ரத்தம் கொட்டியது.</p>.<p>'எல்லாம் நன்மைக்கே’ என்றான் மந்திரி. சினம்கொண்ட மன்னன், சிறையில் அடைத்தான் மந்திரியை.</p>.<p>'எல்லாம் நன்மைக்கே’ என்று அப்பவும் சொல்லிவிட்டு, சிறை புகுந்தான் மந்திரி.</p>.<p>வேட்டைக்குத் தனியாகப் போன ராஜா, ஆதிவாசிகளிடம் சிக்க -</p>.<p>வன தேவதைக்கு மன்னனை நரபலி கொடுக்கத் தீர்மானித்தான் ஆதிவாசிகளின் தலைவன்!</p>.<p>அப்போது ஓர் ஆதிவாசி, 'தலைவா! இந்த ஆள் காலில் ஊனமுள்ளவன்; நம் குல வழக்கப்படி, ஊனமுள்ளவனை பலி கொடுக்கக் கூடாது!’ என்றான்.</p>.<p>'ஆமாம்’ என்று ஆதிவாசிகளின் தலைவன் மன்னனை விடுவித்து அனுப்பிவிட்டான்!</p>.<p>உயிர் பிழைத்து வந்த மன்னன், மந்திரியைச் சிறையிலிருந்து விடுவித்து மன்னிப்பு கேட்டான்.</p>.<p>பிறகு, மந்திரியிடம், 'மந்திரியே! உன்னை நான் சிறையில் அடைத்த போது, அப்போதும் 'எல்லாம் நன்மைக்கே’ என்றாயே, அது ஏன்?’ என்று மன்னன் வினாவினான்.</p>.<p>மந்திரி சொன்னான். 'அரசே! என்னை நீங்கள் சிறையில் அடைக்காவிட்டால், நானும் உங்களுடன் வேட்டைக்கு வந்திருப்பேன். ஊனமுள்ள உங்களை விட்டுவிட்டு, ஊனமில்லாத என்னை -</p>.<p>ஆதிவாசிகள் நரபலி கொடுத்திருப்பார்களே!’</p>.<p><strong>'எ</strong>ல்லாம் நன்மைக்கே’ என்றிருந்ததால்தான்...</p>.<p>அய்ந்தாண்டுகள் கழித்து இசைஅமைப்பாளராகி - திசைகளை வென்றார் இளையராஜா!</p>.<p>அஃதே போல் - தொண்ணூறு தையல்களோடு படுத்திருந்தவர் பிழைத்தெழுந்து -</p>.<p>இல்லாத படமில்லை என்று நிறைந்து நின்றார் நாகேஷ்!</p>.<p>அடியேனை ஆரம்பத்தில் அலட்சியப்படுத்திப் பின் ஆரத் தழுவியவர் - கே.வி.மகாதேவன்!</p>.<p><span style="color: #0000ff"><strong> - சுழலும்...</strong></span></p>.<p><span style="color: #800080"><strong>ஒவியம் :மணி, படம்: கே. ராஜசேகரன்</strong></span></p>
<p style="text-align: center"><span style="font-size: small"><span style="color: #ff6600"><strong>எல்லாம் நன்மைக்கே! </strong></span></span></p>.<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>நா</strong>கூர் அனீபாவின் நா கூர்; ஆம்! அவரது தமிழ் உச்சரிப்பு அவ்வளவு ஷார்ப்!</p>.<p>அவர் பாடிய ஓர் அற்புதமான பாட்டு; இன்னும் ஈரப் பசையோடு இருக்கிறது.</p>.<p>'இறைவனிடம் கையேந்துங்கள்; அவன்</p>.<p>இல்லையென்று சொல்லுவதில்லை!’</p>.<p>இரக்கும் கைகளுக்கு இல்லையென்னாது இடுபவன் இறைவன்தான்; ஆனால், எப்போது சோறூட்டினால் சேயின் குடல் செரிக்கக்கூடும் என்றுணர்ந்து ஊட்டுகின்ற- </p>.<p>ஓர் அனை அனைய அனை அவன்!</p>.<p><strong>நா</strong>கூரின் பாட்டுபோல், தாகூரின் பாட்டு ஒன்று கீதாஞ்சலியில்.</p>.<p>ஒரு பக்தன் கேட்கிறான் தாகூரை, 'அய்யா! கடவுள் கருணைக் கடல் என்கிறீரே! அவன் கருணை எனக்குக் கொஞ்சம்தானே கிட்டியது!’ என்று.</p>.<p>அதற்குத் தாகூர், 'அவன் கருணைக் கடல் என்பதில் அய்யமில்லை; ஆனால், அதனின்று மொண்டுவர நீ கொண்டுவரும் பாத்திரத்தைப் பொறுத்தது அது!’ என்று, பக்தனின் பக்குவமின்மையைச் சுட்டுகிறார்!</p>.<p><strong>ந</strong>டக்கும் என்று நினைத்தது, நடக்காது போகுமாயின், உன் நினைப்பை ஈசன் நிராகரிக்கிறான் - அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.</p>.<p> 'வாளால் அரிந்து சுடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொளும் நோயாளன்’ போல் இரு -</p>.<p> 'எல்லாம் நன்மைக்கே!’ என்று.</p>.<p><strong>பெ</strong>ரிய கம்பெனி; பெரிய படம்; அதற்கு இசையமைக்கும் வாய்ப்புகிட்டியது அந்த இளைஞருக்கு.</p>.<p>வாழ்க்கையில் வெளிச்சம் வந்துவிட்டது என்ற சந்தோஷத்தில் அற்புதமாக இசை அமைத்தார். விடிந்தால் பூஜை ரிகார்டிங்!</p>.<p>முதல் நாள் இரவு மாற்றப்பட்டார்; அஞ்சு ஆண்டுகளுக்குப் பின் அவர் வெற்றியைத் தொட்டபோது -</p>.<p>'எல்லாம் நன்மைக்கே’ என எண்ணிக்கொண்டார்!</p>.<p><strong>அ</strong>வர் வளரும் நடிகர்; ஒரு கார் விபத்தில் பயங்கரமாகச் சிக்கி, தஞ்சாவூர் ஆஸ்பிடலில் தொண்ணூறு தையல்களோடு கிடந்தார். ஏற்கெனவே அவர் முகத்தில், அம்மைத் தழும்புகள் உண்டு.</p>.<p>இவ்வளவு பின்னடைவுகளோடு அவர் தன் எதிர்காலம்பற்றி என்ன எண்ண இருக்கிறது? அவர் சொன்னார் 'எல்லாம் நன்மைக்கே’ என்று தன் கண்களால் என்னிடம்; வாயெல்லாம் ப்ளாஸ்திரிகள்!</p>.<p>சொன்னபடி திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார்!</p>.<p><strong>சா</strong>ர்மினார் சிகரெட்டே எனக்கு சாப்பாடாக இருந்த காலம். எழுத்தாளர் திரு.ம.ரா. அவர்களால், ஒரு படத்தில் பாட்டெழுதும் வாய்ப்பு வந்தது - பாலைவனத்தில் ஒரு பசுஞ்சுனையைக் கண்டாற் போல்!</p>.<p>அரைகுறை மனதோடு அதை ஒலிப்பதிவு செய்தார் அந்தப் படத்தின் இசையமைப்பாளர். அவர் மிக மிகப் பிரபலமானவர்.</p>.<p>என் காதுபட, அவர் தயாரிப்பாளரிடம் 'எவன் எவனோ பாட்டெழுதறதா? உங்களுக்கெல்லாம் படம் ஓடணும்கிற எண்ணமே இல்லையா?’ என்று இரைந்தார்.</p>.<p>எனக்கது என் முகத்தில் எச்சில் துப்பியதுபோல் அப்போது இருந்தாலும் -</p>.<p>'எல்லாம் நன்மைக்கே’ என்று இருந்தேன்.</p>.<p>ஓரிரு வருடங்களில் நான் ஓஹோ என வளர்ந்தேன். ஒரே வருடத்தில் ஒன்பது எம்.ஜி.ஆர். படங்கள்.</p>.<p>அதில் ஒன்றுக்கு அந்த இசைஅமைப்பாளரோடு பணி செய்ய நேர்ந்தபோது, மறுத்துவிட்டேன்.</p>.<p>எம்.ஜி.ஆர். சமாதானம் செய்துகூட நான் ஏற்கவில்லை.</p>.<p>கடைசியில் அந்த இசையமைப்பாளர் என் கைகளைப் பற்றிக்கொண்டு நடந்ததை மறக்க வேண்டினார்.</p>.<p>அதன் பின் அவரிடம் ஆயிரம் பாடல்கள் எழுதினேன்!</p>.<p><strong>ஒ</strong>ரு ராஜாவுக்கு ஒரு மந்திரி. அந்த மந்திரி எது நடந்தாலும் 'எல்லாம் நன்மைக்கே’ என்பான்.</p>.<p>வார இறுதியில் வழக்கம் போல் - மன்னன் மந்திரியோடு வேட்டையாடப் புறப்படுகையில், தரை விரிப்பில் மன்னனுக்குக் கால் தடுக்கி நகம் பெயர்ந்து ரத்தம் கொட்டியது.</p>.<p>'எல்லாம் நன்மைக்கே’ என்றான் மந்திரி. சினம்கொண்ட மன்னன், சிறையில் அடைத்தான் மந்திரியை.</p>.<p>'எல்லாம் நன்மைக்கே’ என்று அப்பவும் சொல்லிவிட்டு, சிறை புகுந்தான் மந்திரி.</p>.<p>வேட்டைக்குத் தனியாகப் போன ராஜா, ஆதிவாசிகளிடம் சிக்க -</p>.<p>வன தேவதைக்கு மன்னனை நரபலி கொடுக்கத் தீர்மானித்தான் ஆதிவாசிகளின் தலைவன்!</p>.<p>அப்போது ஓர் ஆதிவாசி, 'தலைவா! இந்த ஆள் காலில் ஊனமுள்ளவன்; நம் குல வழக்கப்படி, ஊனமுள்ளவனை பலி கொடுக்கக் கூடாது!’ என்றான்.</p>.<p>'ஆமாம்’ என்று ஆதிவாசிகளின் தலைவன் மன்னனை விடுவித்து அனுப்பிவிட்டான்!</p>.<p>உயிர் பிழைத்து வந்த மன்னன், மந்திரியைச் சிறையிலிருந்து விடுவித்து மன்னிப்பு கேட்டான்.</p>.<p>பிறகு, மந்திரியிடம், 'மந்திரியே! உன்னை நான் சிறையில் அடைத்த போது, அப்போதும் 'எல்லாம் நன்மைக்கே’ என்றாயே, அது ஏன்?’ என்று மன்னன் வினாவினான்.</p>.<p>மந்திரி சொன்னான். 'அரசே! என்னை நீங்கள் சிறையில் அடைக்காவிட்டால், நானும் உங்களுடன் வேட்டைக்கு வந்திருப்பேன். ஊனமுள்ள உங்களை விட்டுவிட்டு, ஊனமில்லாத என்னை -</p>.<p>ஆதிவாசிகள் நரபலி கொடுத்திருப்பார்களே!’</p>.<p><strong>'எ</strong>ல்லாம் நன்மைக்கே’ என்றிருந்ததால்தான்...</p>.<p>அய்ந்தாண்டுகள் கழித்து இசைஅமைப்பாளராகி - திசைகளை வென்றார் இளையராஜா!</p>.<p>அஃதே போல் - தொண்ணூறு தையல்களோடு படுத்திருந்தவர் பிழைத்தெழுந்து -</p>.<p>இல்லாத படமில்லை என்று நிறைந்து நின்றார் நாகேஷ்!</p>.<p>அடியேனை ஆரம்பத்தில் அலட்சியப்படுத்திப் பின் ஆரத் தழுவியவர் - கே.வி.மகாதேவன்!</p>.<p><span style="color: #0000ff"><strong> - சுழலும்...</strong></span></p>.<p><span style="color: #800080"><strong>ஒவியம் :மணி, படம்: கே. ராஜசேகரன்</strong></span></p>