<p style="text-align: center"><span style="color: #ff0000"><strong>எண்ணங்களால்தான் எல்லாம்! </strong></span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>'அ</strong>க்கா! அக்கா!’ என்றுதான் நான் அந்த அம்மாவை அழைப்பேன்; அம்மா மண்டபத்தில் உள்ள அவர்கள் வீட்டுக்கு நான் அடிக்கடி போவேன்.</p>.<p>அந்த அம்மாவினுடைய தம்பி திரு. துரையும் நானும் அந்த நாளில் ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலில் ஒன்றாகப் படித்துக்கொண்டு இருந்தோம்.</p>.<p>'வாலி! என் கஷ்டத்துக்கு விமோசனமே கிடையாதா? யாராவது உனக்குத் தெரிஞ்ச பெரிய ஜோசியர் இருந்தா கேட்டுச் சொல்லேன்!’</p>.<p>- என்று அந்த அக்கா அழாக்குறையாக அடிக்கடி என்னிடம் சொல்லுவார்.</p>.<p>விஷயம் இதுதான். அந்த அக்காவினுடைய கணவர், செய்யாத குற்றத்துக்காக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.</p>.<p>அது வெள்ளைக்காரர்கள் நாடாண்ட காலம். அப்பீல் மேல் அப்பீல் செய்து - வழக்கு அப்போது லண்டன் ப்ரிவி கவுன் சிலில் நடந்துகொண்டிருந்தது.</p>.<p>அதன் தீர்ப்பை எதிர்பார்த்துத்தான், என் நண்பன் துரையின் அக்கா துடித்துக்கொண்டிருந்தார்.</p>.<p>ஒருநாள் நான், 'அக்கா! நான் ஒரு முக்கியமான பெரியவரைக் கேட்டேன்; நீங்க சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு ஒரு மண்டலம் - அதாவது நாற்பத்தெட்டு நாள் எள் விளக்குப் போட்டு, தினம் பன்னிரண்டு பிரதட்சணம் பண்ணா -</p>.<p>உங்க வீட்டுக்காரர் விடுதலை ஆயிடுவார்னு சொல்றார்! ஆனா, இந்தப் பிரார்த்தனையிலே உங்க எண்ணம் உறுதியாயிருக்கணும்; சந்தேகப் பட்டு, சக்கரத்தாழ்வாரைச் சுத்திப் பிரயோஜனமில்லே!’ என்று துரையின் அக்காவிடம் சொன்னேன்.</p>.<p>அந்த அம்மையார், ஒரு மண்டலம் முழு நம்பிக்கைவைத்து - நல்லதே நடக்கும் என்ற எண்ணத்தில், உறுதியாயிருந்து அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றினார்.</p>.<p>அடுத்த வாரமே, அந்த அம்மாவின் வீட்டுக் காரர், வழக்கிலிருந்து விடுபட்டு விடுதலை ஆனார்!</p>.<p><span style="color: #ff6600"><em>'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்<br /> திண்ணியர் ஆகப் பெறின்’ </em></span></p>.<p>- என்கிறது வள்ளுவம்; வள்ளுவம் பொய்க்காதென்பதை உள்ளுவம்!</p>.<p><strong>'மு</strong>ருகனுக்கு ஆறுமுகம்;</p>.<p>மனிதனுக்கு நூறுமுகம்!’</p>.<p>- இது, இளையராஜா இசையில் 'எதிர்க் காற்று’ எனும் படத்தில் நான் எழுதியது.</p>.<p>ஆயினும்,</p>.<p>ஆறுமுகம் தீர்மானிப்பதல்ல</p>.<p>நூறுமுகம் கொண்ட மனிதனின் -</p>.<p>ஏறுமுகம் இறங்குமுகம் இரண்டினையும்!</p>.<p>அவனவன் ஏற்றமும் இறக்கமும் அவனவன் எண்ணத்தின் பாற்பட்டது. விதைத்தது விளைகிறது. 'விரையன்று போட்டால் சுரையன்று முளைக்குமா என்ன?’ என்று இன்றளவும் ஒரு சொலவடை வழக்கில் இருக்கிறது!</p>.<p><strong>தா</strong>ய் ஈன்று புறந்தருகிறாள்; தந்தை அச் சேயை ஆளாக்கி அறிவு புகட்டுகிறான்.</p>.<p>ஆளாக்குதலும் அறிவு புகட்டுதலும் ஓர் அப்பன் இல்லாமல் இல்லைதான்!</p>.<p>ஆனால், ஆளானவன் அவ்வறிவினைக்கொண்டு ஆற்றுகின்ற நல்லது கெட்டதுக்கு - அப்பன் என்னணம் காரணமாவான்?</p>.<p>சாமி -</p>.<p>சர்வசாட்சியாக நிற்கும்; உன் சந்தோஷத்திற்கும் சங்கடங்களுக்கும், உன் செயல்களே காரணம். செயல்கள் எண்ணங்களின் வெளிப்பாடே!</p>.<p>ஒரு செயல் தீங்கு விளைவிக்குமாயின், அந்தச் செயலுக்கான தண்டனை என்னவோ - அதே அளவு இல்லாவிடினும் அந்தச் செய லுக்கு மூலமாய் விளங்கிய எண்ணத்திற்கும் உண்டு!</p>.<p><strong>'ச</strong>க்கரவர்த்தித் திருமகள்’ படப்பிடிப்பு பார்க்க -</p>.<p>நடிகர் திரு.வி.கோபாலகிருஷ்ணனோடு சென்றேன்; அப்போது நான் சினிமாவில் நுழைய முயற்சித்துக்கொண்டிருந்த காலம்!</p>.<p>'கலைவாணர் என்.எஸ்.கே. மேக்கப் ரூமில் இருக்கிறார்; பாக்கலாம் வாங்க, வாலி!’ என்று கோபி அழைத்தார்.</p>.<p>அப்போது நான் கோபியிடம் ஒரு சந்தேகத்தை எழுப்பினேன்.</p>.<p>'கோபி! கலைவாணரோட மச்சானும் நானும் க்ளாஸ்மேட்ஸ்! கலைவாணரை ஸ்ரீரங்கத்திலேயே ஓரிருமுறை சந்திச்சிருக்கேன். அது இருக்கட்டும். எனக்குத் தெரிஞ்சு, கலைவாணர் ஒரு நிஜமான வள்ளல். ஸ்ரீரங்கம் வர்றபோதெல்லாம் - எவ்வளவோ பேருக்கு எவ்வளவோ உதவியை அவர் செஞ்சிருக்கிறதை நான் பாத்திருக்கேன்’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையில் 'அது, எனக்கும் தெரியும், வாலி! கலைவாணரை, ஒரு கர்ணன்னு சொன்னா - Nobody will object to it! அது சரி; அதுக்கென்ன இப்போ?’ என்று கோபாலகிருஷ்ணன் இடைமறித்து வினவினார்.</p>.<p>''அதுக்கில்லே, கோபி! இரக்க சிந்தனை எவனுக்கு இருக்கோ - அவன்தான் ஒரு வள்ளலா இருப்பான்! ஒரு பழம்பாடல் என்ன சொல்றது தெரியுமா?</p>.<p><span style="color: #003366"><em>'தாவென் றொருவர் வந்து<br /> தன் வறுமை சொல்லுமுன் - இந்<br /> தாவென்று ஈவதுதான்<br /> தருமம்; அஃதல்லால்<br /> கோவென்றும் குருவென்றும்<br /> தேவென்றும் புகழ்ந்த பின்னால் -<br /> கொடுப்பதெல்லாம் வெறும்<br /> விளம்பரக் கருமம்!’ </em></span></p>.<p>- இந்தப் பாட்டுக்கு உரையாக இருக்கிறவர் என்.எஸ்.கே; இவ்வளவு இரக்க மனம் உள்ளவரு -</p>.<p>எப்படி ஒரு கொலையைச் செய்திருக்க முடியும்?''</p>.<p>- இப்படி நான் கேட்டவுடன், கோபி சிரித்துக்கொண்டே, என்னை கலைவாணர் ஒப்பனை செய்துகொண்டிருக்கும், அறைக்குள் அழைத்துப்போனார்.</p>.<p>கலைவாணரிடம், என்னை நான் ஸ்ரீரங்கத்துக்காரன் என்றும், அவரது மைத்துனனின் நண்பன் என்றும் சொன்னதும் -</p>.<p>என்னை அடையாளம் தெரிந்துகொண்டு, நலம் விசாரித்தார்.</p>.<p>திடீரென்று கோபி, கலைவாணரிடம் 'அண்ணே! வாலிக்கு ஒரு சந்தேகம்; இவ்வளவு இரக்க சித்தம் உள்ள நீங்க - ஒரு கொலையை எப்படிச் செய்திருக்க முடியும்னு என்கிட்ட கேக்கறாரு!’ என்றவுடன் கலைவாணர் சிரித்தார்.</p>.<p>''அந்தக் கொலைய, நான் செய்யல்லே! கொலை செய்யுற அளவுக்கு நான் கிராதகனா என்ன? பின்ன ஏன், சிறைவாசத்தை அனுப விச்சேன்னு நீங்க கேக்கலாம்! 'இந்த ஆளு, இல்லாததையும் பொல்லாததையும் நம்மைப் பத்திப் பத்திரிகையில எழுதுறானே; இதை, இப்படியே விடக் கூடாது!’ - அப்படீன்னு வெறுமனே, எல்லாருக்கும் வருகிற மாதிரி யான யதார்த்தமான கோபத்துல நெனச் சேன்! ஆனா, நான் நெனச்சதோட சரி; வேற எதும் பண்ணல்லே!</p>.<p>நெனச்சேன் பாத்தியா? அந்த எண்ணத் துக்குத்தான், சில காலம் சிறைவாசம்!</p>.<p>தீயதைச் செய்யாட்டியும், அதை எண்ணினாலும் அதுக்கும் ஓரளவு தண்டனை உண்டு! அதுக்காகத்தான் பெரியவங்க - 'நல்லதையே நினைடா பாவி!’ங்கறாங்க!''</p>.<p>- இப்படி ஒரு நீண்ட விரிவுரை நிகழ்த்தினார் கலைவாணர்!</p>.<p>தீங்கு ஒருவர்க்கு எண்ணினாலே - அது திருப்பி நம்மைத் தாக்கும் என்பதற்கு இன்னும் ஓர் உதாரணம்.</p>.<p>'படகோட்டி’ படத்துக்குப் பாட்டு எழுதும்போது அந்த டைரக்டர் வலது கையில் மட்டும், Gloves போட்டுக்கொண்டு வருவார்.</p>.<p>காரணம், அந்தக் கையில் தீக்காயத்தின் தழும்புகள்!</p>.<p>முன்பு ஒரு படப்பிடிப்பில், கதாநாயகி தீ வளையத்தினிடையே மாட்டுகிறாள்; கதாநாயகன் வந்து காப்பாற்றுவதாகக் காட்சி!</p>.<p>காட்சி ஷூட் பண்ணி முடிந்துவிட்டது; கதாநாயகி வெளி வர முடியாமல், தீ வளையம் கொழுந்துவிட்டு எரிய -</p>.<p>நடிகை பயத்தில் அலறுகிறார், ஏதோ கால்ஷீட் குளறுபடியை மனத்தில் வைத்துக்கொண்டு, 'நெருப்பு, அவளைக் கொஞ்சம் சுடட்டுமே!’ என்று எண்ணினார் அந்த டைரக்டர்.</p>.<p>ஆனால் கதாநாயகியை, படப்பிடிப்புக் குழுவினர், காயமின்றிக் காப்பாற்றிவிட்டனர்!</p>.<p><strong>ப</strong>ல ஆண்டுகள் சென்றுவிட்டன. ஒருநாள் வாயில் சிகரெட்டுடன் தன் காரில் பெட்ரோல் இருக்கிறதா என்று பெட்ரோல் டேங்க் மூடியை டைரக்டர் திறந்து பார்க்க -</p>.<p>சிகரெட்டில் இருந்து ஒரு சின்னத் தீப்பொறி பெட்ரோல் டேங்க்குக்குள் விழ -</p>.<p>'குபீ’ரென்று தீப்பிடித்து டைரக்டரின் வலக் கரம் மணிக்கட்டு வரை வெந்துபோயிற்று!</p>.<p>இன்னொருவரைத் தீ சுட வேண்டும் என எண்ணியதால் இந்தத் தண்டனை அவருக்குக் கிடைத்தது!</p>.<p>அன்னணம் எண்ணியவர் திரு.டி.பிரகாஷ் ராவ், தீ நடுவே மாட்டிய நடிகை திருமதி.சரோஜாதேவி, படம் - கலைஞர் உரையாடல் எழுதிய 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்!’</p>.<p>- இதை எனக்குச் சொன்னவர் எனைச் சினிமாவில் ஊக்குவித்த - ஆதரித்த - வாழ்வித்த - திரு.மா.லட்சுமணன் அவர்கள்!</p>.<p>ஆரம்பத்தில், சக்கரத்தாழ்வார் சந்நிதி யைச் சுற்றிக் கணவனைச் சிறையினின்றும் மீட்டவர் - திருமதி T.A.மதுரம்!</p>.<p><span style="color: #800080"><strong>- சுழலும்...</strong></span></p>
<p style="text-align: center"><span style="color: #ff0000"><strong>எண்ணங்களால்தான் எல்லாம்! </strong></span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>'அ</strong>க்கா! அக்கா!’ என்றுதான் நான் அந்த அம்மாவை அழைப்பேன்; அம்மா மண்டபத்தில் உள்ள அவர்கள் வீட்டுக்கு நான் அடிக்கடி போவேன்.</p>.<p>அந்த அம்மாவினுடைய தம்பி திரு. துரையும் நானும் அந்த நாளில் ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலில் ஒன்றாகப் படித்துக்கொண்டு இருந்தோம்.</p>.<p>'வாலி! என் கஷ்டத்துக்கு விமோசனமே கிடையாதா? யாராவது உனக்குத் தெரிஞ்ச பெரிய ஜோசியர் இருந்தா கேட்டுச் சொல்லேன்!’</p>.<p>- என்று அந்த அக்கா அழாக்குறையாக அடிக்கடி என்னிடம் சொல்லுவார்.</p>.<p>விஷயம் இதுதான். அந்த அக்காவினுடைய கணவர், செய்யாத குற்றத்துக்காக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.</p>.<p>அது வெள்ளைக்காரர்கள் நாடாண்ட காலம். அப்பீல் மேல் அப்பீல் செய்து - வழக்கு அப்போது லண்டன் ப்ரிவி கவுன் சிலில் நடந்துகொண்டிருந்தது.</p>.<p>அதன் தீர்ப்பை எதிர்பார்த்துத்தான், என் நண்பன் துரையின் அக்கா துடித்துக்கொண்டிருந்தார்.</p>.<p>ஒருநாள் நான், 'அக்கா! நான் ஒரு முக்கியமான பெரியவரைக் கேட்டேன்; நீங்க சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு ஒரு மண்டலம் - அதாவது நாற்பத்தெட்டு நாள் எள் விளக்குப் போட்டு, தினம் பன்னிரண்டு பிரதட்சணம் பண்ணா -</p>.<p>உங்க வீட்டுக்காரர் விடுதலை ஆயிடுவார்னு சொல்றார்! ஆனா, இந்தப் பிரார்த்தனையிலே உங்க எண்ணம் உறுதியாயிருக்கணும்; சந்தேகப் பட்டு, சக்கரத்தாழ்வாரைச் சுத்திப் பிரயோஜனமில்லே!’ என்று துரையின் அக்காவிடம் சொன்னேன்.</p>.<p>அந்த அம்மையார், ஒரு மண்டலம் முழு நம்பிக்கைவைத்து - நல்லதே நடக்கும் என்ற எண்ணத்தில், உறுதியாயிருந்து அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றினார்.</p>.<p>அடுத்த வாரமே, அந்த அம்மாவின் வீட்டுக் காரர், வழக்கிலிருந்து விடுபட்டு விடுதலை ஆனார்!</p>.<p><span style="color: #ff6600"><em>'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்<br /> திண்ணியர் ஆகப் பெறின்’ </em></span></p>.<p>- என்கிறது வள்ளுவம்; வள்ளுவம் பொய்க்காதென்பதை உள்ளுவம்!</p>.<p><strong>'மு</strong>ருகனுக்கு ஆறுமுகம்;</p>.<p>மனிதனுக்கு நூறுமுகம்!’</p>.<p>- இது, இளையராஜா இசையில் 'எதிர்க் காற்று’ எனும் படத்தில் நான் எழுதியது.</p>.<p>ஆயினும்,</p>.<p>ஆறுமுகம் தீர்மானிப்பதல்ல</p>.<p>நூறுமுகம் கொண்ட மனிதனின் -</p>.<p>ஏறுமுகம் இறங்குமுகம் இரண்டினையும்!</p>.<p>அவனவன் ஏற்றமும் இறக்கமும் அவனவன் எண்ணத்தின் பாற்பட்டது. விதைத்தது விளைகிறது. 'விரையன்று போட்டால் சுரையன்று முளைக்குமா என்ன?’ என்று இன்றளவும் ஒரு சொலவடை வழக்கில் இருக்கிறது!</p>.<p><strong>தா</strong>ய் ஈன்று புறந்தருகிறாள்; தந்தை அச் சேயை ஆளாக்கி அறிவு புகட்டுகிறான்.</p>.<p>ஆளாக்குதலும் அறிவு புகட்டுதலும் ஓர் அப்பன் இல்லாமல் இல்லைதான்!</p>.<p>ஆனால், ஆளானவன் அவ்வறிவினைக்கொண்டு ஆற்றுகின்ற நல்லது கெட்டதுக்கு - அப்பன் என்னணம் காரணமாவான்?</p>.<p>சாமி -</p>.<p>சர்வசாட்சியாக நிற்கும்; உன் சந்தோஷத்திற்கும் சங்கடங்களுக்கும், உன் செயல்களே காரணம். செயல்கள் எண்ணங்களின் வெளிப்பாடே!</p>.<p>ஒரு செயல் தீங்கு விளைவிக்குமாயின், அந்தச் செயலுக்கான தண்டனை என்னவோ - அதே அளவு இல்லாவிடினும் அந்தச் செய லுக்கு மூலமாய் விளங்கிய எண்ணத்திற்கும் உண்டு!</p>.<p><strong>'ச</strong>க்கரவர்த்தித் திருமகள்’ படப்பிடிப்பு பார்க்க -</p>.<p>நடிகர் திரு.வி.கோபாலகிருஷ்ணனோடு சென்றேன்; அப்போது நான் சினிமாவில் நுழைய முயற்சித்துக்கொண்டிருந்த காலம்!</p>.<p>'கலைவாணர் என்.எஸ்.கே. மேக்கப் ரூமில் இருக்கிறார்; பாக்கலாம் வாங்க, வாலி!’ என்று கோபி அழைத்தார்.</p>.<p>அப்போது நான் கோபியிடம் ஒரு சந்தேகத்தை எழுப்பினேன்.</p>.<p>'கோபி! கலைவாணரோட மச்சானும் நானும் க்ளாஸ்மேட்ஸ்! கலைவாணரை ஸ்ரீரங்கத்திலேயே ஓரிருமுறை சந்திச்சிருக்கேன். அது இருக்கட்டும். எனக்குத் தெரிஞ்சு, கலைவாணர் ஒரு நிஜமான வள்ளல். ஸ்ரீரங்கம் வர்றபோதெல்லாம் - எவ்வளவோ பேருக்கு எவ்வளவோ உதவியை அவர் செஞ்சிருக்கிறதை நான் பாத்திருக்கேன்’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையில் 'அது, எனக்கும் தெரியும், வாலி! கலைவாணரை, ஒரு கர்ணன்னு சொன்னா - Nobody will object to it! அது சரி; அதுக்கென்ன இப்போ?’ என்று கோபாலகிருஷ்ணன் இடைமறித்து வினவினார்.</p>.<p>''அதுக்கில்லே, கோபி! இரக்க சிந்தனை எவனுக்கு இருக்கோ - அவன்தான் ஒரு வள்ளலா இருப்பான்! ஒரு பழம்பாடல் என்ன சொல்றது தெரியுமா?</p>.<p><span style="color: #003366"><em>'தாவென் றொருவர் வந்து<br /> தன் வறுமை சொல்லுமுன் - இந்<br /> தாவென்று ஈவதுதான்<br /> தருமம்; அஃதல்லால்<br /> கோவென்றும் குருவென்றும்<br /> தேவென்றும் புகழ்ந்த பின்னால் -<br /> கொடுப்பதெல்லாம் வெறும்<br /> விளம்பரக் கருமம்!’ </em></span></p>.<p>- இந்தப் பாட்டுக்கு உரையாக இருக்கிறவர் என்.எஸ்.கே; இவ்வளவு இரக்க மனம் உள்ளவரு -</p>.<p>எப்படி ஒரு கொலையைச் செய்திருக்க முடியும்?''</p>.<p>- இப்படி நான் கேட்டவுடன், கோபி சிரித்துக்கொண்டே, என்னை கலைவாணர் ஒப்பனை செய்துகொண்டிருக்கும், அறைக்குள் அழைத்துப்போனார்.</p>.<p>கலைவாணரிடம், என்னை நான் ஸ்ரீரங்கத்துக்காரன் என்றும், அவரது மைத்துனனின் நண்பன் என்றும் சொன்னதும் -</p>.<p>என்னை அடையாளம் தெரிந்துகொண்டு, நலம் விசாரித்தார்.</p>.<p>திடீரென்று கோபி, கலைவாணரிடம் 'அண்ணே! வாலிக்கு ஒரு சந்தேகம்; இவ்வளவு இரக்க சித்தம் உள்ள நீங்க - ஒரு கொலையை எப்படிச் செய்திருக்க முடியும்னு என்கிட்ட கேக்கறாரு!’ என்றவுடன் கலைவாணர் சிரித்தார்.</p>.<p>''அந்தக் கொலைய, நான் செய்யல்லே! கொலை செய்யுற அளவுக்கு நான் கிராதகனா என்ன? பின்ன ஏன், சிறைவாசத்தை அனுப விச்சேன்னு நீங்க கேக்கலாம்! 'இந்த ஆளு, இல்லாததையும் பொல்லாததையும் நம்மைப் பத்திப் பத்திரிகையில எழுதுறானே; இதை, இப்படியே விடக் கூடாது!’ - அப்படீன்னு வெறுமனே, எல்லாருக்கும் வருகிற மாதிரி யான யதார்த்தமான கோபத்துல நெனச் சேன்! ஆனா, நான் நெனச்சதோட சரி; வேற எதும் பண்ணல்லே!</p>.<p>நெனச்சேன் பாத்தியா? அந்த எண்ணத் துக்குத்தான், சில காலம் சிறைவாசம்!</p>.<p>தீயதைச் செய்யாட்டியும், அதை எண்ணினாலும் அதுக்கும் ஓரளவு தண்டனை உண்டு! அதுக்காகத்தான் பெரியவங்க - 'நல்லதையே நினைடா பாவி!’ங்கறாங்க!''</p>.<p>- இப்படி ஒரு நீண்ட விரிவுரை நிகழ்த்தினார் கலைவாணர்!</p>.<p>தீங்கு ஒருவர்க்கு எண்ணினாலே - அது திருப்பி நம்மைத் தாக்கும் என்பதற்கு இன்னும் ஓர் உதாரணம்.</p>.<p>'படகோட்டி’ படத்துக்குப் பாட்டு எழுதும்போது அந்த டைரக்டர் வலது கையில் மட்டும், Gloves போட்டுக்கொண்டு வருவார்.</p>.<p>காரணம், அந்தக் கையில் தீக்காயத்தின் தழும்புகள்!</p>.<p>முன்பு ஒரு படப்பிடிப்பில், கதாநாயகி தீ வளையத்தினிடையே மாட்டுகிறாள்; கதாநாயகன் வந்து காப்பாற்றுவதாகக் காட்சி!</p>.<p>காட்சி ஷூட் பண்ணி முடிந்துவிட்டது; கதாநாயகி வெளி வர முடியாமல், தீ வளையம் கொழுந்துவிட்டு எரிய -</p>.<p>நடிகை பயத்தில் அலறுகிறார், ஏதோ கால்ஷீட் குளறுபடியை மனத்தில் வைத்துக்கொண்டு, 'நெருப்பு, அவளைக் கொஞ்சம் சுடட்டுமே!’ என்று எண்ணினார் அந்த டைரக்டர்.</p>.<p>ஆனால் கதாநாயகியை, படப்பிடிப்புக் குழுவினர், காயமின்றிக் காப்பாற்றிவிட்டனர்!</p>.<p><strong>ப</strong>ல ஆண்டுகள் சென்றுவிட்டன. ஒருநாள் வாயில் சிகரெட்டுடன் தன் காரில் பெட்ரோல் இருக்கிறதா என்று பெட்ரோல் டேங்க் மூடியை டைரக்டர் திறந்து பார்க்க -</p>.<p>சிகரெட்டில் இருந்து ஒரு சின்னத் தீப்பொறி பெட்ரோல் டேங்க்குக்குள் விழ -</p>.<p>'குபீ’ரென்று தீப்பிடித்து டைரக்டரின் வலக் கரம் மணிக்கட்டு வரை வெந்துபோயிற்று!</p>.<p>இன்னொருவரைத் தீ சுட வேண்டும் என எண்ணியதால் இந்தத் தண்டனை அவருக்குக் கிடைத்தது!</p>.<p>அன்னணம் எண்ணியவர் திரு.டி.பிரகாஷ் ராவ், தீ நடுவே மாட்டிய நடிகை திருமதி.சரோஜாதேவி, படம் - கலைஞர் உரையாடல் எழுதிய 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்!’</p>.<p>- இதை எனக்குச் சொன்னவர் எனைச் சினிமாவில் ஊக்குவித்த - ஆதரித்த - வாழ்வித்த - திரு.மா.லட்சுமணன் அவர்கள்!</p>.<p>ஆரம்பத்தில், சக்கரத்தாழ்வார் சந்நிதி யைச் சுற்றிக் கணவனைச் சிறையினின்றும் மீட்டவர் - திருமதி T.A.மதுரம்!</p>.<p><span style="color: #800080"><strong>- சுழலும்...</strong></span></p>