<p style="text-align: center"><span style="font-size: small"><span style="color: #ff0000"><strong>நானும் நண்பனும்! </strong></span></span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td> <b>##~##</b></td> </tr> </tbody> </table>.<p><strong>'வீ</strong>டு வாசல் சோறு தண்ணி’ - எல்லாம் இருந்தும் -</p>.<p>திருவரங்கம் விட்டுத் தரும மிகு சென்னையம்பதிக்கு, சினிமா ஆசையால் வந்தேன்.</p>.<p>வறுமை என்னைத் தழுவவில்லை; நான்தான் விரும்பி வறுமையைத் தழுவிக்கொண்டேன். அதாவது, இஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டேன்!</p>.<p>எந்தப் புகழும், ஒரு விலை கொடுக்காமல் வருவதில்லை; ஆனால் இன்றைய புகழுக்கு, அடியேன் கொடுத்த விலை அதிகம்.</p>.<p>நாளைய சினிமா நமக்காகத்தான் என்று நம்பிக்கொண்டு -</p>.<p>காலையும் மாலையும், கட் செவிபோல் காற்றைப் புசித்துக்கொண்டிருந்த காலம்!</p>.<p><strong>ஒ</strong>ருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாமலும்; இருநாள் உணவை ஒருசேர ஏலென்றால் ஏலாமலும் -</p>.<p>இருக்கின்ற இடும்பை கூர் வயிற்றைப்பற்றி, தமிழ்க் கிழவி தராசு பிடித்த மாதிரி, அன்றே சொல்லிவிட்டுப் போய்விட்டாள்!</p>.<p>படிமிசை, சகல பாவங்களுக்கும் துணிந்து மனிதனைத் துரத்துவது - காலியாய்க் கிடக்கும் இரைப்பைதான்.</p>.<p>'இருக்குமிடம் தேடி ஒரு வேளை உணவு வந்தால், உருக்கமுடன் உண்பேன்!’ என்று -</p>.<p>காவியும் கமண்டலமும் சொல்லலாம்; சராசரி மனிதனுக்கு அது சாத்தியமல்ல!</p>.<p>பட்டினியாயிருப்பவன் காதுகளில் - பக்தியும் புகாது; பகுத்தறிவும் புகாது. அதனால்தான் வள்ளல் பெருமான், அன்ன சாலையை ஆரம்பித்தார்கள்.</p>.<p>'உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே!’ என்றெல்லாம் உலகறியக் கூவி உலவுகிறது தமிழ்!</p>.<p><strong>'தி</strong>னம் தினம் நாம படிக்கிற திருக்குறளைவிட - இந்த சினிமாப் பாட்டுதான், இல்லாமையின் கொடுமையை யதார்த்தமா எல்லாருக்கும் பொட்டுல அடிச்ச மாதிரி புரியவைக்குது!’</p>.<p>- என்று கலைவாணர் என்.எஸ்.கே. ஒரு சமயம் ஒரு சினிமாப் பாட்டைச் சிலாகித்துப் பேசினார்.</p>.<p><span style="color: #ff6600"><strong>' ஒரு சாண் வயிறு இல்லாட்டா - இந்த<br /> உலகத்தில் ஏது கலாட்டா?<br /> அரிசிப் பஞ்சமே வராட்டா - நம்ம<br /> உசுரெ வாங்குமா பரோட்டா?’ </strong></span></p>.<p>- இது,அருமைக் கவிஞர் திரு. தஞ்சை ராமையதாஸ் அவர்கள், 'சிங்காரி’ படத்தில் எழுதிய பாட்டு. 'அஞ்சு அவுன்ஸ் அரிசி’ என்று காங்கிரஸ் ஆட்சியைக் கழகங்கள் விமர்சித்த காலம் அது.</p>.<p>அதனால்தான் இந்தப் பாட்டைத் திரு. கலைவாணர், 'திருக்குறளைவிட மேலான தெருக் குறள்!’ என்று 'சபாஷ்’ போட்டுப் பேசினார்.</p>.<p>இவற்றையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால், நான் பசியோடு இருந்த நாள்கள் என் நினைவில் நிழலாடுகின்றன!</p>.<p><strong>'ஒ</strong>ரு சார்மினார் சிகரெட் பிடி; புகைய விடாதே; ஒரு செம்புத் தண்ணீரெக் குடி! ஒருநாள் பூராப் பசிக்காது!’</p>.<p>- என்று சொல்லி, என் உதடுகளுக்கிடையே ஒரு சார்மினார் சிகரெட்டைச் செருகி, நெருப்பு வைப்பான் என் நண்பன்.</p>.<p>அற்றை நாளிலிருந்து, சிகரெட்டே சிற்றுண்டியாகிப்போனது; மூன்று வேளை உணவென்பதெல்லாம், முயற்கொம்பே!</p>.<p>வயிற்று நிலத்தை, வன்பசி எனும் ஏர் உழும்; அடி வயிறு அழும். அந்த அழுகைச் சத்தமெல்லாம், சினிமாச் சிந்தனையில் மூழ்கிக்கிடந்த என் செவிகளில் ஏறாது!</p>.<p>அப்படியிருப்பினும் - நான் கம்பெனி கம்பெனியாய் அன்றாடம் ஏறி இறங்கிப் பாட்டு வாய்ப்புகள் கேட்டதில்லை. சுருண்டு சுருண்டு அறைக்குள்ளேயே படுத்துக்கிடப்பேன். அவ்வளவு சோம்பேறி!</p>.<p>பக்கத்து அறை நண்பன்தான், பெட்டிக் கடையில் பத்து பைசாவிற்கு, வெள்ளைத்தாள்களை வாங்கி வந்து -</p>.<p>'டேய், வாலி! You are killing the time! இந்தாடா, பேப்பர்; பேனா! இதுல, ஏதா வது நாலஞ்சு பாட்டெ எழுதிவையேண்டா! நாளைக்கு உனக்குன்னு ஒரு நல்ல நேரம் வந்தா, எல்லாத்தையும் வித்துடலாமே! கண்ணா! காய் விழுதோ விழல்லியோ - கல்லெ விட்டெறிஞ்சுக்கிட்டே இருக்கணும்; எந்தக் கல்லுல, எந்தக் காய் விழும்னு, எவனுக்கடா தெரியும்? அதே மாதிரி, எந்தக் கல்லுலேயும், எந்தக் காயும் விழாதுன்னும் எவன் சொல்ல முடியும்? 'Try! Try! Try! Until your Brain becomes - Dry! Dry! Dry!’ என்று - Jerry Lewis பாணியில், ஒரு நடனத்தை ஆடுவான்; அந்தப் புண்ணியவான் வேறு யாருமல்ல.</p>.<p>இல்லாமல் போன பின்பும், இன்றும் இருந்துகொண்டிருக்கும் என் நெருங்கிய நண்பன் திரு. நாகேஷ்!</p>.<p>'தாமரைக் குளம்’ படத்தில் - சின்னதாய் ஒரு வேஷங் கிடைத்தவுடன் -</p>.<p>கை நிறையச் சம்பாதித்துக்கொண்டிருந்த ரயில் வேலையைப் 'பொக்’கென விட்டவன்!</p>.<p><strong>இ</strong>ருவரும் ஒன்றாய் இஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டோம்.</p>.<p>நான் சொல்வதுண்டு நாகேஷிடம்,</p>.<p>'நாகேஷ்; நம்ம ரெண்டு பேர்கிட்டயும் -No Cash!’ என்று!</p>.<p>உடனே அவன் என் கைகளைப் பற்றி, 'டேய், வாலி! இந்த மாதிரி வார்த்தை விளையாட்டுதாண்டா சினிமாப் பாட்டு எழுதத் தேவை! Keep it up!’ என்று உற்சாக ஊசியை என் உள்ளத்தில் செலுத்துவான்.</p>.<p>அவனோடு சிரம திசையில் சினேகிதனாயிருந்தபோது, நான் அவன் வாங்கி வந்த பத்து பைசாப் பேப்பரில் எழுதியவைதாம் கீழ்க்கண்ட பாடல்கள்.</p>.<p><span style="color: #800000"><strong>'இறைவனில்லா ஆலயத்தில்<br /> ஏற்றிவைத்த தீபம்;<br /> இரவு பகல் எரிவதனால்<br /> எவருக்கென்ன லாபம்?’ </strong></span></p>.<p>- இது பின்னாளில் சிவாஜி நடித்த 'அன்புக்கரங்க’ளில் இடம் பெற்றது.</p>.<p><span style="color: #800000"><strong>'காசேதான் கடவுளடா! - அந்தக்<br /> கடவுளுக்கும் இது தெரியுமடா;<br /> கைக்குக் கைமாறும் பணமே!<br /> - உன்னைக்<br /> கைப்பற்ற நினைக்குது மனமே!’ </strong></span></p>.<p>- இது பின்னாளில் 'பாலன் பிக்சர்ஸ்’ தயாரித்த 'சக்கரம்’ படத்தில் வந்தது.</p>.<p><span style="color: #800000"><strong>'மாசியிலே சமயபுரம்<br /> மாரியம்மன் தேரு வரும்;<br /> ஊசிவிழ இடமிருக்காது; - மச்சான்!<br /> நாம -<br /> உரசிநின்னா ஊரறியாது!’ </strong></span></p>.<p>- இது திரு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில், மதுரை திருமாறன் இயக்கிய 'மாமியார்கள் ஜாக்கிரதை’யில் வந்தது.</p>.<p>இப்படி எண்ணற்ற பாடல்கள் என்னை எழுதவைத்து - என் சோம்பலைத் தகர்த்தெறிந்த நாகேஷ§ம் நானும் -</p>.<p>வறுமையில் உயிருக்குயிரான நண்பர்களாக இருந்தோம்; இருவரும் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற பிறகு - விலகி, பரஸ்பரம் வெகு தூரம் போய்விட்டோம்!</p>.<p><span style="color: #800000"><strong>'இவ்வுலகின் கண்<br /> இருவரை -<br /> வறுமை இணைக்கிறது,<br /> வளமை பிரிக்கிறது!’ </strong></span></p>.<p>பழம்புலவன் ஒருவன் பாடிவைத்துப் போயிருக்கிறானே - தன் பட்டறிவைக் கொண்டு.</p>.<p><span style="color: #800000"><strong>'மயிர் ஊடாடா நட்பும்-<br /> பொருள் ஊடாடக் கெடும்!’ </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>- சுழலும்...</strong></span></p>
<p style="text-align: center"><span style="font-size: small"><span style="color: #ff0000"><strong>நானும் நண்பனும்! </strong></span></span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td> <b>##~##</b></td> </tr> </tbody> </table>.<p><strong>'வீ</strong>டு வாசல் சோறு தண்ணி’ - எல்லாம் இருந்தும் -</p>.<p>திருவரங்கம் விட்டுத் தரும மிகு சென்னையம்பதிக்கு, சினிமா ஆசையால் வந்தேன்.</p>.<p>வறுமை என்னைத் தழுவவில்லை; நான்தான் விரும்பி வறுமையைத் தழுவிக்கொண்டேன். அதாவது, இஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டேன்!</p>.<p>எந்தப் புகழும், ஒரு விலை கொடுக்காமல் வருவதில்லை; ஆனால் இன்றைய புகழுக்கு, அடியேன் கொடுத்த விலை அதிகம்.</p>.<p>நாளைய சினிமா நமக்காகத்தான் என்று நம்பிக்கொண்டு -</p>.<p>காலையும் மாலையும், கட் செவிபோல் காற்றைப் புசித்துக்கொண்டிருந்த காலம்!</p>.<p><strong>ஒ</strong>ருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாமலும்; இருநாள் உணவை ஒருசேர ஏலென்றால் ஏலாமலும் -</p>.<p>இருக்கின்ற இடும்பை கூர் வயிற்றைப்பற்றி, தமிழ்க் கிழவி தராசு பிடித்த மாதிரி, அன்றே சொல்லிவிட்டுப் போய்விட்டாள்!</p>.<p>படிமிசை, சகல பாவங்களுக்கும் துணிந்து மனிதனைத் துரத்துவது - காலியாய்க் கிடக்கும் இரைப்பைதான்.</p>.<p>'இருக்குமிடம் தேடி ஒரு வேளை உணவு வந்தால், உருக்கமுடன் உண்பேன்!’ என்று -</p>.<p>காவியும் கமண்டலமும் சொல்லலாம்; சராசரி மனிதனுக்கு அது சாத்தியமல்ல!</p>.<p>பட்டினியாயிருப்பவன் காதுகளில் - பக்தியும் புகாது; பகுத்தறிவும் புகாது. அதனால்தான் வள்ளல் பெருமான், அன்ன சாலையை ஆரம்பித்தார்கள்.</p>.<p>'உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே!’ என்றெல்லாம் உலகறியக் கூவி உலவுகிறது தமிழ்!</p>.<p><strong>'தி</strong>னம் தினம் நாம படிக்கிற திருக்குறளைவிட - இந்த சினிமாப் பாட்டுதான், இல்லாமையின் கொடுமையை யதார்த்தமா எல்லாருக்கும் பொட்டுல அடிச்ச மாதிரி புரியவைக்குது!’</p>.<p>- என்று கலைவாணர் என்.எஸ்.கே. ஒரு சமயம் ஒரு சினிமாப் பாட்டைச் சிலாகித்துப் பேசினார்.</p>.<p><span style="color: #ff6600"><strong>' ஒரு சாண் வயிறு இல்லாட்டா - இந்த<br /> உலகத்தில் ஏது கலாட்டா?<br /> அரிசிப் பஞ்சமே வராட்டா - நம்ம<br /> உசுரெ வாங்குமா பரோட்டா?’ </strong></span></p>.<p>- இது,அருமைக் கவிஞர் திரு. தஞ்சை ராமையதாஸ் அவர்கள், 'சிங்காரி’ படத்தில் எழுதிய பாட்டு. 'அஞ்சு அவுன்ஸ் அரிசி’ என்று காங்கிரஸ் ஆட்சியைக் கழகங்கள் விமர்சித்த காலம் அது.</p>.<p>அதனால்தான் இந்தப் பாட்டைத் திரு. கலைவாணர், 'திருக்குறளைவிட மேலான தெருக் குறள்!’ என்று 'சபாஷ்’ போட்டுப் பேசினார்.</p>.<p>இவற்றையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால், நான் பசியோடு இருந்த நாள்கள் என் நினைவில் நிழலாடுகின்றன!</p>.<p><strong>'ஒ</strong>ரு சார்மினார் சிகரெட் பிடி; புகைய விடாதே; ஒரு செம்புத் தண்ணீரெக் குடி! ஒருநாள் பூராப் பசிக்காது!’</p>.<p>- என்று சொல்லி, என் உதடுகளுக்கிடையே ஒரு சார்மினார் சிகரெட்டைச் செருகி, நெருப்பு வைப்பான் என் நண்பன்.</p>.<p>அற்றை நாளிலிருந்து, சிகரெட்டே சிற்றுண்டியாகிப்போனது; மூன்று வேளை உணவென்பதெல்லாம், முயற்கொம்பே!</p>.<p>வயிற்று நிலத்தை, வன்பசி எனும் ஏர் உழும்; அடி வயிறு அழும். அந்த அழுகைச் சத்தமெல்லாம், சினிமாச் சிந்தனையில் மூழ்கிக்கிடந்த என் செவிகளில் ஏறாது!</p>.<p>அப்படியிருப்பினும் - நான் கம்பெனி கம்பெனியாய் அன்றாடம் ஏறி இறங்கிப் பாட்டு வாய்ப்புகள் கேட்டதில்லை. சுருண்டு சுருண்டு அறைக்குள்ளேயே படுத்துக்கிடப்பேன். அவ்வளவு சோம்பேறி!</p>.<p>பக்கத்து அறை நண்பன்தான், பெட்டிக் கடையில் பத்து பைசாவிற்கு, வெள்ளைத்தாள்களை வாங்கி வந்து -</p>.<p>'டேய், வாலி! You are killing the time! இந்தாடா, பேப்பர்; பேனா! இதுல, ஏதா வது நாலஞ்சு பாட்டெ எழுதிவையேண்டா! நாளைக்கு உனக்குன்னு ஒரு நல்ல நேரம் வந்தா, எல்லாத்தையும் வித்துடலாமே! கண்ணா! காய் விழுதோ விழல்லியோ - கல்லெ விட்டெறிஞ்சுக்கிட்டே இருக்கணும்; எந்தக் கல்லுல, எந்தக் காய் விழும்னு, எவனுக்கடா தெரியும்? அதே மாதிரி, எந்தக் கல்லுலேயும், எந்தக் காயும் விழாதுன்னும் எவன் சொல்ல முடியும்? 'Try! Try! Try! Until your Brain becomes - Dry! Dry! Dry!’ என்று - Jerry Lewis பாணியில், ஒரு நடனத்தை ஆடுவான்; அந்தப் புண்ணியவான் வேறு யாருமல்ல.</p>.<p>இல்லாமல் போன பின்பும், இன்றும் இருந்துகொண்டிருக்கும் என் நெருங்கிய நண்பன் திரு. நாகேஷ்!</p>.<p>'தாமரைக் குளம்’ படத்தில் - சின்னதாய் ஒரு வேஷங் கிடைத்தவுடன் -</p>.<p>கை நிறையச் சம்பாதித்துக்கொண்டிருந்த ரயில் வேலையைப் 'பொக்’கென விட்டவன்!</p>.<p><strong>இ</strong>ருவரும் ஒன்றாய் இஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டோம்.</p>.<p>நான் சொல்வதுண்டு நாகேஷிடம்,</p>.<p>'நாகேஷ்; நம்ம ரெண்டு பேர்கிட்டயும் -No Cash!’ என்று!</p>.<p>உடனே அவன் என் கைகளைப் பற்றி, 'டேய், வாலி! இந்த மாதிரி வார்த்தை விளையாட்டுதாண்டா சினிமாப் பாட்டு எழுதத் தேவை! Keep it up!’ என்று உற்சாக ஊசியை என் உள்ளத்தில் செலுத்துவான்.</p>.<p>அவனோடு சிரம திசையில் சினேகிதனாயிருந்தபோது, நான் அவன் வாங்கி வந்த பத்து பைசாப் பேப்பரில் எழுதியவைதாம் கீழ்க்கண்ட பாடல்கள்.</p>.<p><span style="color: #800000"><strong>'இறைவனில்லா ஆலயத்தில்<br /> ஏற்றிவைத்த தீபம்;<br /> இரவு பகல் எரிவதனால்<br /> எவருக்கென்ன லாபம்?’ </strong></span></p>.<p>- இது பின்னாளில் சிவாஜி நடித்த 'அன்புக்கரங்க’ளில் இடம் பெற்றது.</p>.<p><span style="color: #800000"><strong>'காசேதான் கடவுளடா! - அந்தக்<br /> கடவுளுக்கும் இது தெரியுமடா;<br /> கைக்குக் கைமாறும் பணமே!<br /> - உன்னைக்<br /> கைப்பற்ற நினைக்குது மனமே!’ </strong></span></p>.<p>- இது பின்னாளில் 'பாலன் பிக்சர்ஸ்’ தயாரித்த 'சக்கரம்’ படத்தில் வந்தது.</p>.<p><span style="color: #800000"><strong>'மாசியிலே சமயபுரம்<br /> மாரியம்மன் தேரு வரும்;<br /> ஊசிவிழ இடமிருக்காது; - மச்சான்!<br /> நாம -<br /> உரசிநின்னா ஊரறியாது!’ </strong></span></p>.<p>- இது திரு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில், மதுரை திருமாறன் இயக்கிய 'மாமியார்கள் ஜாக்கிரதை’யில் வந்தது.</p>.<p>இப்படி எண்ணற்ற பாடல்கள் என்னை எழுதவைத்து - என் சோம்பலைத் தகர்த்தெறிந்த நாகேஷ§ம் நானும் -</p>.<p>வறுமையில் உயிருக்குயிரான நண்பர்களாக இருந்தோம்; இருவரும் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற பிறகு - விலகி, பரஸ்பரம் வெகு தூரம் போய்விட்டோம்!</p>.<p><span style="color: #800000"><strong>'இவ்வுலகின் கண்<br /> இருவரை -<br /> வறுமை இணைக்கிறது,<br /> வளமை பிரிக்கிறது!’ </strong></span></p>.<p>பழம்புலவன் ஒருவன் பாடிவைத்துப் போயிருக்கிறானே - தன் பட்டறிவைக் கொண்டு.</p>.<p><span style="color: #800000"><strong>'மயிர் ஊடாடா நட்பும்-<br /> பொருள் ஊடாடக் கெடும்!’ </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>- சுழலும்...</strong></span></p>