<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="blue_color_heading" id="Cat. heading" width="609"><tbody><tr><td align="right" class="blue_color" height="25" valign="middle">சத்குரு ஜக்கி வாசுதேவ், எழுத்தாக்கம்: சுபா</td> <td align="right" valign="middle" width="5"></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"><tbody><tr><td class="orange_color_heading">செய் செய்யாதே!</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="Brown_color_heading" id="Artical Heading" width="100%"> <tbody><tr> <td align="left" class="Brown_color" height="25" valign="top"> </td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p><strong>''நெ</strong>ருக்கமான ஒருவரின் மரணம் என்பது ஓர் இழப்பு அல்லவா? அப்படி இருக்கையில், மரண ஊர்வலத்தில் அமைதியாகச் செல்வதை விடுத்து, சாவைக் கொண்டாடுவதுபோல், ஆடிப் பாடிக்கொண்டு செல்லும் மோசமான வழக்கம் இங்கு ஏன் வந்தது? துக்கம் அனுஷ்டிக்க வேண்டியதைக் கொண்டாடலாமா?''</p> <p>''ஒருவருடைய மரணத்தால், நீங்கள் மிகவும் சோகமாகி துன்பப்பட்டு நின்றால், அவரைப்பற்றி நினைத்துப் பார்க்க நல்ல விஷயங்கள் இல்லையோ என்று தோன்றுகிறது. அவர் உங்கள் வாழ்க்கையில் துக்கமும் துன்பமும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. </p> <p>ஒரு மரணத்துக்கு நீங்கள் காரணமாக இல்லாதவரை, அதைக் கொண்டாடுவது தவறே அல்ல. ஏனென்றால், சிறைப்பட்டு இருந்த உயிருக்குக் கிடைத்த விடுதலை அது. கொண்டாட விருப்பம் இல்லாதபட்சத்தில், மரணத்தை நளினமாகக் கையாளவாவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதைப் பெரிய துக்கமாக அனுஷ்டிக்காமல், இறந்தவர் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தியது எப்படி என்று யோசியுங்கள். </p> <p>அவர் உங்கள் வாழ்க்கைக்கு வளம்ஊட்டியிருந்தால், அதை நன்றியோடு நினைத்துப்பார்க்க வேண்டிய தருணம் அது. அவர் உங்களை மேம்படுத்தியதை உலகுக்கு மேம்பட்டவராக நடந்து கொள்ளாமல் வேறு எப்படித் தெரிவிப் பீர்கள்? </p> <p>ஆனந்தமாக வாழ்ந்தவர்களேவாழ்க் கையை முழுமையாக வாழ்ந்தவர்கள். அவர்கள் சாவையும் ஆனந்தமாகவே ஏற்றுக்கொள்வார்கள். </p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p align="center"></p> <p>பள்ளிக்கூடத்தைவிட்டு விலகும் போது, பழைய நண்பர்களைவிட்டு விலகுகிறீர்கள். கண்களில் நீர் நிறைந்து இருந்தாலும், அந்தப் பிரிதலைச் சந் தோஷமாக அடுத்த கட்டத்துக்குப் போகிற மனநிறைவுடன்தானே கொண்டாடுகிறீர்கள்? கல்லூரிப் படிப்பை முடிக்கும்போதும், பணியில் பதவி உயர்வு பெற்று மாற்றலாகிப் போகும் போதும், அதைக் கொண்டாடத் தயா ராகத்தானே இருக்கிறீர்கள்? அதுபோல் தான் இது. </p> <p>மரணம் என்பது வாழ்வின் அடுத்த பரிமாணம். ஆனந்தமாக வாழ்ந்தவர்கள் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறவே விரும்புவார்கள். அதை ஓர்இழப்பா கக் கருதி, முனகிக்கொண்டு இருக்க மாட்டார்கள். </p> <p>அந்தச் சாது ஒரு கிராமத்துக்கு வெளியே மரத்தடியில் அமர்ந்து இருந் தார். அவரிடம் ஒரு கிழிந்த துணிப்பை மட்டும் இருந்தது. அவரைத் தேடிக் கொண்டு, கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி ஓடி வந்தார். </p> <p>'நேற்று என் கனவில் ஒரு தேவதைவந் தாள். மரத்தடியில் ஒரு சாது அமர்ந்திருப் பார். அவரிடம் விலைமதிப்பற்ற ஒரு வைரக் கல் இருக்கிறது. அதைப் பெற்று உன் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள் என்று அந்தத் தேவதை சொன்னாள். அந்த வைரம் எங்கே ஐயா?' என்று ரகசியமான குரலில் கேட்டார். </p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p>'ஓ, அந்த வைரத்தைக் கேட்கிறாயா?' சாது தன் கிழிசல் பையில் கைவிட்டு ஒரு வைரக் கல்லை எடுத்தார். அது கிட்டத்தட்ட ஒரு தேங்காய் அளவு பெரி தாக இருந்தது. மாலை வெளிச்சத்தில் தகதகவென்று ஜொலித்தது. அதைவிடப் பெரிய வைரக் கல் உலகில் வேறு எதுவும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.</p> <p>அதைக் கையில் வாங்கிய விவசா யிக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. யார் கண்ணிலாவதுபட்டால், அவன் உயிரைப் பறித்தாவது அந்த வைரத்தைப் பிடுங்கிக்கொண்டு போய்விடுவார்கள் என்று அவனுக்குத் திடீரென்று பயம் வந்தது. அதைத் தன்னிடம் இருந்த பையில் ஒளித்து மார்போடு அணைத்தபடி, தன் ஊரை நோக்கி நடந்தான். </p> <p>இந்த அதிர்ஷ்டம்பற்றி அவனுடன் சேர்ந்து குடிக்கும் நண்பர்களிடம்சொன் னால், அதில் யாராவது பேராசைப்பட்டுத் துரோகம் செய்துவிடக்கூடும். மனைவி ஓட்டை வாய். அவளிடம்ரகசியங் கள் தங்காது. உறவினர்களிடம் சொன் னால், அவர்கள் வயிற்றெரிச்சல்கொண்டு எதையாவது செய்துவிடுவார்கள். </p> <p>யோசிக்க... யோசிக்க... குழப் பம் மிகுந்தது. அந்த வைரத்தை எங்கே, யாரிடம், எப்படிக் கொண்டுபோய் விற்பது என்பதும் புரியவில்லை. தலையணைக்கு அடியில் அதை வைத்துக்கொண்டு படுத்துக்கொண்டான். தூக்கம் வரவில்லை. வைரம் விற்ற பணம் அவனுடைய சமூக அந்தஸ்தை எந்த அளவுக்கு உயர்த்தும் என்று கற்பனை செய்தான். அரசனுடைய அரண்மனையை விலை பேசலாமா என்றெல்லாம் யோசனை தறிகெட்டு ஓடியது. </p> <p>அடுத்த சில நாட்களுக்கு என்னென்னவோ எண்ணங்கள் அவனை அலைக்கழித்தன. ஒரு கட்டத்தில், தூக்கம் தொலைந்து போய், நிம்மதியற்று பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. அந்த வைரத்தை எடுத்துக் கொண்டு, அந்தச் சாதுவிடம் ஓடினான். </p> <p>அவர் அதே மரத்தடியில் நிச்சலனமாக அமர்ந்திருந்தார், </p> <p>'ஐயா, அன்றைக்கு நான் கேட்டவுடன் இந்த வைரக் கல்லை ஒரு கணம்கூட யோசிக்காமல் எடுத்துக் கொடுத்துவிட்டீர்கள். அப்படியென்றால், இதைவிட விலைமதிப்பற்ற ஒன்றை நீங்கள் வைத்திருக்க வேண்டும். அது என்ன ஐயா?' என்று கேட்டான். </p> <table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>சாது புன்னகைத்தார். 'அதைப் பற்றிப் பேச வந்திருக்கிறாயா? நல்லது. முதலில் அந்தக் கல்லைத் தூர எறிந்துவிட்டு வா' என்றார். </p> <p>இப்படி, பொருள்தன்மை உடைய எதையும் விலைமதிப்பற்றது என்று இந்தக் கலாசாரத்தில் பார்க்கவில்லை. </p> <p>நமக்கு முன்பு இந்தப் பூமிக்கு வந்த எந்தத் தலைமுறையினரும் இத்தனை வசதிகளையும், விஞ்ஞான, மருத்துவ முன்னேற்றங்களையும் கண்டிருக்கவில்லை. ஆனாலும்கூட, இதை ஆனந்தமான தலைமுறை என்றோ, அமைதியான தலைமுறை என்றோ, அன்பான தலைமுறை என்றோ நம்மால் சொல்லிக் கொள்ள முடிகிறதா? இல்லை. ஏன்? நம் கவனம் எல்லாம் புற வளர்ச்சிகளில் ஆழ்ந்து இருக்கிறதே தவிர, உள் வளர்ச்சி பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்துவிட்டோம். </p> <p>வெளிச் சூழ்நிலைக்கு அடிமையாகிக் கிடப்பவர்கள்தான் இந்த உடல் மீது அதிக பற்றுகொண்டுஇருப்பார்கள். நிரந்தரமாக இங்கே வாழ முடியுமா என்று பேராசைப்படுவார்கள். </p> <p>அதைத் தகர்ப்பதுபோல், பிறப்பை எப்படிக் கொண்டாடுகிறோமோ, இறப்பையும் அப்படிக் கொண்டாடத் தயாராக இருக்க வேண்டும் என்றே இந்தக் கலாசாரம் சொல்லி வந்திருக்கிறது. உலகின் முன்னணியில் இருக்கும் வேறு எந்தக் கலாசாரத்திலும் மரணத்தைக் கொண்டாடும் வழக்கம் இல்லை.</p> <p>இறந்தவருடைய பிரிவை நீங் கள் கொண்டாடுவதாக அமையக் கூடாது. அதே சமயம், அவரு டைய பங்களிப்பு, உங்கள் வாழ்க்கையை எப்படி மேம்படுத்திக் கொடுத்தது என்ற நினைப்பு உங்களுக்கு ஆனந்தம் தர வேண் டும். உங்களைச் சிறைப்படுத்தாத உறவாக அது அமைந்து, அவர் மூலம் நீங்கள் பெற்றது உயர்வாக இருந்து, அப்படிப் பெற்றதை மற்றவர்களுக்கு நீங்கள் வழங்க நேர்ந்து இருந்தால், அவருடைய நினைவு உங்களிடம் துக்கம் கொண்டு வராது. நெகிழ்ச்சியும், ஆனந்தமும், கொண்டாட்டமும்தான் கொண்டுவரும். அப்படிப்பட்ட கொண்டாட்டத்தை ஆதரித்த அற்புதக் கலாசாரம் இது.</p> <p>இப்போது உண்மையான கொண்டாட்டம் வறண்டுபோய், அதன் ஆழமான நோக்கம் தேய்ந்துபோய், சடங்கின் மிச் சமே இருக்கிறது. கொண்டாட் டம் என்றால் மூச்சுமுட்டக் குடித்துவிட்டு, இரைச்சலான மேளத்துக்கு இஷ்டப்படி நடனம் ஆடுவது என்று நோக்கம் குறுகி விட்டது வருத்தத்துக்கு உரியது. </p> <p>நாம் எல்லோரும் ஒரு தற்காலிகப் பயணத்தில் சக பயணிகள்தாம். இங்கு ஒருவருக்கு மற்றவர் துணையாக இருந்து, அடுத்தவர் வாழ்க்கைக்கு மேன்மையான, அற்புதமான பங்களிப்பைத் தர வேண்டும். இதை உணர்த்தும் வெளிப்பாடாக, மரணத்தைக் கொண்டாடுவது என்பது ஓர் உண்மை உணர்தலாக இங்கு பேணப்பட்டது. மறுபடியும் அதே நோக்கத்துடன் மரணத்தைக் கொண்டாடும் வழக்கத்தை இங்கு கொண்டுவந்தால், அது பாராட்டப்பட வேண்டியதாகும்!''</p> <p align="right"><em><strong>- சரிசெய்வோம்... </strong></em></p> <table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="98%"> <tbody> <tr valign="top"> <td colspan="2"><table bgcolor="#990000" border="0" cellpadding="1" cellspacing="0" width="100%"> <tbody> <tr> <td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody> <tr> <td bgcolor="#ffffff"><table align="center" border="0" cellpadding="3" cellspacing="3" width="100%"> <tbody> <tr> <td bgcolor="#FFF5EC" class="block_color_bodytext"><p align="center" class="blue_color style4">சத்குருவின் 'ஜென்'னல்!</p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="98%"><tbody><tr valign="top"><td colspan="2"><table bgcolor="#990000" border="0" cellpadding="1" cellspacing="0" width="100%"><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr><td bgcolor="#ffffff"><table align="center" border="0" cellpadding="3" cellspacing="3" width="100%"><tbody><tr><td bgcolor="#FFF5EC" class="block_color_bodytext"><p><strong>ஒ</strong>ரு ஜென் குரு மிகச் சிறந்த வாள் வீரராக விளங்கினார்.</p> <p>அவரிடம் ஒரு புதிய சீடன் சேர்ந்தான். ''இந்த நாட்டிலேயே முதன்மையான வாள் வீரனாக வேண்டும் என்று விரும்பி உங்களிடம் வந்திருக்கிறேன்'' என்றான். </p> <p>''அதற்கென்ன, 10 வருடங்களில் உன்னை அப்படித் தயார் செய்து விடுகிறேன்'' என்றார் குரு. </p> <p>''என்னது, 10 வருடங்களா? ஐந்தே வருடங்களில் சாதிக்க வேண்டும். மற்றவர்களைவிட இரண்டு பங்கு அதிகமாக உழைக்கத் தயாராக இருக்கிறேன்.'' </p> <p>''அப்படியானால் 20 வருடங்கள் ஆகும்.'' </p> <p>சீடன் திகைத்தான், ''போதாது என்றால், நான்கு பங்கு கடுமையாக உழைக்கிறேன்'' என்றான்.</p> <p>''அப்படிச் செய்தால் 60 வருடங்கள் ஆகுமே'' என்றார் ஜென்குரு.</p> <p class="orange_color"><strong>சத்குருவின் விளக்கம்:</strong></p> <p><strong>வா</strong>ழ்க்கை என்பது குறிப்பிட்ட நேரம் கிடைத்தால், கடுமையாகப் போராடிப் புரிந்துகொள்ள முடியும் என்பதல்ல; எந்த அளவு சுலபமாக வாழ்க்கையில் நீங்கள் நழுவி உங்களைப் பொருத்திக்கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். </p> <p>வாழ்க்கைக்கு மட்டுமல்ல; கலையின் எந்த வடிவத்துக்கும் இது பொருந்தும். உங்களை வருத்திக் கொள்ள, வருத்திக் கொள்ள, நீங்கள் நினைத்ததை அடைவதற்கு அதிக காலம் ஆகும். கடுமையாக உழைப் பவர்கள் அதற்கான ஊதியம் பெறக்கூடும். ஆனால், சந்தோஷத்தை அனுபவித்திருக்க முடியாது. முழுமையை உணர்ந்திருக்க இயலாது.</p> <p>போராடுவதால், சிறந்த பாடகராகவோ, ஓவியராகவோ, நாட்டிய நிபுணராகவோ மாறிவிட முடியாது. உழைப்பு அவசியம்தான். ஆனால், கடுமையாக உழைப்பதால் மட்டும் எதிலும் சிறந்து விளங்கிவிட முடியாது. அது சாத்தியம் என்றால், இந்நேரம் உழைப்புக்கு அஞ்சாத கழுதைகளை மிகச் சிறந்த கலை ஞர்களாக்கி இருக்கலாம். </p> <p>திறன் என்பது கலையை நீங்கள் எப்படிப் பற்றிக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. அதைவிட, அந்தக் கலை உங்களைப் பற்றிக்கொண்டு நீங்கள் அதில் கரைந்து போக முடிந்தால், நீங்கள் மிக மிகச் சிறந்த கலைஞராக விளங்குவீர்கள். </p> <p>வாழ்க்கையும் அப்படித்தான். அதைப்பற்றிக்கொள்ள விழைவதைவிட, வாழ்க்கை உங்களைப் பற்றிக்கொள்ள அனுமதியுங்கள். அற்புதங்கள் நிகழும்!<br /> </p></td> </tr> </tbody> </table></td> </tr> </tbody> </table></td> </tr> </tbody> </table></td> </tr> </tbody> </table> </td> </tr> <tr> <td align="left" colspan="3" valign="top"> </td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td align="left" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="right" valign="middle" width="5"></td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascript:history.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>
<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="blue_color_heading" id="Cat. heading" width="609"><tbody><tr><td align="right" class="blue_color" height="25" valign="middle">சத்குரு ஜக்கி வாசுதேவ், எழுத்தாக்கம்: சுபா</td> <td align="right" valign="middle" width="5"></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"><tbody><tr><td class="orange_color_heading">செய் செய்யாதே!</td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="Brown_color_heading" id="Artical Heading" width="100%"> <tbody><tr> <td align="left" class="Brown_color" height="25" valign="top"> </td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p><strong>''நெ</strong>ருக்கமான ஒருவரின் மரணம் என்பது ஓர் இழப்பு அல்லவா? அப்படி இருக்கையில், மரண ஊர்வலத்தில் அமைதியாகச் செல்வதை விடுத்து, சாவைக் கொண்டாடுவதுபோல், ஆடிப் பாடிக்கொண்டு செல்லும் மோசமான வழக்கம் இங்கு ஏன் வந்தது? துக்கம் அனுஷ்டிக்க வேண்டியதைக் கொண்டாடலாமா?''</p> <p>''ஒருவருடைய மரணத்தால், நீங்கள் மிகவும் சோகமாகி துன்பப்பட்டு நின்றால், அவரைப்பற்றி நினைத்துப் பார்க்க நல்ல விஷயங்கள் இல்லையோ என்று தோன்றுகிறது. அவர் உங்கள் வாழ்க்கையில் துக்கமும் துன்பமும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. </p> <p>ஒரு மரணத்துக்கு நீங்கள் காரணமாக இல்லாதவரை, அதைக் கொண்டாடுவது தவறே அல்ல. ஏனென்றால், சிறைப்பட்டு இருந்த உயிருக்குக் கிடைத்த விடுதலை அது. கொண்டாட விருப்பம் இல்லாதபட்சத்தில், மரணத்தை நளினமாகக் கையாளவாவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதைப் பெரிய துக்கமாக அனுஷ்டிக்காமல், இறந்தவர் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தியது எப்படி என்று யோசியுங்கள். </p> <p>அவர் உங்கள் வாழ்க்கைக்கு வளம்ஊட்டியிருந்தால், அதை நன்றியோடு நினைத்துப்பார்க்க வேண்டிய தருணம் அது. அவர் உங்களை மேம்படுத்தியதை உலகுக்கு மேம்பட்டவராக நடந்து கொள்ளாமல் வேறு எப்படித் தெரிவிப் பீர்கள்? </p> <p>ஆனந்தமாக வாழ்ந்தவர்களேவாழ்க் கையை முழுமையாக வாழ்ந்தவர்கள். அவர்கள் சாவையும் ஆனந்தமாகவே ஏற்றுக்கொள்வார்கள். </p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p align="center"></p> <p>பள்ளிக்கூடத்தைவிட்டு விலகும் போது, பழைய நண்பர்களைவிட்டு விலகுகிறீர்கள். கண்களில் நீர் நிறைந்து இருந்தாலும், அந்தப் பிரிதலைச் சந் தோஷமாக அடுத்த கட்டத்துக்குப் போகிற மனநிறைவுடன்தானே கொண்டாடுகிறீர்கள்? கல்லூரிப் படிப்பை முடிக்கும்போதும், பணியில் பதவி உயர்வு பெற்று மாற்றலாகிப் போகும் போதும், அதைக் கொண்டாடத் தயா ராகத்தானே இருக்கிறீர்கள்? அதுபோல் தான் இது. </p> <p>மரணம் என்பது வாழ்வின் அடுத்த பரிமாணம். ஆனந்தமாக வாழ்ந்தவர்கள் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறவே விரும்புவார்கள். அதை ஓர்இழப்பா கக் கருதி, முனகிக்கொண்டு இருக்க மாட்டார்கள். </p> <p>அந்தச் சாது ஒரு கிராமத்துக்கு வெளியே மரத்தடியில் அமர்ந்து இருந் தார். அவரிடம் ஒரு கிழிந்த துணிப்பை மட்டும் இருந்தது. அவரைத் தேடிக் கொண்டு, கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி ஓடி வந்தார். </p> <p>'நேற்று என் கனவில் ஒரு தேவதைவந் தாள். மரத்தடியில் ஒரு சாது அமர்ந்திருப் பார். அவரிடம் விலைமதிப்பற்ற ஒரு வைரக் கல் இருக்கிறது. அதைப் பெற்று உன் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள் என்று அந்தத் தேவதை சொன்னாள். அந்த வைரம் எங்கே ஐயா?' என்று ரகசியமான குரலில் கேட்டார். </p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p>'ஓ, அந்த வைரத்தைக் கேட்கிறாயா?' சாது தன் கிழிசல் பையில் கைவிட்டு ஒரு வைரக் கல்லை எடுத்தார். அது கிட்டத்தட்ட ஒரு தேங்காய் அளவு பெரி தாக இருந்தது. மாலை வெளிச்சத்தில் தகதகவென்று ஜொலித்தது. அதைவிடப் பெரிய வைரக் கல் உலகில் வேறு எதுவும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.</p> <p>அதைக் கையில் வாங்கிய விவசா யிக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. யார் கண்ணிலாவதுபட்டால், அவன் உயிரைப் பறித்தாவது அந்த வைரத்தைப் பிடுங்கிக்கொண்டு போய்விடுவார்கள் என்று அவனுக்குத் திடீரென்று பயம் வந்தது. அதைத் தன்னிடம் இருந்த பையில் ஒளித்து மார்போடு அணைத்தபடி, தன் ஊரை நோக்கி நடந்தான். </p> <p>இந்த அதிர்ஷ்டம்பற்றி அவனுடன் சேர்ந்து குடிக்கும் நண்பர்களிடம்சொன் னால், அதில் யாராவது பேராசைப்பட்டுத் துரோகம் செய்துவிடக்கூடும். மனைவி ஓட்டை வாய். அவளிடம்ரகசியங் கள் தங்காது. உறவினர்களிடம் சொன் னால், அவர்கள் வயிற்றெரிச்சல்கொண்டு எதையாவது செய்துவிடுவார்கள். </p> <p>யோசிக்க... யோசிக்க... குழப் பம் மிகுந்தது. அந்த வைரத்தை எங்கே, யாரிடம், எப்படிக் கொண்டுபோய் விற்பது என்பதும் புரியவில்லை. தலையணைக்கு அடியில் அதை வைத்துக்கொண்டு படுத்துக்கொண்டான். தூக்கம் வரவில்லை. வைரம் விற்ற பணம் அவனுடைய சமூக அந்தஸ்தை எந்த அளவுக்கு உயர்த்தும் என்று கற்பனை செய்தான். அரசனுடைய அரண்மனையை விலை பேசலாமா என்றெல்லாம் யோசனை தறிகெட்டு ஓடியது. </p> <p>அடுத்த சில நாட்களுக்கு என்னென்னவோ எண்ணங்கள் அவனை அலைக்கழித்தன. ஒரு கட்டத்தில், தூக்கம் தொலைந்து போய், நிம்மதியற்று பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. அந்த வைரத்தை எடுத்துக் கொண்டு, அந்தச் சாதுவிடம் ஓடினான். </p> <p>அவர் அதே மரத்தடியில் நிச்சலனமாக அமர்ந்திருந்தார், </p> <p>'ஐயா, அன்றைக்கு நான் கேட்டவுடன் இந்த வைரக் கல்லை ஒரு கணம்கூட யோசிக்காமல் எடுத்துக் கொடுத்துவிட்டீர்கள். அப்படியென்றால், இதைவிட விலைமதிப்பற்ற ஒன்றை நீங்கள் வைத்திருக்க வேண்டும். அது என்ன ஐயா?' என்று கேட்டான். </p> <table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>சாது புன்னகைத்தார். 'அதைப் பற்றிப் பேச வந்திருக்கிறாயா? நல்லது. முதலில் அந்தக் கல்லைத் தூர எறிந்துவிட்டு வா' என்றார். </p> <p>இப்படி, பொருள்தன்மை உடைய எதையும் விலைமதிப்பற்றது என்று இந்தக் கலாசாரத்தில் பார்க்கவில்லை. </p> <p>நமக்கு முன்பு இந்தப் பூமிக்கு வந்த எந்தத் தலைமுறையினரும் இத்தனை வசதிகளையும், விஞ்ஞான, மருத்துவ முன்னேற்றங்களையும் கண்டிருக்கவில்லை. ஆனாலும்கூட, இதை ஆனந்தமான தலைமுறை என்றோ, அமைதியான தலைமுறை என்றோ, அன்பான தலைமுறை என்றோ நம்மால் சொல்லிக் கொள்ள முடிகிறதா? இல்லை. ஏன்? நம் கவனம் எல்லாம் புற வளர்ச்சிகளில் ஆழ்ந்து இருக்கிறதே தவிர, உள் வளர்ச்சி பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்துவிட்டோம். </p> <p>வெளிச் சூழ்நிலைக்கு அடிமையாகிக் கிடப்பவர்கள்தான் இந்த உடல் மீது அதிக பற்றுகொண்டுஇருப்பார்கள். நிரந்தரமாக இங்கே வாழ முடியுமா என்று பேராசைப்படுவார்கள். </p> <p>அதைத் தகர்ப்பதுபோல், பிறப்பை எப்படிக் கொண்டாடுகிறோமோ, இறப்பையும் அப்படிக் கொண்டாடத் தயாராக இருக்க வேண்டும் என்றே இந்தக் கலாசாரம் சொல்லி வந்திருக்கிறது. உலகின் முன்னணியில் இருக்கும் வேறு எந்தக் கலாசாரத்திலும் மரணத்தைக் கொண்டாடும் வழக்கம் இல்லை.</p> <p>இறந்தவருடைய பிரிவை நீங் கள் கொண்டாடுவதாக அமையக் கூடாது. அதே சமயம், அவரு டைய பங்களிப்பு, உங்கள் வாழ்க்கையை எப்படி மேம்படுத்திக் கொடுத்தது என்ற நினைப்பு உங்களுக்கு ஆனந்தம் தர வேண் டும். உங்களைச் சிறைப்படுத்தாத உறவாக அது அமைந்து, அவர் மூலம் நீங்கள் பெற்றது உயர்வாக இருந்து, அப்படிப் பெற்றதை மற்றவர்களுக்கு நீங்கள் வழங்க நேர்ந்து இருந்தால், அவருடைய நினைவு உங்களிடம் துக்கம் கொண்டு வராது. நெகிழ்ச்சியும், ஆனந்தமும், கொண்டாட்டமும்தான் கொண்டுவரும். அப்படிப்பட்ட கொண்டாட்டத்தை ஆதரித்த அற்புதக் கலாசாரம் இது.</p> <p>இப்போது உண்மையான கொண்டாட்டம் வறண்டுபோய், அதன் ஆழமான நோக்கம் தேய்ந்துபோய், சடங்கின் மிச் சமே இருக்கிறது. கொண்டாட் டம் என்றால் மூச்சுமுட்டக் குடித்துவிட்டு, இரைச்சலான மேளத்துக்கு இஷ்டப்படி நடனம் ஆடுவது என்று நோக்கம் குறுகி விட்டது வருத்தத்துக்கு உரியது. </p> <p>நாம் எல்லோரும் ஒரு தற்காலிகப் பயணத்தில் சக பயணிகள்தாம். இங்கு ஒருவருக்கு மற்றவர் துணையாக இருந்து, அடுத்தவர் வாழ்க்கைக்கு மேன்மையான, அற்புதமான பங்களிப்பைத் தர வேண்டும். இதை உணர்த்தும் வெளிப்பாடாக, மரணத்தைக் கொண்டாடுவது என்பது ஓர் உண்மை உணர்தலாக இங்கு பேணப்பட்டது. மறுபடியும் அதே நோக்கத்துடன் மரணத்தைக் கொண்டாடும் வழக்கத்தை இங்கு கொண்டுவந்தால், அது பாராட்டப்பட வேண்டியதாகும்!''</p> <p align="right"><em><strong>- சரிசெய்வோம்... </strong></em></p> <table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="98%"> <tbody> <tr valign="top"> <td colspan="2"><table bgcolor="#990000" border="0" cellpadding="1" cellspacing="0" width="100%"> <tbody> <tr> <td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody> <tr> <td bgcolor="#ffffff"><table align="center" border="0" cellpadding="3" cellspacing="3" width="100%"> <tbody> <tr> <td bgcolor="#FFF5EC" class="block_color_bodytext"><p align="center" class="blue_color style4">சத்குருவின் 'ஜென்'னல்!</p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="98%"><tbody><tr valign="top"><td colspan="2"><table bgcolor="#990000" border="0" cellpadding="1" cellspacing="0" width="100%"><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr><td bgcolor="#ffffff"><table align="center" border="0" cellpadding="3" cellspacing="3" width="100%"><tbody><tr><td bgcolor="#FFF5EC" class="block_color_bodytext"><p><strong>ஒ</strong>ரு ஜென் குரு மிகச் சிறந்த வாள் வீரராக விளங்கினார்.</p> <p>அவரிடம் ஒரு புதிய சீடன் சேர்ந்தான். ''இந்த நாட்டிலேயே முதன்மையான வாள் வீரனாக வேண்டும் என்று விரும்பி உங்களிடம் வந்திருக்கிறேன்'' என்றான். </p> <p>''அதற்கென்ன, 10 வருடங்களில் உன்னை அப்படித் தயார் செய்து விடுகிறேன்'' என்றார் குரு. </p> <p>''என்னது, 10 வருடங்களா? ஐந்தே வருடங்களில் சாதிக்க வேண்டும். மற்றவர்களைவிட இரண்டு பங்கு அதிகமாக உழைக்கத் தயாராக இருக்கிறேன்.'' </p> <p>''அப்படியானால் 20 வருடங்கள் ஆகும்.'' </p> <p>சீடன் திகைத்தான், ''போதாது என்றால், நான்கு பங்கு கடுமையாக உழைக்கிறேன்'' என்றான்.</p> <p>''அப்படிச் செய்தால் 60 வருடங்கள் ஆகுமே'' என்றார் ஜென்குரு.</p> <p class="orange_color"><strong>சத்குருவின் விளக்கம்:</strong></p> <p><strong>வா</strong>ழ்க்கை என்பது குறிப்பிட்ட நேரம் கிடைத்தால், கடுமையாகப் போராடிப் புரிந்துகொள்ள முடியும் என்பதல்ல; எந்த அளவு சுலபமாக வாழ்க்கையில் நீங்கள் நழுவி உங்களைப் பொருத்திக்கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். </p> <p>வாழ்க்கைக்கு மட்டுமல்ல; கலையின் எந்த வடிவத்துக்கும் இது பொருந்தும். உங்களை வருத்திக் கொள்ள, வருத்திக் கொள்ள, நீங்கள் நினைத்ததை அடைவதற்கு அதிக காலம் ஆகும். கடுமையாக உழைப் பவர்கள் அதற்கான ஊதியம் பெறக்கூடும். ஆனால், சந்தோஷத்தை அனுபவித்திருக்க முடியாது. முழுமையை உணர்ந்திருக்க இயலாது.</p> <p>போராடுவதால், சிறந்த பாடகராகவோ, ஓவியராகவோ, நாட்டிய நிபுணராகவோ மாறிவிட முடியாது. உழைப்பு அவசியம்தான். ஆனால், கடுமையாக உழைப்பதால் மட்டும் எதிலும் சிறந்து விளங்கிவிட முடியாது. அது சாத்தியம் என்றால், இந்நேரம் உழைப்புக்கு அஞ்சாத கழுதைகளை மிகச் சிறந்த கலை ஞர்களாக்கி இருக்கலாம். </p> <p>திறன் என்பது கலையை நீங்கள் எப்படிப் பற்றிக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. அதைவிட, அந்தக் கலை உங்களைப் பற்றிக்கொண்டு நீங்கள் அதில் கரைந்து போக முடிந்தால், நீங்கள் மிக மிகச் சிறந்த கலைஞராக விளங்குவீர்கள். </p> <p>வாழ்க்கையும் அப்படித்தான். அதைப்பற்றிக்கொள்ள விழைவதைவிட, வாழ்க்கை உங்களைப் பற்றிக்கொள்ள அனுமதியுங்கள். அற்புதங்கள் நிகழும்!<br /> </p></td> </tr> </tbody> </table></td> </tr> </tbody> </table></td> </tr> </tbody> </table></td> </tr> </tbody> </table> </td> </tr> <tr> <td align="left" colspan="3" valign="top"> </td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td align="left" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="right" valign="middle" width="5"></td> </tr> </tbody></table> <!-- google_ad_section_end --><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascript:history.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>