<p style="text-align: center"><span style="font-size: small"><span style="color: #003300"><strong>தமிழ் பட்ட கடன்! </strong></span></span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>எழுபது</p>.<p>எண்பதுகளில்...</p>.<p>கம்பன் விழாக் கவியரங்கங்களில், நான் கலந்துகொண்டு பாடுகையில் -</p>.<p>கோடம்பாக்கம் தமிழைக் காரைக்குடிக்கும் கொண்டுவந்துவிடுவானோ என்று - முத்தமிழ்த் துறையில் ஆழங்காற்பட்டோர் முனகியதுண்டு.</p>.<p>அவர்களது அய்யப்பாட்டை அறவேஅகற்ற, அடியேன் ஆரம்பத்திலேயே பாடினேன் அடியில் கண்டவாறு:</p>.<p><span style="color: #000000">'அங்கே நான்<br /> விட்டெறியும் எலும்புக்கு<br /> வாலாட்டும் நாய்;<br /> இங்கே நான் -<br /> வண்ணமொழிப் பிள்ளைக்குத்<br /> தாலாட்டும் தாய்!’ </span></p>.<p><strong>தொ</strong>டர்ந்து -</p>.<p>தன்னிலை விளக்கமாய், ஓர் அறுசீர் விருத்தமும் பாடினேன்!</p>.<p><span style="color: #000000">'ஆசுகவி அடியே னல்ல;<br /> அடிவயிற்றின் பாட்டைப் பாடும்<br /> காசுகவி; காசில் லாது<br /> கடன்சொலும் படாதி பர்க்கோ<br /> ஓசுகவி; ஆயி னும்நான்<br /> ஓயாமல் தமிழின் மேன்மை<br /> பேசுகவி; பேசிப் பேசிப்<br /> பேசரிய இன்பந் துய்ப்போன்!’ </span></p>.<p>- கற்பனைக்கு ஒரு தமிழையும், விற்பனைக்கு ஒரு தமிழையும், கைவசமும் பைவசமும் வைத்திருப்பவன் நான்.</p>.<p>எந்தத் தமிழை எங்கே வைக்க வேண்டும் என்ற -</p>.<p>நியாயத்தைக்கூடத் தெரிந்து வைத்திடாத நிரட்சர குட்சியா நான்?</p>.<p><strong>த</strong>மிழ்பால் எனக்குத் தாளாத காதல் உண்டு; தமிழ் தந்ததல்லவா - எனது சோறும் சோமனும்!</p>.<p>எனினும் -</p>.<p>என் முதல் நன்றி பசுந்தமிழுக்கல்ல; பனை மரத்துக்குத்தான்!</p>.<p>நெடுநாள் முன்னாடி 'நெடுமரமே! நெடுமரமே!’ என்றொரு கவிதை எழுதினேன் - செட்டி நாட்டுப் பக்கம் நடந்த ஒரு தமிழ் விழாவையட்டி வெளியான சிறப்பு மலரில்!</p>.<p>'நெடுமரமே!<br /> நெடுமரமே!<br /> நீர் ஊற்றாமலே - நீ<br /> நீண்டாய் விசும்பு நோக்கி;</p>.<p>ஆனால் -<br /> ஆர்க்கும்...<br /> நிற்கக்கூட<br /> நிழல் தர -<br /> வக்கற்ற உன்னை<br /> வசை பாடாமல்...</p>.<p>வாழ்த்தி<br /> வணங்குவேன் -<br /> தலைக்கு மேல் - என்<br /> தடக் கைகள் தூக்கி!</p>.<p><strong>ப</strong>னையே! நெடும்<br /> பனையே!</p>.<p>எங்களுக்கு<br /> எள்முனை நிழல் தராவிடினும் -<br /> எங்கள் தமிழ்நிற்க - உன் போல்<br /> எவர் தந்தார் தண்ணிழல்?<br /> நீ -<br /> தராவிடில் - எங்கள்<br /> தமிழ்ச் செல்வங்களைத்<br /> தின்றிருக்குமே காலமெனும்<br /> தீயழல்!</p>.<p>வாய்வழி<br /> வாய்வழியாய் வந்து -<br /> வண்டமிழ்க் காவியங்கள்<br /> வாழ்வது எத்துணைக் காலம்?</p>.<p>ஒண்டமிழை - உன்<br /> ஓலையில் நீ உட்கார்த்தாவிடில் -<br /> எழுதாக் கிளவி என்றாகியிருக்கும்<br /> எங்கள் தமிழும் இத்துணை காலம்!</p>.<p><strong>நா</strong>ட்டோரே!<br /> நம் -<br /> பாமரம் தீர்த்தது<br /> பனை மரம்;<br /> அதற்கு நன்றி சொல்வோம்<br /> அனைவரும்!’</p>.<p><strong>சி</strong>னிமாவில் - 'சிலுக்கதிகாரம்’ எழுதினாலும், சிந்தையில் நிறைந்திருந்தது சிலப்பதிகாரம்!</p>.<p>பட உரையாடல்களில், பாடல்களில் தமிழை யாரேனும் தவறாக உச்சரித்தால், மூத்திரம் போகுமிடத்தில் மிளகாய்த்தூளை வைத்தது போலிருக்கும் எனக்கு!</p>.<p>மாத்திரை - மருந்து வகையில் மட்டுமல்ல; மணித் தமிழிலும் உண்டு. எழுத்தின் ஒலி அளவை எடுத்தோதுகிறது இலக்கணம் நமக்கு!</p>.<p>இப்படியெல்லாம் இருக்கையில் - உச்சரிப்பு பற்றி ஓர் எச்சரிப்பு வேண்டாமா?</p>.<p>லகரம்;<br /> ளகரம்;<br /> ழகரம்;</p>.<p>மூன்றையும் தெளிவாகத் தேங்காய் உடைத்தாற்போல் - உச்சரித்த காலம்ஒன்று இருந்தது தமிழ் சினிமாவில்!</p>.<p>வட நாட்டுப் பாடகர்கள் வந்து பாடுவதால் - இன்றைய பாடல்கள் -</p>.<p>சீரார் தமிழுக்குச் சிரங்கு பிடித்தாற்போல் இருக்கிறது.</p>.<p>'சொன்னால் விரோதம்; ஆயினும் சொல்லுவேன்!’ என்று -</p>.<p>வைணவத்தில் ஒரு வழக்கிருக்கிறது; அதையட்டி -</p>.<p>பிறப்பால் ஒரு வைணவன் என்பதாலும், பிரபந்தங்களில் ஊறியவன் என்பதாலும் - சில விஷயங்களைப் பேசப் புகுந்தேன்!</p>.<p>தமிழ் சினிமாவில், தமிழ் சீவித்திருப்பதற்கு மிக மிக மிக மிக -</p>.<p>முக்கியமானவர்<br /> மூவர்;<br /> கலைஞர் -<br /> சிவாஜி -<br /> டி.எம்.எஸ் - இம்<br /> மூவரல்லால் வேறு<br /> யாவர்?<br /> கலைஞரால்<br /> கண்டுகொண்டோம் -<br /> பூந்தமிழின்<br /> புலமை;<br /> சிவாஜியால்<br /> சிறக்கக் கண்டோம் -<br /> வண்டமிழின்<br /> வலிமை;<br /> டி.எம்.எஸ்ஸால்<br /> தெரியக் கண்டோம் -<br /> இருந்தமிழின்<br /> இனிமை!</p>.<p><strong>அ</strong>கவை தொண்ணூற்றை, அடுத்த ஆண்டு தொட இருக்கிறார் திரு.டி.எம்.சௌந்திரராஜன் அவர்கள்.</p>.<p>1956-ல் - என் வாழ்வில் விளக்கேற்றிவைத்த புண்ணியவான் அவர்தான்.</p>.<p>ஒரு தபால் கார்டில் எழுதியனுப்பினேன் ஒரு முருகன் பாட்டை.</p>.<p>அதை - H.M.V-யில் பாடி இசைத்தட்டாக வெளியிட்டு -</p>.<p>என் பாட்டுப் பயணத்திற்குப் பச்சைக் கொடி காட்டினார் அண்ணன் டி.எம்.எஸ்.</p>.<p>அவரது ஆரம்ப காலப் பாட்டு ஒன்று. நான் ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது - எந்த வீட்டுக் கல்யாணப் பந்தலில் கட்டியிருக்கும் ஒலிபெருக்கி யாயினும் - அதில் அது ஒலிக்கும்</p>.<p>கவிஞர் திரு N.S. சிதம்பரம் அவர்கள் எழுதி தனி ரிக்கார்டாக - சுருட்டி ராகத்தில் திரு.டி.எம்.எஸ் பாடியது அந்தப் பாட்டு!</p>.<p>'மங்கலமாய் வாழ வேண்டும்;<br /> மற்றென்ன வேண்டும்!’</p>.<p>- இந்தப் பாட்டைக் கேட்ட அனைவரும் ஸ்ரீரங்கத்து கோபுரத்தின் மீதேறிச் சத்தியம் செய்தனர் -</p>.<p>சிறைக்குப் போகுமுன் இது எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய பாட்டு என்று!</p>.<p>அந்த அளவு -</p>.<p>பாகவதரை விழுங்கித் தொண்டையில் வைத்துக்கொண்டு பாடியிருந்தார் டி.எம்.எஸ்.</p>.<p>அவர் விலாசத்தை அறிந்துகொண்டு, நான் தபால் கார்டில் எழுதி அனுப்பிய பாடல்தான் -</p>.<p>இன்றளவும் இறவாமல் இருக்கிறது.</p>.<p>அதுதான் -<br /> 'கற்பனையென்றாலும் கற்சிலையென்றாலும்<br /> கந்தனே! உனை மறவேன்!’ - என்பது!</p>.<p><strong>மு</strong>ம்பையில் - 'முலுண்ட்’ எனும் இடத்தில் நான் என் சகோதரர் வீட்டில் தங்கியிருந்தேன் 1960-ல்.</p>.<p>முலுண்டில் - 'வாணி வித்யாலயா’ என்றொரு பள்ளி உண்டு. அங்கு, பாட வந்திருந்தார் திரு.டி.எம்.எஸ்.</p>.<p>உடனே, நான் ஓடிப் போய் பார்த்து - அவரை என் வீட்டுக்கு வரும்படி வேண்டினேன். அட்டி யின்றி வந்தார். </p>.<p>நோய்வாய்ப்பட்டிருந்த என் தாய் தீவிர டி.எம்.எஸ் ரசிகையாவார்.</p>.<p>ஒரு பாடலைப் பாடச் சொல்லி, என் அம்மா கேட்டார்கள். என் அம்மாவுக்கு மிக மிக இஷ்டமான பாட்டு அது.</p>.<p>உடனே - ஓர் ஆர்மோனியப் பெட்டியைப் பக்கத்து வீட்டில் இருந்து வரவழைத்து -</p>.<p>டி.எம்.எஸ் பாடினார், என் அன்னை அகம் குளிர.</p>.<p>அந்தப் பாடல்தான் - 'ஏன் பிறந்தாய் மகனே!’ எனும் 'பாகப்பிரிவினை’ பாட்டு!</p>.<p><strong>அ</strong>ப்போதெல்லாம் நான் நினைத்தது இல்லை - பின்னாளில் ஆயிரக்கணக்கான என் சினிமாப் பாடல்களை அண்ணன் டி.எம்.எஸ் பாடுவார்கள் என்று!</p>.<p>தன்னுடைய குரல்வளம் - திரு.எம்.ஜி.ஆர்; திரு.சிவாஜி ஆகியோர் புகழ்பெற, ஓரளவு உதவிஉள்ளது என்று டி.எம்.எஸ் அவர்கள் பேசுவதை-</p>.<p>சிலர், ஜீரணிக்க மறுக்கிறார்கள். ஆனால், நான் சத்தியம் செய்து சொல்லுகிறேன் -</p>.<p>திரு.எம்.ஜி.ஆர்; திரு.சிவாஜி ஆகியோர் பாடல் களுக்கு உயிர் கொடுத்தது திரு.டி.எம்.எஸ்-ஸின் வெண்கல நாதம்தான்.</p>.<p>அவ் இருவரின் புகழுக்கு - திரு.டி.எம்.எஸ் குரலின் பங்களிப்பு அதிகம் என்று சொன்னால் அது மிகையாகாது.</p>.<p>எனவே - திரு.டி.எம்.எஸ். தன் குரல் பற்றி சற்று 'வித்யா கர்வம்’ என்பார்களே - அதுபோல் ஒரு மதிப்பீடு கொண்டிருப்பது -</p>.<p>அகந்தை யாகாது. அது அக்மார்க் - அரிச்சந்திர உண்மை!</p>.<p><strong>த</strong>மிழுக்குத்தான் நாமெல்லாம் கடன்பட்டிருக்கிறோம். ஆனால்-தமிழ், டி.எம்.எஸ்ஸுக்குக் கடன் பட்டிருக்கிறது.</p>.<p>பிழையற உச்சரித்து; அதன் புகழ்க் கொடியை வானளாவப் பறக்கவிட்டதால்! விடுவதால்!</p>.<p><span style="color: #993300"><strong>- சுழலும்...</strong></span></p>
<p style="text-align: center"><span style="font-size: small"><span style="color: #003300"><strong>தமிழ் பட்ட கடன்! </strong></span></span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>எழுபது</p>.<p>எண்பதுகளில்...</p>.<p>கம்பன் விழாக் கவியரங்கங்களில், நான் கலந்துகொண்டு பாடுகையில் -</p>.<p>கோடம்பாக்கம் தமிழைக் காரைக்குடிக்கும் கொண்டுவந்துவிடுவானோ என்று - முத்தமிழ்த் துறையில் ஆழங்காற்பட்டோர் முனகியதுண்டு.</p>.<p>அவர்களது அய்யப்பாட்டை அறவேஅகற்ற, அடியேன் ஆரம்பத்திலேயே பாடினேன் அடியில் கண்டவாறு:</p>.<p><span style="color: #000000">'அங்கே நான்<br /> விட்டெறியும் எலும்புக்கு<br /> வாலாட்டும் நாய்;<br /> இங்கே நான் -<br /> வண்ணமொழிப் பிள்ளைக்குத்<br /> தாலாட்டும் தாய்!’ </span></p>.<p><strong>தொ</strong>டர்ந்து -</p>.<p>தன்னிலை விளக்கமாய், ஓர் அறுசீர் விருத்தமும் பாடினேன்!</p>.<p><span style="color: #000000">'ஆசுகவி அடியே னல்ல;<br /> அடிவயிற்றின் பாட்டைப் பாடும்<br /> காசுகவி; காசில் லாது<br /> கடன்சொலும் படாதி பர்க்கோ<br /> ஓசுகவி; ஆயி னும்நான்<br /> ஓயாமல் தமிழின் மேன்மை<br /> பேசுகவி; பேசிப் பேசிப்<br /> பேசரிய இன்பந் துய்ப்போன்!’ </span></p>.<p>- கற்பனைக்கு ஒரு தமிழையும், விற்பனைக்கு ஒரு தமிழையும், கைவசமும் பைவசமும் வைத்திருப்பவன் நான்.</p>.<p>எந்தத் தமிழை எங்கே வைக்க வேண்டும் என்ற -</p>.<p>நியாயத்தைக்கூடத் தெரிந்து வைத்திடாத நிரட்சர குட்சியா நான்?</p>.<p><strong>த</strong>மிழ்பால் எனக்குத் தாளாத காதல் உண்டு; தமிழ் தந்ததல்லவா - எனது சோறும் சோமனும்!</p>.<p>எனினும் -</p>.<p>என் முதல் நன்றி பசுந்தமிழுக்கல்ல; பனை மரத்துக்குத்தான்!</p>.<p>நெடுநாள் முன்னாடி 'நெடுமரமே! நெடுமரமே!’ என்றொரு கவிதை எழுதினேன் - செட்டி நாட்டுப் பக்கம் நடந்த ஒரு தமிழ் விழாவையட்டி வெளியான சிறப்பு மலரில்!</p>.<p>'நெடுமரமே!<br /> நெடுமரமே!<br /> நீர் ஊற்றாமலே - நீ<br /> நீண்டாய் விசும்பு நோக்கி;</p>.<p>ஆனால் -<br /> ஆர்க்கும்...<br /> நிற்கக்கூட<br /> நிழல் தர -<br /> வக்கற்ற உன்னை<br /> வசை பாடாமல்...</p>.<p>வாழ்த்தி<br /> வணங்குவேன் -<br /> தலைக்கு மேல் - என்<br /> தடக் கைகள் தூக்கி!</p>.<p><strong>ப</strong>னையே! நெடும்<br /> பனையே!</p>.<p>எங்களுக்கு<br /> எள்முனை நிழல் தராவிடினும் -<br /> எங்கள் தமிழ்நிற்க - உன் போல்<br /> எவர் தந்தார் தண்ணிழல்?<br /> நீ -<br /> தராவிடில் - எங்கள்<br /> தமிழ்ச் செல்வங்களைத்<br /> தின்றிருக்குமே காலமெனும்<br /> தீயழல்!</p>.<p>வாய்வழி<br /> வாய்வழியாய் வந்து -<br /> வண்டமிழ்க் காவியங்கள்<br /> வாழ்வது எத்துணைக் காலம்?</p>.<p>ஒண்டமிழை - உன்<br /> ஓலையில் நீ உட்கார்த்தாவிடில் -<br /> எழுதாக் கிளவி என்றாகியிருக்கும்<br /> எங்கள் தமிழும் இத்துணை காலம்!</p>.<p><strong>நா</strong>ட்டோரே!<br /> நம் -<br /> பாமரம் தீர்த்தது<br /> பனை மரம்;<br /> அதற்கு நன்றி சொல்வோம்<br /> அனைவரும்!’</p>.<p><strong>சி</strong>னிமாவில் - 'சிலுக்கதிகாரம்’ எழுதினாலும், சிந்தையில் நிறைந்திருந்தது சிலப்பதிகாரம்!</p>.<p>பட உரையாடல்களில், பாடல்களில் தமிழை யாரேனும் தவறாக உச்சரித்தால், மூத்திரம் போகுமிடத்தில் மிளகாய்த்தூளை வைத்தது போலிருக்கும் எனக்கு!</p>.<p>மாத்திரை - மருந்து வகையில் மட்டுமல்ல; மணித் தமிழிலும் உண்டு. எழுத்தின் ஒலி அளவை எடுத்தோதுகிறது இலக்கணம் நமக்கு!</p>.<p>இப்படியெல்லாம் இருக்கையில் - உச்சரிப்பு பற்றி ஓர் எச்சரிப்பு வேண்டாமா?</p>.<p>லகரம்;<br /> ளகரம்;<br /> ழகரம்;</p>.<p>மூன்றையும் தெளிவாகத் தேங்காய் உடைத்தாற்போல் - உச்சரித்த காலம்ஒன்று இருந்தது தமிழ் சினிமாவில்!</p>.<p>வட நாட்டுப் பாடகர்கள் வந்து பாடுவதால் - இன்றைய பாடல்கள் -</p>.<p>சீரார் தமிழுக்குச் சிரங்கு பிடித்தாற்போல் இருக்கிறது.</p>.<p>'சொன்னால் விரோதம்; ஆயினும் சொல்லுவேன்!’ என்று -</p>.<p>வைணவத்தில் ஒரு வழக்கிருக்கிறது; அதையட்டி -</p>.<p>பிறப்பால் ஒரு வைணவன் என்பதாலும், பிரபந்தங்களில் ஊறியவன் என்பதாலும் - சில விஷயங்களைப் பேசப் புகுந்தேன்!</p>.<p>தமிழ் சினிமாவில், தமிழ் சீவித்திருப்பதற்கு மிக மிக மிக மிக -</p>.<p>முக்கியமானவர்<br /> மூவர்;<br /> கலைஞர் -<br /> சிவாஜி -<br /> டி.எம்.எஸ் - இம்<br /> மூவரல்லால் வேறு<br /> யாவர்?<br /> கலைஞரால்<br /> கண்டுகொண்டோம் -<br /> பூந்தமிழின்<br /> புலமை;<br /> சிவாஜியால்<br /> சிறக்கக் கண்டோம் -<br /> வண்டமிழின்<br /> வலிமை;<br /> டி.எம்.எஸ்ஸால்<br /> தெரியக் கண்டோம் -<br /> இருந்தமிழின்<br /> இனிமை!</p>.<p><strong>அ</strong>கவை தொண்ணூற்றை, அடுத்த ஆண்டு தொட இருக்கிறார் திரு.டி.எம்.சௌந்திரராஜன் அவர்கள்.</p>.<p>1956-ல் - என் வாழ்வில் விளக்கேற்றிவைத்த புண்ணியவான் அவர்தான்.</p>.<p>ஒரு தபால் கார்டில் எழுதியனுப்பினேன் ஒரு முருகன் பாட்டை.</p>.<p>அதை - H.M.V-யில் பாடி இசைத்தட்டாக வெளியிட்டு -</p>.<p>என் பாட்டுப் பயணத்திற்குப் பச்சைக் கொடி காட்டினார் அண்ணன் டி.எம்.எஸ்.</p>.<p>அவரது ஆரம்ப காலப் பாட்டு ஒன்று. நான் ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது - எந்த வீட்டுக் கல்யாணப் பந்தலில் கட்டியிருக்கும் ஒலிபெருக்கி யாயினும் - அதில் அது ஒலிக்கும்</p>.<p>கவிஞர் திரு N.S. சிதம்பரம் அவர்கள் எழுதி தனி ரிக்கார்டாக - சுருட்டி ராகத்தில் திரு.டி.எம்.எஸ் பாடியது அந்தப் பாட்டு!</p>.<p>'மங்கலமாய் வாழ வேண்டும்;<br /> மற்றென்ன வேண்டும்!’</p>.<p>- இந்தப் பாட்டைக் கேட்ட அனைவரும் ஸ்ரீரங்கத்து கோபுரத்தின் மீதேறிச் சத்தியம் செய்தனர் -</p>.<p>சிறைக்குப் போகுமுன் இது எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய பாட்டு என்று!</p>.<p>அந்த அளவு -</p>.<p>பாகவதரை விழுங்கித் தொண்டையில் வைத்துக்கொண்டு பாடியிருந்தார் டி.எம்.எஸ்.</p>.<p>அவர் விலாசத்தை அறிந்துகொண்டு, நான் தபால் கார்டில் எழுதி அனுப்பிய பாடல்தான் -</p>.<p>இன்றளவும் இறவாமல் இருக்கிறது.</p>.<p>அதுதான் -<br /> 'கற்பனையென்றாலும் கற்சிலையென்றாலும்<br /> கந்தனே! உனை மறவேன்!’ - என்பது!</p>.<p><strong>மு</strong>ம்பையில் - 'முலுண்ட்’ எனும் இடத்தில் நான் என் சகோதரர் வீட்டில் தங்கியிருந்தேன் 1960-ல்.</p>.<p>முலுண்டில் - 'வாணி வித்யாலயா’ என்றொரு பள்ளி உண்டு. அங்கு, பாட வந்திருந்தார் திரு.டி.எம்.எஸ்.</p>.<p>உடனே, நான் ஓடிப் போய் பார்த்து - அவரை என் வீட்டுக்கு வரும்படி வேண்டினேன். அட்டி யின்றி வந்தார். </p>.<p>நோய்வாய்ப்பட்டிருந்த என் தாய் தீவிர டி.எம்.எஸ் ரசிகையாவார்.</p>.<p>ஒரு பாடலைப் பாடச் சொல்லி, என் அம்மா கேட்டார்கள். என் அம்மாவுக்கு மிக மிக இஷ்டமான பாட்டு அது.</p>.<p>உடனே - ஓர் ஆர்மோனியப் பெட்டியைப் பக்கத்து வீட்டில் இருந்து வரவழைத்து -</p>.<p>டி.எம்.எஸ் பாடினார், என் அன்னை அகம் குளிர.</p>.<p>அந்தப் பாடல்தான் - 'ஏன் பிறந்தாய் மகனே!’ எனும் 'பாகப்பிரிவினை’ பாட்டு!</p>.<p><strong>அ</strong>ப்போதெல்லாம் நான் நினைத்தது இல்லை - பின்னாளில் ஆயிரக்கணக்கான என் சினிமாப் பாடல்களை அண்ணன் டி.எம்.எஸ் பாடுவார்கள் என்று!</p>.<p>தன்னுடைய குரல்வளம் - திரு.எம்.ஜி.ஆர்; திரு.சிவாஜி ஆகியோர் புகழ்பெற, ஓரளவு உதவிஉள்ளது என்று டி.எம்.எஸ் அவர்கள் பேசுவதை-</p>.<p>சிலர், ஜீரணிக்க மறுக்கிறார்கள். ஆனால், நான் சத்தியம் செய்து சொல்லுகிறேன் -</p>.<p>திரு.எம்.ஜி.ஆர்; திரு.சிவாஜி ஆகியோர் பாடல் களுக்கு உயிர் கொடுத்தது திரு.டி.எம்.எஸ்-ஸின் வெண்கல நாதம்தான்.</p>.<p>அவ் இருவரின் புகழுக்கு - திரு.டி.எம்.எஸ் குரலின் பங்களிப்பு அதிகம் என்று சொன்னால் அது மிகையாகாது.</p>.<p>எனவே - திரு.டி.எம்.எஸ். தன் குரல் பற்றி சற்று 'வித்யா கர்வம்’ என்பார்களே - அதுபோல் ஒரு மதிப்பீடு கொண்டிருப்பது -</p>.<p>அகந்தை யாகாது. அது அக்மார்க் - அரிச்சந்திர உண்மை!</p>.<p><strong>த</strong>மிழுக்குத்தான் நாமெல்லாம் கடன்பட்டிருக்கிறோம். ஆனால்-தமிழ், டி.எம்.எஸ்ஸுக்குக் கடன் பட்டிருக்கிறது.</p>.<p>பிழையற உச்சரித்து; அதன் புகழ்க் கொடியை வானளாவப் பறக்கவிட்டதால்! விடுவதால்!</p>.<p><span style="color: #993300"><strong>- சுழலும்...</strong></span></p>