<p style="text-align: center"><span style="color: #800080"><span style="font-size: small"><strong>இரு தலைப்புகள்! </strong></span></span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>அ</strong>றுபது</p>.<p>ஆண்டுகள் முன்...</p>.<p>ஒரு MULTISTOREY BUILDING கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும் போதே -</p>.<p>இடிந்து விழ, அதன் இடிபாடுகளில் சிக்கி - நூற்றுக்கணக்கான உழைப்பாளர் மண்ணில் புதையுண்டனர்!</p>.<p>இது நடந்தது - அன்றைய பம்பாயில் -</p>.<p>நான் வாழ்ந்திருந்த நாள்களில்.</p>.<p>இந்த அவல நிகழ்வை ஆறு பத்திகளில் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்த Times of India</p>.<p>கீழ்க் கண்டவாறு கவித்துவமான ஒரு தலைப்பைக் கொடுத்திருந்தது.</p>.<p>‘Sons of Toil- Under<br /> Tons of Soil!’</p>.<p><span style="color: #ff0000"><em>'<strong>ஏ</strong>ராளமான<br /> எடைகொண்ட<br /> மண்ணுக்கடியில் - உழைப்பின்<br /> மைந்தர்கள்!’</em></span></p>.<p>- என்று இதை மொழிபெயர்த்தால் நன்றாகவா இருக்கும்?</p>.<p><strong>தி</strong>ரு.அகிலனுக்கு 'ஞான பீட விருது’ கிடைக்கிறது.</p>.<p>அகிலன் அவர்கள் தபால் இலாகாவில் பணியாற்றியவர்.</p>.<p>இதை மனத்தில்கொண்டு - அன்றைய Indian Express</p>.<p>அவர் விருது பெற்றதைப் பாராட்டு முகத்தான், கீழ்க் கண்டவாறு குறிப்பிட்டிருந்தது.</p>.<p> ‘A MAN WITH LETTERS; NOW <br /> A MAN OF LETTERS!’</p>.<p>'<strong>L</strong>etter’ என்பதற்குக் கடிதம் என்றொரு பொருளும் - எழுத்து என்றொரு பொருளும் உள்ளதை ஓர்ந்துதான் -</p>.<p>Express இப்படி 'Pun’ செய்திருந்தது!</p>.<p><strong>அ</strong>கிலனைப் பற்றிய இந்தக் கணிப்பை நான் வெகுவாக ரசித்தேன்.</p>.<p>ஏனெனில் - அவர் என் பால்ய கால நண்பர் என்பது மட்டுமல்ல -</p>.<p>கடிதங்களைக் கரத்திலும்; கதைகளைக் கருத்திலும் தாங்கி நின்றதைத் தமியேன் நன்கறிவேன்.</p>.<p>அகிலன் -</p>.<p>திருச்சி தென்னூர்வாசி; அடியேன் திருவரங்கவாசி.</p>.<p>வாரம் இரு முறையாவது - ஸ்ரீரங்கத்திலிருந்து பஸ் ஏறி -</p>.<p>தென்னூருக்குப் போவேன் - அவர் குடியிருந்த நெ.5. பட்டாபிராமப் பிள்ளைத் தெருவில் இருந்த அவர் வீட்டிற்கு!</p>.<p><strong>இ</strong>ருவரும் -</p>.<p>பொடி நடையாகப் பேசிக்கொண்டே -</p>.<p>அருகிலிருந்த ஒரு Coffee Club-க்குப் போவோம்.</p>.<p>அந்த ஹோட்டல் இருந்த இடம் - 'கிந்தனார் குதிரை வண்டி ஸ்டாண்ட்’ பக்கம்!</p>.<p>அது -</p>.<p>குதிரை வண்டிக்காரர்களுக்காகக் கலைவாணர் தன் சொந்த செலவில் கட்டிக்கொடுத்தது.</p>.<p>'கிந்தனார் குதிரை வண்டி நிலையம்’ - என்று அதற்குப் பெயர் சூட்டி -</p>.<p>சின்னதாய் ஒரு திறப்பு விழாவும் நடத்தினார் கலைவாணர்.</p>.<p>அந்த விழாவில், அவருக்கே உரித்தான நகைச்சுவைப் பாணியில், திரு.N.S.K. அவர்கள் கீழ்க் கண்டவாறு உரையாற்றினார்கள்.</p>.<p>''எல்லாரும் என்னைக் கேக்குறாங்க - 'ஏன்யா, குதிரெ வண்டிக்காரங்களுக்கு இப்படியரு Stand கட்டிக் கொடுத்தீங்க’ன்னு!</p>.<p>அய்யா! இந்த உலகத்துல - எவனாச்சும், நாம முன்னுக்கு வர்றதெ விரும்புவானா?</p>.<p>ஆனா - குதிரெ வண்டிக்காரன் மட்டும் தான் -</p>.<p>நாம வண்டியில ஏறி உக்காந்தவுடனே, வஞ்சனையில்லாமெ -</p>.<p>'அய்யா! முன்னுக்கு வாங்க; முன்னுக்கு வாங்க’ன்னு, ஆசையாச் சொல்றான்.</p>.<p>அதனாலதான், அவங்க பரந்த உள்ளத்தை மதிச்சு - இந்த வண்டி ஸ்டாண்டைக் கட்டிக் குடுத்தேன்!''</p>.<p>- இப்படிக் கலைவாணர் அற்றை நாளில் ஆற்றிய உரையைப் பற்றியும் -</p>.<p>இன்னும் இதுதான் என்றில்லாமல், நானும் அகிலனும் -</p>.<p>ஆளுக்கொரு கோப்பை காப்பியை வைத்துக்கொண்டு பேசுவோம் பேசுவோம் - அப்படிப் பேசுவோம்.</p>.<p>பிறகு -</p>.<p>ஸ்ரீரங்கம் பஸ்ஸில் என்னை ஏற்றிவிட்டு - அவர் வீடு திரும்புவார்.</p>.<p><strong>இ</strong>த்தகு என் இனிய நண்பர் 'ஞான பீட’ விருது பெற்றதை -</p>.<p>- Express ஏடு, ரத்தினச் சுருக்கமாக -</p>.<p>‘A MAN WITH LETTERS; NOW <br /> A MAN OF LETTERS!’</p>.<p>- என்று எழுதியிருந்ததை என்னணம் என்னால் மறக்க ஏலும்?</p>.<p>இன்றளவும் - அவ் ஆங்கில ஏடுகளில் வந்த, கவித்துவமான இரு Captions-ம் fevicol போட்டு ஒட்டியது போல் என் நெஞ்சுள் அப்பிக்கிடக்கின்றன!</p>.<p><strong>மே</strong>ற் கூறியவற்றை நான் ஏன் நினைவுகூர்கிறேன் என்றால் -</p>.<p>எதைச் சொன்னாலும் 'சுருங்கச் சொல்லும்’ சூத்திரத்தை எனக்கு அவ் ஆங்கில ஏடுகள்தாம் கற்பித்தன!</p>.<p>பிறகுதான் -</p>.<p>நான் சின்னச் சின்ன வரிகளில், சில நிகழ்வுகளைப் பதிவு செய்யப் பழகினேன்.</p>.<p>நான் விகடனில் எழுதிய 'அவதார புருஷ’னில் -</p>.<p>மந்தரை, கைகேயியின் மனத்தைக் கலைக்</p>.<p>கையில் -</p>.<p><span style="color: #ff6600"><em>'ராமனுக்கு<br /> ராஜ்ஜியம்;<br /> பரதனுக்கு<br /> பூஜ்ஜியம்!’</em></span> - எனக் கூறுவதாய்க் குறிப்பிட்டிருந்தேன்.</p>.<p>தன்னுடைய 'கற்றதும் பெற்றதும்’ கட்டுரைத் தொடரில் -</p>.<p>என் இளமைக் கால சினேகிதர் திரு.சுஜாதா, இது சுத்த சுயம் பிரகாசமான சிந்தனை என்று சிலாகித்திருந்தார்!</p>.<p><strong>ஒ</strong>ரு கம்பன் விழாக் கவியரங்கம்; இராமனைப் பற்றிக் குறிப்பிட்டேன் -</p>.<p><span style="color: #ff0000"><em>'இராவணனை இராவணம் செய்த<br /> இராவணன்!</em></span>’ - என்று!</p>.<p>- அதே விழாவில் கம்பன் கழகத் தலைவர் திரு.எம்.எம்.இஸ்மாயில் பற்றிக் குறிப்பிட்டேன் -</p>.<p><span style="color: #993366"><em>'நாகூர் தந்த<br /> தாகூர்; எனினும் -<br /> தாகூரை மிஞ்சிய<br /> நா கூர்!’</em></span> - என்று!</p>.<p><strong>ஒ</strong>ரு சிலப்பதிகார விழாவில் பாடினேன், யார் கோவலன் என்று!</p>.<p><span style="color: #ff0000"><em>'புகாரில் பிறந்தவன்;<br /> புகாரில் இறந்தவன்!’</em></span></p>.<p><strong>க</strong>ண்ணதாசன் மறைவையட்டி - ஓர் இரங்கற் கூட்டம் நடந்தது.</p>.<p><span style="color: #993366"><em>'மகாகவி கண்ணதாசனின்<br /> மரணத்திற்குக் காரணம் - <br /> மதுவருந்தியது; இது தெரிந்து -<br /> மது வருந்தியது!’</em></span></p>.<p>- என் இதயம் கனக்க இப்படிப் பாடினேன்!</p>.<p><strong>பு</strong>ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைவின் போது, விகடனில் ஒரு கவிதை எழுதினேன்.</p>.<p><span style="color: #003300"><em>'உன் உதடுகளில்<br /> உட்கார்ந்தது -<br /> என் முதல் வரி; உலகறிந்தது<br /> என் முகவரி!’</em></span></p>.<p><strong>கு</strong>ஜராத் பூகம்பம் பற்றிக் 'குமுத’த்தில் ஒரு நீண்ட இரங்கற் பா;</p>.<p><span style="color: #800000"><em>'இதோ!<br /> இவர்கள் -<br /> கண் மூடியதால்<br /> மண் மூடியவர்களல்ல;<br /> மண் மூடியதால்<br /> கண் மூடியவர்கள்!’</em></span> - என எழுதினேன்.</p>.<p><strong>கு</strong>ம்பகோணம் பள்ளியில் தீப்பிடித்துச் சின்னஞ் சிறார்கள் சாம்பலானபோது, நான் ஏறத்தாழ ஒரு நாத்திகனாகவே ஆனேன். </p>.<p><span style="color: #000080"><em>'கோயில்கள் - நிறையக்<br /> கொண்ட ஊர் குடந்தை; இந்த -<br /> அநியாயத்திற்கு<br /> அத்துணை தெய்வங்களுமா<br /> உடந்தை?’</em></span></p>.<p><strong>க</strong>லைஞர் அவர்கள் எழுதிய நூல் - 'தொல்காப்பியப் பூங்கா’;</p>.<p>கோவையில், நான் தலைமை ஏற்று நூலை வெளியிட்டேன்; கலைஞரும் உடனிருந்தார்கள்.</p>.<p>அப்போது நான் பேசினேன்;</p>.<p>''கலைஞர் - முதன்முதல் படத்திற்கு, உரையாடல் எழுதப் புகுந்த ஊர் இது. 'கோவை’ என்றால், கலைஞருக்குப் பழைய நினைவுகள் வரும்;</p>.<p>'கோவை’ என்ற சொல்லைத் திருப்பிப் போட்டாலும் - கலைஞர் பழைய நினைவுகளில் மூழ்கிவிடுவார்கள்!</p>.<p>ஏனெனில் - 'கோவை’ எனும் சொல் திருப்பிப் போடுகையில் - 'வைகோ’ என்று ஆகும்!''</p>.<p>உண்மையில், வைகோவை சிறை மீட்க வேண்டுமென்ற எண்ணம் - அப்போது அவரது சிந்தையில் இருந்தது!</p>.<p><strong>எ</strong>ன் - முப்பத்தைந்தாண்டு கால நண்பர் திரு.வைகோ.</p>.<p>அவர் சிறை மீண்டதும் சொன்னேன்;</p>.<p>'சிறையிலும் நீங்கள் என்னை மறக்கவில்லையே!’ என்று;</p>.<p>'எப்படி?’ என்றார்.</p>.<p>நான் சொன்னேன்;</p>.<p>'சிறைச் சாலையில் - நீங்கள் தினமும் ஆடியது -</p>.<p>வாலிபால்தானே!’</p>.<p><strong>- சுழலும்...</strong></p>
<p style="text-align: center"><span style="color: #800080"><span style="font-size: small"><strong>இரு தலைப்புகள்! </strong></span></span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>அ</strong>றுபது</p>.<p>ஆண்டுகள் முன்...</p>.<p>ஒரு MULTISTOREY BUILDING கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும் போதே -</p>.<p>இடிந்து விழ, அதன் இடிபாடுகளில் சிக்கி - நூற்றுக்கணக்கான உழைப்பாளர் மண்ணில் புதையுண்டனர்!</p>.<p>இது நடந்தது - அன்றைய பம்பாயில் -</p>.<p>நான் வாழ்ந்திருந்த நாள்களில்.</p>.<p>இந்த அவல நிகழ்வை ஆறு பத்திகளில் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்த Times of India</p>.<p>கீழ்க் கண்டவாறு கவித்துவமான ஒரு தலைப்பைக் கொடுத்திருந்தது.</p>.<p>‘Sons of Toil- Under<br /> Tons of Soil!’</p>.<p><span style="color: #ff0000"><em>'<strong>ஏ</strong>ராளமான<br /> எடைகொண்ட<br /> மண்ணுக்கடியில் - உழைப்பின்<br /> மைந்தர்கள்!’</em></span></p>.<p>- என்று இதை மொழிபெயர்த்தால் நன்றாகவா இருக்கும்?</p>.<p><strong>தி</strong>ரு.அகிலனுக்கு 'ஞான பீட விருது’ கிடைக்கிறது.</p>.<p>அகிலன் அவர்கள் தபால் இலாகாவில் பணியாற்றியவர்.</p>.<p>இதை மனத்தில்கொண்டு - அன்றைய Indian Express</p>.<p>அவர் விருது பெற்றதைப் பாராட்டு முகத்தான், கீழ்க் கண்டவாறு குறிப்பிட்டிருந்தது.</p>.<p> ‘A MAN WITH LETTERS; NOW <br /> A MAN OF LETTERS!’</p>.<p>'<strong>L</strong>etter’ என்பதற்குக் கடிதம் என்றொரு பொருளும் - எழுத்து என்றொரு பொருளும் உள்ளதை ஓர்ந்துதான் -</p>.<p>Express இப்படி 'Pun’ செய்திருந்தது!</p>.<p><strong>அ</strong>கிலனைப் பற்றிய இந்தக் கணிப்பை நான் வெகுவாக ரசித்தேன்.</p>.<p>ஏனெனில் - அவர் என் பால்ய கால நண்பர் என்பது மட்டுமல்ல -</p>.<p>கடிதங்களைக் கரத்திலும்; கதைகளைக் கருத்திலும் தாங்கி நின்றதைத் தமியேன் நன்கறிவேன்.</p>.<p>அகிலன் -</p>.<p>திருச்சி தென்னூர்வாசி; அடியேன் திருவரங்கவாசி.</p>.<p>வாரம் இரு முறையாவது - ஸ்ரீரங்கத்திலிருந்து பஸ் ஏறி -</p>.<p>தென்னூருக்குப் போவேன் - அவர் குடியிருந்த நெ.5. பட்டாபிராமப் பிள்ளைத் தெருவில் இருந்த அவர் வீட்டிற்கு!</p>.<p><strong>இ</strong>ருவரும் -</p>.<p>பொடி நடையாகப் பேசிக்கொண்டே -</p>.<p>அருகிலிருந்த ஒரு Coffee Club-க்குப் போவோம்.</p>.<p>அந்த ஹோட்டல் இருந்த இடம் - 'கிந்தனார் குதிரை வண்டி ஸ்டாண்ட்’ பக்கம்!</p>.<p>அது -</p>.<p>குதிரை வண்டிக்காரர்களுக்காகக் கலைவாணர் தன் சொந்த செலவில் கட்டிக்கொடுத்தது.</p>.<p>'கிந்தனார் குதிரை வண்டி நிலையம்’ - என்று அதற்குப் பெயர் சூட்டி -</p>.<p>சின்னதாய் ஒரு திறப்பு விழாவும் நடத்தினார் கலைவாணர்.</p>.<p>அந்த விழாவில், அவருக்கே உரித்தான நகைச்சுவைப் பாணியில், திரு.N.S.K. அவர்கள் கீழ்க் கண்டவாறு உரையாற்றினார்கள்.</p>.<p>''எல்லாரும் என்னைக் கேக்குறாங்க - 'ஏன்யா, குதிரெ வண்டிக்காரங்களுக்கு இப்படியரு Stand கட்டிக் கொடுத்தீங்க’ன்னு!</p>.<p>அய்யா! இந்த உலகத்துல - எவனாச்சும், நாம முன்னுக்கு வர்றதெ விரும்புவானா?</p>.<p>ஆனா - குதிரெ வண்டிக்காரன் மட்டும் தான் -</p>.<p>நாம வண்டியில ஏறி உக்காந்தவுடனே, வஞ்சனையில்லாமெ -</p>.<p>'அய்யா! முன்னுக்கு வாங்க; முன்னுக்கு வாங்க’ன்னு, ஆசையாச் சொல்றான்.</p>.<p>அதனாலதான், அவங்க பரந்த உள்ளத்தை மதிச்சு - இந்த வண்டி ஸ்டாண்டைக் கட்டிக் குடுத்தேன்!''</p>.<p>- இப்படிக் கலைவாணர் அற்றை நாளில் ஆற்றிய உரையைப் பற்றியும் -</p>.<p>இன்னும் இதுதான் என்றில்லாமல், நானும் அகிலனும் -</p>.<p>ஆளுக்கொரு கோப்பை காப்பியை வைத்துக்கொண்டு பேசுவோம் பேசுவோம் - அப்படிப் பேசுவோம்.</p>.<p>பிறகு -</p>.<p>ஸ்ரீரங்கம் பஸ்ஸில் என்னை ஏற்றிவிட்டு - அவர் வீடு திரும்புவார்.</p>.<p><strong>இ</strong>த்தகு என் இனிய நண்பர் 'ஞான பீட’ விருது பெற்றதை -</p>.<p>- Express ஏடு, ரத்தினச் சுருக்கமாக -</p>.<p>‘A MAN WITH LETTERS; NOW <br /> A MAN OF LETTERS!’</p>.<p>- என்று எழுதியிருந்ததை என்னணம் என்னால் மறக்க ஏலும்?</p>.<p>இன்றளவும் - அவ் ஆங்கில ஏடுகளில் வந்த, கவித்துவமான இரு Captions-ம் fevicol போட்டு ஒட்டியது போல் என் நெஞ்சுள் அப்பிக்கிடக்கின்றன!</p>.<p><strong>மே</strong>ற் கூறியவற்றை நான் ஏன் நினைவுகூர்கிறேன் என்றால் -</p>.<p>எதைச் சொன்னாலும் 'சுருங்கச் சொல்லும்’ சூத்திரத்தை எனக்கு அவ் ஆங்கில ஏடுகள்தாம் கற்பித்தன!</p>.<p>பிறகுதான் -</p>.<p>நான் சின்னச் சின்ன வரிகளில், சில நிகழ்வுகளைப் பதிவு செய்யப் பழகினேன்.</p>.<p>நான் விகடனில் எழுதிய 'அவதார புருஷ’னில் -</p>.<p>மந்தரை, கைகேயியின் மனத்தைக் கலைக்</p>.<p>கையில் -</p>.<p><span style="color: #ff6600"><em>'ராமனுக்கு<br /> ராஜ்ஜியம்;<br /> பரதனுக்கு<br /> பூஜ்ஜியம்!’</em></span> - எனக் கூறுவதாய்க் குறிப்பிட்டிருந்தேன்.</p>.<p>தன்னுடைய 'கற்றதும் பெற்றதும்’ கட்டுரைத் தொடரில் -</p>.<p>என் இளமைக் கால சினேகிதர் திரு.சுஜாதா, இது சுத்த சுயம் பிரகாசமான சிந்தனை என்று சிலாகித்திருந்தார்!</p>.<p><strong>ஒ</strong>ரு கம்பன் விழாக் கவியரங்கம்; இராமனைப் பற்றிக் குறிப்பிட்டேன் -</p>.<p><span style="color: #ff0000"><em>'இராவணனை இராவணம் செய்த<br /> இராவணன்!</em></span>’ - என்று!</p>.<p>- அதே விழாவில் கம்பன் கழகத் தலைவர் திரு.எம்.எம்.இஸ்மாயில் பற்றிக் குறிப்பிட்டேன் -</p>.<p><span style="color: #993366"><em>'நாகூர் தந்த<br /> தாகூர்; எனினும் -<br /> தாகூரை மிஞ்சிய<br /> நா கூர்!’</em></span> - என்று!</p>.<p><strong>ஒ</strong>ரு சிலப்பதிகார விழாவில் பாடினேன், யார் கோவலன் என்று!</p>.<p><span style="color: #ff0000"><em>'புகாரில் பிறந்தவன்;<br /> புகாரில் இறந்தவன்!’</em></span></p>.<p><strong>க</strong>ண்ணதாசன் மறைவையட்டி - ஓர் இரங்கற் கூட்டம் நடந்தது.</p>.<p><span style="color: #993366"><em>'மகாகவி கண்ணதாசனின்<br /> மரணத்திற்குக் காரணம் - <br /> மதுவருந்தியது; இது தெரிந்து -<br /> மது வருந்தியது!’</em></span></p>.<p>- என் இதயம் கனக்க இப்படிப் பாடினேன்!</p>.<p><strong>பு</strong>ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைவின் போது, விகடனில் ஒரு கவிதை எழுதினேன்.</p>.<p><span style="color: #003300"><em>'உன் உதடுகளில்<br /> உட்கார்ந்தது -<br /> என் முதல் வரி; உலகறிந்தது<br /> என் முகவரி!’</em></span></p>.<p><strong>கு</strong>ஜராத் பூகம்பம் பற்றிக் 'குமுத’த்தில் ஒரு நீண்ட இரங்கற் பா;</p>.<p><span style="color: #800000"><em>'இதோ!<br /> இவர்கள் -<br /> கண் மூடியதால்<br /> மண் மூடியவர்களல்ல;<br /> மண் மூடியதால்<br /> கண் மூடியவர்கள்!’</em></span> - என எழுதினேன்.</p>.<p><strong>கு</strong>ம்பகோணம் பள்ளியில் தீப்பிடித்துச் சின்னஞ் சிறார்கள் சாம்பலானபோது, நான் ஏறத்தாழ ஒரு நாத்திகனாகவே ஆனேன். </p>.<p><span style="color: #000080"><em>'கோயில்கள் - நிறையக்<br /> கொண்ட ஊர் குடந்தை; இந்த -<br /> அநியாயத்திற்கு<br /> அத்துணை தெய்வங்களுமா<br /> உடந்தை?’</em></span></p>.<p><strong>க</strong>லைஞர் அவர்கள் எழுதிய நூல் - 'தொல்காப்பியப் பூங்கா’;</p>.<p>கோவையில், நான் தலைமை ஏற்று நூலை வெளியிட்டேன்; கலைஞரும் உடனிருந்தார்கள்.</p>.<p>அப்போது நான் பேசினேன்;</p>.<p>''கலைஞர் - முதன்முதல் படத்திற்கு, உரையாடல் எழுதப் புகுந்த ஊர் இது. 'கோவை’ என்றால், கலைஞருக்குப் பழைய நினைவுகள் வரும்;</p>.<p>'கோவை’ என்ற சொல்லைத் திருப்பிப் போட்டாலும் - கலைஞர் பழைய நினைவுகளில் மூழ்கிவிடுவார்கள்!</p>.<p>ஏனெனில் - 'கோவை’ எனும் சொல் திருப்பிப் போடுகையில் - 'வைகோ’ என்று ஆகும்!''</p>.<p>உண்மையில், வைகோவை சிறை மீட்க வேண்டுமென்ற எண்ணம் - அப்போது அவரது சிந்தையில் இருந்தது!</p>.<p><strong>எ</strong>ன் - முப்பத்தைந்தாண்டு கால நண்பர் திரு.வைகோ.</p>.<p>அவர் சிறை மீண்டதும் சொன்னேன்;</p>.<p>'சிறையிலும் நீங்கள் என்னை மறக்கவில்லையே!’ என்று;</p>.<p>'எப்படி?’ என்றார்.</p>.<p>நான் சொன்னேன்;</p>.<p>'சிறைச் சாலையில் - நீங்கள் தினமும் ஆடியது -</p>.<p>வாலிபால்தானே!’</p>.<p><strong>- சுழலும்...</strong></p>