<p style="text-align: center"><span style="color: #003366"><span style="font-size: small"><strong>மெல்லிசை மன்னன்! </strong></span></span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>என்னை -<br /> எங்கே<br /> எப்போது பார்த்தாலும் -<br /> 'எப்படி யிருக்கிறார்?’ என்று...</p>.<p>அவர் பற்றி<br /> அவர்கள் கேட்பார்கள்;<br /> அவர்பால்<br /> அவர்களுக்கு அவ்வளவு மரியாதை;</p>.<p>அதற்குக் காரணம்<br /> அவரது -<br /> விசும்பை விஞ்சி நின்ற<br /> வித்துவத்துவம்;</p>.<p>அவரைக் காணாவிடத்தும்<br /> அவர் மாட்டுக் கனிந்திருந்தது -<br /> அவர்கள்<br /> அனைவர்க்கும்...</p>.<p>ஓர்<br /> ஓவாக் காதல்!</p>.<p>'அதுசரி;<br /> அவர் யார்? அவர்கள் யார்?<br /> சொல்லவில்லையே!’ என்று<br /> சொல்கிறீர்களா? சொல்கிறேன்!</p>.<p><strong>'பூ</strong> மழை<br /> பொழிகிறது’ -<br /> இது விஜயகாந்த் நடித்த படம்;<br /> இசை R.D. பர்மன்!</p>.<p>'ரகசிய<br /> போலீஸ்’ -<br /> இது சரத்குமார் நடித்த படம்;<br /> இசை லட்சுமிகாந்த் பியாரிலால்!</p>.<p>'தாய் வீடு’ -<br /> இது ரஜினிகாந்த் நடித்த படம்;<br /> இசை பப்பி லஹரி!</p>.<p>'தர்மம்’ -<br /> இது சத்யராஜ் நடித்த படம்;<br /> இசை உஷா கன்னா!</p>.<p><strong>நா</strong>ன்கு படங்களும், நான் பாடல்கள் எழுதிய படங்கள்; இந்தப் படங்களின் இசையமைப்பாளர்களாகிய -</p>.<p>நால்வரைத்தான் -</p>.<p>நான் குறிப்பிட்டேன் 'அவர்கள்’ என்று; அந் நால்வரும் நலம் விசாரித்த -</p>.<p>அந்த 'அவர்’</p>.<p>ஆரெனச் சொல்கிறேன்; அதற்கு முன்பு, நான் கொஞ்சம் - என் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் வரை போக வேண்டியிருக்கிறது!</p>.<p><strong>எ</strong>ன் ஊரில் -</p>.<p>என் தெருவில் -</p>.<p>என் வீட்டிற்கு நான்கு வீடுகள் தள்ளி, அதே வரிசையில்...</p>.<p>'சம்பத்’ என்றொரு சினேகிதன்; அவனுடைய சகோதரியின் கணவர் பெயர் திரு.ரங்கனாதன்.</p>.<p>அந்த ரங்கனாதன், திருச்சியிலிருந்து திருவரங்கத்திற்குத் தன் மாமனார் வீட்டிற்கு வரும்போதெல்லாம் -</p>.<p>'டேய்! உங்க அத்திம்பேர்கிட்ட என்னை அறிமுகம் பண்ணி வைடா!’ என்று நான் சம்பத்தை நச்சரிப்பேன்.</p>.<p>அதற்குக் காரணம் -</p>.<p>திரு.ரங்கனாதன் திரையுலகத்தோடு தொடர்பு உடையவர்!</p>.<p><strong>சி</strong>னேகிதன் சம்பத் வீட்டில் ஒரு GRAMO PHONE இருந்தது; H.M.V. கம்பெனி தயாரித்தது.</p>.<p>சாவி கொடுத்து இசைத் தட்டு மேல் ஊசியை உட்கார்த்தினால் -</p>.<p>'செந்தமிழ்த் தேன் மொழியாள்’ - கேட்கலாம்; 'பிறக்கும் போதும் அழுகின்றாய். இறக்கும் போதும் அழுகின்றாய்’ - கேட்கலாம்.</p>.<p>முன்னது டி.ஆர்.மகாலிங்கம்; பின்னது சந்திரபாபு!</p>.<p>இந்த</p>.<p>இசைத் தட்டுகளை - திரு.ரங்கனாதன் கையோடு கொண்டுவருவார், நான் 'சோறு தண்ணி’ இல்லாமல் கேட்பேன்.</p>.<p>ஒருமுறை திரு.ரங்கனாதனிடம் 'திராவிடப் பொன்னாடே’ போடச் சொல்லி வேண்டினேன்.</p>.<p>'வாலி! நான் ஒரு கேள்வி கேட்பேன்; அதுக்கு கரெக்டா பதில் சொல்லிட்டா - எத்தனெ தடவெ வேணும்னாலும் அந்தப் பாட்டெ நான் போடுவேன்!’ என்றார்அவர்; 'கேளுங்க சார்!’ என்றேன் நான்.</p>.<p>'H.M.V. கம்பெனியின் LOGO வாக - ஒரு MEGA PHONE முன்னாடி உட்கார்ந்திண்டு இருக்கிறதே - ஒரு நாய்...</p>.<p>அது - ஆண் நாயா? பெண் நாயா?’</p>.<p>- இப்படி ரங்கனாதன் கேட்டதும், சற்றும் யோசிக்காமல் நான் -</p>.<p>'சார்! அது ஆண் நாய்!’ என்றேன்.</p>.<p>'எப்படி?’ என வினவினார் ரங்கனாதன்.</p>.<p>'H.M.V. என்றால் - HIS MASTER'S VOICE என்று அர்த்தம்; தன் எஜமானனின் குரலைச் செவிமடுக்கும் அந்த நாய், பெண் நாயாயிருந்தால் -</p>.<p>H.M.V. என்பதை - HER MASTER'S VOICE என்று குறிப்பிட்டிருப்பார்கள்’ என்றேன்.</p>.<p>ரங்கனாதன் மகிழ்ந்தார்; உடனே, நான் இதுதான் தருணமென்று -</p>.<p>'சார்! நான் விஸ்வநாதன் ராமமூர்த்தியோட பரம ரசிகன். ஒரு தடவை நீங்க மெட்ராஸ் போறச்சே - என்னையும் அழைச்சுண்டு போய் அறிமுகப்படுத்திவெக்கணும் சார்!’ என இறைஞ்சினேன்.</p>.<p>ஏன் அவரிடம் அப்படிக் கேட்டேன் என்றால் -</p>.<p>கண்ணதாசன் தயாரித்த 'மாலையிட்ட மங்கை’; 'கவலையில்லாத மனிதன்’ - இந்தப் படங்களுக்கெல்லாம் பண உதவி செய்தவர் திரு.ரங்கனாதன்.</p>.<p>கண்ணதாசனின் ஆருயிர் நண்பர்; இவரைப்பற்றி கண்ணதாசன் 'வனவாச’த்தில் குறிப்பிட்டிருக்கிறார்.</p>.<p>திரு.ரங்கனாதனை, சினிமா வட்டாரத்தில் 'அம்பி’ என்றுதான் அழைப்பார்கள்!</p>.<p><strong>ஏ</strong>ன் இதை இவ்வளவு விரிவாக எழுதினேன் எனில் -</p>.<p>எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு பாட்டா வது எழுதினால்தான், எனக்கு ஜன்ம சாபல்யம் என -</p>.<p>ஸ்ரீரங்கநாதரை வேண்டிக்கொண்டே இருந்தேன் நான்.</p>.<p>பிரார்த்தனை வீண் போகவில்லை; பெருமாள் திருக்கண் மலர்ந்தருளினார்.</p>.<p>விஸ்வநாத அண்ணனிடம் - 1963-ல் ஆரம்பித்து,</p>.<p>நாளது வரை நாலாயிரம் பாடல்கள் எழுதிவிட்டேன்.</p>.<p>நாலாயிரமும் நாலாயிரம்தான்; திவ்யப் பிரபந்தம் போல் திரைப் பிரபந்தம்!</p>.<p><strong>இ</strong>ரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும், இறவாத பாடல்களை -</p>.<p>ஈங்கு விசுவநாதனின் ஆர்மோனியம்தான் ஈன்றது. எம்.ஜி.ஆர்; சிவாஜி - இவ் இருவரின் உதடுகளிலும் விசுவநாதனின் உன்னத மெட்டுகள் உட்கார்ந்ததால் தான்,</p>.<p>உலகத்தார் உள்ளங்களில் அவர்கள் போய் அமர முடிந்தது!</p>.<p>சாதா வார்த்தைகள், அவரது சங்கீதத்தில் தோய்த்தெடுத்த பின் - சாகாவார்த்தை கள் ஆகும்!</p>.<p>பின்னைக்கும் பின்னையாய்; முன்னைக்கும் முன்னையாய் -</p>.<p>பிறங்கும் பரம் பொருள் போல், விஸ்வநாதனின் வித்வத்வம் -</p>.<p>பிராசீனத்திற்கும் பிராசீனமாய்; நவீனத் திற்கும் நவீனமாய், விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது எனலாம்.</p>.<p>'லலிதாங்கி’யையும், 'ஆபோகி’யையும் லகுவாகக் கையாள்வார்; அதே, லலிதத் தோடும் லாகவத்தோடும் -</p>.<p>WALTZ;</p>.<p>JAZZ;</p>.<p>- இன்ன பிற மேலை நாட்டு இசை வகைகளையும், PIANO-வில் பிலிற்றுவார்.</p>.<p>விஸ்வநாதனின் வித்தகம் பற்றி, ஒற்றை வரியில் ஓதுவதாயின் -</p>.<p>விரலிலும் குரலிலும் கலைமகள் கடாட்சம் விரவி நிற்கும் புண்ணியவான் அவர்!</p>.<p>அற்றை நாளில், அவரது பாடல்களில் ACCORDION அழகுற இசைக்கப்படுவதைக் காணலாம்; மற்றும் CELLO; DOUBLE-BASS- எனப்படும் VIOLIN குடும்ப வாத்தியங்களை யும், அவற்றின் தனித்தன்மை துல்லியமாகத் துலங்குமாறு பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.</p>.<p>VIOLIN-களில் - CHROMARIC; மற்றும் PIZZICATO பாணிகளை இடமறிந்து இடம் பெறச் செய்வார், தான் இசைக்கும் பாடல்களின் பின்னணியில்; அவர் அறியாத மேலை நாட்டுச் சங்கீதமே இல்லை.</p>.<p>ஆயினும், அவ் அறிவை அளவோடு பயன்படுத்துவார்; சந்தனம் நிறைய இருக்கிறதே என்று - புட்டத்தில் பூசிக்கொள்ள மாட்டார்.</p>.<p>என் வாழ்வும் வளமும் அவரிட்ட பிச்சை; WHAT I AM TODAY I OWE HIM!</p>.<p><strong>வ</strong>ட நாட்டு இசையமைப்பாளர்கள், மிகுந்த மரியாதையோடு -</p>.<p>'எப்படியிருக்கிறார்?’ என நலம் விசாரித்தது -</p>.<p>அண்ணன் விஸ்வநாதனைப் பற்றித்தான்!</p>.<p><strong>ஹோ</strong>ட்டல் கன்னிமாராவில் -</p>.<p>சில ஆண்டுகள் முன்னம்,</p>.<p>'சந்திரமுகி’ படம், கேஸட் வெளியீட்டு விழா நடந்தது; நான்தான் வெளியிட்டேன் - திருமதி.ஆஷா போன்ஸ்லே பெற்றுக்கொண்டார்.</p>.<p>சிவாஜி அவர்களின் புதல்வர்கள், திரு.ராம்குமார்; திரு.பிரபு இருவரும் -</p>.<p>அந்த விழாவில் விஸ்வநாத அண்ணனைக் கௌரவித்தார்கள்; அப்போது நான் விஸ்வநாத அண்ணனைப்பற்றி ஒரு கவிதை வாசித்தேன்.</p>.<p>ரஜினி, அந்தக் கவிதையைக் கேட்டுவிட்டுக் கண்ணீர் மல்க - 'அண்ணா! இந்தக் கவிதையை அப்படியே நான் பாலசந்தர் சாரைப் பார்த்து பாடணும்னு தோணுது’ என்றார்.</p>.<p>அந்தக் கவிதையின் சில வரிகளே நினைவில் உள்ளன; அவை இதோ!</p>.<p>'அண்ணனே! மெல்லிசை -<br /> மன்னனே! - உன்னை<br /> சந்திக்கு முன் - எனக்கு<br /> சோற்றுக்கே வக்கில்லை; உன்னை -<br /> சந்தித்த பின் - எனக்கு<br /> சோறு தின்னவே நேரமில்லை!</p>.<p>வெறும்<br /> விறகு; நான் -<br /> வீணையானேன் - உன்<br /> விரல்பட்ட பிறகு!</p>.<p>பலரிடம் நான்<br /> பாட்டு எழுதியிருக்கிறேன்; என்<br /> வரிக்கெல்லாம்<br /> வருமானம் வந்தது;<br /> உன்னிடம் பாட்டெழுத<br /> உட்கார்ந்த பின்புதான் - என்<br /> வருமானத் திற்கெல்லாம்<br /> வரி வந்தது!’</p>.<p>- இப்படிப் போகும் அந்தக் கவிதை; நான் சொல்ல வருவது யாதெனில்...</p>.<p>'இசையே! எனக்கு<br /> இசை!’ என -<br /> இசையைத் தனக்கு<br /> இசைய வைத்து - அன்னணம்<br /> இசைந்த<br /> இசையை -<br /> இசைத்து<br /> இசைத்து - அதன்<br /> இசையைப் பெருக்கிய<br /> இசையமைப்பாளர் -</p>.<p>எம்.எஸ்.வி. அவர்களுக்கு 'ஏன் பத்மா விருதுகள் வழங்கப்பட வில்லை?’ எனப் பலர் கேட்கலாம்.</p>.<p>அதற்கு அடியேன் சொல்லும் பதில் இதுதான்:</p>.<p>'விஸ்வநாதன் சாதனையை - அளப்பது</p>.<p>விருதா?<br /> விருது<br /> வரா விடில் -<br /> விஸ்வநாதன் சாதனைகள் - ஆகுமோ<br /> விருதா?’</p>.<p><strong>- சுழலும்...</strong></p>
<p style="text-align: center"><span style="color: #003366"><span style="font-size: small"><strong>மெல்லிசை மன்னன்! </strong></span></span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>என்னை -<br /> எங்கே<br /> எப்போது பார்த்தாலும் -<br /> 'எப்படி யிருக்கிறார்?’ என்று...</p>.<p>அவர் பற்றி<br /> அவர்கள் கேட்பார்கள்;<br /> அவர்பால்<br /> அவர்களுக்கு அவ்வளவு மரியாதை;</p>.<p>அதற்குக் காரணம்<br /> அவரது -<br /> விசும்பை விஞ்சி நின்ற<br /> வித்துவத்துவம்;</p>.<p>அவரைக் காணாவிடத்தும்<br /> அவர் மாட்டுக் கனிந்திருந்தது -<br /> அவர்கள்<br /> அனைவர்க்கும்...</p>.<p>ஓர்<br /> ஓவாக் காதல்!</p>.<p>'அதுசரி;<br /> அவர் யார்? அவர்கள் யார்?<br /> சொல்லவில்லையே!’ என்று<br /> சொல்கிறீர்களா? சொல்கிறேன்!</p>.<p><strong>'பூ</strong> மழை<br /> பொழிகிறது’ -<br /> இது விஜயகாந்த் நடித்த படம்;<br /> இசை R.D. பர்மன்!</p>.<p>'ரகசிய<br /> போலீஸ்’ -<br /> இது சரத்குமார் நடித்த படம்;<br /> இசை லட்சுமிகாந்த் பியாரிலால்!</p>.<p>'தாய் வீடு’ -<br /> இது ரஜினிகாந்த் நடித்த படம்;<br /> இசை பப்பி லஹரி!</p>.<p>'தர்மம்’ -<br /> இது சத்யராஜ் நடித்த படம்;<br /> இசை உஷா கன்னா!</p>.<p><strong>நா</strong>ன்கு படங்களும், நான் பாடல்கள் எழுதிய படங்கள்; இந்தப் படங்களின் இசையமைப்பாளர்களாகிய -</p>.<p>நால்வரைத்தான் -</p>.<p>நான் குறிப்பிட்டேன் 'அவர்கள்’ என்று; அந் நால்வரும் நலம் விசாரித்த -</p>.<p>அந்த 'அவர்’</p>.<p>ஆரெனச் சொல்கிறேன்; அதற்கு முன்பு, நான் கொஞ்சம் - என் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் வரை போக வேண்டியிருக்கிறது!</p>.<p><strong>எ</strong>ன் ஊரில் -</p>.<p>என் தெருவில் -</p>.<p>என் வீட்டிற்கு நான்கு வீடுகள் தள்ளி, அதே வரிசையில்...</p>.<p>'சம்பத்’ என்றொரு சினேகிதன்; அவனுடைய சகோதரியின் கணவர் பெயர் திரு.ரங்கனாதன்.</p>.<p>அந்த ரங்கனாதன், திருச்சியிலிருந்து திருவரங்கத்திற்குத் தன் மாமனார் வீட்டிற்கு வரும்போதெல்லாம் -</p>.<p>'டேய்! உங்க அத்திம்பேர்கிட்ட என்னை அறிமுகம் பண்ணி வைடா!’ என்று நான் சம்பத்தை நச்சரிப்பேன்.</p>.<p>அதற்குக் காரணம் -</p>.<p>திரு.ரங்கனாதன் திரையுலகத்தோடு தொடர்பு உடையவர்!</p>.<p><strong>சி</strong>னேகிதன் சம்பத் வீட்டில் ஒரு GRAMO PHONE இருந்தது; H.M.V. கம்பெனி தயாரித்தது.</p>.<p>சாவி கொடுத்து இசைத் தட்டு மேல் ஊசியை உட்கார்த்தினால் -</p>.<p>'செந்தமிழ்த் தேன் மொழியாள்’ - கேட்கலாம்; 'பிறக்கும் போதும் அழுகின்றாய். இறக்கும் போதும் அழுகின்றாய்’ - கேட்கலாம்.</p>.<p>முன்னது டி.ஆர்.மகாலிங்கம்; பின்னது சந்திரபாபு!</p>.<p>இந்த</p>.<p>இசைத் தட்டுகளை - திரு.ரங்கனாதன் கையோடு கொண்டுவருவார், நான் 'சோறு தண்ணி’ இல்லாமல் கேட்பேன்.</p>.<p>ஒருமுறை திரு.ரங்கனாதனிடம் 'திராவிடப் பொன்னாடே’ போடச் சொல்லி வேண்டினேன்.</p>.<p>'வாலி! நான் ஒரு கேள்வி கேட்பேன்; அதுக்கு கரெக்டா பதில் சொல்லிட்டா - எத்தனெ தடவெ வேணும்னாலும் அந்தப் பாட்டெ நான் போடுவேன்!’ என்றார்அவர்; 'கேளுங்க சார்!’ என்றேன் நான்.</p>.<p>'H.M.V. கம்பெனியின் LOGO வாக - ஒரு MEGA PHONE முன்னாடி உட்கார்ந்திண்டு இருக்கிறதே - ஒரு நாய்...</p>.<p>அது - ஆண் நாயா? பெண் நாயா?’</p>.<p>- இப்படி ரங்கனாதன் கேட்டதும், சற்றும் யோசிக்காமல் நான் -</p>.<p>'சார்! அது ஆண் நாய்!’ என்றேன்.</p>.<p>'எப்படி?’ என வினவினார் ரங்கனாதன்.</p>.<p>'H.M.V. என்றால் - HIS MASTER'S VOICE என்று அர்த்தம்; தன் எஜமானனின் குரலைச் செவிமடுக்கும் அந்த நாய், பெண் நாயாயிருந்தால் -</p>.<p>H.M.V. என்பதை - HER MASTER'S VOICE என்று குறிப்பிட்டிருப்பார்கள்’ என்றேன்.</p>.<p>ரங்கனாதன் மகிழ்ந்தார்; உடனே, நான் இதுதான் தருணமென்று -</p>.<p>'சார்! நான் விஸ்வநாதன் ராமமூர்த்தியோட பரம ரசிகன். ஒரு தடவை நீங்க மெட்ராஸ் போறச்சே - என்னையும் அழைச்சுண்டு போய் அறிமுகப்படுத்திவெக்கணும் சார்!’ என இறைஞ்சினேன்.</p>.<p>ஏன் அவரிடம் அப்படிக் கேட்டேன் என்றால் -</p>.<p>கண்ணதாசன் தயாரித்த 'மாலையிட்ட மங்கை’; 'கவலையில்லாத மனிதன்’ - இந்தப் படங்களுக்கெல்லாம் பண உதவி செய்தவர் திரு.ரங்கனாதன்.</p>.<p>கண்ணதாசனின் ஆருயிர் நண்பர்; இவரைப்பற்றி கண்ணதாசன் 'வனவாச’த்தில் குறிப்பிட்டிருக்கிறார்.</p>.<p>திரு.ரங்கனாதனை, சினிமா வட்டாரத்தில் 'அம்பி’ என்றுதான் அழைப்பார்கள்!</p>.<p><strong>ஏ</strong>ன் இதை இவ்வளவு விரிவாக எழுதினேன் எனில் -</p>.<p>எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு பாட்டா வது எழுதினால்தான், எனக்கு ஜன்ம சாபல்யம் என -</p>.<p>ஸ்ரீரங்கநாதரை வேண்டிக்கொண்டே இருந்தேன் நான்.</p>.<p>பிரார்த்தனை வீண் போகவில்லை; பெருமாள் திருக்கண் மலர்ந்தருளினார்.</p>.<p>விஸ்வநாத அண்ணனிடம் - 1963-ல் ஆரம்பித்து,</p>.<p>நாளது வரை நாலாயிரம் பாடல்கள் எழுதிவிட்டேன்.</p>.<p>நாலாயிரமும் நாலாயிரம்தான்; திவ்யப் பிரபந்தம் போல் திரைப் பிரபந்தம்!</p>.<p><strong>இ</strong>ரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும், இறவாத பாடல்களை -</p>.<p>ஈங்கு விசுவநாதனின் ஆர்மோனியம்தான் ஈன்றது. எம்.ஜி.ஆர்; சிவாஜி - இவ் இருவரின் உதடுகளிலும் விசுவநாதனின் உன்னத மெட்டுகள் உட்கார்ந்ததால் தான்,</p>.<p>உலகத்தார் உள்ளங்களில் அவர்கள் போய் அமர முடிந்தது!</p>.<p>சாதா வார்த்தைகள், அவரது சங்கீதத்தில் தோய்த்தெடுத்த பின் - சாகாவார்த்தை கள் ஆகும்!</p>.<p>பின்னைக்கும் பின்னையாய்; முன்னைக்கும் முன்னையாய் -</p>.<p>பிறங்கும் பரம் பொருள் போல், விஸ்வநாதனின் வித்வத்வம் -</p>.<p>பிராசீனத்திற்கும் பிராசீனமாய்; நவீனத் திற்கும் நவீனமாய், விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது எனலாம்.</p>.<p>'லலிதாங்கி’யையும், 'ஆபோகி’யையும் லகுவாகக் கையாள்வார்; அதே, லலிதத் தோடும் லாகவத்தோடும் -</p>.<p>WALTZ;</p>.<p>JAZZ;</p>.<p>- இன்ன பிற மேலை நாட்டு இசை வகைகளையும், PIANO-வில் பிலிற்றுவார்.</p>.<p>விஸ்வநாதனின் வித்தகம் பற்றி, ஒற்றை வரியில் ஓதுவதாயின் -</p>.<p>விரலிலும் குரலிலும் கலைமகள் கடாட்சம் விரவி நிற்கும் புண்ணியவான் அவர்!</p>.<p>அற்றை நாளில், அவரது பாடல்களில் ACCORDION அழகுற இசைக்கப்படுவதைக் காணலாம்; மற்றும் CELLO; DOUBLE-BASS- எனப்படும் VIOLIN குடும்ப வாத்தியங்களை யும், அவற்றின் தனித்தன்மை துல்லியமாகத் துலங்குமாறு பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.</p>.<p>VIOLIN-களில் - CHROMARIC; மற்றும் PIZZICATO பாணிகளை இடமறிந்து இடம் பெறச் செய்வார், தான் இசைக்கும் பாடல்களின் பின்னணியில்; அவர் அறியாத மேலை நாட்டுச் சங்கீதமே இல்லை.</p>.<p>ஆயினும், அவ் அறிவை அளவோடு பயன்படுத்துவார்; சந்தனம் நிறைய இருக்கிறதே என்று - புட்டத்தில் பூசிக்கொள்ள மாட்டார்.</p>.<p>என் வாழ்வும் வளமும் அவரிட்ட பிச்சை; WHAT I AM TODAY I OWE HIM!</p>.<p><strong>வ</strong>ட நாட்டு இசையமைப்பாளர்கள், மிகுந்த மரியாதையோடு -</p>.<p>'எப்படியிருக்கிறார்?’ என நலம் விசாரித்தது -</p>.<p>அண்ணன் விஸ்வநாதனைப் பற்றித்தான்!</p>.<p><strong>ஹோ</strong>ட்டல் கன்னிமாராவில் -</p>.<p>சில ஆண்டுகள் முன்னம்,</p>.<p>'சந்திரமுகி’ படம், கேஸட் வெளியீட்டு விழா நடந்தது; நான்தான் வெளியிட்டேன் - திருமதி.ஆஷா போன்ஸ்லே பெற்றுக்கொண்டார்.</p>.<p>சிவாஜி அவர்களின் புதல்வர்கள், திரு.ராம்குமார்; திரு.பிரபு இருவரும் -</p>.<p>அந்த விழாவில் விஸ்வநாத அண்ணனைக் கௌரவித்தார்கள்; அப்போது நான் விஸ்வநாத அண்ணனைப்பற்றி ஒரு கவிதை வாசித்தேன்.</p>.<p>ரஜினி, அந்தக் கவிதையைக் கேட்டுவிட்டுக் கண்ணீர் மல்க - 'அண்ணா! இந்தக் கவிதையை அப்படியே நான் பாலசந்தர் சாரைப் பார்த்து பாடணும்னு தோணுது’ என்றார்.</p>.<p>அந்தக் கவிதையின் சில வரிகளே நினைவில் உள்ளன; அவை இதோ!</p>.<p>'அண்ணனே! மெல்லிசை -<br /> மன்னனே! - உன்னை<br /> சந்திக்கு முன் - எனக்கு<br /> சோற்றுக்கே வக்கில்லை; உன்னை -<br /> சந்தித்த பின் - எனக்கு<br /> சோறு தின்னவே நேரமில்லை!</p>.<p>வெறும்<br /> விறகு; நான் -<br /> வீணையானேன் - உன்<br /> விரல்பட்ட பிறகு!</p>.<p>பலரிடம் நான்<br /> பாட்டு எழுதியிருக்கிறேன்; என்<br /> வரிக்கெல்லாம்<br /> வருமானம் வந்தது;<br /> உன்னிடம் பாட்டெழுத<br /> உட்கார்ந்த பின்புதான் - என்<br /> வருமானத் திற்கெல்லாம்<br /> வரி வந்தது!’</p>.<p>- இப்படிப் போகும் அந்தக் கவிதை; நான் சொல்ல வருவது யாதெனில்...</p>.<p>'இசையே! எனக்கு<br /> இசை!’ என -<br /> இசையைத் தனக்கு<br /> இசைய வைத்து - அன்னணம்<br /> இசைந்த<br /> இசையை -<br /> இசைத்து<br /> இசைத்து - அதன்<br /> இசையைப் பெருக்கிய<br /> இசையமைப்பாளர் -</p>.<p>எம்.எஸ்.வி. அவர்களுக்கு 'ஏன் பத்மா விருதுகள் வழங்கப்பட வில்லை?’ எனப் பலர் கேட்கலாம்.</p>.<p>அதற்கு அடியேன் சொல்லும் பதில் இதுதான்:</p>.<p>'விஸ்வநாதன் சாதனையை - அளப்பது</p>.<p>விருதா?<br /> விருது<br /> வரா விடில் -<br /> விஸ்வநாதன் சாதனைகள் - ஆகுமோ<br /> விருதா?’</p>.<p><strong>- சுழலும்...</strong></p>