<p style="text-align: center"><span style="color: #993366"><span style="font-size: small"><strong>மாலைப் பொழுதினிலே... </strong></span></span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>ஸ்ரீ</strong>னிவாச வரதனும் நானும், ஸ்ரீரங்கத்தில் கோலி விளையாடியவர்கள்; 'தோஸ்து படா தோஸ்து’!</p>.<p>STATES-ல் இருப்பவன் சென்னை வந்தான்; ஒரு கல்யாணம்.</p>.<p>கலந்துரையாடினேன்.</p>.<p>''ஹை! வாலி! இப்பவும் பாட்டு எழுதிண்டிருக்கேனு தெரியும். நியூஜெர்ஸீல இருக்கிற நம்ம சீமாச்சு வோட நாலு வயசுப் பொண்ணு - 'நங்காய்! செங்காய்!’னு பாடறது! அதெல்லாம் இருக்கட்டும்; </p>.<p>NOW YOU ARE AN OCTOGENARIAN! எப்படியிருக்கு LIFE?''</p>.<p>'OCTOGENARIAN’ - எனும் ஆங்கிலச் சொல் - அகவை எண்பதில் அடியெடுத்து வைத்தோரைக் குறிக்கும்.</p>.<p>ஸ்ரீனிவாச வரதன் என்னைவிட நான்கு வயது சின்னவன்.</p>.<p>அவன் விடுத்த வினாவிற்கு - ஒரு புன்னகையை விடையாய் இறுத்து</p>.<p>விட்டு - </p>.<p>இரவு விருந்து முடிந்ததும், வீடு வந்து சேர்ந்தேன்.</p>.<p>புரண்டு புரண்டு படுத்தும் - துயில் தூர நின்றது, விழிகளோடு விரோதம் பாராட்டிக்கொண்டு.</p>.<p>தத்துவார்த்தமான சிந்தனைகள், என்னைத் தாக்கித் தகர்க்கத் தொடங்கின!</p>.<p><strong>ம</strong>லையாள</p>.<p>மகாகவி ஒருவன் பாடினான் -</p>.<p><span style="color: #ff0000"><em>'மனுஷ்யன் - ஒரு<br /> மா பதம்!</em></span>’ என்று!</p>.<p>மனிதன் என்பது ஒரு மகத்தான வார்த்தையெனில் - அவ்வார்த்தையே நாளாவட்டத்தில், ஒரு வாக்கியமாய் நீளுகிறது.</p>.<p>மனித வாக்கியத்தின் முற்றுப் புள்ளி யாய் மரணத்தைச் சொன்னால் - முக்கால் புள்ளியாய் முதுமையைச் சொல்லலாம்.</p>.<p>முதுமை - என் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் ஓராமலில்லை; </p>.<p>எவ்வளவு முக்கியப் புள்ளியையும் - முக்காற் புள்ளியும், முற்றுப் புள்ளியும் விட்டுவைப்பதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.</p>.<p>முதுமை குறித்துத்தான் எத்துணை விதமான மூதுரைகள்!</p>.<p><span style="color: #993366"><em><strong>'வி</strong>ருத்தம் வந்துவிட்டதே - என<br /> வருத்தம் வரலாமா? ஓ! மானிடனே!<br /> எத்துணை பேர் முதுமையை -<br /> என்னென்று பார்த்திருக்கக் கூடும்?<br /> அதைப் பார்க்கும்<br /> அதிர்ஷ்டம் -<br /> உனக்குக் கிட்டியிருக்கிறதே என<br /> உவகை கொள்!’</em></span></p>.<p>- ஆங்கிலக் கவிஞன் ஒருவன் இவ்வணம் அருளியிருக்கிறான்!</p>.<p><strong>ப</strong>த்தொன்பதாம் நூற்றாண்டில், பறங்கியர் ஆட்சியில் -</p>.<p>முன்சீப் வேலை பார்த்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் -</p>.<p>யாத்தருளிய கீர்த்தனங்களில், யானறிந்த ஒன்று - முதுமையின் கையறு </p>.<p>நிலையை முழுமையாய்க் காட்டுகிறது.</p>.<p><span style="color: #339966"><em>'ஆசைக் கென்றோர் கறுப்பு<br /> முடியேதும் இலையே;<br /> அய்யய்யோ! கொக்கைப்போல்<br /> நரைத்தது தலையே;<br /> காசுக் குதவாத<br /> கிழம் என்பது நிலையே;<br /> கன்னியர்க்கும் இனிநாம்<br /> கசக்கும் வேப் பிலையே!’</em></span></p>.<p>- பாட்டில் இதனினும் பட்டாங்காகக் காட்ட முடியுமோ, விருத்தாப்பியத்தின் விளைவுகளை; விசனங்களை?</p>.<p><strong>'வெ</strong>ள்ளி விழா’ எனும் படத்தில் விசுவ நாதன் சார் பாடிய ஒரு பாட்டு; அது, முதுமை யைப் பற்றி அடியேன் எழுதியது.</p>.<p><span style="color: #ff0000"><em>'கடந்த காலமோ திரும்புவதில்லை;<br /> நிகழ்காலமோ விரும்புவதில்லை;<br /> எதிர்காலமோ அரும்புவதில்லை;<br /> இதுதானே அறுபதின் நிலை!’</em></span></p>.<p>-ஆம்; அறுபதிலிருந்துதான் ஆரம்பமாகிறது முதுமை; முதலில், முகத்தில் வரி விழுகிறது - அந்த முக வரிதான், முதுமையின் முகவரி!</p>.<p>அகவை கூடக் கூட, அவஸ்தைகளும் அவலங்களும் அதிகம்.</p>.<p>அஞ்சு பொறிகளும் இருக்கின்றன - அதனதன் இடத்தில்; அஞ்சு புலன்கள்தாம் - அந்தந்தப் பொறி வழியே பெற வேண்டிய பலன்கள் குறைந்து, நலன்கள் கெட்டு நிற்கின்றன.</p>.<p>செவி இருக்கிறது; ஆனால், செவிடாய் இருக்கிறது! விழி இருக்கிறது; ஆனால், விழிக்கிறது - தரையெது தண்ணீரெது எனத் தவித்த துரியோதனன் போல்!</p>.<p>கன்னத்தில் இருந்த குழியைக் காணோம்; தேடினால், கண்ணுக்குள் இருக்கிறது!</p>.<p>பாதம் இருக்கிறது; கூடவே, வாதம் இருக்கிறது!</p>.<p>'வழுக்கை இருக்கிறதே</p>.<p>வழுக்கை - அது</p>.<p>முடியில் இருந்தால் முதுமை; தேங்காய்</p>.<p>மூடியில் இருந்தால் இளமை!</p>.<p>பாழும் இயற்கைக்கும் பாரபட்சம் இருக்கிறதே, என் சொல்ல?</p>.<p><strong>வா</strong>ரிசுகள் மேல் வைக்கிறோமே பாசம் - அது, வயோதிகத்தில் - படாத பாடுபடுத்தும்.</p>.<p>இதைத்தான் - பட்டுக்கோட்டை பாடி வைத்தான் 'பாசவலை’ படத்தில் -</p>.<p><em>'பாசவலையில் மாட்டிக்கிட்டு -<br /> வவ்வா போலத் துடிக்குது!</em>’ என்று.</p>.<p>பாசம் இருக்கிறதே</p>.<p>பாசம் - அது</p>.<p>குளத்தில் இருந்தாலும் வழுக்கும்;</p>.<p>உளத்தில் இருந்தாலும் வழுக்கும்!</p>.<p><strong>பெ</strong>ரும்பாலும் முதுமை எய்திய பெற்றோர் புலம்புவதுண்டு -</p>.<p>'என் பிள்ளைகுட்டிகள் என் பேச்சைக் கேட்பதில்லை!’ என்று!</p>.<p>இவ் வினாவிற்கு - அப்பவே விடை சொல்லிப் போனார் அய்யா திருக்குறள் முனுசாமி அவர்கள்.</p>.<p>'பெற்றோர்களே! ஒன்றை யோசித்துப் பாருங்கள்; உங்கள் பிள்ளைகள் பிற்பாடு வந்தவர்கள். நீங்கள் பிறக்கும்போதே - உங்களுடன் வந்தவை காலும் கையும்!</p>.<p>வயதாகி விட்டால் - அவைகளே, உங்கள் பேச்சைக் கேட்பதில்லையே! வாரிசுகள், கேட்காததில் வியப்பென்ன கிடக்கிறது?!’</p>.<p>- இன்னணம் முனுசாமி அய்யா அவர் கள் எடுத்துரைத்ததைக் கேட்டு, முதியோர் பலர், ஞானம் பெற்றதுண்டு!</p>.<p><strong>அ</strong>வமானங்களுக்கும் அலட்சியங்களுக்கும் இடையே -</p>.<p>முக்கலும் முனகலுமாய்க் கிடக்குமே முதியோர் வாழ்க்கை என்றுதான் -</p>.<p>ஸ்ரீனிவாச வரதன் என்னைக் கேட்டான் -</p>.<p>'எண்பது வயதை எட்டிவிட்டாயே; வாழ்க்கை எப்படி இருக்கிறது?’ என்று.</p>.<p>கேள்வி நியாயமானதுதான்; ஆனால், அடியேனை முதுமையால் மனம் முறிந்து விடாமல் -</p>.<p>நாளும் போதும் எனைக் காத்து நிற்கும், நண்பர்கள் உடன் இருக்கிறார்கள்; அவர்கள் - உற்றுழியில் உதவும், உடுக்கை இழந்தவன் கைகள்!</p>.<p>வயோதிகம் என்பது வாழ்க்கையின் மாலைப் பொழுது; இந்த மாலைப் பொழுதில், மாலைப் பொழுதைக் கழிப்பதுதான் கஷ்டம்; படப் பாடல்கள் எழுதியது போக - மிச்ச நேரத்தில் பழைய நினைவுகள் என்னைப் பிறாண்டிப் பிடுங்கித் தின்றுவிடாமல் -</p>.<p>என்னை, நதிபோல் ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இந்த நண்பர்களே!</p>.<p><strong>'வெ</strong>ங்கிட்டு’ என நான் வாஞ்சையுடன் அழைக்கும் திரு.எஸ்.வெங்கடாசலம் - அமரர் திரு.சூர்யாப் பிள்ளையின் அருமந்தப் புதல்வர். என் உடலில் ஈ மொய்க்கும்; அதைக் காணில் வெங்கிட்டு விழியில் தீ மொய்க்கும். பெருந்தனமும் பெரிய மனமும் ஒருசேரப் பெற்ற அவர் - என்னிலிருந்து வெளியே நிற்கும் இன்னொரு நான்!</p>.<p>'கொங்கு நாட்டுத் தங்கம்’ என நான் கொண்டாடும் திரு.வி.கிருஷ்ணகுமார் - அருளாளர் திரு.ஆரெம்வீயால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்; செந்தணல் ஓம்பும் அந்தணர் குலமாயினும் - சகலராலும் சினேகிக்கப்படும் சமரச சன்மார்க்கர்; வாரந்தோறும் என் வாசல் வரும் வசந்தம் அவர்; வெறுங்கையோடு வர மாட்டார்; சாரு நிவேதிதாவையும், நாஞ்சில் நாடனையும், தொ.மு.பரமசிவத்தையும், கலாப்ரியாவையும் சுமந்துகொண்டு வருவார்.</p>.<p>செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்; விளம்பரமில்லாமல் அவர் ஏற்றி வைத்த விளக்குகள் - ஆங்காங்கு எரிந்துகொண்டிருக்கின்றன.</p>.<p>தொய்ந்து விடாமல் எனைத் தாங்கிப் பிடிப்பது அவரது இரு கை; எனவே, எனக்கு வாலிபம் தருவது அவரது வருகை!</p>.<p>'தலைவா! தலைவா!’ என்றழைத்து, என்னைத் தழுவி நிற்கும் ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன் இல்லையேல் -</p>.<p>கட்டுரையும் கவிதையும் இந்த வயதில் நான் எங்கே எழுதுவது? தொலைந்து போன என் இளமையைக் கண்டுபிடித்து என் கையில் கொடுத்தது நாராயணன்தான்!</p>.<p>'அய்யா! அய்யா!’ என விளித்து அவ்வப் போது என் வீடுவந்து - உற்சாக ஊசிகளை என் உள்ளத்தில் ஏற்றுவது -</p>.<p>கவிஞர் திரு.பழநி பாரதியும்; கவிஞர் திரு.நெல்லை ஜெயந்தாவும்! இவ் இருவரும், தங்கள் எழுத்துகளால் தனித்துவம் பெற்றவர்கள். இருப்பினும் - என் எழுத்துப் பதாகையை ஏந்திப் பிடித்து - என்னை ஒரு கைக்குழந்தையாய் தமது கைத்தலத்தே தாங்கி, என் வயது எனக்கே தெரியா வண்ணம் என்னை 'வாலிப வாலி’யாகவே வைத்திருக்கிறார்கள்.</p>.<p>கவிஞர்கள் கருத்தொருமித்து ஒரு நேச மாளிகைக் குக் கால்கோள் விழா நிகழ்த்த முடியும் என்று நிரூபித்த -</p>.<p>பழநி பாரதியும் நெல்லை ஜெயந்தாவும் என் இல்லம் வரும்போதெல்லாம் - </p>.<p>முதுமை, என் முதுகை விட்டு இறங்கி, மூலையில் போய் நிற்கிறது!</p>.<p><strong>எ</strong>ஞ்ஞான்றும் என்னை - இளமையிலேயே இருத்தி வைப்பவர் - என் எழுத்துகளுக்கு எல்லாம் உரைகல்லாய் இருக்கும் கவிஞர் பெருந்தகை திரு.முத்துலிங்கம் அவர்கள்.</p>.<p>கவியரங்கங்களானாலும், பத்திரிகைகளானாலும் -</p>.<p>முத்துலிங்கத்திடம் ஒப்புதல் வாங்காமல் வெளியே விடமாட்டேன், என் கவிதைகளை!</p>.<p>முப்பதாண்டுகளுக்கு மேல் கோடம்பாக்கத்தில் கோலோச்சி வரும் - மேனாள் அரசவைக் கவிஞரான திரு.முத்துலிங்கம் -</p>.<p>என் தமிழை நிறுத்து எடை சொல்லும் தராசு!</p>.<p><strong>இ</strong>த்துணை பேர்களையும் என்னோடு இணைத்தது தெய்வமல்ல; </p>.<p>தெய்வத் தமிழ்!</p>.<p>மூப்படைந்த பின்னும் - முந்தா நாள்</p>.<p>பூப்படைந்த பெண்போல் -</p>.<p>இளமை நலத்தோடு</p>.<p>இருப்பது...</p>.<p>தமிழ் மட்டுமல்ல;</p>.<p>தமிழை மாந்துவோரும் தான்!</p>.<p>அதனால்தான் - பாரதிதாசனார் பாடிவைத்தார் -</p>.<p>'தமிழுக்கும் அமுதென்று பேர்!’</p>.<p><strong>- சுழலும்... </strong></p>
<p style="text-align: center"><span style="color: #993366"><span style="font-size: small"><strong>மாலைப் பொழுதினிலே... </strong></span></span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>ஸ்ரீ</strong>னிவாச வரதனும் நானும், ஸ்ரீரங்கத்தில் கோலி விளையாடியவர்கள்; 'தோஸ்து படா தோஸ்து’!</p>.<p>STATES-ல் இருப்பவன் சென்னை வந்தான்; ஒரு கல்யாணம்.</p>.<p>கலந்துரையாடினேன்.</p>.<p>''ஹை! வாலி! இப்பவும் பாட்டு எழுதிண்டிருக்கேனு தெரியும். நியூஜெர்ஸீல இருக்கிற நம்ம சீமாச்சு வோட நாலு வயசுப் பொண்ணு - 'நங்காய்! செங்காய்!’னு பாடறது! அதெல்லாம் இருக்கட்டும்; </p>.<p>NOW YOU ARE AN OCTOGENARIAN! எப்படியிருக்கு LIFE?''</p>.<p>'OCTOGENARIAN’ - எனும் ஆங்கிலச் சொல் - அகவை எண்பதில் அடியெடுத்து வைத்தோரைக் குறிக்கும்.</p>.<p>ஸ்ரீனிவாச வரதன் என்னைவிட நான்கு வயது சின்னவன்.</p>.<p>அவன் விடுத்த வினாவிற்கு - ஒரு புன்னகையை விடையாய் இறுத்து</p>.<p>விட்டு - </p>.<p>இரவு விருந்து முடிந்ததும், வீடு வந்து சேர்ந்தேன்.</p>.<p>புரண்டு புரண்டு படுத்தும் - துயில் தூர நின்றது, விழிகளோடு விரோதம் பாராட்டிக்கொண்டு.</p>.<p>தத்துவார்த்தமான சிந்தனைகள், என்னைத் தாக்கித் தகர்க்கத் தொடங்கின!</p>.<p><strong>ம</strong>லையாள</p>.<p>மகாகவி ஒருவன் பாடினான் -</p>.<p><span style="color: #ff0000"><em>'மனுஷ்யன் - ஒரு<br /> மா பதம்!</em></span>’ என்று!</p>.<p>மனிதன் என்பது ஒரு மகத்தான வார்த்தையெனில் - அவ்வார்த்தையே நாளாவட்டத்தில், ஒரு வாக்கியமாய் நீளுகிறது.</p>.<p>மனித வாக்கியத்தின் முற்றுப் புள்ளி யாய் மரணத்தைச் சொன்னால் - முக்கால் புள்ளியாய் முதுமையைச் சொல்லலாம்.</p>.<p>முதுமை - என் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் ஓராமலில்லை; </p>.<p>எவ்வளவு முக்கியப் புள்ளியையும் - முக்காற் புள்ளியும், முற்றுப் புள்ளியும் விட்டுவைப்பதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.</p>.<p>முதுமை குறித்துத்தான் எத்துணை விதமான மூதுரைகள்!</p>.<p><span style="color: #993366"><em><strong>'வி</strong>ருத்தம் வந்துவிட்டதே - என<br /> வருத்தம் வரலாமா? ஓ! மானிடனே!<br /> எத்துணை பேர் முதுமையை -<br /> என்னென்று பார்த்திருக்கக் கூடும்?<br /> அதைப் பார்க்கும்<br /> அதிர்ஷ்டம் -<br /> உனக்குக் கிட்டியிருக்கிறதே என<br /> உவகை கொள்!’</em></span></p>.<p>- ஆங்கிலக் கவிஞன் ஒருவன் இவ்வணம் அருளியிருக்கிறான்!</p>.<p><strong>ப</strong>த்தொன்பதாம் நூற்றாண்டில், பறங்கியர் ஆட்சியில் -</p>.<p>முன்சீப் வேலை பார்த்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் -</p>.<p>யாத்தருளிய கீர்த்தனங்களில், யானறிந்த ஒன்று - முதுமையின் கையறு </p>.<p>நிலையை முழுமையாய்க் காட்டுகிறது.</p>.<p><span style="color: #339966"><em>'ஆசைக் கென்றோர் கறுப்பு<br /> முடியேதும் இலையே;<br /> அய்யய்யோ! கொக்கைப்போல்<br /> நரைத்தது தலையே;<br /> காசுக் குதவாத<br /> கிழம் என்பது நிலையே;<br /> கன்னியர்க்கும் இனிநாம்<br /> கசக்கும் வேப் பிலையே!’</em></span></p>.<p>- பாட்டில் இதனினும் பட்டாங்காகக் காட்ட முடியுமோ, விருத்தாப்பியத்தின் விளைவுகளை; விசனங்களை?</p>.<p><strong>'வெ</strong>ள்ளி விழா’ எனும் படத்தில் விசுவ நாதன் சார் பாடிய ஒரு பாட்டு; அது, முதுமை யைப் பற்றி அடியேன் எழுதியது.</p>.<p><span style="color: #ff0000"><em>'கடந்த காலமோ திரும்புவதில்லை;<br /> நிகழ்காலமோ விரும்புவதில்லை;<br /> எதிர்காலமோ அரும்புவதில்லை;<br /> இதுதானே அறுபதின் நிலை!’</em></span></p>.<p>-ஆம்; அறுபதிலிருந்துதான் ஆரம்பமாகிறது முதுமை; முதலில், முகத்தில் வரி விழுகிறது - அந்த முக வரிதான், முதுமையின் முகவரி!</p>.<p>அகவை கூடக் கூட, அவஸ்தைகளும் அவலங்களும் அதிகம்.</p>.<p>அஞ்சு பொறிகளும் இருக்கின்றன - அதனதன் இடத்தில்; அஞ்சு புலன்கள்தாம் - அந்தந்தப் பொறி வழியே பெற வேண்டிய பலன்கள் குறைந்து, நலன்கள் கெட்டு நிற்கின்றன.</p>.<p>செவி இருக்கிறது; ஆனால், செவிடாய் இருக்கிறது! விழி இருக்கிறது; ஆனால், விழிக்கிறது - தரையெது தண்ணீரெது எனத் தவித்த துரியோதனன் போல்!</p>.<p>கன்னத்தில் இருந்த குழியைக் காணோம்; தேடினால், கண்ணுக்குள் இருக்கிறது!</p>.<p>பாதம் இருக்கிறது; கூடவே, வாதம் இருக்கிறது!</p>.<p>'வழுக்கை இருக்கிறதே</p>.<p>வழுக்கை - அது</p>.<p>முடியில் இருந்தால் முதுமை; தேங்காய்</p>.<p>மூடியில் இருந்தால் இளமை!</p>.<p>பாழும் இயற்கைக்கும் பாரபட்சம் இருக்கிறதே, என் சொல்ல?</p>.<p><strong>வா</strong>ரிசுகள் மேல் வைக்கிறோமே பாசம் - அது, வயோதிகத்தில் - படாத பாடுபடுத்தும்.</p>.<p>இதைத்தான் - பட்டுக்கோட்டை பாடி வைத்தான் 'பாசவலை’ படத்தில் -</p>.<p><em>'பாசவலையில் மாட்டிக்கிட்டு -<br /> வவ்வா போலத் துடிக்குது!</em>’ என்று.</p>.<p>பாசம் இருக்கிறதே</p>.<p>பாசம் - அது</p>.<p>குளத்தில் இருந்தாலும் வழுக்கும்;</p>.<p>உளத்தில் இருந்தாலும் வழுக்கும்!</p>.<p><strong>பெ</strong>ரும்பாலும் முதுமை எய்திய பெற்றோர் புலம்புவதுண்டு -</p>.<p>'என் பிள்ளைகுட்டிகள் என் பேச்சைக் கேட்பதில்லை!’ என்று!</p>.<p>இவ் வினாவிற்கு - அப்பவே விடை சொல்லிப் போனார் அய்யா திருக்குறள் முனுசாமி அவர்கள்.</p>.<p>'பெற்றோர்களே! ஒன்றை யோசித்துப் பாருங்கள்; உங்கள் பிள்ளைகள் பிற்பாடு வந்தவர்கள். நீங்கள் பிறக்கும்போதே - உங்களுடன் வந்தவை காலும் கையும்!</p>.<p>வயதாகி விட்டால் - அவைகளே, உங்கள் பேச்சைக் கேட்பதில்லையே! வாரிசுகள், கேட்காததில் வியப்பென்ன கிடக்கிறது?!’</p>.<p>- இன்னணம் முனுசாமி அய்யா அவர் கள் எடுத்துரைத்ததைக் கேட்டு, முதியோர் பலர், ஞானம் பெற்றதுண்டு!</p>.<p><strong>அ</strong>வமானங்களுக்கும் அலட்சியங்களுக்கும் இடையே -</p>.<p>முக்கலும் முனகலுமாய்க் கிடக்குமே முதியோர் வாழ்க்கை என்றுதான் -</p>.<p>ஸ்ரீனிவாச வரதன் என்னைக் கேட்டான் -</p>.<p>'எண்பது வயதை எட்டிவிட்டாயே; வாழ்க்கை எப்படி இருக்கிறது?’ என்று.</p>.<p>கேள்வி நியாயமானதுதான்; ஆனால், அடியேனை முதுமையால் மனம் முறிந்து விடாமல் -</p>.<p>நாளும் போதும் எனைக் காத்து நிற்கும், நண்பர்கள் உடன் இருக்கிறார்கள்; அவர்கள் - உற்றுழியில் உதவும், உடுக்கை இழந்தவன் கைகள்!</p>.<p>வயோதிகம் என்பது வாழ்க்கையின் மாலைப் பொழுது; இந்த மாலைப் பொழுதில், மாலைப் பொழுதைக் கழிப்பதுதான் கஷ்டம்; படப் பாடல்கள் எழுதியது போக - மிச்ச நேரத்தில் பழைய நினைவுகள் என்னைப் பிறாண்டிப் பிடுங்கித் தின்றுவிடாமல் -</p>.<p>என்னை, நதிபோல் ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இந்த நண்பர்களே!</p>.<p><strong>'வெ</strong>ங்கிட்டு’ என நான் வாஞ்சையுடன் அழைக்கும் திரு.எஸ்.வெங்கடாசலம் - அமரர் திரு.சூர்யாப் பிள்ளையின் அருமந்தப் புதல்வர். என் உடலில் ஈ மொய்க்கும்; அதைக் காணில் வெங்கிட்டு விழியில் தீ மொய்க்கும். பெருந்தனமும் பெரிய மனமும் ஒருசேரப் பெற்ற அவர் - என்னிலிருந்து வெளியே நிற்கும் இன்னொரு நான்!</p>.<p>'கொங்கு நாட்டுத் தங்கம்’ என நான் கொண்டாடும் திரு.வி.கிருஷ்ணகுமார் - அருளாளர் திரு.ஆரெம்வீயால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்; செந்தணல் ஓம்பும் அந்தணர் குலமாயினும் - சகலராலும் சினேகிக்கப்படும் சமரச சன்மார்க்கர்; வாரந்தோறும் என் வாசல் வரும் வசந்தம் அவர்; வெறுங்கையோடு வர மாட்டார்; சாரு நிவேதிதாவையும், நாஞ்சில் நாடனையும், தொ.மு.பரமசிவத்தையும், கலாப்ரியாவையும் சுமந்துகொண்டு வருவார்.</p>.<p>செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்; விளம்பரமில்லாமல் அவர் ஏற்றி வைத்த விளக்குகள் - ஆங்காங்கு எரிந்துகொண்டிருக்கின்றன.</p>.<p>தொய்ந்து விடாமல் எனைத் தாங்கிப் பிடிப்பது அவரது இரு கை; எனவே, எனக்கு வாலிபம் தருவது அவரது வருகை!</p>.<p>'தலைவா! தலைவா!’ என்றழைத்து, என்னைத் தழுவி நிற்கும் ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன் இல்லையேல் -</p>.<p>கட்டுரையும் கவிதையும் இந்த வயதில் நான் எங்கே எழுதுவது? தொலைந்து போன என் இளமையைக் கண்டுபிடித்து என் கையில் கொடுத்தது நாராயணன்தான்!</p>.<p>'அய்யா! அய்யா!’ என விளித்து அவ்வப் போது என் வீடுவந்து - உற்சாக ஊசிகளை என் உள்ளத்தில் ஏற்றுவது -</p>.<p>கவிஞர் திரு.பழநி பாரதியும்; கவிஞர் திரு.நெல்லை ஜெயந்தாவும்! இவ் இருவரும், தங்கள் எழுத்துகளால் தனித்துவம் பெற்றவர்கள். இருப்பினும் - என் எழுத்துப் பதாகையை ஏந்திப் பிடித்து - என்னை ஒரு கைக்குழந்தையாய் தமது கைத்தலத்தே தாங்கி, என் வயது எனக்கே தெரியா வண்ணம் என்னை 'வாலிப வாலி’யாகவே வைத்திருக்கிறார்கள்.</p>.<p>கவிஞர்கள் கருத்தொருமித்து ஒரு நேச மாளிகைக் குக் கால்கோள் விழா நிகழ்த்த முடியும் என்று நிரூபித்த -</p>.<p>பழநி பாரதியும் நெல்லை ஜெயந்தாவும் என் இல்லம் வரும்போதெல்லாம் - </p>.<p>முதுமை, என் முதுகை விட்டு இறங்கி, மூலையில் போய் நிற்கிறது!</p>.<p><strong>எ</strong>ஞ்ஞான்றும் என்னை - இளமையிலேயே இருத்தி வைப்பவர் - என் எழுத்துகளுக்கு எல்லாம் உரைகல்லாய் இருக்கும் கவிஞர் பெருந்தகை திரு.முத்துலிங்கம் அவர்கள்.</p>.<p>கவியரங்கங்களானாலும், பத்திரிகைகளானாலும் -</p>.<p>முத்துலிங்கத்திடம் ஒப்புதல் வாங்காமல் வெளியே விடமாட்டேன், என் கவிதைகளை!</p>.<p>முப்பதாண்டுகளுக்கு மேல் கோடம்பாக்கத்தில் கோலோச்சி வரும் - மேனாள் அரசவைக் கவிஞரான திரு.முத்துலிங்கம் -</p>.<p>என் தமிழை நிறுத்து எடை சொல்லும் தராசு!</p>.<p><strong>இ</strong>த்துணை பேர்களையும் என்னோடு இணைத்தது தெய்வமல்ல; </p>.<p>தெய்வத் தமிழ்!</p>.<p>மூப்படைந்த பின்னும் - முந்தா நாள்</p>.<p>பூப்படைந்த பெண்போல் -</p>.<p>இளமை நலத்தோடு</p>.<p>இருப்பது...</p>.<p>தமிழ் மட்டுமல்ல;</p>.<p>தமிழை மாந்துவோரும் தான்!</p>.<p>அதனால்தான் - பாரதிதாசனார் பாடிவைத்தார் -</p>.<p>'தமிழுக்கும் அமுதென்று பேர்!’</p>.<p><strong>- சுழலும்... </strong></p>