<p style="text-align: center"><span style="color: #ff0000"><strong>உறையூர் வாத்தியார்! </strong></span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>'புஸ்தகம்-<br /> ஹஸ்த பூஷணம்!’</p>.<p>- வாகீச கலாநிதி திரு.கி.வா. ஜகன்னாதன் அவர்கள் வாய் மலர்ந்தருளிய ஒரு வடமொழி வாசகம் இது.</p>.<p>இதன் பொருள் -</p>.<p>'ஏடு<br /> என்பது -<br /> நம் கை அணியும்<br /> நகை!’</p>.<p><strong>இ</strong>த்தகு புத்தக நகைகளைப் புத்தம் புதிதாய்ப் பதிப்பகங்கள் படைக்கின்றன - பொற்கொல்லர் அனைய சொற்கொல்லர் தமைக்கொண்டு!</p>.<p>பதிப்பகங்கள் பால் பற்றுடையவன் நான். பற்று வரவு கருதியல்ல இப்பற்று; அவற்றின் பணி கருதி!</p>.<p>பதிப்பகங்கள் தாம்</p>.<p>படிமிசை -<br /> எம்மனோர்<br /> எழுதிய -<br /> நூல்கள் நடக்க உதவும்<br /> கால்கள்!</p>.<p>புத்தகங்கள் பட்டிதொட்டியெங்கும், பல புத் தகங்கள் புகப் பதிப்பகங்கள் தாம் -COURIER . அவற்றை விட்டால் அப்பணி ஆற்ற ஆர்தாம் உரியர்?</p>.<p><strong>ப</strong>டங்களுக்குப் பாட்டெழுதும் ஒருவன், கோடம்பாக்கத்தில் கோலோச்சுதல் வேறு; கோதறு தமிழில் நூலோச்சுதல் வேறு!</p>.<p>முன்னது - இருந்து வாழ்வதற்கு உதவும்;</p>.<p>பின்னது - இறந்து வாழ்வதற்கு உதவும்!</p>.<p>எனது - எழுத்துக்கு மரியாதையும்; கழுத் துக்கு மலர் மாலையும் வரக் காரணமாக இருப்பவை, பதிப்பகங்களே.</p>.<p>'வானதி’ - முதன்முதல் என் கவிதைத் தொகுப்பைப் பதிப்பித்தது; 'விகடன்’ - முதன்முதல் என் காவியங்களைப் பதிப்பித்தது; 'அல்லையன்ஸ்’ - முதன்முதல் என் குறுங்காவியத்தைப் பதிப்பித்தது; 'கலைஞன்’ - முதன்முதல் என் வாழ்க்கை வரலாற்றைப் பதிப்பித்தது; 'குமரன்’ - முதன்முதல் என் ஆயிரம் திரைப் பாடல்களைப் பதிப்பித்தது; 'கண்ணதாசன்’ - முதன்முதல் எனது கண்ணதாசனைப் பற்றிய நூலைப் பதிப்பித்தது!</p>.<p>இப்படி - என் முதல்களுக்கெல்லாம் முதல்கள் போட்டவர்கள் எல்லோருமே எனக்கு முக்கியமானவர்கள்; இன்றளவும் இழையறாத சக்கியமானவர்கள்.</p>.<p><strong>ஒ</strong>வ்வொருவரைப் பற்றியும் ஓரிரு வரி களாவது சொல்ல வேண்டும்.</p>.<p>'விகடன்’ திரு.ஸ்ரீனிவாசன் -</p>.<p>என் எழுத்துகளை</p>.<p>ஏந்தி நிற்கும் -</p>.<p>நிழற்பட நாடாக்களை விட, 'நினைவு நாடாக்கள்’தாம் - நீணிலத்தார் நெஞ்சங் களை மயிலிறகாய் நீவுகிறது எனில் -</p>.<p>அதற்கு, இவரே காரணம். தமிழைத் தாங்குவதில் தந்தை வழி தனயன்!</p>.<p>'கலைஞன்’ திரு.நந்தா.</p>.<p>நந்தா, ஒரு நந்தா விளக்கு; எந்தக் காற்றையும் எதிர்கொண்டு நிற்கும் சுடர்;மாசிலாமணி பெற்ற மாசிலா மணி!</p>.<p>'அல்லயன்ஸ்’ திரு.ஸ்ரீனிவாசன்.</p>.<p>நூற்றாண்டு கண்ட நூற்பதிப்பகத்தைக் காற்றாண்டு நிற்கும் ககனம் போல், விரிவாக்கி வைத்தவர்; அதற்குக் காரணம் -</p>.<p>ALLIANCE IS KNOWN FOR IT'S RELIANCE!</p>.<p>'குமரன்’ திரு.வைரவன்.</p>.<p>இந்த வைரவன் -</p>.<p>நெறி எனும் தறியில் நூல்களை நெய்பவன்;</p>.<p>நிலமிசை இல்லை இவ்வைரவனை வைபவன்;</p>.<p>தமிழுக்குத் தகவு செய்பவன்; தர வேண்டிய</p>.<p>சன்மானத்தை தாராளமாய்ப் பெய்பவன்!</p>.<p>'கண்ணதாசன்’ திரு.காந்தி.</p>.<p>கவிஞர் எழுதிய - கால் கை முளைத்த கவிதை;</p>.<p>இவனுக்கு நான் சிறிய தந்தை; காரணம்,</p>.<p>இவனுக்கு இல்லை சிறிய சிந்தை!</p>.<p>இவ் வரிசையில் 'வானதி’ திரு.திருநாவுக்கரசு பற்றிக் கொஞ்சம் விரித்துச் சொல்ல வேண்டும்.</p>.<p>திரு.திருநாவுக்கரசுதான், ஒரே நேரத்தில் என் பத்துப் புத்தகங்களை ஒருசேர வெளியிட்டவர்.</p>.<p>காஞ்சிப் பெரியவாளையும்; காங்கேய நல்லூர்ப் பெரியவரையும்...</p>.<p>அச்சு வாகனத்தில் அமர்த்தித் தேசம்எங்கும், இந்த தேவகோட்டைக்காரர்தான் சுமந்து சென்றார்; சூடற்கரிய அருள்நலம் சூடி நின்றார். நூலால் வரும் பொருளைக் காட்டிலும், நூலுள் வரும் பொருளைப் பெரியதாய்க் கருதுவார்!</p>.<p>காளியாச்சியின் கேள்வர்; கங்குலும் பகலும், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு PROOF பார்த்துவிட்டுத் தான் மறுவேலைக்கு மீள்வர்!</p>.<p>இவரைப் பற்றி, நான் ஒரு விழாவில் பாடியதைக் கேட்டு கி.வா.ஜ. கைதட்டிச் சிரித்தார்.</p>.<p>பாட்டு இதுதான்:</p>.<p><span style="color: #ff0000"><em>'மனையாளின் நூலிடையில்<br /> மனம்வைக்க நேரமின்றி -<br /> மணித்தமிழ் நூலிடையில்<br /> மணிக்கணக்காய் ஆழ்ந்திருப்பார்! </em></span></p>.<p><span style="color: #ff0000"><em>சிங்கிள் டீ கிடைக்காமல்<br /> சிரமத்தில் இருந்தோரும் - இவரது<br /> ராயல் டீ கிடைத்ததனால்<br /> ராஜாக்கள் ஆனதுண்டு!’</em></span></p>.<p><strong>அ</strong>திகம் என் நூல்களை அச்சிட்டவர் என்பதால், திரு.வானதி திருநாவுக்கரசின் வார்த்தைக்குக் கட்டுப்படுவேன்.</p>.<p>அப்படி ஒரு முறை - அவரது வற்புறுத் தலின் பேரில், தேவகோட்டைக்குக் கந்த சஷ்டி விழாவிற்குப் போனேன். வருஷம், எழுபத்தைந்தோ, எழுபத்தாறோ நினைவில் இல்லை.</p>.<p>என் தலைமையில் கவியரங்கம்; கண்ணதாசனின் தனி உரை 'அர்த்தமுள்ள இந்து மதம்’ பற்றி.</p>.<p>நானும் கண்ணதாசனும் - தேவகோட்டை யில் திரு.சேவுகன் செட்டியார் அவர்களின் வீட்டில் பக்கத்துப் பக்கத்து அறையில் தங்கியிருந்தோம்.</p>.<p>கண்ணதாசன் அவரது துணைவியார் திருமதி. புலவர் வள்ளியம்மையோடும், பெண் குழந்தை விசாலியோடும் வந்திருந்தார்.</p>.<p>மாலைதான் எங்கள் நிகழ்ச்சிகள். நானும் கண்ணதாசனும் செட்டியார் வீட்டு வாசற் பந்தலில் காற்றாட உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தோம். நண்பகல் நேரம்.</p>.<p>பக்கத்தில்தான் விழா நடக்கும் வளாகம். காலையிலிருந்து பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது.</p>.<p>தலைப்பு - 'கண்ணகி; மாதவி; இவ் இருவரில் யார் மேல்?’ என்பது.</p>.<p>நானும், கவிஞரும் கேட்டுக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருந்தோம்.</p>.<p>திடீரென்று கண்ணதாசன், 'வாலி! நீர் பட்டிமன்ற நடுவரா இருந்தா - என்ன தீர்ப்புச் சொல்லுவீர்? கண்ணகி, மாதவி இருவரில் யார் மேல்?’ என்று கேட்க -</p>.<p>'இருவருமே MALE இல்லை; இருவருமே FEMALE!’ என்று நான் தீர்ப்பளிப்பேன் என்றேன்.</p>.<p>கண்ணதாசன், 'வாலீங்கற பேருக்குத் தகுந்த மாதிரி, குரங்கு புத்திய்யா உமக்கு?’ என்று ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தார்.</p>.<p><strong>இ</strong>தை எழுதுகையில் -</p>.<p>கண்ணகி, மாதவி பற்றி, என் இருபத்தைந்தாம் வயதில், திருச்சி எழுத்தாளர் சங்கத்தில் நான் படித்த கவிதையன்று நினைவிற்கு வருகிறது.</p>.<p>அவையில் - அகிலன்; சுகி; துறைவன்; மீ.ப.சோமு; திருலோகம்; கிருஷ்ணசாமி ரெட்டியார்; வித்வான் துரைசாமி என்று பலர்.</p>.<p>கவிதையின் தலைப்பு 'இருமாதர்’; அரை குறையாக நினைவில் உள்ளது. அது இதோ...</p>.<p><span style="color: #993366"><em>'ஒருத்தி குலத்தார்<br /> ஓம்பியது கடல் வணிகம்;<br /> இன்னொருத்தி குலத்தார்<br /> இயற்றியது உடல் வணிகம்! </em></span></p>.<p><span style="color: #993366"><em>ஒருவனே தழுவினான்<br /> இருவரை; அவ்<br /> இருவருமே கற்பு நெறியில்<br /> இடம்பெயறா இரு வரை! </em></span></p>.<p><span style="color: #993366"><em>அவர்களது<br /> ஆளன் -<br /> புகாரில் பிறந்தவன்;<br /> புகாரில் இறந்தவன்! </em></span></p>.<p><span style="color: #993366"><em>ஒருத்தி-<br /> விண்மகள் மரபில் வந்து<br /> மண்மகள் ஆனவள்; இன்னொருத்தி<br /> மண்மகள் மரபில் வந்து<br /> விண்மகள் ஆனவள்! </em></span></p>.<p>- இப்படிப் போகிறது கவிதை;இதை வெகுவாகப் பாராட்டியவர், உறையூரில் பணி புரிந்த ஒரு தமிழ் வாத்தியார். எனக்கு நன்கு பரிச்சயமானவர்.</p>.<p>அவர், சிற்றூர்தோறும் சிலப்பதிகாரத்தைக் கொண்டு சென்றவர்; திரு.அய்யன் பெருமாள் கோனாராலேயே சிலாகிக்கப்பெற்றவர்!</p>.<p>அந்த வாத்தியார், கண்ணகி மேல் தனக்குள்ள ஈடுபாட்டால், தன் மகளுக்குக் கண்ணகி என்றே பேர் வைத்தார்.</p>.<p>அவர் வீட்டுக்கு நான் அடிக்கடி போவேன்.</p>.<p>'என் பெண்ணைக் கண்ணகி போல், சிலப்பதிகாரத்தையே சோறாக ஊட்டி ஊட்டி வளர்க்கிறேன். இவள், இன்னொரு கண்ணகி; இன்னொரு கற்புக்கனல்!’ என்று உணர்ச்சி உந்தப் பேசுவார்.</p>.<p>ஒரு முறை, நான் அவரிடம் சொன்னேன். ''சார்! கண்ணகி, வணக்கத்திற்குரிய குலமகள் என்பதில், இரண்டாம் கருத்தேயில்லை; இருப்பினும் அவள், 'தேரா மன்னா!’ என்று காவலனைக் கடிந்ததற்குப் பதிலாக, 'தேரா மணாளா!’ என்று கோவலனைக் கடிந்திருக்க வேண்டும். கண்ணகி போன்ற உங்கள் மகளுக்கு, கோவலன் போன்ற கணவன் வாய்த்தால் - நாளை என்ன செய்வீர்கள்? வாழாவெட்டியாக மகள் வாழ்வதைப் பார்த்து, சினம் கொள்வீர்களா? இன்னொரு கண்ணகி என்று சிலாகித்து நிற்பீர்களா?''</p>.<p>- இப்படி நான் கேட்டதும், 'நீ கண்ணகியைக் கொச்சைப் படுத்துகிறாய்; உருப்பட மாட்டாய்!’ என்று என்னைக் கோபித்து அனுப்பினார்!</p>.<p><strong>தி</strong>ருச்சியை விட்டு சென்னை வந்து - திரை யுலகில் நான் பிரபலமான பல வருடங்களுக் குப் பின்னால் திருச்சி சென்றபோது -</p>.<p>உறையூர் தமிழ் வாத்தியார் பற்றி விசாரித்தேன்.</p>.<p>அவருக்கு வாய்த்த மருமகன், கோவலன் போலவே வேறொரு மாதவி பின் போக - மகள் கண்ணகி வாழாவெட்டியாக -</p>.<p>வாத்தியார் மருமகனைக் கண்டித்தும், அவன் வழிக்கு வராது அவரை வசைபாடி விரட்ட -</p>.<p>மகள் படும்பாடு காணச் சகியாது, அந்த வாத்தியார் சித்த ஸ்வாதீனமில்லாமல் சில காலம் வாழ்ந்து, சிவலோகம் போனார் என்று நான் கேள்விப்பட்டேன்!</p>.<p><strong>தொ</strong>லைக்காட்சியில் ஒரு தொடர் வந்தது - 'சக்திமான்’ என்று. அதைப் பார்த்துப் பார்த்து, டெல்லியில் ஒரு சிறுவன் -</p>.<p>சக்திமான் ஆகவே தன்னைப் பாவித்து, மேல் மாடியிலிருந்து கீழே குதிக்க - மூளை சிதறி மடிந்து போனான்!</p>.<p><strong>அ</strong>ந்தச் சிறுவனுக்கும், இந்தச் சிலப்பதிகார வாத்தியாருக்கும் -</p>.<p>அதிக வித்தியாசமில்லை!</p>.<p><strong>- சுழலும்...</strong></p>
<p style="text-align: center"><span style="color: #ff0000"><strong>உறையூர் வாத்தியார்! </strong></span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>'புஸ்தகம்-<br /> ஹஸ்த பூஷணம்!’</p>.<p>- வாகீச கலாநிதி திரு.கி.வா. ஜகன்னாதன் அவர்கள் வாய் மலர்ந்தருளிய ஒரு வடமொழி வாசகம் இது.</p>.<p>இதன் பொருள் -</p>.<p>'ஏடு<br /> என்பது -<br /> நம் கை அணியும்<br /> நகை!’</p>.<p><strong>இ</strong>த்தகு புத்தக நகைகளைப் புத்தம் புதிதாய்ப் பதிப்பகங்கள் படைக்கின்றன - பொற்கொல்லர் அனைய சொற்கொல்லர் தமைக்கொண்டு!</p>.<p>பதிப்பகங்கள் பால் பற்றுடையவன் நான். பற்று வரவு கருதியல்ல இப்பற்று; அவற்றின் பணி கருதி!</p>.<p>பதிப்பகங்கள் தாம்</p>.<p>படிமிசை -<br /> எம்மனோர்<br /> எழுதிய -<br /> நூல்கள் நடக்க உதவும்<br /> கால்கள்!</p>.<p>புத்தகங்கள் பட்டிதொட்டியெங்கும், பல புத் தகங்கள் புகப் பதிப்பகங்கள் தாம் -COURIER . அவற்றை விட்டால் அப்பணி ஆற்ற ஆர்தாம் உரியர்?</p>.<p><strong>ப</strong>டங்களுக்குப் பாட்டெழுதும் ஒருவன், கோடம்பாக்கத்தில் கோலோச்சுதல் வேறு; கோதறு தமிழில் நூலோச்சுதல் வேறு!</p>.<p>முன்னது - இருந்து வாழ்வதற்கு உதவும்;</p>.<p>பின்னது - இறந்து வாழ்வதற்கு உதவும்!</p>.<p>எனது - எழுத்துக்கு மரியாதையும்; கழுத் துக்கு மலர் மாலையும் வரக் காரணமாக இருப்பவை, பதிப்பகங்களே.</p>.<p>'வானதி’ - முதன்முதல் என் கவிதைத் தொகுப்பைப் பதிப்பித்தது; 'விகடன்’ - முதன்முதல் என் காவியங்களைப் பதிப்பித்தது; 'அல்லையன்ஸ்’ - முதன்முதல் என் குறுங்காவியத்தைப் பதிப்பித்தது; 'கலைஞன்’ - முதன்முதல் என் வாழ்க்கை வரலாற்றைப் பதிப்பித்தது; 'குமரன்’ - முதன்முதல் என் ஆயிரம் திரைப் பாடல்களைப் பதிப்பித்தது; 'கண்ணதாசன்’ - முதன்முதல் எனது கண்ணதாசனைப் பற்றிய நூலைப் பதிப்பித்தது!</p>.<p>இப்படி - என் முதல்களுக்கெல்லாம் முதல்கள் போட்டவர்கள் எல்லோருமே எனக்கு முக்கியமானவர்கள்; இன்றளவும் இழையறாத சக்கியமானவர்கள்.</p>.<p><strong>ஒ</strong>வ்வொருவரைப் பற்றியும் ஓரிரு வரி களாவது சொல்ல வேண்டும்.</p>.<p>'விகடன்’ திரு.ஸ்ரீனிவாசன் -</p>.<p>என் எழுத்துகளை</p>.<p>ஏந்தி நிற்கும் -</p>.<p>நிழற்பட நாடாக்களை விட, 'நினைவு நாடாக்கள்’தாம் - நீணிலத்தார் நெஞ்சங் களை மயிலிறகாய் நீவுகிறது எனில் -</p>.<p>அதற்கு, இவரே காரணம். தமிழைத் தாங்குவதில் தந்தை வழி தனயன்!</p>.<p>'கலைஞன்’ திரு.நந்தா.</p>.<p>நந்தா, ஒரு நந்தா விளக்கு; எந்தக் காற்றையும் எதிர்கொண்டு நிற்கும் சுடர்;மாசிலாமணி பெற்ற மாசிலா மணி!</p>.<p>'அல்லயன்ஸ்’ திரு.ஸ்ரீனிவாசன்.</p>.<p>நூற்றாண்டு கண்ட நூற்பதிப்பகத்தைக் காற்றாண்டு நிற்கும் ககனம் போல், விரிவாக்கி வைத்தவர்; அதற்குக் காரணம் -</p>.<p>ALLIANCE IS KNOWN FOR IT'S RELIANCE!</p>.<p>'குமரன்’ திரு.வைரவன்.</p>.<p>இந்த வைரவன் -</p>.<p>நெறி எனும் தறியில் நூல்களை நெய்பவன்;</p>.<p>நிலமிசை இல்லை இவ்வைரவனை வைபவன்;</p>.<p>தமிழுக்குத் தகவு செய்பவன்; தர வேண்டிய</p>.<p>சன்மானத்தை தாராளமாய்ப் பெய்பவன்!</p>.<p>'கண்ணதாசன்’ திரு.காந்தி.</p>.<p>கவிஞர் எழுதிய - கால் கை முளைத்த கவிதை;</p>.<p>இவனுக்கு நான் சிறிய தந்தை; காரணம்,</p>.<p>இவனுக்கு இல்லை சிறிய சிந்தை!</p>.<p>இவ் வரிசையில் 'வானதி’ திரு.திருநாவுக்கரசு பற்றிக் கொஞ்சம் விரித்துச் சொல்ல வேண்டும்.</p>.<p>திரு.திருநாவுக்கரசுதான், ஒரே நேரத்தில் என் பத்துப் புத்தகங்களை ஒருசேர வெளியிட்டவர்.</p>.<p>காஞ்சிப் பெரியவாளையும்; காங்கேய நல்லூர்ப் பெரியவரையும்...</p>.<p>அச்சு வாகனத்தில் அமர்த்தித் தேசம்எங்கும், இந்த தேவகோட்டைக்காரர்தான் சுமந்து சென்றார்; சூடற்கரிய அருள்நலம் சூடி நின்றார். நூலால் வரும் பொருளைக் காட்டிலும், நூலுள் வரும் பொருளைப் பெரியதாய்க் கருதுவார்!</p>.<p>காளியாச்சியின் கேள்வர்; கங்குலும் பகலும், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு PROOF பார்த்துவிட்டுத் தான் மறுவேலைக்கு மீள்வர்!</p>.<p>இவரைப் பற்றி, நான் ஒரு விழாவில் பாடியதைக் கேட்டு கி.வா.ஜ. கைதட்டிச் சிரித்தார்.</p>.<p>பாட்டு இதுதான்:</p>.<p><span style="color: #ff0000"><em>'மனையாளின் நூலிடையில்<br /> மனம்வைக்க நேரமின்றி -<br /> மணித்தமிழ் நூலிடையில்<br /> மணிக்கணக்காய் ஆழ்ந்திருப்பார்! </em></span></p>.<p><span style="color: #ff0000"><em>சிங்கிள் டீ கிடைக்காமல்<br /> சிரமத்தில் இருந்தோரும் - இவரது<br /> ராயல் டீ கிடைத்ததனால்<br /> ராஜாக்கள் ஆனதுண்டு!’</em></span></p>.<p><strong>அ</strong>திகம் என் நூல்களை அச்சிட்டவர் என்பதால், திரு.வானதி திருநாவுக்கரசின் வார்த்தைக்குக் கட்டுப்படுவேன்.</p>.<p>அப்படி ஒரு முறை - அவரது வற்புறுத் தலின் பேரில், தேவகோட்டைக்குக் கந்த சஷ்டி விழாவிற்குப் போனேன். வருஷம், எழுபத்தைந்தோ, எழுபத்தாறோ நினைவில் இல்லை.</p>.<p>என் தலைமையில் கவியரங்கம்; கண்ணதாசனின் தனி உரை 'அர்த்தமுள்ள இந்து மதம்’ பற்றி.</p>.<p>நானும் கண்ணதாசனும் - தேவகோட்டை யில் திரு.சேவுகன் செட்டியார் அவர்களின் வீட்டில் பக்கத்துப் பக்கத்து அறையில் தங்கியிருந்தோம்.</p>.<p>கண்ணதாசன் அவரது துணைவியார் திருமதி. புலவர் வள்ளியம்மையோடும், பெண் குழந்தை விசாலியோடும் வந்திருந்தார்.</p>.<p>மாலைதான் எங்கள் நிகழ்ச்சிகள். நானும் கண்ணதாசனும் செட்டியார் வீட்டு வாசற் பந்தலில் காற்றாட உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தோம். நண்பகல் நேரம்.</p>.<p>பக்கத்தில்தான் விழா நடக்கும் வளாகம். காலையிலிருந்து பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது.</p>.<p>தலைப்பு - 'கண்ணகி; மாதவி; இவ் இருவரில் யார் மேல்?’ என்பது.</p>.<p>நானும், கவிஞரும் கேட்டுக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருந்தோம்.</p>.<p>திடீரென்று கண்ணதாசன், 'வாலி! நீர் பட்டிமன்ற நடுவரா இருந்தா - என்ன தீர்ப்புச் சொல்லுவீர்? கண்ணகி, மாதவி இருவரில் யார் மேல்?’ என்று கேட்க -</p>.<p>'இருவருமே MALE இல்லை; இருவருமே FEMALE!’ என்று நான் தீர்ப்பளிப்பேன் என்றேன்.</p>.<p>கண்ணதாசன், 'வாலீங்கற பேருக்குத் தகுந்த மாதிரி, குரங்கு புத்திய்யா உமக்கு?’ என்று ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தார்.</p>.<p><strong>இ</strong>தை எழுதுகையில் -</p>.<p>கண்ணகி, மாதவி பற்றி, என் இருபத்தைந்தாம் வயதில், திருச்சி எழுத்தாளர் சங்கத்தில் நான் படித்த கவிதையன்று நினைவிற்கு வருகிறது.</p>.<p>அவையில் - அகிலன்; சுகி; துறைவன்; மீ.ப.சோமு; திருலோகம்; கிருஷ்ணசாமி ரெட்டியார்; வித்வான் துரைசாமி என்று பலர்.</p>.<p>கவிதையின் தலைப்பு 'இருமாதர்’; அரை குறையாக நினைவில் உள்ளது. அது இதோ...</p>.<p><span style="color: #993366"><em>'ஒருத்தி குலத்தார்<br /> ஓம்பியது கடல் வணிகம்;<br /> இன்னொருத்தி குலத்தார்<br /> இயற்றியது உடல் வணிகம்! </em></span></p>.<p><span style="color: #993366"><em>ஒருவனே தழுவினான்<br /> இருவரை; அவ்<br /> இருவருமே கற்பு நெறியில்<br /> இடம்பெயறா இரு வரை! </em></span></p>.<p><span style="color: #993366"><em>அவர்களது<br /> ஆளன் -<br /> புகாரில் பிறந்தவன்;<br /> புகாரில் இறந்தவன்! </em></span></p>.<p><span style="color: #993366"><em>ஒருத்தி-<br /> விண்மகள் மரபில் வந்து<br /> மண்மகள் ஆனவள்; இன்னொருத்தி<br /> மண்மகள் மரபில் வந்து<br /> விண்மகள் ஆனவள்! </em></span></p>.<p>- இப்படிப் போகிறது கவிதை;இதை வெகுவாகப் பாராட்டியவர், உறையூரில் பணி புரிந்த ஒரு தமிழ் வாத்தியார். எனக்கு நன்கு பரிச்சயமானவர்.</p>.<p>அவர், சிற்றூர்தோறும் சிலப்பதிகாரத்தைக் கொண்டு சென்றவர்; திரு.அய்யன் பெருமாள் கோனாராலேயே சிலாகிக்கப்பெற்றவர்!</p>.<p>அந்த வாத்தியார், கண்ணகி மேல் தனக்குள்ள ஈடுபாட்டால், தன் மகளுக்குக் கண்ணகி என்றே பேர் வைத்தார்.</p>.<p>அவர் வீட்டுக்கு நான் அடிக்கடி போவேன்.</p>.<p>'என் பெண்ணைக் கண்ணகி போல், சிலப்பதிகாரத்தையே சோறாக ஊட்டி ஊட்டி வளர்க்கிறேன். இவள், இன்னொரு கண்ணகி; இன்னொரு கற்புக்கனல்!’ என்று உணர்ச்சி உந்தப் பேசுவார்.</p>.<p>ஒரு முறை, நான் அவரிடம் சொன்னேன். ''சார்! கண்ணகி, வணக்கத்திற்குரிய குலமகள் என்பதில், இரண்டாம் கருத்தேயில்லை; இருப்பினும் அவள், 'தேரா மன்னா!’ என்று காவலனைக் கடிந்ததற்குப் பதிலாக, 'தேரா மணாளா!’ என்று கோவலனைக் கடிந்திருக்க வேண்டும். கண்ணகி போன்ற உங்கள் மகளுக்கு, கோவலன் போன்ற கணவன் வாய்த்தால் - நாளை என்ன செய்வீர்கள்? வாழாவெட்டியாக மகள் வாழ்வதைப் பார்த்து, சினம் கொள்வீர்களா? இன்னொரு கண்ணகி என்று சிலாகித்து நிற்பீர்களா?''</p>.<p>- இப்படி நான் கேட்டதும், 'நீ கண்ணகியைக் கொச்சைப் படுத்துகிறாய்; உருப்பட மாட்டாய்!’ என்று என்னைக் கோபித்து அனுப்பினார்!</p>.<p><strong>தி</strong>ருச்சியை விட்டு சென்னை வந்து - திரை யுலகில் நான் பிரபலமான பல வருடங்களுக் குப் பின்னால் திருச்சி சென்றபோது -</p>.<p>உறையூர் தமிழ் வாத்தியார் பற்றி விசாரித்தேன்.</p>.<p>அவருக்கு வாய்த்த மருமகன், கோவலன் போலவே வேறொரு மாதவி பின் போக - மகள் கண்ணகி வாழாவெட்டியாக -</p>.<p>வாத்தியார் மருமகனைக் கண்டித்தும், அவன் வழிக்கு வராது அவரை வசைபாடி விரட்ட -</p>.<p>மகள் படும்பாடு காணச் சகியாது, அந்த வாத்தியார் சித்த ஸ்வாதீனமில்லாமல் சில காலம் வாழ்ந்து, சிவலோகம் போனார் என்று நான் கேள்விப்பட்டேன்!</p>.<p><strong>தொ</strong>லைக்காட்சியில் ஒரு தொடர் வந்தது - 'சக்திமான்’ என்று. அதைப் பார்த்துப் பார்த்து, டெல்லியில் ஒரு சிறுவன் -</p>.<p>சக்திமான் ஆகவே தன்னைப் பாவித்து, மேல் மாடியிலிருந்து கீழே குதிக்க - மூளை சிதறி மடிந்து போனான்!</p>.<p><strong>அ</strong>ந்தச் சிறுவனுக்கும், இந்தச் சிலப்பதிகார வாத்தியாருக்கும் -</p>.<p>அதிக வித்தியாசமில்லை!</p>.<p><strong>- சுழலும்...</strong></p>