<p>அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரியின் டவுசர் காலம் இது!</p>.<p>வகுப்பறையில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பார். அவரைச் சுற்றிலும் எப்போதும் உட்கார்ந்திருக்கும் பசங்க பட்டாளம், 'ஐயய்யோ... அண்ணன் கோபமாயிட்டாரே’, 'அண்ணன் இப்போ நெஞ்ச வெடைப்பாரே’, 'அண்ணன் கையை முறுக்குவாரே...’ என பில்டப் ஏற்றுவார்கள்.</p>.<p>இங்கிலீஷ்ல இவருக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை... இங்கிலீஷாகத்தான் இருக்கும்.</p>.<p>படிப்பைவிட விளையாட்டில் சுட்டியாக இருந்திருப்பார். கபடி விளையாட்டில் யாராவது காலைப் பிடித்து இழுத்தால், 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’ என அழுதிருப்பார். </p>.<p>'அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...’ பாட்டுதான் இவரின் ஆல்டைம் ஃபேவரைட்.</p>.<p>தன் சாப்பாட்டுத் தட்டில் ஒரே ஒரு முட்டை வைத்துவிட்டு தம்பியின் தட்டில் இரண்டு முட்டையை வைத்த பெற்றோர் மீது கோபித்துக்கொண்டு அழகர் மலையில் போய் உட்கார்ந்திருப்பார்.</p>.<p>'திருவிளையாடல்’ படம் இவருக்குப் பிடிக்கும். ஸ்கூல் டிராமா ரிகர்சலில் 'பழம் எனக்குத்தான்’ என்ற டயலாக்கை வீட்டிலும் ஸ்கூலிலும் சொல்லிப் பார்த்திருப்பார்.</p>.<p>ஹோம்ஒர்க் செய்யாமல் இருந்ததால், அடிக்கடி ஸ்கூலுக்கு மட்டம் போட்டிருப்பார். மிஸ் கேட்கும்போது, 'அப்பா ஹோம் ஒர்க் செய்யவிடல’ என்றும், 'படிச்சிட்டு இருக்கிறப்போ, நடுவுல கொஞ்சம் தம்பி டிஸ்டர்ப் பண்ணிட்டான்’ என்றும் சொல்லி ஜகா வாங்குவார்.</p>.<p>ஸ்கூல் முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் சுவர்களில் வெற்றிடம் தென்பட்டால் போச்சு. தன் பெயரை எழுதி பக்கத்தில் வாழ்க எனவும் எழுதுவதை ஹாபியாக வைத்திருப்பார்!</p>.<p style="text-align: right"><span style="color: #993300">- ஆர்.சரண்</span></p>
<p>அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரியின் டவுசர் காலம் இது!</p>.<p>வகுப்பறையில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பார். அவரைச் சுற்றிலும் எப்போதும் உட்கார்ந்திருக்கும் பசங்க பட்டாளம், 'ஐயய்யோ... அண்ணன் கோபமாயிட்டாரே’, 'அண்ணன் இப்போ நெஞ்ச வெடைப்பாரே’, 'அண்ணன் கையை முறுக்குவாரே...’ என பில்டப் ஏற்றுவார்கள்.</p>.<p>இங்கிலீஷ்ல இவருக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை... இங்கிலீஷாகத்தான் இருக்கும்.</p>.<p>படிப்பைவிட விளையாட்டில் சுட்டியாக இருந்திருப்பார். கபடி விளையாட்டில் யாராவது காலைப் பிடித்து இழுத்தால், 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’ என அழுதிருப்பார். </p>.<p>'அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...’ பாட்டுதான் இவரின் ஆல்டைம் ஃபேவரைட்.</p>.<p>தன் சாப்பாட்டுத் தட்டில் ஒரே ஒரு முட்டை வைத்துவிட்டு தம்பியின் தட்டில் இரண்டு முட்டையை வைத்த பெற்றோர் மீது கோபித்துக்கொண்டு அழகர் மலையில் போய் உட்கார்ந்திருப்பார்.</p>.<p>'திருவிளையாடல்’ படம் இவருக்குப் பிடிக்கும். ஸ்கூல் டிராமா ரிகர்சலில் 'பழம் எனக்குத்தான்’ என்ற டயலாக்கை வீட்டிலும் ஸ்கூலிலும் சொல்லிப் பார்த்திருப்பார்.</p>.<p>ஹோம்ஒர்க் செய்யாமல் இருந்ததால், அடிக்கடி ஸ்கூலுக்கு மட்டம் போட்டிருப்பார். மிஸ் கேட்கும்போது, 'அப்பா ஹோம் ஒர்க் செய்யவிடல’ என்றும், 'படிச்சிட்டு இருக்கிறப்போ, நடுவுல கொஞ்சம் தம்பி டிஸ்டர்ப் பண்ணிட்டான்’ என்றும் சொல்லி ஜகா வாங்குவார்.</p>.<p>ஸ்கூல் முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் சுவர்களில் வெற்றிடம் தென்பட்டால் போச்சு. தன் பெயரை எழுதி பக்கத்தில் வாழ்க எனவும் எழுதுவதை ஹாபியாக வைத்திருப்பார்!</p>.<p style="text-align: right"><span style="color: #993300">- ஆர்.சரண்</span></p>