<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தீ</strong></span>பாவளிக்கு பலகாரங்கள் செய்யத் தேவையான டிப்ஸ்களை ஒரு டஜன் யோசனைகளாக வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>1. </strong></span>பூந்திக்கு மாவு பிசையும்போது, கடலை மாவுடன் சிறிது அரிசி மாவும் சேர்த்துக் கலந்து பிசைந்தால் பூந்தி உப்பி வரும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>2.</strong></span> சிறுதானியங்களில் பலகாரம் செய்யும்போது, சிறிது பொட்டுக் கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் மிருதுவாக இருக்கும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>3.</strong></span> சர்க்கரைப்பாகு செய்யும் போது பாகுடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் கெட்டிப்படாது.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>4. </strong></span>குலாப்ஜாமூன் பார்க்கும்போதே கடினமாகத் தெரிந்தால், ஜீராவை லேசாக சூடு செய்து மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் ஜாமூனை ஊறவைத்தால் மிருதுவாகிவிடும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>5.</strong></span> மைசூர்பாகு செய்யும் போது கடலை மாவுடன், முந்திரியைப் பொடித்துச் சேர்த்துப் பிசைந்தால் புதிய சுவையுடன் இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>6. </strong></span>தட்டைக்கு மாவு பிசையும் போது வறுத்துத் திரித்த கறிவேப்பிலைப் பொடியை சேர்த்துப் பிசைந்தால் நல்ல மணமாக இருக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>7. </strong></span>சீடை உருட்டிய பிறகு அதன் மேற்புறத்தில் ஊசியால் ஆங்காங்கே சிறிய துளை யிட்டு பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்தால் சீடை வெடிக்காது.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>8.</strong></span> அல்வா செய்யும்போது, அல்வா பதம் தண்ணீராக இருப்பதுபோல் இருந்தால், சிறிது சோள மாவு சேர்த்துக் கிளறினால் அல்வா கெட்டிப்படும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>9.</strong></span> பயத்தம்லட்டு, ரவா லட்டு மற்றும் உளுந்து லட்டு செய்வதற்கு முன்பு, பயத்தம்பருப்பு, ரவை, உளுந்து போன்றவற்றை வெறும் வாணலியில் வறுத்து பிறகு அரைத்து லட்டு செய்தால் வாசனையாக இருக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>10. </strong></span>ரசகுல்லா செய்யும் போது முதலில் பாலை திரித்து பனீர் எடுப்போம். அந்த பனீரை மூன்று முறையாவது தண்ணீரில் கழுவுவது அவசியம். இல்லையெனில், ரச குல்லாவின் சுவை ஒரே நாளில் மாறிவிடும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>11. </strong></span>முறுக்கு செய்யும்போது நீங்கள் எடுக்கும் அளவில் கால் பகுதிகளாக பிரித்து வையுங்கள். முதல் கால் பகுதியை மாவாக பிசைந்து முறுக்கு சுட்ட பிறகு மற்றவற்றை எடுங்கள். ஒட்டுமொத்த மாவையும் பிசைந்து முறுக்கு சுட்டெடுத்தால் மாவு காய்ந்து அதிக எண்ணெய் குடிக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>12.</strong></span> எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது எண்ணெயில் கோலிக்குண்டு அளவுக்கு புளியைச் சேர்த்துவிடுங்கள். பிறகு பலகாரங்கள் பொரித் தெடுத்தால் அதிக எண்ணெய் குடிக்காது, எண்ணெயும் பொங்கி வழியாது.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தீ</strong></span>பாவளிக்கு பலகாரங்கள் செய்யத் தேவையான டிப்ஸ்களை ஒரு டஜன் யோசனைகளாக வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>1. </strong></span>பூந்திக்கு மாவு பிசையும்போது, கடலை மாவுடன் சிறிது அரிசி மாவும் சேர்த்துக் கலந்து பிசைந்தால் பூந்தி உப்பி வரும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>2.</strong></span> சிறுதானியங்களில் பலகாரம் செய்யும்போது, சிறிது பொட்டுக் கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் மிருதுவாக இருக்கும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>3.</strong></span> சர்க்கரைப்பாகு செய்யும் போது பாகுடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் கெட்டிப்படாது.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>4. </strong></span>குலாப்ஜாமூன் பார்க்கும்போதே கடினமாகத் தெரிந்தால், ஜீராவை லேசாக சூடு செய்து மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் ஜாமூனை ஊறவைத்தால் மிருதுவாகிவிடும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>5.</strong></span> மைசூர்பாகு செய்யும் போது கடலை மாவுடன், முந்திரியைப் பொடித்துச் சேர்த்துப் பிசைந்தால் புதிய சுவையுடன் இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>6. </strong></span>தட்டைக்கு மாவு பிசையும் போது வறுத்துத் திரித்த கறிவேப்பிலைப் பொடியை சேர்த்துப் பிசைந்தால் நல்ல மணமாக இருக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>7. </strong></span>சீடை உருட்டிய பிறகு அதன் மேற்புறத்தில் ஊசியால் ஆங்காங்கே சிறிய துளை யிட்டு பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்தால் சீடை வெடிக்காது.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>8.</strong></span> அல்வா செய்யும்போது, அல்வா பதம் தண்ணீராக இருப்பதுபோல் இருந்தால், சிறிது சோள மாவு சேர்த்துக் கிளறினால் அல்வா கெட்டிப்படும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>9.</strong></span> பயத்தம்லட்டு, ரவா லட்டு மற்றும் உளுந்து லட்டு செய்வதற்கு முன்பு, பயத்தம்பருப்பு, ரவை, உளுந்து போன்றவற்றை வெறும் வாணலியில் வறுத்து பிறகு அரைத்து லட்டு செய்தால் வாசனையாக இருக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>10. </strong></span>ரசகுல்லா செய்யும் போது முதலில் பாலை திரித்து பனீர் எடுப்போம். அந்த பனீரை மூன்று முறையாவது தண்ணீரில் கழுவுவது அவசியம். இல்லையெனில், ரச குல்லாவின் சுவை ஒரே நாளில் மாறிவிடும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>11. </strong></span>முறுக்கு செய்யும்போது நீங்கள் எடுக்கும் அளவில் கால் பகுதிகளாக பிரித்து வையுங்கள். முதல் கால் பகுதியை மாவாக பிசைந்து முறுக்கு சுட்ட பிறகு மற்றவற்றை எடுங்கள். ஒட்டுமொத்த மாவையும் பிசைந்து முறுக்கு சுட்டெடுத்தால் மாவு காய்ந்து அதிக எண்ணெய் குடிக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>12.</strong></span> எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது எண்ணெயில் கோலிக்குண்டு அளவுக்கு புளியைச் சேர்த்துவிடுங்கள். பிறகு பலகாரங்கள் பொரித் தெடுத்தால் அதிக எண்ணெய் குடிக்காது, எண்ணெயும் பொங்கி வழியாது.</p>