அன்னி பெசன்ட் சுதந்திரத்துக்கு முன்பாக, 'சுய ஆட்சி' (self governence), 'குடியாட்சி' (people governence) போன்ற சொற்களைப் பயன்படுத்துவோர் மீது கண் வைத்த ஆங்கிலேய அரசு, அத்தகைய சொற்களை உபயோகப்படுத்தும் இந்திய இயக்கங்களைத் தடை செய்தது. இதனால்... ஆன்மிகம், தேசப்பற்று ஆகிய இரண்டையும் கலந்து, 'தன்னாட்சி இயக்கம்' (Home Rule Movement) என்ற பெயரில் சாதுர்யமாக மக்களிடம் சென்று, வெற்றியும் கண்டார் அன்னி பெசன்ட். அப்போது அவருக்கு வயது 67. அந்நியரான இவர், இங்கே வந்து 'தி கிரேட் உமன் ஆஃப் மார்டன் இண்டியா' என்ற பட்டத்தைப் பெற்றதோடு, 70-ம் வயதில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் ஜொலித்தார்.
|