"சில பெண்களுக்கு கர்ப்பபை அகற்றப்பட்டு விடுவதால் ஹார்மோன் செயல்பாடுகள் இருக்காது. எனவே அவர்களுக்கு தாம்பத்யத்துக்கு வழவழப்பு தன்மையை கொடுக்கும் லூப்ரிகன்ட்ஸ§ம் சுரக்காது. இதனால் தாம்பத்தியத்தின் போது அதிக வலி ஏற்படும். இதனால்கூட சிலர் தாம்பத்யத்தை வேண்டாமென்று ஒதுக்கலாம். இவற்றுக்கெல்லாம் இப்போது செயற்கை தீர்வுகள்கூட வந்துவிட்டன. ஆக, பெண்கள் தலை நரைத்த பின்னும் தாம்பத்யம் கொள்ள, எந்தத் தடையும் இல்லை..." என்ற டாக்டர், அடுத்ததாக ஆண்களின் நிலைமை பற்றி விளக்கினார்...
"ஆண்களைப் பொறுத்தவரை எந்த நோய்களும் இல்லாது, ஆரோக்கியத்துடன் இருக்கும்பட்சத்தில் கடைசி காலம் வரை அவர்களால் தாம்பத்யத்தில் ஈடுபட முடியும். 'எழுபது வயது தாத்தாவுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது' போன்ற செய்திகள் எல்லாம்தான் நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் கடக்கிறோமே?!" என்றவர், இன்றைக்கு இருக்கும் மருத்துவர்கள் பலருக்குமே இதைப் பற்றிய புரிதல் இல்லை என்பதை வேதனையோடு சொன்னார்.
"சில நாட்களுக்கு முன் என்னிடம் ஒரு பெரியவர் வந்தார். அதற்கு முன், தாம்பத்ய பிரச்னைக்காக ஒரு மருத்துவரிடம் சென்றிருக்கிறார். 'ஏன்யா... இந்த வயசுல உனக்கு இதெல்லாம் தேவையா?' என்று அவரை புண்படுத்தியிருக்கிறார் அந்த மருத்துவர். இப்படி ஒரு சில மருத்துவர்களே அடிப்படையான இந்த விஷயத்தை அசிங்கம் போல பேசும்போது, பின் பொதுமக்களின் மனநிலையை என்ன சொல்வது?
இப்படியாக அவர்களின் இயல்பான தேவை, சமூகத்தால் குற்றமாக பாவித்து மறுக்கப்படும்போது, அவர்களும் சில சூழ்நிலைகளில் குற்றவாளியாகின்றனர். 'பேருந்தில் தாத்தா பெண்ணிடம் சில்மிஷம்' என்று தங்களுக்கு வீட்டில் ஏற்பட்ட தாம்பத்ய தடுமாறலுக்கு வடிகால் தேடி, சமுதாயத்தில் அவமானச் சின்னமாகின்றனர். எனவே, அவர்களின் நியாயமான தேவைக்கு கடிவாளம் போடுவது, சமூகம் செய்யும் அநியாயம்!
அந்த காலத்தில் எல்லாம் அறுபது வயதான முதிய தம்பதிகளுக்கு, அதற்குப் பிறகும் அவர்களுக்கு வாழ்க்கை இருக்கிறது, சந்தோஷமும் இருக்கின்றது என்பதை சொல்லாமல் சொல்லத்தான் 'அறுபதாம் கல்யாணம்' போன்ற சடங்குகளையெல்லாம் எடுத்து நடத்தினார்கள்'' என்று சொன்ன டாக்டர் நாராயண ரெட்டி, அடுத்துச் சொன்னவையெல்லாம் ஆச்சர்யப் புதையல்தான்! அவை...
''கணவன் மனைவி இடையே எப்போதும் 'பர்சனல் டச்' இருந்துகொண்டே இருக்க வேண்டும். தாம்பத்ய திருப்தி முழுமையாக கிடைத்த தம்பதிகளுக்குள் எந்தவித சச்சரவும் ஏற்படுவதில்லை, வயோதிகத்தில் அவர்களுக்கு ஆரோக்கியம் நிலைக்கிறது, மார்பகத்தில் வருகின்ற டியூமர்கூட கேன்சராக மாறாமல் போய்விடுகிறது, ஆயுளும் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன!"
|