கட்டட உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தில், 'உள்வாடகை விடக்கூடாது' என்ற ஷரத்து இருந்தால்... இருவரையும் சேர்த்து வெளியேற்ற தமிழ்நாடு கட்டட சட்டம் மற்றும் வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் மூலம் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நடவடிக்கை எடுக்க கட்டட உரிமையாளருக்கு உரிமை உண்டு.''
''நான் பி.எஸ்சி. நுண்ணுயிரியல் (B.Sc. Microbiology) மற்றும் பி.எட். (B.Ed. Natural Science) முடித்துள்ளேன். 'பாட்டனி, ஜுவாலஜி போன்ற படிப்புக்கு இணையாக மைக்ரோபயாலஜி படிப்பும் கருதப்படும். இதன்மூலம் அரசு பள்ளிகளில் பணி வாய்ப்புகள் கிடைக்கும்' என்று சிலர் கூறியதை வைத்துதான் இப்படிப்பினையே நான் தேர்ந்தெடுத்தேன். ஆனால், அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய இப்படிப்புகள் போதாது. இது சரியான தகுதி இல்லை. டி.ஆர்.பி. எனப்படும் டீச்சர்ஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு தேர்வினையும் எழுதமுடியாது என்று சிலர் குழப்புகின்றனர். பலரிடமும் இதைப் பற்றி விசாரித்தபோது உரிய பதில் கிடைக்கவில்லை. நீங்களாவது தெளிவுபடுத்துங்கள்...''
|