சொந்த மண்ணில் பிழைப்பதற்கு எல்லா வழிகளும் அடைத்துப் போய்விட்ட சூழ்நிலையில், இந்த வேலை ஒரு கடவுள். ஓரளவு வருமானம் கொண்ட குடும்பத்துக்கு, இந்த வேலை கைதூக்கிவிடும் ஏணி. ஐ.டி., பிஸினஸ்வாலாக்களுக்கு, சில காலம் வெளிநாட்டு கரன்ஸிகளுடன் புழங்கிவிட்டு ஊர் திரும்புவது, 'ஸ்டேட்டஸ் சிம்பல்'!
"இப்படி அப்பர், மிடில், லோயர் என எல்லா வர்க்கத்தினருக்கும் இஷ்டமான இந்த வெளிநாட்டு வேலைகளில், இந்திய ரூபாயின் ஒப்பீட்டு மதிப்புடன் சில பல மடங்குகள் அதிகமான ஃபாரின் கரன்ஸிகள், அவர்களுக்கு வசப்படுத்தும் அதிகபட்ச சம்பளம்தான் அவர்களை ஃப்ளைட் ஏற வைக்கும் தூண்டில்! அப்படி 'வெளிநாட்டு சம்பாத்தியம்' என்று செழித்தவர்கள் பலர் இருந்தாலும், வேலைக்குச் சென்ற இடத்தில் கொடுமைக்கு உள்ளாகி, அந்நாட்டு சிறைகளில் அடைபட்டு என அவ்வப்போது செய்தித்தாள்கள் தரும் செய்திகளையும் புறக்கணிப்பதற்கில்லை. அந்த துர்சம்பவங்களுக்கு, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக அவர்களிடம் லட்சங்களை கறந்துவிட்டு, முறையான அனுமதி, ஆவணங்களின்றி அவர்களை அனுப்பி வைத்த 'ஏஜென்ஸி'களுக்கு முக்கிய பங்கிருக்கும்!'' என்று நிதர்சனம் பகிர்கிறார், தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கிவரும் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி இளங்கோவன்.
தொடர்ந்து பேசியவர், இத்தகைய சூழ்நிலையில், திறமை இருப்பவர்களுக்கான அயல்நாட்டு வேலை வாய்ப்பு எப்படி? அவற்றை அரசு வகுத்திருக்கும் சட்டங் களின் கீழ் முறையாக பெறுவதற்கான வழிமுறைகள் என்ன? மோசடிக்கார ஏஜென்ஸிகளிடம் ஏமாறாமல் சுதாரிப்பது எப்படி? என்பவை குறித்தெல்லாம் விரிவான விளக்கம் அளித்தார்.
காத்திருக்கும் வேலைகள்!
"வெளிநாட்டில் வேலையை நாடுபவர்கள், முதலில் எந்தெந்த நாடுகளில் என்னென்ன வேலை வாய்ப்புகள் சாத்தியப்படும் என்பது குறித்து அறிய வேண்டும். பொதுவாக துபாய், ஓமன், அபுதாபி போன்ற கல்ஃப் நாடுகளில் எப்போதும் கட்டட வேலை நடந்துகொண்டே இருக்கும். அதனால் கட்டடத் கூலித் தொழிலாளர்கள், எலெக்ட்ரீஷியன் கள், பொறியாளர்களுக்கு அங்கே தேவை அதிகம்.
மலேசியா, சிங்கப்பூரில் ரப்பர் தோட்டங்கள் அதிக அளவில் இருப்பதால், அங்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிக தேவை இருக்கிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் சாஃப்ட்வேர் துறையினருக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு, எல்லா நாடுகளிலும் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது'' என்ற இளங்கோவன், 'ஏஜென்ஸிகள்' மூலம் வெளிநாடு செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்கினார்.
ஏஜென்ஸிகளிடம் உஷார்!
"மத்திய அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உரிமம் பெற்ற ஏஜென்ஸிகளே, வெளிநாட்டுக்குப் பணியாட்களை அனுப்பும் தகுதி பெற்றவையாகின்றன. ஒருவேளை நீங்கள் வெளிநாட்டு வேலைக்கு ஏதாவது ஒரு ஏஜென்ஸியை அணுகும்பொருட்டு, அவர்களிடம் அரசாங்கத்தின் லைசென்ஸ் எண்ணைக் கேட்டு, அதை அயல்நாட்டு வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் வெப்சைட்டில் பரிசோதித்துக் கொள்ளுங்கள் (new.moia.gov.in). பின் அந்த ஏஜென்ஸிக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெற்றிருக்கும் ஆட்கள் தேவைக்கான டிமாண்ட் லெட்டரில் அளிக்கப்பட்டிருக்கும் வேலை விவரம், சம்பளம், விடுமுறை நாட்கள், விதிமுறைகள் என அனைத்தையும் அந்த லெட்டரை கேட்டுப் பெற்று, தெரிந்துகொள்ளுங்கள். அந்த டிமாண்ட் லெட்டரில் வேலை வழங்கும் நிறுவனம் அந்த நாட்டில் பெற்ற லைசென்ஸ் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் மூலம் அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள லாம். கூடவே, சம்பந்தப்பட்ட நிறுவனம், 'எங்களுக்கு பணியாட்களை தேர்வு செய்ய இந்த ஏஜென்ஸிக்கு உரிமை உண்டு' என்று அளித்திருக்கும் 'பவர் ஆஃப் அட்டர்னி'யையும் செக் செய்துகொள்ளுங்கள்...'' என்றவர்,
"இதில் பெரும்பாலானவர்கள் ஏமாந்து போவது, இந்த ஏஜென்ஸியின் கீழ் செயல்படும் சப்-ஏஜென்ட்களிடம்தான். அவர்களிடம் மெயின் ஏஜென்ஸி தந்த 'அக்னாலட்ஜ்மென்ட்' இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் பணம் கட்டியதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளுங்கள்...'' என்று பட்டியலிட்ட இளங்கோவன், வெளிநாடு வேலைக்குச் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்களையும் குறிப்பிட்டார்.
முக்கியமாக கவனிக்க வேண்டியவை!
|