"சொத்து சம்பந்தப்பட்ட ஆவணம், பதிவு செய்யப்பட்ட கிரய பத்திரம், இதர தாய் பத்திரங்கள், ரெவின்யூ ரெக்கார்ட்ஸ் (பட்டா, சிட்டா அடங்கல்), சுவாதீன அனுபவ சான்றிதழ் (கிராம நிர்வாக அலுவலர் வழங்க கூடிய சான்றிதழ்), பதிவு செய்யக் கூடிய நாள் வரையிலான வில்லங்க சான்றிதழ் (Encumberance certificate), இடத்தின் அரசாங்க அப்ரூவ்டு லே- அவுட், மின் இணைப்பு (ஒருவேளை நீங்கள் வாங்கப் போகும் நிலத்தில் கிணறு போன்றவை இருந்தால் மின்சார சப்ளை தேவைப்படுமே), குடிநீர் மற்றும் கழிவு நீருக்கான இணைப்பு சான்றிதழ் முதலியவற்றை உரிமையாளரிடம் சரிபார்த்து பெற்றுக்கொள்ளுங்கள். இதில் ஏதாவது ஒன்று இல்லையென்றாலும், அவரிடமே விவரம் கேட்டு வாங்கிவிடுங்கள்'' என்ற அழகுராமன், நிலம் வாங்கும்போது நாம் ஏமாறுவதற்கு சாத்தியங்கள் உள்ள கூறுகளையெல்லாம் தோலுரித்தார்.
"ஒருவர் தனது ஐம்பது ஏக்கர் நிலத்தை பிளாட் (Plot) விற்கும்போது, அதில் ஐந்து சென்ட் வாங்கும் உங்களிடம் மற்றவர்களிடமும் நிலத்தின் ஒரிஜினல் டாகுமென்டைக் காண்பித்திருக்க மாட்டார். அதன் நகல் மட்டுமே நிலத்தை வாங்குபவர்களின் கண்களில் காட்டப்படும். அப்படி ஒரு சூழ்நிலையில், அவர் அந்த ஒரிஜினல் டாகுமென்ட்டை வங்கியிடமோ, வேறு நபர்களிடமோ அடமானம் வைத்திருக்கவும் கூடும் என்பதால், அவரின் கடனுக்கு நீங்கள் பொறுபாளியாகிவிடாமல் இருக்க, எப்போதும் பத்திரத்தின் ஒரிஜினலை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
பொதுவாக, 'வீட்டுமனை பிரிவு'க்கு உட்பட்ட இடத்தில்தான் வீடு கட்ட அரசு அனுமதி உண்டு. சிலர் வணிக வளாகம், தொழிற்சாலை சம்பந்தப்பட்ட இடங்கள், இன்ன பிற உபயோகத்துக்கான இடங்களை உங்களிடம் ஏமாற்றி விற்றுவிடக் கூடும். பின் அந்த இடத்தில் நீங்கள் எழுப்பும் வீடு, என்றாவது ஒருநாள் உங்களிடமிருந்து சட்டப்பூர்வமாக பறிபோகக்கூடும். எனவே, சம்பந்தப்பட்ட இடம் 'வீட்டுமனைப் பிரிவு'க்கு உட்பட்டதுதான் என்பதை முக்கியமாக உறுதி செய்து கொள்ளுங்கள்!'' என்று விளக்கியவர், வாங்கிய இடத்தில் வீடு கட்டக் கிளம்புவர்களுக்கும் சில எச்சரிகை மணிகளை அடித்தார்.
"வீடு கட்டுவதற்கு, நம்பகமான பில்டரை தேர்ந்தெடுங்கள். இல்லையெனில் அவர் என்றாவது ஒருநாள் உங்களை ஏமாற்றிவிட்டு ஓடிப் போகக்கூடும். அடுத்ததாக, ஆரம்பத்திலேயே 'பில்டர்ஸ் அக்ரிமென்ட்' போட்டுவிடுங்கள். அந்தப் பத்திரத்தில் எந்தத் தேதியில் வேலை ஆரம்பிக்கப்படும்; எந்த ரக சிமென்ட், பெயின்ட், டைல்ஸ், மரங்கள் பயன்படுத்தப்படும்; எந்த தேதியில் வீட்டை முடித்து சாவி உங்கள் கையில் தரப்படும்; மொத்த எஸ்டிமேட்; பில்டருக்கான சம்பளம் போன்ற எல்லா விவரங்களையும் முன்கூட்டியே எழுதி வாங்கிக் கொள்ளுங்கள். இது இருதரப்புக்குமே நல்லது. பின்னாளில் வேலையில் குறை, குறிப்பிட்ட நேரத்துக்குள் வீட்டை முடித்துத் தராமல் இழுத்தடிப்பது, எஸ்டிமேட்டைவிட அதிகமான பணம் கேட்பது போன்ற பிரச்னைகளில் இருந்து உங்களுக்கும், சம்பள செட்டில்மென்டில் தாங்கள் ஏமாற்றப்பாடாமல் இருக்க பில்டருக்கும் இந்த அக்ரிமென்ட் கை கொடுக்கும்!
தவிர, வீட்டை கட்டுவதற்கு முன், அரசாங்கத்திடம் அதற்கான அனுமதி பெற்றுவிடுவது மிக மிக அவசியம். கூடவே, குடிநீர், மின்சார இணைப்பு போன்ற வசதிகளைப் பெறுவதற்கும் அரசாங்க அனுமதி அவசியம்'' என்ற அழகுராமன், அபார்ட்மென்ட் வீடு வாங்கும் கனவில் இருப்பவர்களுக்கும் சில நிதர்சனங்களை அடுக்கினார்...
|