சரி, வீட்டு உரிமையாளர்-வாடகைதாரர் என்றாலே கீரி-பாம்புதானா...? என்று கேட்டுவிடாதீர்கள். 'கண்ணுபடப் போகுதய்யா சின்னகவுண்டரே' என்று பாடி, சுத்திப்போடும் அளவுக்கான நட்புக் கதைகளும்கூட இருக்கத்தான் செய்கின்றன.
திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் நடுநாயகமாக கிணறு, தனித்தனியே நான்கு குடித்தனம். குடித்தனக்காரர்கள் ரமாமணி, கீர்த்தனா...
''பத்து வருஷத்துக்கு மேலா இந்த வீட்டுல குடியிருக்கோம். மூவாயிரம் ரூபாய் வாடகை, மூணு மாச அட்வான்ஸ், தனி மீட்டர், தண்ணிக்கு மோட்டார்னு எல்லா வசதியும் செஞ்சு தந்திருக்காங்க. நாங்களே மோட்டார் போட்டுக்க வசதியா தனி ஸ்விட்ச் இருக்கு. ஓனர் கூடவே இருக்கறது ஒரு பெரிய பாதுகாப்பு. காலையில எழுந்துக்க கொஞ்சம் லேட்டானாகூட, எங்க வாசல்லயும் கோலம் போட்டிருக்கும். குடித்தனக்காரங்கள்குள்ளயும் அப்படியரு ஒற்றுமை'' என்றவர்களை தொடர்ந்தார், வீட்டு ஓனர் பூமா...
'பணத்தை தாண்டி மனுஷங்களோட மனசுதாங்க எங்களுக்கு முக்கியம். அட்வான்ஸ் வாங்கறதுகூட சிலசமயம் கஷ்டம்னு வரும்போது, வாடகை கொடுக்க அவங்க திண்டாடக் கூடாதுனுதான். எதுக்கும் கண்டிஷன் போடாததால, எந்தப் பிரச்னையும் நான் சந்திச்சதில்ல. அடுத்தவங்களோட கஷ்டத்தை நாமளும் உணர்ந்து நடக்கும்போது, அங்க நிம்மதி நிரந்தரமா தங்கிடும்!'' என்றார் பூமா.
மேலே கண்ட அனுபவங்களைப் பாடமாகவும், இந்த கடைசி அனுபவத்தை மெச்சத் தகுந்த உதாரணமாகவும் எடுத்துக்கொள்வோம்!
|