விடிகாலையில் எழுந்து வெயிலுக்கு முன்பே சமையலை முடித்துக் கொள்வது, வெப்பத் தாக்கத்திலிருந்து ஓரளவு விடுபட உதவும்.
வியர்வையின் உப்பு நீரில் சருமம் பொலிவிழந்து போயிருக்கும் சமயங்களில், புடவை தலைப்பாலோ, டவலினாலோ அழுத்தித் துடைக்கக் கூடாது. உடனடியாக சூடான தண்ணீரில் குளிக்கவும் கூடாது. ஒரு ஈரத்துண்டினால் வியர்வையை ஒற்றி எடுப்பதே நலம்.
சமையலறைக்குள் நுழைவதற்கு முன்பு, தலையில் நல்லெண்ணெய் (அ) விளக்கெண்ணெயை தடவி வாரிக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு வேலையைத் துவங்கும்போது, உடம்பில் உஷ்ணம் நேரடியாக தாக்காமல் இருக்கும்.
தாளிக்கும்போது சிலசமயம் முகத்தில் கடுகு தெறிப்பதுண்டு. ஒருவேளை அது பருக்கள்மீது பட்டுவிட்டால், சீழ் பிடித்து செப்டிக் கூட ஆகலாம். இத்தகைய தாளிப்புக் கொப்புளங்களைத் தவிர்க்க, சமையலைத் தொடங்குவதற்கு முன்பு 2 பல் பூண்டுடன், ஒரு வெற்றிலையை அரைத்து முகத்தில் பூசுங்கள். வெற்றிலை, கிருமிநாசினியாக செயல்படும். பூண்டு, பருக்களின் மீது பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாக்கும்.
சிறிது வெங்காயத்தை எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். தலைக் குக் குளிக்கும்போது வெங்காய விழுதை தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசிப் பாருங்கள்... உடம்பு குளுகுளு குளிர்ச்சி பெறும்.
பாத்திரம் தேய்ப்பதாலும், வாழை, சேனை போன்ற காய்கறிகளை நறுக்கும்போதும் கைகள் சொரசொரப்பாகிவிடும். நான்கு சொட்டு நல்லெண்ணெயுடன், நான்கு சொட்டு தண்ணீரைக் கலந்து நுரை வரும்வரை கைகளை தேய்த் துக் கழுவுங்கள். கைகள் மிருதுவாகி மினுமினுக்கும்.
சமையலறைப் புகையால் ஏற்படும் கண் எரிச்சலால் கண்கள் சோர்ந்து போகலாம். வெள்ளரிக்காயை இளநீர் சேர்த்து அரைத்து, கண்ணைச் சுற்றி மற்றும் முகம் முழுவதும் பூசிக் கொள்ளுங்கள். கண் எரிச்சல் போய், குளிர்ச்சி கொடுப்பதுடன் முகம் இழந்த கலரையும் மீட்டுத் தரும். தக்காளிப் பழத்தை முகத்தில் பூசுவதால் சரு மத்தில் உள்ள துளைகள் மறையும்.
ஒரு கப் சூடான தண்ணீரில், எட்டு ரோஜாக்களைப் போட்டு மூடி வைத்து விடுங்கள். ரோஜா எசென்ஸ் முழுவதும் தண்ணீரில் இறங்கிவிடும்.பூக்களை எடுத்து விட்டு அந்தத் தண்ணீரில் முகத்தைக் கழுவினால், பனி படர்ந்த ரோஜா போல் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். இந்த வாட்டரில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம். மன உளைச்சல் நீங்கி, நிம்மதி பிறக்கும்!
- மிளிரும்...
|