உங்கள் ராசிநாதன் புதனின் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் எதிலும் மிளிர்வீர்கள். விரக்தி, வேதனையிலிருந்து விடுபடுவீர்கள். 2.5.10 முதல் குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்வதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். கல்யாணம், காதுகுத்து என வீடு களைகட்டும். கணவர் பொறுப்பாக நடந்து கொள்வார். அவருக்கு புது வேலை கிடைக்கும். சிறுக சிறுக சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் வரும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். ஜென்மச் சனி தொடர்வதால் சில நேரங்களில் முன்னுக்குப் பின் முரணாக முடிவெடுப்பீர்கள். உடல் நலக் கோளாறு ஏற்படக்கூடும். 4-ம் வீட்டில் ராகு நிற்பதால் வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவதற்கு முன் பத்திரத்தை சரிபார்ப்பது நல்லது. வியாபாரம் சூடு பிடிக்கும். உணவு, ஸ்டேஷனரி, கட்டுமான பொருட்கள், ஏற்றுமதி, இறக்கு மதி வகைகளால் வருவாய் கூடும். உத்யோகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சம்பளம் உயரும்.
புதிதாகப் பிறக்கும் விக்ருதி ஆண்டு வருத்தத்திலிருந்த உங்களை மகிழ வைப்பதுடன், வசதியையும் தரும்.
பரிகாரம் அருகிலுள்ள துர்க்கையம்மன் ஆலயத்துக்குச் சென்று வாருங்கள். புற்று நோயாளிகளுக்கு உதவுங்கள்.
துலாம் பிறர் மனம் புண்படாதபடி பேசுபவர்களே!
|