அவளின் அம்மா, குக்கரை இறங்கி தரையில் வைத்துவிட்டு அடுப்பில் ஏதோ வேலையாக திரும்ப, சிறிது நேரத்தில் எப்போதும் போல விளையாட ஓடி வந்த அந்த குழந்தை குக்கரில் வந்து அமர்ந்துவிட, துடியாய் துடித்து விட்டாள். புண் ஆறுவதற்குள் அந்தக் குழந்தையோடு அவள் பெற்றோரும் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.
குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கவனம்!
- வி.லெஷ்மி விஜயகுமார், திருச்சி
பக்குவம் பெறுவது எப்போது?!
நானும் என் தோழியும் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தபோது, மூன்று திருநங்கைகள் கைகளைத் தட்டிக் கொண்டு காசு கேட்டார்கள். கடையிலிருந்த ஒருவர், அவர்களைப் பார்த்து வக்கிரமாகப் பேசினார். இன்னொருவர் அவர்களின் கையைப் பிடித்து இழுக்கப் பார்த்தார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த |