சிதறக்கூடாது. மெஷின்ல இருக்கற வைர ஊசியில ஒரு சின்ன சேதம் ஏற்பட்டாலே ரெண்டாயிரம் ரூபாய் போச்சு. அந்த நஷ்டமும் எனக்கு ஏற்பட்டிருக்கு. 'எப்படி சமாளிக்கப் போறோம்'னு அப்பப்ப கவலை வந்தாலும் கூட, ஒரு நாள் கூட இடிஞ்சு போய் உட்கார்ந்தது இல்ல. என் மேல எனக்கிருந்த நம்பிக்கைதான் உறுதியோட தொடர்ந்து உழைக்க வெச்சுது'' என்பவருக்கு... அடுத்த சில மாதங்களிலேயே திறமையும் வேகமும் அதிகரிக்க, இத்தொழிலில் நிறைவான வருமானம் கிடைக்கத் தொடங்கிஇருக்கிறது.
''தினம் 70 செயினுக்கு டிசைன் கட்டிங் பண்ற அளவுக்கு என்னை வளர்த்துக்கிட்டேன். இன்னொருத்தர் இருந்தா... இன்னும் வசதியா இருக்குமேனு வேலைக்கு ஒரு ஆள் போட்டேன். சேதாரமாகற கவரிங் தூள் மூலமாவும் கூடுதலா ஒரு சின்ன வருமானம் கிடைச்சுது. வாடகை, கரன்ட் பில் இதையெல்லாம் அதுலயே சமாளிச்சுட்டேன். இப்ப மூணாவதா இன்னொரு மெஷின் வாங்கியிருக்கேன். எல்லாச் செலவும் போக, மாசம் பதினஞ்சாயிரம் ரூபாய்க்கு குறையாம லாபம் கிடைக்குது. எஸ்.டி.டி. பூத்ல வேலை பார்த்தப்போ, 'இந்த அறுநூறு ரூபா காசுக்கு யாருக்கோ நாள் முழுக்க உழைச்சுக் கொடுக்கறதுக்கு, வீட்டுலயே ஏதாச்சும் தொழில் செஞ்சு நமக்காக உழைச்சா என்ன?'னு நான் துணிஞ்சதுக்கு, பலன் கிடைச்சிருச்சு!''
|