"பாரத பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பத்து லட்சம் ரூபாய் வரைக்கும் கடன் வாங்கலாம். படிப்போ, சொத்துப் பத்திரமோ, தனிநபர் ஜாமீனோ தேவையில்லை. பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்க எட்டாவது வரை படித்திருக்க வேண்டும். ‘கிரெடிட் கேரண்டி ஃபண்ட்’ மூலமாக ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கலாம். கல்வித் தகுதி, சொத்துப் பிணையம், தனிநபர் ஜாமீன் எதுவுமே கிடையாது!" என தெரிவித்த தேசாய், வங்கிகளை எப்படி அணுக வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
நிறைவு விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தர் வி.கே.என்.கண்ணப்பன், பல்கலைக்கழக கூடுதல் இயகுநர் ராஜசேகரன், பதிவாளர் அய்யாவு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் கிருஷ்ண பிரசாத் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.
'பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜிய'த்துக்கு எப்படி வந்தோம் என வளரும் தொழிலதிபர்களான ஆண்டாள், கோமதி, திவ்யா, மும்தாஜ்பேகம், ரகிலா பானு, கிருஷ்ணவேணி, இந்திரா ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
"உணவு, தங்குமிடமெல்லாம் நேர்த்தியாக ஏற்பாடு பண்ணிக் கொடுத்ததுக்கு முதல் நன்றி. ரெண்டு வருச எம்.பி.ஏ. படிப்புல தெரிஞ்சுக்க முடியாத பிராக்டிகலான பல விஷயங்கள, இந்த ரெண்டு நாள் பயிற்சி முகாம்ல கத்துக்கிட்டோம்" என்று ஒட்டுமொத்த வாசகிகளின் குரலாக நெகிழ்ச்சியோடு சொன்னார்... தஞ்சாவூர் வாசகி சங்கீதா.
முழுமையாக இரண்டு நாட்களை செலவிட்ட வாசகிகள்.. பயிற்சி முகாம் நிறைவடைந்தும் கூட அரங்கை விட்டு கலைய மனமில்லாமலே கலைந்ததைப் பார்க்கும்போது... வெகுவிரைவில் வெற்றிச் செய்திகள் வந்து சேரும் என்றே தெரிகிறது!
படங்கள் கே.குணசீலன், மு.ராமசாமி
"ஆண்களிடம் பணம் கேட்காதீர்கள்!"
|
|