<p><span style="color: #ff0000"><strong>தி</strong></span>ருவையாற்றில், தியாகராஜர் சமாதியில் 1864-ம் ஆண்டு தொடங்கி, இன்று வரையிலும் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரியில் அனைத்து சங்கீத வித்வான்களும் சங்கமித்து, கச்சேரிகள் நடத்துவது தியாகராஜர் ஆராதனை. கிட்டத்தட்ட இதற்கு இணையாக... அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் இருக்கும் க்ளீவ்லேண்ட் பகுதியில், கடந்த 37 ஆண்டுகளாக தியாகராஜர் ஆராதனை நடத்தப்பட்டு வருவது... ஆச்சர்ய சங்கதிதானே!</p>.<p>இங்கிருந்து இடம்பெயர்ந்து, அமெரிக்காவில் வாழும் தமிழர்களால், சிறு அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா, இன்று 12 நாட்கள், பல்வேறு கலைஞர்கள், கிட்டத்தட்ட 10 ஆயிரம் பார்வையாளர்கள் என்று பெருவிழாவாக மாறியுள்ளது!</p>.<p>'க்ளீவ்லேண்ட் தியாகராஜர் ஆராதனை நிகழ்ச்சி’ ஒருங்கிணைப்பாளர்கள், ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில், இந்தியாவிலுள்ள தேர்ந்த கலைஞர்களை அழைத்துச் சென்று, விழாவை சிறப்புற நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பிர்ஜு மகராஜ், சுதா ரகுநாதன், நர்த்தகி நட்ராஜ் உள்பட பல்வேறு கலைஞர்களுக்கு அழைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.</p>.<p style="text-align: left">கடந்த எட்டு ஆண்டுகளாக 'க்ளீவ்லேண்ட் ஆராதனை’ நிகழ்வில் பங்கேற்றுவரும் நர்த்தகி நட்ராஜ் பேசும்போது, ''மூன்றாம் இனத்தவரான திருநங்கைகளை, சிகண்டி கதாபாத்திரம் மூலம் மகாபாரதம் போற்றியுள்ளது. பாரதத்தின் அந்த அத்தியாயமான 'பீஷ்மர் சபதம்' எனும் பகுதியை அங்கே அரங்கேற்ற உள்ளேன். இதில் என் நிஜ வாழ்வை ஒத்திருக்கும் உரிமை மறுப்பு, காதல் மறுப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கும் அம்பை எனும் கதாபாத்திரத்தையும், அங்கே மெருகேற்றப் போகிறேன்'' என்று சொன்னார்.</p>.<p>''10 ஆண்டுகளுக்கும் மேலாக 'க்ளீவ்லேண்ட் ஆராதனை’க்கு சென்று வருகிறேன். தொடர்ந்து அந்த மேடையில் என்னை உற்சாகப்படுத்தி வரும் கரகோஷங்களைப் பெருமையாக நினைக்கிறேன்'' என்று ஆரம்பித்த, சுதா ரகுநாதன், ''திருவையாறு ஆராதனைக்கு வருவது போலவே... அங்குள்ள சிகாகோ, சாண்டியாகோ, நியூயார்க் முதலிய நகரங்களிலிருந்து கார், விமானம் என்று ரசிகர்கள் வந்து குவிவார்கள். சென்னையில் மாதத்துக்கு மூன்று முறை நடக்கும் கச்சேரிகள், அங்கு ஆண்டுக்கு ஒருமுறைதான். எனவே, இந்தச் சந்தர்ப்பத்தை அவர்கள் நழுவவிடுவதில்லை. பார்வையாளர்களின் ரசனைக்கு விருந்தாகும் வகையில் திட்டமிட்டு அட்டவணை தயாரிப்பது வரை அனைத்தையும் சிரத்தையோடு செய்யும் விழாக் குழுவினரை பாராட்டியே ஆகவேண்டும்'' என்றார் சந்தோஷத்துடன்!</p>.<p>ஃபாரினிலும் நம் பாரம்பரியத்துக்கு வெற்றிதான்!</p>
<p><span style="color: #ff0000"><strong>தி</strong></span>ருவையாற்றில், தியாகராஜர் சமாதியில் 1864-ம் ஆண்டு தொடங்கி, இன்று வரையிலும் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரியில் அனைத்து சங்கீத வித்வான்களும் சங்கமித்து, கச்சேரிகள் நடத்துவது தியாகராஜர் ஆராதனை. கிட்டத்தட்ட இதற்கு இணையாக... அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் இருக்கும் க்ளீவ்லேண்ட் பகுதியில், கடந்த 37 ஆண்டுகளாக தியாகராஜர் ஆராதனை நடத்தப்பட்டு வருவது... ஆச்சர்ய சங்கதிதானே!</p>.<p>இங்கிருந்து இடம்பெயர்ந்து, அமெரிக்காவில் வாழும் தமிழர்களால், சிறு அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா, இன்று 12 நாட்கள், பல்வேறு கலைஞர்கள், கிட்டத்தட்ட 10 ஆயிரம் பார்வையாளர்கள் என்று பெருவிழாவாக மாறியுள்ளது!</p>.<p>'க்ளீவ்லேண்ட் தியாகராஜர் ஆராதனை நிகழ்ச்சி’ ஒருங்கிணைப்பாளர்கள், ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில், இந்தியாவிலுள்ள தேர்ந்த கலைஞர்களை அழைத்துச் சென்று, விழாவை சிறப்புற நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பிர்ஜு மகராஜ், சுதா ரகுநாதன், நர்த்தகி நட்ராஜ் உள்பட பல்வேறு கலைஞர்களுக்கு அழைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.</p>.<p style="text-align: left">கடந்த எட்டு ஆண்டுகளாக 'க்ளீவ்லேண்ட் ஆராதனை’ நிகழ்வில் பங்கேற்றுவரும் நர்த்தகி நட்ராஜ் பேசும்போது, ''மூன்றாம் இனத்தவரான திருநங்கைகளை, சிகண்டி கதாபாத்திரம் மூலம் மகாபாரதம் போற்றியுள்ளது. பாரதத்தின் அந்த அத்தியாயமான 'பீஷ்மர் சபதம்' எனும் பகுதியை அங்கே அரங்கேற்ற உள்ளேன். இதில் என் நிஜ வாழ்வை ஒத்திருக்கும் உரிமை மறுப்பு, காதல் மறுப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கும் அம்பை எனும் கதாபாத்திரத்தையும், அங்கே மெருகேற்றப் போகிறேன்'' என்று சொன்னார்.</p>.<p>''10 ஆண்டுகளுக்கும் மேலாக 'க்ளீவ்லேண்ட் ஆராதனை’க்கு சென்று வருகிறேன். தொடர்ந்து அந்த மேடையில் என்னை உற்சாகப்படுத்தி வரும் கரகோஷங்களைப் பெருமையாக நினைக்கிறேன்'' என்று ஆரம்பித்த, சுதா ரகுநாதன், ''திருவையாறு ஆராதனைக்கு வருவது போலவே... அங்குள்ள சிகாகோ, சாண்டியாகோ, நியூயார்க் முதலிய நகரங்களிலிருந்து கார், விமானம் என்று ரசிகர்கள் வந்து குவிவார்கள். சென்னையில் மாதத்துக்கு மூன்று முறை நடக்கும் கச்சேரிகள், அங்கு ஆண்டுக்கு ஒருமுறைதான். எனவே, இந்தச் சந்தர்ப்பத்தை அவர்கள் நழுவவிடுவதில்லை. பார்வையாளர்களின் ரசனைக்கு விருந்தாகும் வகையில் திட்டமிட்டு அட்டவணை தயாரிப்பது வரை அனைத்தையும் சிரத்தையோடு செய்யும் விழாக் குழுவினரை பாராட்டியே ஆகவேண்டும்'' என்றார் சந்தோஷத்துடன்!</p>.<p>ஃபாரினிலும் நம் பாரம்பரியத்துக்கு வெற்றிதான்!</p>