நாட்டு நடப்பு
மேற்குத்தொடர்ச்சி மலையே தென்னிந்தியாவில் வாழும் அனைவருக்கும் வாழ்வாதாரம். நமக்கும் அடுத்த தலைமுறைக்கும் அன்னை, இந்த மலைதான். இந்த மலையைக் காக்கத் தவறினால், நம் சந்ததிகளைப் பாலைவனத்தில் விடுவதற்குச் சமம். இதைக் காக்கும்பொருட்டு ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது, `மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் திருவிழா’. இந்த ஆண்டு, கலை மற்றும் பாரம்பர்யத்துடன் கோயம்புத்தூர் ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய மாநாடு அண்மையில் நடைபெற்றது.