Published:Updated:

10 ஆண்டுகளில் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இலக்கு! -தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு...

தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு
News
தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு

தமிழகத்தில் முதலீடுகளைப் பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கவும், மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்யவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

Published:Updated:

10 ஆண்டுகளில் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இலக்கு! -தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு...

தமிழகத்தில் முதலீடுகளைப் பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கவும், மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்யவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு
News
தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் நடத்திய “நாளையை நோக்கி இன்றே – தலை நிமிர்ந்த தமிழ்நாடு" எனும் தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு நேற்று சென்னையில் உள்ள டைடல் பார்க்கில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு TANSAM மற்றும் TAMCOE நிறுவனங்களின் சிறப்பு மையங்களைத் திறந்து வைத்தார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இந்தியாவில் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் முதலீடுகளைப் பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கவும், மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்யவும், 2030-31-ம் நிதியாண்டிற்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி அடையவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022-க்கான தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கையை வெளியிட்டார். இந்தக் கொள்கையில், ``மாநிலத்தில், உற்பத்தி மேற்கொள்ளும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு முதலீட்டாளர்களுக்கு சிறப்பான ஊக்கத்தொகுப்பு சலுகை அளிக்கப்படும்,அதன் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும். மேலும் இந்த கொள்கையின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, பெருமளவில் ஆதரவு வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு
தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு

இந்த கொள்கையில், வரும் 10 ஆண்டுகளில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவும், 1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் டிட்கோ மற்றும் சீமென்ஸ் நிறுவனம் இணைந்து, 251.54 கோடி ரூபாய் செலவில் மேம்பட்ட உற்பத்திக்கான “TANSAM” என்ற திறன்மிகு மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த TANSAM நிறுவனத்தில்,

  • வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை

  • மின் வாகனங்கள் (EV), தொழில் இயந்திரங்கள்

  • கடல்சார் தொழில்நுட்பம் (Marine)

  • பசுமை சக்தி (Green Energy) மற்றும் பெட்ரோ கெமிக்கல்

  • உயிரியல் தொழில் நுட்பத்துறை (Biotech)

  • தொழிற்சாலைகளின் தானியக்கம் (Industrial Automation)

  • ரோபாடிக்ஸ் (Robotics)

  • உற்பத்திப் பொருட்களை இணையத்துடன் இணைக்கும் வளையமைப்பு (Industry IOT)

  • ஆக்மென்டட் ரியாலிட்டி/விர்ச்சுவல் ரியாலிட்டி/மிக்ஸ்டு ரியாலிட்டி(AR/VR/MR)

  • சேர்க்கை உற்பத்தி (Additive manufacturing)

  • டிஜிட்டல் டிவின்ஸ் (Digitial Twins)

போன்ற அதிநவீன தொழிநுட்பங்கள் வழங்கப்படும். இந்தியாவில் இப்படியொரு திறன்மிகு மையம் அமைப்பது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு
தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு

தவிர, டிட்கோ மற்றும் GE ஏவியேஷன் நிறுவனம் இணைந்து, 141 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கியுள்ள, 3D அச்சிடுதல் தொழில் நுட்பத்தில், உலகத் தரம் வாய்ந்த சேர்க்கை உற்பத்திக்கான (Additive Manufacturing Centre) TAMCOE-வின் திறன்மிகு மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

இந்த கொள்கையில், GE ஏவியேஷன் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பயன்படுத்தி, சேர்க்கை உற்பத்தியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை செம்மைப்படுத்திக் கொள்ள TAMCOE உதவும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் குறு, சிறு நிறுவனங்கள், புத்தொழில்கள் அல்லது பல்கலைகழகங்கள் போன்றவற்றுக்கு சாத்தியக்கூறு ஆய்வு அல்லது முன்மாதிரி சேர்க்கை பகுதிகள் (Prototype additive parts) போன்ற துறைகளில் ஆலோசனை வழக்கும் சேவைகளும் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு
தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு

மேலும் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) மூலம் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளின் பயன்பாடுகளுக்கான உலோக 3D அச்சிடுதல், மருத்துவம் மற்றும் மோட்டார் வாகனத் துறைகளில் அதிநவீன உற்பத்தித் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் அத்துறைகளுக்கு ஒரு தனித்துவம் ஏற்படுத்தித் தருவது TAMCOE-வின் முக்கிய நோக்கம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் டிட்கோ நிறுவனம், ஒன்றிய அரசின் இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உடான் அகாடமி (IGRUA) மற்றும் DE Drone நிறுவனம் இணைந்து மதுரை மற்றும் கோயம்புத்தூரில் நிறுவியுள்ள ரிமோட் பைலட் பயிற்சி மையங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு
தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு
  • தொழில்துறை

  • தொழில்துறை கூட்டமைப்பு

  • மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் (Accurate Forgings, Hexsor, ADROITS, AIEMA, HOSTIA, AMET, Karpagam Group, Hindustan Group of Institutions, Sriher (Sri Ramachandra)

  • TANCAM

ஆகிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்ற்கொள்ளப்பட்டன. மேலும் TIDCO மற்றும் GTN நிறுவனம் இணைந்து, பொது பரிசோதனை மையம் (Common Testing Facility) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில், வெப்ப சிகிச்சை (Heat treatment), மேற்பரப்பு பூச்சு (Surface coating) மற்றும் வான்வெளி உபகரணங்களின் பிந்தைய செயலாக்கம் (Post Processing) போன்ற வசதிகளை அமைக்க அதிகம் செலவாகும்.

தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு
தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு
News18

அதனால் இந்த பொது வசதி மையங்கள் (Common Facility Centres) அமைக்கப்படுவதன் மூலம், தொழிலகங்களுக்கான உற்பத்தி செலவுகள் அதிகமாக குறைக்கப்பட்டு, உற்பத்தி திறன் பல மடங்கு உயர வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.