தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

“15 மாதங்களில், 10 பில்லியன் டாலர்..!” நிதி மாநாட்டில் பி.டி.ஆர்

நிதி மாநாடு...
பிரீமியம் ஸ்டோரி
News
நிதி மாநாடு...

நிதி மாநாடு

இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) கடந்த வாரம் சென்னையில் 12-வது நிதி மாநாட்டை (Financial Conclave) நடத்தியது. இந்த மாநாட்டில் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டு பேசினார்.

“மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் 10,000 தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. மேலும், பிற மாநில மக்களைவிட தமிழக மக்களின் வாங்கும் திறன் அதிகமாக உள்ளது.தமிழ்நாடு கடந்த 18 மாதங்களில் எலெக்ட் ரானிக்ஸ், டெக்ஸ்டைல், லெதர் ஆகிய துறை களில் மிகவும் முன்னேறியுள்ளது. தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 14-வது இடத்திலிருந்து 3-வது இடத் துக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் 15% தொழிற்சாலை தமிழகத்தில்தான் இருக்கிறது. இந்தத் தொழிற் சாலைகளில் சுமார் 22 லட்சம் பேர் பணிபுரி கிறார்கள். கடந்த 15 மாதங்களில், தமிழ்நாடு 10 பில்லியன் டாலர் அந்நிய முதலீடுகளை ஈர்த்து, 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

நிதி மாநாடு...
நிதி மாநாடு...

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். அதை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருவதுடன், இந்தத் தொழில் களுக்குக் கடன் வழங்குவது தொடர்பாக வங்கிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது” என்று பேசினார்.

தென் இந்திய தொழில் கூட்டமைப்பு சங்கத் தின் முன்னாள் தலைவர் டி.டி.அசோக், “தமிழக முதல்வரின் ஒரு டிரில்லியன் பொருளாதாரக் கனவை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மூலம் 2030-ம் ஆண்டுக் குள் நிறைவேற்றுவோம். இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது பெரிய ஜி.எஸ்.டி.பி மாநிலம் ஆகும். தற்போது தமிழ்நாட்டின் மொத்த பொருளாதார மதிப்பு 320 பில்லியன் டாலர். கடந்த இரு ஆண்டுகளில் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது’’ என்றார்.

இந்த மாநாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்!