Published:Updated:

தஷ்வந்த் தவறுசெய்ய என்ன காரணம்?- `ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 12 

தஷ்வந்த் தவறுசெய்ய என்ன காரணம்?- `ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 12 
News
தஷ்வந்த் தவறுசெய்ய என்ன காரணம்?- `ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 12 

தஷ்வந்த் தவறுசெய்ய என்ன காரணம்?- `ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 12 

Published:Updated:

தஷ்வந்த் தவறுசெய்ய என்ன காரணம்?- `ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 12 

தஷ்வந்த் தவறுசெய்ய என்ன காரணம்?- `ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 12 

தஷ்வந்த் தவறுசெய்ய என்ன காரணம்?- `ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 12 
News
தஷ்வந்த் தவறுசெய்ய என்ன காரணம்?- `ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 12 

``தவறான நண்பர்களின் பழக்கவழக்கம், சிறுசிறு தவறுகளுக்கு எதிர்ப்பு இல்லாமை, தன் பெற்றோர் காட்டிய ஆதரவு, பணத்தினால் மகிழ்ச்சியான வாழ்க்கை, ஹாசினி வழக்கில் ஜாமீன் கிடைத்தது போன்ற காரணங்களே தஷ்வந்தை மேலும் மேலும் குற்றம்செய்யத் தூண்டியிருக்கிறது” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

``தவறு செய்பவர்களிடமே ஒரு புரிதல் வேண்டும்!” 

``தஷ்வந்த் சின்னப் பையன். இதுபோன்று நடக்கும் என்று அவன் யோசிக்கவில்லை” என்கிறார், நட்சத்திரா பவுண்டேஷன் என்னும் என்.ஜி.ஓ. அமைப்பின் நிறுவனரான ஷெரின் பாஸ்கோ. மேலும் அவர், ``தங்கள் குழந்தைகள் சிறுசிறு தவறுகள் செய்யும்போதே, பெற்றோர் அவர்களைக் கண்டித்துத் திருத்த முன்வர வேண்டும். ஆனால், அவர்கள் அதை விட்டுவிட்டுக் குழந்தைகளைக் காப்பாற்றத்தான் முயற்சி செய்கின்றனர். இதனால், குழந்தைகளுக்குத் தைரியம் வந்துவிடுகிறது. அதற்காக நாம் பெற்றோர்களையும் குறைசொல்ல முடியாது. ஏனெனில், எல்லாப் பெற்றோருமே குழந்தைக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள். என் அப்பாகூட எனக்கு ஆதரவாகத்தான் இருப்பார். தவறு செய்பவர்களிடமே ஒரு புரிதல் வேண்டும். அதாவது, ‘நான் இவ்வளவு தப்பு செய்தும் பெற்றோர் நமக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்களே... அதற்காகவாவது நாம் திருந்த வேண்டும்’ என்று சம்பந்தப்பட்டவர்கள் நினைக்க வேண்டும். ஒருசிலர், இதை ஏற்றுக் கொள்கிறார்கள். வேறுசிலர், ஏற்றுக்கொள்வதில்லை. தவறு செய்பவர்கள் இதை நினைத்தால், அவர்களாகவே திருந்த ஒரு வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, இதேபோன்ற இன்னொரு வழக்கில் தீங்கிழைத்தவருக்கு 37 நாள்களில் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படித் தீங்கிழைத்தவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுவதால் அவர்கள் வேறு தவறு செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்” என்று கேள்வியெழுப்புகிறார்.

பாலியல் சித்ரவதைக்கான அறிகுறிகள்!

பெரும்பாலான பெண் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் சித்ரவதைகளை வெளியே சொல்வதில்லை. அதற்கு முதற்காரணம் அவர்கள் அச்சுறுத்தப்படுவதுதான். அப்படிப்பட்ட பாதிப்பில் இருக்கும் குழந்தைகளைக் கீழ்க்கண்ட சில அறிகுறிகள், நடவடிக்கை மாற்றங்கள் மூலம் அறியலாம்.

* நடப்பதிலோ, உட்காருவதிலோ சிரமப்படுதல்.

* சிறுநீர், மலம் கழிப்பதில் சிரமம்.

* பாலுறுப்பில் திரும்பத்திரும்ப ஏற்படும் நோய்த்தொற்று.

* சிலரின் பெயரைச் சொன்னாலே மிரள்வது. 

* மன உளைச்சலால் ஏற்படும் உடல்நலக் குறைவு.

* சாப்பாட்டை வெறுத்து ஒதுக்குவது.

* படிப்பில் ஏற்படும் பாதிப்புகள், திடீரென மதிப்பெண் குறைவது, ஞாபகச் சக்திக் குறைபாடு, விளையாட்டில் ஆர்வம் காட்டாமை, மனச்சோர்வு.

* திடீரென புதிய பொருள்கள், பணம் வைத்திருப்பது

* வயதுக்குப் பொருத்தமற்ற பாலுறவு பற்றிய பேச்சு, நடவடிக்கை போன்றவற்றின்மூலம் அறியலாம். எனினும், இந்த அறிகுறிகள் இருந்தாலே அதுதான் காரணம் எனக் கருதத் தேவையும் இல்லை.

``குடும்ப உறுப்பினர்களே காரணம்!”

``பெண் குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்ட சித்ரவதைகளை வெளியே சொல்லாததற்கு என்ன காரணம்” என்று குழந்தைகள் உரிமை மற்றும் முன்னேற்ற மைய இணை இயக்குநர் ஸ்டெக்னா ஜென்ஸியிடம் பேசினோம். ``பாலியல் குற்றவாளிகளைப் பார்த்து அவ்வளவு எளிதாக அடையாளம் காண முடியாது. நம் வீட்டுக்குப் பக்கத்திலோ, பள்ளியிலோ, நம் வீட்டிலேயோகூட இருக்கலாம். குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளில் 80 முதல் 90 சதவிகிதக் குற்றங்கள், குழந்தைகளுக்குத் தெரிந்தவர்கள் மூலமாகத்தான் நடக்கிறது. நிறைய சம்பவங்களில் நெருக்கமான குடும்ப உறுப்பினர்களே காரணமாக இருக்கிறார்கள். 

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சொன்னால் நம்பமாட்டார்கள் என்ற எண்ணம், பயம், உறவுகளை இழந்துவிடுவோமோ என்ற அச்சம்... எனப் பல காரணங்களால் குழந்தைகள் தங்களுக்கு நேர்ந்ததை வெளிப்படுத்துவதில்லை. முதலில் குழந்தைகள் சொல்வதை வீட்டில் இருப்பவர்கள் நம்ப வேண்டும். அவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். `உன் உடலுக்கு நீதான் பொறுப்பு. அதைத் தொட யாருக்கும் உரிமை இல்லை. உன் உடலை யாரும் தொட்டால் அதுபற்றி வெளியில் பேசலாம். அதற்கு நீ காரணம் அல்ல... தவறு செய்தவர்களே காரணம்’ என்ற தெளிவைக் குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும். குழந்தைகள், குரலற்றவர்கள். அவர்களால் எதிர்ப்புக் காட்ட முடியாது என்பது ஓர் உலகளாவிய மனோபாவம். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் சண்டை முதல், நாடுகளுக்கு மத்தியில் நடக்கும் போர்வரை எல்லாவற்றிலும் குழந்தைகள்தாம் முதல் பலிகடா ஆவார்கள். 

“எளிதில் அடையாளம் காண முடியாது!” 

இன்னொரு காரணம், வக்கிர எண்ணம். குழந்தைகளைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்துபவர்களில் மூன்று வகையினர் உண்டு. முதல் ரகம் பீடோபைல்ஸ் (Pedophiels). இஃது ஒருவிதமான, வக்கிர மனச்சிக்கல் நிலை. இந்தப் பாதிப்பு இருப்பவர்கள், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே குறிவைப்பார்கள். இன்னொரு வகை Opportunistic abuser. இவர்களை சைல்டு மொலெஸ்டர் (Child Molester) என்றும் அழைப்பார்கள். இவர்கள் சந்தர்ப்பம் வாய்க்கும்போது குழந்தைகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள். மூன்றாவது ரகம், Professional perpetrators. எப்போதும் குழந்தைகள் தங்களுடனேயே இருக்கும் சூழலை இவர்கள் அமைத்துக் கொள்வார்கள்.

இந்த மூன்று பிரிவினரும் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல... நம்முடனே வாழ்பவர்கள்தாம். அவர்களை எளிதில் அடையாளம் காண முடியாது. குழந்தைகளோடு பழகுவதை வைத்தே தெரிந்துகொள்ள முடியும். தஷ்வந்த், இரண்டாவது அல்லது மூன்றாவது வகையைச் சேர்ந்தவனாக இருக்கலாம். பாலுணர்வைக் கையாளத் தெரியாததன் விளைவு இது. நிச்சயமாக, இது முதல் முறை அல்ல... பலமுறை ஹாசினியிடம் அவன் தவறாக நடக்க முயற்சி செய்திருப்பான். 22 வயதுப் பையன், 7 வயதுப் பெண்ணை ஒரு பாலியல் பிண்டமாகப் பார்க்கிறான் என்றால், அவன் படித்த படிப்பு என்னதான் கற்றுக்கொடுத்தது? பாலியல் விழிப்புஉணர்வே இல்லாத சமூகத்தில்தான் இதுமாதிரி சம்பவங்கள் நடக்கும். குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தகுந்த பாலியல் புரிதலை உருவாக்கியே தீர வேண்டும். அதை மறைமுகமாக அணுகியதன் விளைவுதான் தஷ்வந்தின் இந்தக் கோரச் செயல்” என்றார் ஜென்ஸி.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பாலியல் சீண்டல் பற்றிய புரிதல் இருந்தாலும், அதற்குத் தீர்வாய் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மட்டும்தான் தெரிவதில்லை. 

- ஹாசினி சிறகடிக்கும்...