<p><strong>உலகையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது கீழடி அகழாய்வு. அந்த வரிசையில் சேர வேண்டிய அழகன்குளம் அகழாய்வுப் பணிகளை, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு கிடப்பில் போட்டுவைத்திருக்கிறது எனப் பொருமுகிறார்கள் அழகன்குளம் ஆர்வலர்கள்.</strong></p>.<p>சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, மதுரைக்காஞ்சி ஆகியவற்றில் குறிப்பிடப்படும் மருங்கூர்பட்டினம்தான் இன்றைய அழகன்குளம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ராமநாதபுரத்திலிருந்து கிழக்கு நோக்கி 17 கி.மீ தூரம் பயணித்தால், வைகை ஆறு கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியில் அமைந்துள்ளது அழகன்குளம். இங்கு 1986 முதல் 2017-ம் ஆண்டு வரை எட்டு கட்டங்களாக அகழாய்வை மேற்கொண்டது தமிழக தொல்லியல் துறை. இதன்மூலம், கி.மு 4-ம் நூற்றாண்டு முதல் கி.பி 12-ம் நூற்றாண்டு வரை இந்த ஊர் மிகச் சிறப்பாக விளங்கியிருப்பது தெரியவந்துள்ளது. </p>.<p>இந்த அகழாய்வின்போது கிடைத்த பாசிகள், மணி செய்யும் கற்கள், சிப்பி, சங்கு வளையல்கள், அரிட்டைன், ஆம்போரா, ரௌலட்டட் ஆகிய ரோமானிய நாட்டு ஓடுகள், கறுப்பு-சிவப்பு நிற ஓடுகள், மௌரியப் பானை ஓடுகள், குறியீடுகள், `தமிழி’ எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் முதலியன அழகன்குளத்தின் பழைமையை உலகுக்குப் பறைசாற்றின. இங்கு இதுவரை 13,000-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ‘அகழாய்வைத் தொடர்ந்தால் நிச்சயம் இன்னும் பல அபூர்வ தகவல்கள் கிடைக்கும். ஆனால், ஏனோ தமிழக அரசு அகழாய்வுப் பணிகளைக் கிடப்பிலேயே போட்டு வைத்திருக்கிறது’ என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. </p><p>இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுருவிடம் பேசினோம். ‘‘இங்கு 1986-87 காலகட்டத்தில் இரண்டு குழிகள் தோண்டி முதல் அகழாய்வைத் தொடங்கினர். இங்கு கிடைத்த பொருள்கள் 2,360 ஆண்டுகள் பழைமையானவை என கார்பன் சோதனையில் அறியப்பட்டது. 1986-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் மட்டும் 193 குறியீடுகள் (மீன், நட்சத்திரன், மனித உருவங்கள் போன்றவை) உள்ள ஓடுகளும், 60 தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகளும் கிடைத்துள்ளன. ரோமானிய ஓடுகளும் ரோமானிய மன்னர்களின் காசுகளும் அகழாய்வில் கிடைத்துள்ளதால், இங்கு ரோமானியக் குடியிருப்பு இருந்திருக்கின்றன என்பதையும், இங்கு உள்ள மக்களுடன் அவர்கள் வாணிபம் செய்துவந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.</p>.<p>அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பானை ஓட்டில் ‘சமுதஹ’ எனும் சொல் உள்ளது. இலங்கை குகைக் கல்வெட்டுகளிலும் இந்தச் சொல் காணப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் பழங்காலம் முதல் தொடர்பு இருந்துள்ளதை அறியலாம். கிரேக்க கலை பாணியில், ஒரு பெண் தன் குழந்தையை இடுப்பில் தாங்கி உள்ளதைப்போன்று சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பானை ஓட்டில், மூன்று பெண்கள் விசிறியை தம் கைகளில் கொண்டும், ஒரு கையில் மதுக்குடத்தைத் தாங்கியும் காணப்படுகின்றனர். இவை எகிப்து பிரமிடுகளில் உள்ள வண்ண உருவங்களைப்போன்று உள்ளன. அரேபியர் களுடன் இருந்த வணிகத் தொடர்புக்குச் சான்றாக அரபி எழுத்தில் எழுதப்பட்ட சங்கு ஒன்றும் கிடைத்துள்ளது.</p>.<p>2016-17ல் 8-ம் கட்டமாக விரிவான அகழாய்வு மேற்கொள்ள, தமிழக அரசு 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. இதில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் </p><p>52 குழிகளுக்கும்மேல் தோண்டப்பட்டன. இதில் 13,000 பழங்காலப் பொருள்கள் கண்டறியப்பட்டன. மனிதன் முதன்முதலாகப் பயன்படுத்திய வெள்ளி முத்திரைக்காசுகள், சதுர வடிவிலான செப்புக்காசுகள் என 50-க்கும் மேற்பட்டவை கிடைத்துள்ளன. கூட்டல் குறி போன்ற முத்திரை, சுடுமண் பொம்மை, சுடுமண் குழாய்கள், இரும்புப் பொருள்கள், யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், கல் மணிகள், சங்கு ஆபரணங்கள்கண்ணாடி மணிகள் போன்றவையும் இதில் அடங்கும்.</p>.<p>தமிழகத்தில் அழகன்குளத்தில் மட்டுமே பழங்கால மண்பாண்டங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. எனவே, இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை சிந்துசமவெளி எழுத்து களுடன் ஒப்பிட்டுப் படிக்கப்பட நடவடிக்கை எடுப்பதுடன், புதிய தொழில்நுட்பத்தில் மீண்டும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.</p>.<p>அழகன்குளம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவரும் வழக்கறிஞருமான அசோகன், ‘‘உலகின் பல்வேறு நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்ட துறைமுகமாகவும், சங்ககால பாண்டியர் துறைமுகமாகவும் அழகன்குளம் இருந்துள்ளதை ஆய்வுகள் காட்டுகின்றன. இங்கிருந்து மதுரை செல்லும் பெருவழி, வைகையின் கரை வழியில் இருந்திருக்க வேண்டும். இந்தப் பாதையில்தான் கீழடி உள்ளது. 1986 முதல் 1998-ம் ஆண்டு வரையில் ஆறு கட்டங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் வெறும் 19 குழிகள் மட்டுமே தோண்டப்பட்டன. இதன் ஆய்வறிக்கை 2005-ல் வெளியிடப்பட்டது. ஆனால், 7 மற்றும் 8-ம் கட்டங்களில் 55-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டி ஆய்வு செய்யப்பட்டன. அதிகளவில் நிதியும் ஒதுக்கப்பட்டது. இதன் ஆய்வறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த ஆய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட தொன்மையான பொருள்களையெல்லாம் ஒருநாள் மட்டும் இங்கு பார்வைக்கு வைத்தனர். அகழாய்வுகள் நடைபெறும் இடங்களிலேயே அங்கு கிடைக்கும் தொன்மைப் பொருள்களைக் கொண்ட அருங்காட்சியகங் களை, பல நாடுகள் அமைத்துவருகின்றன. ஆய்வுப் பொருள்களைக் காண வந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறிச் சென்றார். ஆனால், அவர் வந்து சென்ற பிறகு தோண்டப்பட்ட அத்தனை குழிகளும் மூடப்பட்டதுடன், இங்கு கிடைத்த பொருள்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர். அழகன்குளத்தில் தமிழக அரசு தனது அகழாய்வுப் பணிகளை மீண்டும் தொடர்வதுடன், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளையும் வெளியிட வேண்டும்’’ என்றார்.</p>.<p>இதுகுறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கேட்டோம். ‘‘அழகன்குளம் அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை விரைவில் வெளியிட இருக்கிறோம். ஆய்வறிக்கையை தயார்செய்து வந்த சிவானந்தம், கீழடி ஆய்வுப்பணிகளுக்குச் சென்றதால் தாமதமாகிவிட்டது. மேலும், அழகன்குளத்தில் ஏற்கெனவே நடந்த ஆய்வில் சங்கு தொடர்பான தொழிற்கூடம் இருந்தது தெரியவந்தது. எனவே, அங்கு மீண்டும் ஆய்வைத் தொடர திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதற்கான அனுமதி பெறப்பட்டு அடுத்தகட்ட ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.</p>
<p><strong>உலகையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது கீழடி அகழாய்வு. அந்த வரிசையில் சேர வேண்டிய அழகன்குளம் அகழாய்வுப் பணிகளை, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு கிடப்பில் போட்டுவைத்திருக்கிறது எனப் பொருமுகிறார்கள் அழகன்குளம் ஆர்வலர்கள்.</strong></p>.<p>சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, மதுரைக்காஞ்சி ஆகியவற்றில் குறிப்பிடப்படும் மருங்கூர்பட்டினம்தான் இன்றைய அழகன்குளம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ராமநாதபுரத்திலிருந்து கிழக்கு நோக்கி 17 கி.மீ தூரம் பயணித்தால், வைகை ஆறு கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியில் அமைந்துள்ளது அழகன்குளம். இங்கு 1986 முதல் 2017-ம் ஆண்டு வரை எட்டு கட்டங்களாக அகழாய்வை மேற்கொண்டது தமிழக தொல்லியல் துறை. இதன்மூலம், கி.மு 4-ம் நூற்றாண்டு முதல் கி.பி 12-ம் நூற்றாண்டு வரை இந்த ஊர் மிகச் சிறப்பாக விளங்கியிருப்பது தெரியவந்துள்ளது. </p>.<p>இந்த அகழாய்வின்போது கிடைத்த பாசிகள், மணி செய்யும் கற்கள், சிப்பி, சங்கு வளையல்கள், அரிட்டைன், ஆம்போரா, ரௌலட்டட் ஆகிய ரோமானிய நாட்டு ஓடுகள், கறுப்பு-சிவப்பு நிற ஓடுகள், மௌரியப் பானை ஓடுகள், குறியீடுகள், `தமிழி’ எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் முதலியன அழகன்குளத்தின் பழைமையை உலகுக்குப் பறைசாற்றின. இங்கு இதுவரை 13,000-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ‘அகழாய்வைத் தொடர்ந்தால் நிச்சயம் இன்னும் பல அபூர்வ தகவல்கள் கிடைக்கும். ஆனால், ஏனோ தமிழக அரசு அகழாய்வுப் பணிகளைக் கிடப்பிலேயே போட்டு வைத்திருக்கிறது’ என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. </p><p>இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுருவிடம் பேசினோம். ‘‘இங்கு 1986-87 காலகட்டத்தில் இரண்டு குழிகள் தோண்டி முதல் அகழாய்வைத் தொடங்கினர். இங்கு கிடைத்த பொருள்கள் 2,360 ஆண்டுகள் பழைமையானவை என கார்பன் சோதனையில் அறியப்பட்டது. 1986-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் மட்டும் 193 குறியீடுகள் (மீன், நட்சத்திரன், மனித உருவங்கள் போன்றவை) உள்ள ஓடுகளும், 60 தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகளும் கிடைத்துள்ளன. ரோமானிய ஓடுகளும் ரோமானிய மன்னர்களின் காசுகளும் அகழாய்வில் கிடைத்துள்ளதால், இங்கு ரோமானியக் குடியிருப்பு இருந்திருக்கின்றன என்பதையும், இங்கு உள்ள மக்களுடன் அவர்கள் வாணிபம் செய்துவந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.</p>.<p>அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பானை ஓட்டில் ‘சமுதஹ’ எனும் சொல் உள்ளது. இலங்கை குகைக் கல்வெட்டுகளிலும் இந்தச் சொல் காணப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் பழங்காலம் முதல் தொடர்பு இருந்துள்ளதை அறியலாம். கிரேக்க கலை பாணியில், ஒரு பெண் தன் குழந்தையை இடுப்பில் தாங்கி உள்ளதைப்போன்று சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பானை ஓட்டில், மூன்று பெண்கள் விசிறியை தம் கைகளில் கொண்டும், ஒரு கையில் மதுக்குடத்தைத் தாங்கியும் காணப்படுகின்றனர். இவை எகிப்து பிரமிடுகளில் உள்ள வண்ண உருவங்களைப்போன்று உள்ளன. அரேபியர் களுடன் இருந்த வணிகத் தொடர்புக்குச் சான்றாக அரபி எழுத்தில் எழுதப்பட்ட சங்கு ஒன்றும் கிடைத்துள்ளது.</p>.<p>2016-17ல் 8-ம் கட்டமாக விரிவான அகழாய்வு மேற்கொள்ள, தமிழக அரசு 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. இதில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் </p><p>52 குழிகளுக்கும்மேல் தோண்டப்பட்டன. இதில் 13,000 பழங்காலப் பொருள்கள் கண்டறியப்பட்டன. மனிதன் முதன்முதலாகப் பயன்படுத்திய வெள்ளி முத்திரைக்காசுகள், சதுர வடிவிலான செப்புக்காசுகள் என 50-க்கும் மேற்பட்டவை கிடைத்துள்ளன. கூட்டல் குறி போன்ற முத்திரை, சுடுமண் பொம்மை, சுடுமண் குழாய்கள், இரும்புப் பொருள்கள், யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், கல் மணிகள், சங்கு ஆபரணங்கள்கண்ணாடி மணிகள் போன்றவையும் இதில் அடங்கும்.</p>.<p>தமிழகத்தில் அழகன்குளத்தில் மட்டுமே பழங்கால மண்பாண்டங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. எனவே, இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை சிந்துசமவெளி எழுத்து களுடன் ஒப்பிட்டுப் படிக்கப்பட நடவடிக்கை எடுப்பதுடன், புதிய தொழில்நுட்பத்தில் மீண்டும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.</p>.<p>அழகன்குளம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவரும் வழக்கறிஞருமான அசோகன், ‘‘உலகின் பல்வேறு நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்ட துறைமுகமாகவும், சங்ககால பாண்டியர் துறைமுகமாகவும் அழகன்குளம் இருந்துள்ளதை ஆய்வுகள் காட்டுகின்றன. இங்கிருந்து மதுரை செல்லும் பெருவழி, வைகையின் கரை வழியில் இருந்திருக்க வேண்டும். இந்தப் பாதையில்தான் கீழடி உள்ளது. 1986 முதல் 1998-ம் ஆண்டு வரையில் ஆறு கட்டங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் வெறும் 19 குழிகள் மட்டுமே தோண்டப்பட்டன. இதன் ஆய்வறிக்கை 2005-ல் வெளியிடப்பட்டது. ஆனால், 7 மற்றும் 8-ம் கட்டங்களில் 55-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டி ஆய்வு செய்யப்பட்டன. அதிகளவில் நிதியும் ஒதுக்கப்பட்டது. இதன் ஆய்வறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த ஆய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட தொன்மையான பொருள்களையெல்லாம் ஒருநாள் மட்டும் இங்கு பார்வைக்கு வைத்தனர். அகழாய்வுகள் நடைபெறும் இடங்களிலேயே அங்கு கிடைக்கும் தொன்மைப் பொருள்களைக் கொண்ட அருங்காட்சியகங் களை, பல நாடுகள் அமைத்துவருகின்றன. ஆய்வுப் பொருள்களைக் காண வந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறிச் சென்றார். ஆனால், அவர் வந்து சென்ற பிறகு தோண்டப்பட்ட அத்தனை குழிகளும் மூடப்பட்டதுடன், இங்கு கிடைத்த பொருள்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர். அழகன்குளத்தில் தமிழக அரசு தனது அகழாய்வுப் பணிகளை மீண்டும் தொடர்வதுடன், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளையும் வெளியிட வேண்டும்’’ என்றார்.</p>.<p>இதுகுறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் கேட்டோம். ‘‘அழகன்குளம் அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கையை விரைவில் வெளியிட இருக்கிறோம். ஆய்வறிக்கையை தயார்செய்து வந்த சிவானந்தம், கீழடி ஆய்வுப்பணிகளுக்குச் சென்றதால் தாமதமாகிவிட்டது. மேலும், அழகன்குளத்தில் ஏற்கெனவே நடந்த ஆய்வில் சங்கு தொடர்பான தொழிற்கூடம் இருந்தது தெரியவந்தது. எனவே, அங்கு மீண்டும் ஆய்வைத் தொடர திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதற்கான அனுமதி பெறப்பட்டு அடுத்தகட்ட ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.</p>