
VIKATAN NOW
கங்கைக்கு நிகரான புனிதம் வாய்ந்தது எனக் கருதப்படும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலின் திருக்குளத்தையே படத்தில் பார்க்கிறீர்கள்!

செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தாமலும், திருக்குளத்தை சுத்தம் செய்யாமலும்தான், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் மாசி மாத - ஏழு நாள் தெப்போற்ஸவம் நடந்து முடிந்தது. சமீபத்தில், பக்தர்களே துப்புரவு பணியை மேற்கொண்டார்கள்!
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள...
www.facebook.com/SakthiVikatan-ஐ தொடருங்கள்.
இந்த மாத துவக்கத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது, மயிலை கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம். நேரில் தரிசிக்க இயலாத ஆயிரக்கணக்கான பக்தர்கள், நமது முகநூலில் வீடியோவாக தரிசித்து மகிழ்ந்தனர்!


சென்னை, குரோம்பேட்டைக்கு அருகில் உள்ளது குமரன் குன்றம் முருகன் கோயில். ‘நடு சுவாமிமலை’ எனச் சிறப்பிக்கப்படும் இந்தத் தலத்தின் சிவாலயத்தில் கால் மாற்றி ஆடும் நடராஜ திருமேனியைத் தரிசிக்கலாம். தமிழ்ப் புத்தாண்டு அன்று நிகழும் படிபூஜை இத்தலத்தின் சிறப்பம்சம். சமீபத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி நிகழ்ந்த சிறப்பு அபிஷேகத்தை நீங்களும் கண்டு மகிழ, இங்கு உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்யுங்கள்.


உலகத்தின் மிகப்பெரிய சுயம்பு லிங்கங்களுள் இவரும் ஒருவர். 18 அடி உயரம். 20 அடி சுற்றளவு கொண்ட இந்த லிங்கத்திருமேனி கொண்ட பெருமானை பூதேஷ்வர் நாத் என்று அழைக்கிறார்கள். சதீஸ்கர் மாநிலம் க்ரியாபாந்த் மாநிலம், மதுரா என்னும் கிராமத்தில் இப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.

- எழில்வண்ணன் (வாட்ஸப்பில் இருந்து)

இது போன்ற இன்னும் பல அரிய தகவல்களை கண்ணைக் கவரும் தெய்வப் படங்களுடன் அறிந்து மகிழ..தொடருங்கள் சக்திவிகடனை பின்ட்ரஸ்டிலும்..
www.pinterest.com/sakthivikatan/